1. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும்.
தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.
2. இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
3. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
4. கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
5. ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
6. ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
7. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
8. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
9. கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
10. ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
சனிக்கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
11. வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
12. பிரதோஷகாலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
13. மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
14. கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம்.
ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
15. வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து
27. எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
16. சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, போலீஸ் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
ஊக்கத்தொகை
ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாத குழுக்களால் இழைக்கப்படும் குற்றங்கள், பயங்கரவாத குழுக்களுக்கான நிதி உதவி அளிப்பது,
பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பயங்கர வாதம் தொடர்புடைய குற்றங்களை விரைவாக விசாரித்து, தண்டனை பெற்று தர, மாநில விசாரணை முகமை உருவாக்கப்பட்டுள்ளது.
இது உங்கள் இடம்: தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லையே ஏன்?
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் மொழியை வைத்து அரசியல் செய்வது பெரும்பாலும் இல்லை.
திராவிட அரசியல்வாதிகள் பலர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அவர்களின் பள்ளியில், தமிழக பாடத் திட்டம் செயல்படுத்துவதில்லை.
ஹிந்தி உட்பட பல்வேறு சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க விடாமல், திராவிட ஆட்சியாளர்கள் எதிர்ப்பது ஏன் என, தமிழக மக்கள் சிந்திப்பது இல்லை.
ஆந்திராவில் வசித்த வந்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தபோது இப்பகுதிக்கு வந்தவர் ஓருநாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். 🙏🇮🇳2
அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், 'நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். 🙏🇮🇳3
‘‘ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை; அகிலேஷ் வரலாறு படிக்க வேண்டும்’’- ஓவைசி கடும் எதிர்ப்பு
முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அகிலேஷ் யாதவ் வரலாறு படிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது
‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களானார்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்துக்கு தடைவிதித்தார்’’ எனக் கூறினார்.
பரிமள ரெங்கன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் ஆளுங்கட்சி எம்.பி., ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் வன்முறை, அடாவடி செயல்கள் தலைதுாக்க துவங்கியுள்ளன. இதை முதல்வர் ஸ்டாலின், துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த காலம். 'மிசா' வேறு அமலில் இருந்தது. ஆட்சியில் இருப்போர் நிறைய தவறுகள் செய்தனர். பூச்சி மருந்து, அரிசி பேரம் என பல பெரிய ஊழல்கள் அரங்கேறின.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம், சண்முகம், நெடுஞ்செழியன், ராஜாராம் ஆகியோர் மீது பல புகார்கள் எழுந்தன.