நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*
மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
*முதல் படியில்*
புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.
*இரண்டாம் படியில்*
சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள்.
*மூன்றாம் படியில்*
எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
*நான்காம் படியில்*
நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.
*ஐந்தாம் படியில்*
மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.
*ஆறாம் படியில்*
மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
*ஏழாம் படியில்*
முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.
*எட்டாம் படியில்*
தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.
*ஒன்பதாம் படியில்*
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும்.
உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.
நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்.
*கொலுமேடைக்கு பூஜை செய்யும் முறை:*
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும்.
சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு பலகை இட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை செய்ய வேண்டும்.
*நவராத்திரி ஸ்லோகம்*
கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரி தநயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
*பொருள்:*
இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே!
வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே!
மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.
அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.
இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும்.
அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். தாயாரின் பரிந்துரை அடிப்படையில்தான் பெருமாளின் கருணை கிடைக்கும்.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3
*குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா*
தென்தமிழக ஊர்களில் தனித்துவ சிறப்பானது...!!!
திருச்செந்தூர் : தசரா என்றதுமே, இந்தியர்களுக்கு பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது, நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள்தான்.
🙏🇮🇳1
1.மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள்.
2.யானை அணிவகுப்புகள்.
3.குஜராத்தின் தாண்டியா நடனம்.
4.கொல்கத்தாவின் துர்க்கா பூஜை.
🙏🇮🇳2
ஆனால் தமிழர்களுக்கு அவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் தென்கோடியில் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா தான்.