#விராலிமலை_ஷண்முகநாதர் #சுப்ரமண்ய_சுவாமி_திருக்கோயில்

திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
*பிற பெயர்கள்:
சொர்ணவிராலியங்கிரி
*மூலவர்:
சண்முகநாதர் (ஆறுமுகம்)
*அம்மன்:
வள்ளி மற்றும் தெய்வானை
*தல மரம்:
காசி வில்வம்
*தீர்த்தம்:
சரவணப் பொய்கை; நாக தீர்த்தம்
*தொன்மை:
1000-2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
*சிறப்பு:
முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
*மாவட்டம்:புதுக்கோட்டை
*வட்டம்:விராலிமலை

தல வரலாறு :

விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர்,
பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளான். இவனது கட்டுப்பாட்டில் விராலிமலை இருந்துள்ளது.

இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் குரா மரம் இருந்தது.
ஒருகாலத்தில் குரா எனும் வகை மரங்கள் அடர்ந்த வனமாக, மலை சூழ்ந்த இடமாகத் திகழ்ந்தது இந்தப் பகுதி.
வேடன் ஒருவன் ஒருநாள் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவனுக்குப் போக்குக் காட்டியபடி ஓடியது. அந்த வேங்கையை எப்படியும் பிடித்துவிடுவது என வேடனும் பின்னாலேயே ஓடிவந்தான். அப்போது குரா மரத்துக்கு அருகில் வந்ததும் வேங்கை சட்டென்று காணாமல் போகவே... திடுக்கிட்டுப் போனான் வேடன்.
அங்கே திடீரென்று தோன்றிய மயிலும் விபூதி வாசனை யும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிவிக்க, பூரித்துப் போனான். பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முருகப்பெருமானின் விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர் என்கிறது ஸ்தல புராணம்.
அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.

திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்த அருணகிரி நாதரிடம்... 'விராலிமலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க...
அந்த மலையைத் தேடிச் சென்றாராம் அருணகிரிநாதர். வழி தெரியாமல் தவித்தவருக்கு, வேடனாக வந்து தலத்தை அடையாளம் காட்டி அருளினார் கந்தவேள் என்கிறது ஸ்தல புராணம். அதுமட்டுமின்றி, அருணகிரிநாதருக்கு அஷ்டமா ஸித்திகளையும் தந்தருளிய தலம் என்றும் போற்றப்படுகிறது விராலிமலை.
இந்தத் தலத்து முருகக்கடவுளை மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரியார் என்பது குறிப்பிடத்தக்கது

தலச்சிறப்புக்கள் :

இங்கு வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.
தவிட்டுக்குப் பிள்ளை :

பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள்
ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.

முருகனுக்கு சுருட்டுப் படையல் :

எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு.
இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம்.
பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு
படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும்,
மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.

திருத்தலப் பாடல்கள் :

திருப்புகழ் தொகுப்பினில், 58ஆம் எண் கொண்ட பாடலும், 69 முதல் 83ஆம் எண்வரை கொண்ட பாடல்களும், விராலிமலையில் வீற்றிருக்கும் பெம்மானைக் குறித்து அருணகிரியார் பாடிய பாடல்கள். அவற்றில் ஒரு பாடலின் ஒரு பகுதி கீழே:
"மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும்
மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
ஏகா சமீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம்
ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமா ளமான குறிக்க ழுத்திகள்
ஆசா ரவீன விலைத்த னத்திய ருறவாமோ"

சுமார் 2,000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன்.
எப்படியும் இங்கே ஆயிரத்து ஐந்நூறு மயில்களுக்கும் அதிகமாக இருக்கின்றன என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.

ஒருகாலத்தில், இந்தக் கோயிலின் திருப்பணியில் கருப்புமுத்து எனும் பக்தர் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த காற்றும் பெருவெள்ளமுமாக புயல் நிலைகொண்டிருக்க...
கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, கந்தபிரானை தரிசிக்க முடியவில்லையே என்று கலங்கியபடி இருந்தவர்... குளிருக்கு இதமாக சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அங்கே வந்த ஒருவர், 'எனக்கு ஒரு சுருட்டு கொடு.
ஆற்றைக் கடந்து செல்ல நான் உதவுகிறேன்’ என்று சொல்ல... கருப்புமுத்துவும் சுருட்டைக் கொடுத்தார். பிறகு ஆற்றைக் கடப்பதற்கு அவரும் உதவி செய்தார்.

நிம்மதியும் சந்தோஷமும் ஒருசேர, கோயிலுக்குச் சென்று பார்த்தால்...
அங்கே முருகப்பெருமானின் சந்நிதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார் கருப்புமுத்து. ஊர்மக்களிடம் ஓடிச்சென்று விவரம் சொல்லி, பூரிப்பில் திக்குமுக்காடினார். அதையடுத்து, முருகப்பெருமானுக்கு இந்தத் தலத்தில் மட்டும் சுருட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே சுருட்டைப் பெற்றுக் கொண்டேன். எனவே, சுருட்டு நைவேத்தியத்தைத் தடை செய்யாதே!’ என அப்போது அதற்கு தடை விதிப்பதாக இருந்த புதுக்கோட்டை மகாராஜாவின்
கனவில் வந்து முருகப்பெருமானே சொன்னதாக ஐதீகம்.

அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப்படுகிறது.
திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.

ஓம் முருகா சரணம்🙏🙏 @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

21 Oct
#சிக்கல்களைத்_தீர்ப்பாள்
#சிறுவாச்சூர்_மதுரகாளி_அம்மன்

வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம்.
அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.

மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி,
Read 16 tweets
20 Oct
சபரிமலையில் இருக்கும்
முஸ்லிம் பாபர் மசூதியை பற்றிய பொய் கதை ஐயப்ப பக்தர்களே படித்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள்

ஐயப்ப பக்தர்களே கொஞ்சம் நில்லுங்கள்!

இந்துக்களே !!! ஐயப்பன் வாழ்ந்த காலம் எது, இஸ்லாமியர்கள் இந்தியாவை படையெடுத்த காலம் எது ?.
இது கூட தெரியாமல் இந்த கட்டுக்கதையை ஐயப்ப பக்தர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

உண்மை கதை என்ன

பேட்டை சாஸ்தா என்பவர் வாபர சுவாமி என்ற பூத கணங்களின் தலைவர் ஆவார்

சுவாமி ஐயப்பன் ராணியின் சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வருவதற்கு புறப்பட்டார்.
வனத்தின் எல்லையாகிய எருமேலியில் சிவபெருமான் அனுப்பிய பூதகணங்கள் *வாபரன்*என்ற பூதகணத்தலைவனின் தலைமையில் ஸ்ரீ ஐயப்பனை சந்தித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகிஷி சம்ஹாரம் செய்ய அவை உதவியாக நின்றன.

பின் ஐயப்பன் புலிக்கூட்டங்களுடன் பந்தளம் திரும்பினார்.
Read 24 tweets
20 Oct
* மாவீரனை போற்ற வேண்டும். ஷாஜகான் அவுரங்கசீப் அக்பர் பாபர் என்று ஆக்கிரமிப்பாளர்களை படித்துக்கொண்டே இன்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கிறோம். சில கட்சிகள் அவர்கள் காலை நக்கிப் பொழப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து வெகுமதிகளை பெறுகிறார்கள்.
இந்த இஸ்லாமிய வரலாறுகளை குப்பையில் தூக்கி போட வேண்டும். !
சமீபத்தில் மனோரமா டிவியில் ஒரு வாக்குவாதம் நடைபெற்றபோது . இந்திய ராணுவத்தின் பெருமைகளை மேஜர் ரவி அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகமது அப்படி என்ன ராணுவம் சாதித்து விட்டது என்று கேட்டார்.
* மேஜர் ரவி அவர்கள் மேஜர் சாந்த்
மல்ஹோத்ரா அவர்களுடையது வீரத்தை விளக்கிக் கூறினார் . இவ்வளவு பெரிய வீரனை நாம் எப்படி தெரியாமல் விட்டு விட்டோம். தொடர்வோம்.
* 6 அடி 2 அங்குலம் உயரம் உள்ள ஆஜானுபாகுவான தேகம் . சினிமா காரணை தோற்கடிக்கும் அழகு.
Read 6 tweets
19 Oct
#இனிய_காலை_வணக்கங்கள்

#சிறுவாபுரி_முருகன்_ஸ்தல_வரலாறு

மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி
கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.

சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் Image
(மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.

இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. Image
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

மயில் மேலேறிவந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த, Image
Read 13 tweets
18 Oct
(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு)...

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர். நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.
ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்
Read 4 tweets
18 Oct
🌐💠🌀🔹♥♦♥🔹🌀💠🌐

*மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாள்*
*என்றால் என்ன?*
*அர்த்தங்கள் தெரிந்துகொள்வோம்!*

தினசரி பஞ்சாங்க முறையில்...
மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?

⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
மேல்நோக்கு நாள்,
கீழ்நோக்கு நாள்,
சம நோக்கு நாள்
ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

*மேல்நோக்கு நாள்:-*

உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(