திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். தாயாரின் பரிந்துரை அடிப்படையில்தான் பெருமாளின் கருணை கிடைக்கும்.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
🙏🇮🇳3
இங்கு சிறப்பு தரிசனத்துக்கு இருபது ரூபாயும், நூறு ரூபாயும் வாங்குகிறார்கள்.
தேவஸ்தான மண்டபத்தில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது.
கார்த்திகைமாத சுக்லபட்ச பஞ்சமியில் பிரமோத்சவம் நடைபெறும்.
🙏🇮🇳4
அதற்குப்பின்பு வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
2வது கோவில் கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள். கோவிந்தராஜ சுவாமி கோயில், (Sri Govindarajaswamy Temple), கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து நான்காவது கிலோமீட்டரில் நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது. 🙏🇮🇳5
முகமதியர்கள் படையெடுப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்த கோவிந்தராஜ சுவாமி இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தார்.
🙏🇮🇳6
முகமதியர்கள் அச்சுறுத்தல் முடித்தபிறகு கோவிந்தராஜ சுவாமி திரும்பவும் சிதம்பரத்துக்கு எடுத்து சென்றபின்பு இராமானுசரால் 1130இல் இக்கோயில் நிறுவப்பட்டது. இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இயங்குகிறது.
🙏🇮🇳7
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
இக்கோயிலின் மூலவர் கோவிந்தராஜர் திருமலையில் குடிகொண்டுள்ள வெங்கடேஸ்வரருக்கு மூத்தவர் எனக் கருதப்படுகிறது. 🙏🇮🇳8
ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் கோவிந்தராஜரின் காலடியில் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி உடனுறைந்துள்ளனர்.
கோவிந்தராஜர் கோயில் வளாகத்தினுள் பார்த்தசாரதி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர் கோயில்கள் துணைக் கோயில்களாக உள்ளது. 🙏🇮🇳9
மேலும் இக்கோயில் வளாகத்தில் புண்டரீக வல்லி, ஆண்டாள், ஆழ்வார்கள், இலக்குமி நாராயண சுவாமி, அனுமார், திருமலை நம்பி மற்றும் இராமானுசர் ஆகியவர்களின் தனி சன்னதிகள் அமைந்துள்ளது.
🙏🇮🇳10
திருமலையில் வரும் காணிக்கைகள் அனைத்தும் கோவிந்தராஜ ஸ்வாமி வசம் ஒப்படைக்கப்பட்டு இங்கேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழக்கம் மாற்றப்பட்டு கணக்குகள் மட்டும் கோவிந்தராஜ ஸ்வாமி வசம் ஒப்படைக்கப்படுகிறது.
🙏🇮🇳11
பிறகு வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
3வது கோவில் கீழ் திருப்பதியில் இருந்து பஸ் அல்லது கார் மூலமாக ஸ்ரீனிவாச மங்காபுரம் சென்று ஸ்ரீனிவாச பெருமாளை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். 🙏🇮🇳12
இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், உருவத்தில்,உயரத்தில்,அலங்காரத்திலும் எந்த வித்தியாசமும் இருக்காது. அருகில் சென்று நன்கு வணங்கலாம். கீழ் திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 12வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🙏🇮🇳13
காலை5-30மணி முதல் இரவு 7-30 மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
இங்கு சிறப்பு தரிசனத்துக்கு 5 ரூபாயும், அர்ச்சனைக்கு 5 ரூபாயும் வாங்குகிறார்கள்.
🙏🇮🇳14
பத்மாவதி தாயாருடன் திருமணம் முடிந்தவுடன் திருமலைக்கு செல்லாமல் அகஸ்தியர் ஆசிரமத்தில் பத்மாவதி தாயாருடன் ஸ்ரீனிவாச பெருமாள் 6 மாதம் தங்கியிருந்தார்.
🙏🇮🇳15
அங்கிருந்து திருமலைக்கு செல்லும்முன்
" இந்த இடத்தில் கல்யாண ஸ்ரீனிவாச பெருமாளாக கோவில் கொள்வதாகவும், இந்த இடம் ஸ்ரீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படும்., திருமலையில் ஸ்வாமியை தரிசிப்பதால் கிடைக்கும் பலன் ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் தரிசனம் செய்வதில் கிடைக்கும். அத்துடன்
🙏🇮🇳16
திருமணம் ஆகாதவர்கள் இங்கு கல்யாண உற்சவம் செய்து காப்பு கட்டிக்கொண்டால் மனதிற்கு பிடித்த நல்ல துணையுடன் திருமணம் ஆகும். புதுமண தம்பதியர் இங்கு கல்யாண உற்சவம் செய்து காப்பு கட்டிக்கொண்டால் மனதிற்கு பிடித்த அற்புத வாழ்க்கை கிடைக்கும்" என்றும் அருளினார்.
🙏🇮🇳17
பிறகு வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
4வது கோவில் கபிலேஸ்வர் சுயம்பு லிங்க சிவாலயம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 3.3 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. விலாசம்: K T Rd, Srinivasa Nagar, N G O Colony, Tirupati, Andhra Pradesh 517507.
🙏🇮🇳18
திருமலை மலைப்பாதையை நோக்கி செல்லும்போது, மலையை நெருங்கும்போது பாதையிலிருந்து பார்த்தாலே கபிலதீர்த்த அருவி தெரியும் .
🙏🇮🇳19
திருமலையில் உள்ள சேஷாத்திரி, நீலாத்திரி, கருடத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்திரி, நாராயணதிரி, வெங்கடாத்திரி ஆகிய ஏழு மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் கபில மகரிஷியால் கொண்டுவரப்பட்ட சேஷாசலம் என்ற கபிலதீர்த்த அருவியும், 🙏🇮🇳20
சரோவர் ஏரி என்ற கபிலதீர்த்த தடாகமும், கபிலேஸ்வரர் எனும் சுயம்பு லிங்க சிவாலயமும் அமைந்துள்ளது.
ஆதிகாலத்தில் கபிலேஸ்வரசிவாலயம் அருகிலிருந்து திருமலைக்கு நடைவழி பாதை இருந்தது. பாதை மிகவும் செங்குத்தாக இருந்ததால் தற்போதுள்ள அலிபிரிக்கு அருகில் பாதை அமைக்கப்பட்டது.
🙏🇮🇳21
திருமலையில் உள்ள புண்ணியதீர்த்தங்களில் திருமலையின் அடிவாரத்திலுள்ள புண்ணியதீர்த்தம் இதுமட்டுமே. கபிலதீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்.
🙏🇮🇳22
கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தில் மூன்றுலோகத்தில் உள்ள அணைத்து புண்ணிய தீர்த்தங்களும் கபிலதீர்த்தத்தில் 240 நிமிடங்கள் சேர்வதாகவும், அப்போது கபிலதீர்த்தத்தில் நீராடினால் சகலப்பாவங்களும் விலகி மோட்சம் கிட்டும் என கூறப்படுகிறது.
🙏🇮🇳23
குலோத்துங்க சோழன், பல்லவமன்னர்கள், விஜயநகரப்பேரரசு உட்பட பலமன்னர்களாலும் பராமரிக்கப்பட்ட இக்கோவிலில் விஜயநகரப்பேரரசு மன்னர் கிருஷ்ணதேவராயர் சிலை உள்ளது.
🙏🇮🇳24
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
கார்த்திகை தீபம், ஸ்கந்தஷஷ்டி, தெப்ப உற்சவம், ஆருத்ரா தரிசனம், மஹாசிவராத்திரி, அன்னாபிஷேகம் ஆகியவை விசேஷ பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது.
🙏🇮🇳25
அதற்குப் பிறகு திருமலையேறி,
5 வதாக மலை மேல் உள்ள ஆகாசகங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும். 🙏🇮🇳26
முன்பு திருப்பதி மலையிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீரை அதிகாலையில் அர்ச்சகர்கள் எடுத்து வந்து, ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
🙏🇮🇳27
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).
தற்போது புனிதம் கருதி ஆகாச கங்கை தீர்த்தத்தை மனிதர்கள் உபயோகப்படுத்தும் இடத்திற்கு மேல் இருந்து பைப் லைன் மூலம் ஆனந்த நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 🙏🇮🇳28
திருமலை ஆனந்த நிலையத்தில் அபிஷேகத்திற்கும், இதர சடங்குகளுக்கும் ஆகாச கங்கை தீர்த்தமே உபயோகப்படுத்தப்படுகிறது.
திருமலை வெங்கடாசலபதி தாமரை மலர் பாதங்களுக்கு கீழே இந்த தீர்த்தம் உருவாவதாக கூறப்படுகிறது. எல்லாக்காலங்களிலும் இந்த தீர்த்த அருவி நீர் வருகிறது. 🙏🇮🇳29
பக்தர்கள் தொட்டு வணங்க அருவியிலிருந்து சிறிய பிரிவு ஒன்று பிரித்து விடப்பட்டுள்ளது.
மேல் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 4 வது கிலோ மீட்டரில் ஆகாச கங்கை அருவி அமைந்துள்ளது. கீழே மலைச்சரிவில் இறங்கி மனிதர்கள் தீர்த்தமாடுகிறார்கள்.
🙏🇮🇳30
அதற்குப் பிறகு
6 வதாக பாபநாசம் ஆகிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
இது ஆகாயகங்கை தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. தற்போது பாபவிநாசம் தீர்த்தத்தின் குறுக்கே பாபவிநாச அணை கட்டப்பட்டு அந்த நீர் திருமலையில் வாழும் மக்களுக்கு விநியோகிக்க படுகிறது.
🙏🇮🇳31
பாபவிநாசம் தீர்த்தத்தில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சுவர் எழுப்பி வடிகால்கள் மூலம் நீர் விழச்செய்து அதில் பக்தர்கள் தீர்த்தமாட ஏற்பாடுசெய்துள்ளார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடை மற்ற தனித்தனி இட வசதி செய்துள்ளார்கள். 🙏🇮🇳32
தீர்த்தத்திற்கு அருகில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு தீர்த்தமாடினால் முன்ஜென்ம வினைகள் உட்பட அனைத்து பாவங்களும் தீரும். திருமணம் கூடிவரும். குழந்தை வேண்டுவோர் தீர்த்தமாடி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இதற்கு சிறிது தூரத்தில் வேணுகோபாலஸ்வாமி கோவில் உள்ளது.
🙏🇮🇳33
அதற்குப் பிறகு
7 வது இடம் ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தம், வராகமூர்த்தி பெருமாள் கோவில்.
ஸ்வாமி புஷ்கரணியின் தீர்த்தத்தை பம்ப் செய்து, ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தத்தின் தென்மேற்கு கரையில் குழாய் மூலம் தீர்த்தமாட ஏற்பாடு செய்துள்ளார்கள். 🙏🇮🇳34
இங்கு தீர்த்தமாடிய பின்பு வராகமூர்த்தி பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து வணங்கிய பின்பு திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டும். வராகமூர்த்தி பெருமாள் கோவில் ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தத்தின் வடமேற்கு கரையில் உள்ளது.
🙏🇮🇳35
ஆதியில் திருமலையில் வராகமூர்த்தி பெருமாள் மட்டுமே கோவில் கொண்டிருந்தார். வெங்கடாசலபதி திருமலையில் தங்க, வராகமூர்த்தி பெருமாளிடம் அனுமதி கேட்டு, அவர் சம்மதத்துடன் கோவில் கொண்டார்.
🙏🇮🇳36
ஆகவே அவருக்கு நைவேத்தியம் செய்து வணங்கிய பின்புதான் திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டும்.
🙏🇮🇳37
வராகமூர்த்தி பெருமாள் கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஆறு மணி முப்பது நிமிடம் முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
🙏🇮🇳38
அதற்குப் பிறகு
8 வதாக தரிசனம் செய்யவேண்டிய இடம் ஆனந்த நிலையத்தில் வெங்கடாசலபதி பெருமாள். கோவிலுக்குள் நுழையும்
முன்பு (படி காவிலி என அழைக்கப்படும் ) ராஜகோபுரத்தை,
🙏🇮🇳39
ஆண்கள் தலைக்குமேல் கை தூக்கி குவித்தும், பெண்கள் மார்புக்கு அருகில் கை குவித்தும் வணங்க வேண்டும். பெண்கள் தலைக்குமேல் கை தூக்கக்கூடாது. 🙏🇮🇳40
பின்பு வரிசையில் வரும்போது ராஜகோபுர வாசற்படியை மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும்; கொடிமரத்தை வணங்கி, அதற்க்கு அடுத்துள்ள
நடிமி படி காவிலி : இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது.🇮🇳41
கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. *வெண்டிவாகிலி * என்று இந்த கதவுகளுக்கு பெயர். 🙏🇮🇳42
இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.
🙏🇮🇳43
வெள்ளி கவசம் மூடிய (நமிடி படி காவிலி என அழைக்கப்படும் ) சிறிய வாசலுக்கு முன்பு சற்று நின்று உங்கள் கோரிக்கையை மனதுக்குள் சொல்லி பெருமாளை வேண்டிக்கொண்டு, வாசற்படியை மிதிக்காமல் தாண்டி செல்லவேண்டும். 🙏🇮🇳44
பின்பு மூலஸ்தானம் சென்று, துவாரபாலகர்களை வணங்கி மூலவரையும் வணங்க வேண்டும். பின்பு வெளியில் வந்தவுடன் மூலஸ்தான தங்க கோபுரத்தில் வெள்ளி பிரபை வைத்து TTD தேவஸ்தானத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ள 🙏🇮🇳45
மூலஸ்தான தங்க கோபுர வெங்கடாசலபதியிடம் உங்கள் கோரிக்கைகளையும், வேண்டுதல்களையும் பொறுமையாக மனதுக்குள் கூறி வணங்கி வேண்டுங்கள். 🙏🇮🇳46
இங்கு பலர் சற்று உயரமான படிகள் மீது நின்று வணங்கிக்கொண்டு இருப்பார்கள். இங்கு உங்களை யாரும் அவசரப்படுத்த மாட்டார்கள். 🙏🇮🇳47
பின்பு காணிக்கை செலுத்துவதாக இருந்தால், உண்டியலில் செலுத்துவது, கோவிலில் இலவச பிரசாதம் வாங்குவது ஆகியவற்றை முடித்துக்கொண்டு , சாமிக்கு முதுகு காட்டாமல் ராஜகோபுரத்துக்கு வெளியில் வாருங்கள். 🙏🇮🇳48
மூலவர் தரிசனம் பார்த்த பின்பு ராஜகோபுரத்துக்கு வெளியே வரும்வரை எங்கும் அமரக்கூடாது.
அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.
இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும்.
அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?
நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*
மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3
*குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா*
தென்தமிழக ஊர்களில் தனித்துவ சிறப்பானது...!!!
திருச்செந்தூர் : தசரா என்றதுமே, இந்தியர்களுக்கு பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது, நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள்தான்.
🙏🇮🇳1
1.மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள்.
2.யானை அணிவகுப்புகள்.
3.குஜராத்தின் தாண்டியா நடனம்.
4.கொல்கத்தாவின் துர்க்கா பூஜை.
🙏🇮🇳2
ஆனால் தமிழர்களுக்கு அவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் தென்கோடியில் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா தான்.