கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
சென்னை : 'கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு ஏற்படலாம்

ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து கோவில்களில், அயல்பணி என்ற முறையில், அறநிலையத் துறை ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த கோவில்களின் நிதியில் இருந்து சம்பளம், அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகளில் ஊழியர்களை நியமிக்க, அறங்காவலர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை. நிர்வாக அதிகாரியை மட்டுமே கோவில்களுக்குநியமித்துக் கொள்ளலாம்.அறநிலையத் துறை சட்டம், நிர்வாக அதிகாரி தவிர்த்து, அரசு ஊழியர்களை நியமிக்க அனுமதி அளிக்கவில்லை.
அறநிலையத் துறை ஊழியர்களை, கோவில்களில் உள்ள பல்வேறு பதவிகளில் சட்ட விரோதமாக நியமிக்கின்றனர். துணை ஆணையர் முதல், ஆய்வாளர்கள் வரை, அயல்பணி என்ற முறையில் கோவில்களில் நியமிக்கின்றனர்.
எனவே, அயல்பணி என்ற முறையில், கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களில் அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க, அறநிலையத் துறை ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும். கோவில் நிதியில் இருந்து வழங்கப்பட்ட சம்பளம், அலவன்ஸ் தொகையை திருப்பி கொடுக்கும்படிஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன்,விசாரணைக்கு வந்தது.மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
''அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.''குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும்,'' என்றார்.முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதித்தால், கோவில் நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படலாம்;
கோவில் நிலங்கள், சொத்துக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.கோவில்களில் தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில், ஊழியர்கள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்க, விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது தான், கோவில்கள் சுமுகமாக செயல்படும்.
கண்காணிக்கலாம்

இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கிடையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம். மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், சட்டப்படி அறங்காவலர்கள் நியமிக்கும் முறையை நீதிமன்றம் கண்காணிக்கலாம்.
இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, டிச., 15க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.மாவட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்களில், விண்ணப்பிப்போருக்கான தகுதியை குறிப்பிடவில்லை என, டி.ஆர்.ரமேஷ் சுட்டிக் காட்டினார்.
உடனே, தலைமை நீதிபதி, விளம்பரத்தில் தவறு இருந்தால், சரி செய்து வெளியிடும்படி, அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினார்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

29 Oct
அருள்மிகு #தன்வந்திரி
பகவான்_திருக்கோயில்

மூலவர் : தன்வந்திரி
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : கீழ்ப்புதுப்பேட்டை
மாவட்டம் : வேலூர்

 🙏🇮🇳1
திருவிழா: 

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் தேக ஆரோக்கியம் கருதி தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது.  

🙏🇮🇳2
தல_சிறப்பு: 

தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு.  

பொது_தகவல்: 

     இங்கு சஞ்சீவி ஆஞ்சநேயர், முனீஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நவ கன்னிகைகள், அத்ரி பாதம், விநாயகர், மஹிஷாசுரமர்த்தினி, கார்த்தவீர்யார்ஜுனர், சுதர்சன ஆழ்வார்,

🙏🇮🇳3
Read 36 tweets
28 Oct
#குளிகை நேரம் என்பது என்ன?

இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...
யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...
Read 18 tweets
28 Oct
அடுத்த 10 ஆண்டுக்கு பா.ஜ.க. ஆட்சியே ! பிரதமர் மோடி இடத்திற்கு ராகுலால் வரவே முடியாது ! - பிரசாந்த் கிஷோர்!
பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்திற்கு ராகுல்காந்தியால் வரவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பிரசாந்த் கிஷோர் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.
Read 6 tweets
28 Oct
பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.

இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
Read 23 tweets
28 Oct
சிந்திக்க வைத்த பதிவு...

காய்கறிவிலை_ஏறிவிட்டதென_பொங்குபவர்களுக்கான_பதிவு...!!!

தக்காளி விலை ஏறிவிட்டது,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது, இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்.!!!
நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என்று கூறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை..
COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளீர்கள்???
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(