#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _2

•அண்ணாவிற்கு பெரியார்
உடனான தொடர்புகள்.

•பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார்.
•பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து,
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
•அதன் பின் அரசியலில் ஈடுபட்டார்.

•பெரியாருடன் கருத்து
வேறுபாடு மற்றும் திமுக
உருவாதல்.
•பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது.
•இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும்
குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

•இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார்.
•இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

•அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார்.
இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் ,
கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று.
•அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது.
•அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை வலியுறுத்தினார்.
•திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில்,
பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார்.
•இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.

•பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு,
மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை.
•அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்.
•இறுதி நிகழ்வாக பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும்,
•தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30)மணியம்மையாரை மணம்புரிந்ததால், அண்ணாதுரை
திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி,
•திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.
•தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திராவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது.
•இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக
இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.

•ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார்.
•இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார்.
•இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.
இதன் தொடர்ச்சியை நாளை காணலாம் 🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோல்ட்ஃபிஷ்_official 🐠

கோல்ட்ஃபிஷ்_official 🐠 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @goldfish_officl

14 Nov
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _3

•திராவிட நாடு.

•திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார்.
•திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் Image
இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
•பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
•ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்:
“நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட,
Read 14 tweets
13 Nov
#பெரியார்_இன்றும்_என்றும்
அவருக்கு பெரியார் என்று பெயர் வைத்தது யார் தெரியுமா?

•அன்றைய காலத்திலேயே பெண் விடுதலைக்காகவும் தலீத் விடுதலைக்காகவும் போராடிய வீர மங்கை தான் மீனாம்பாள் சிவராஜ் அவரது வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம்.
•நீதிபதிக்கான கேள்வி :

•மீனாம்பாள் அவர்கள் இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டுகள் கவுரவ நீதிபதியாக இருந்தார்.

கவுரவ நீதிபதிக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அப்போதே மிகவும் தைரியமாக பெண் விடுதலையை மையப்படுத்தி பதிலளித்தார்.
✓கேள்வி இது தான்_
உங்கள் கணவர் வழக்கறிஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதடுகிற பக்கம் நீங்கள் தீர்ப்பு சொல்ல மாட்டீர்களா?
✓கணவர் என்பது வீட்டோடு தான் :
•அதற்கு மீனாம்பாள் என்ன சொன்னார் தெரியுமா?
கணவர் என்பது வீட்டோடு தான்.
Read 6 tweets
11 Nov
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்

இன்று எனக்கு பிடித்த தலைவர்களின் வரலாறு எனும் தலைப்பில் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்...

•கா. ந. அண்ணாதுரை.
✓முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்.
•காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969•
•இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.
•இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

•பிறப்பு.

அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் கைத்தறி நெசவாளர்
நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு
Read 16 tweets
1 Nov
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _10

• நேற்றைய தினம் சவிதா அம்பேத்கர் பற்றி கண்டோம் இன்று அதன் தொடர்ச்சியாக இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் பற்றி காண்போம்...

•இரமாபாய் பீம்ராவ்
அம்பேத்கர்.
•இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (7 பிப்ரவரி 1898 - 27 மே 1935; இரமாய் அல்லது தாய் இரமா என்றும் அழைக்கப்படுகிறார்) பி.ஆர்.அம்பேத்கரின் முதல் மனைவியாவார்.
•இவர் தனது உயர் கல்வியையும் தனது உண்மையான திறனையும் தொடர உதவுவதில் ஆதரவாக இருந்ததாகக் அம்பேத்கர் கூறினார்.
•இவர் பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில் இடம்பெற்றவர்.
•இந்தியா முழுவதும் பல அடையாளங்களுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளன.

✓இரமாபாய் அம்பேத்கரின்
ஆரம்ப கால வாழ்க்கை.

•இரமாபாய் ஒரு ஏழைக் குடும்பத்தில்,
Read 11 tweets
31 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _9

•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்டோம் அதன் தொடர்ச்சியாக....

• சவிதா அம்பேத்கரின்
திருமணம்.
•ஏப்ரல் 15, 1948 அன்று சாரதா கபீர் பீம்ராவ் அம்பேத்கரை மணந்தார்.
•அப்போது இவருக்கு வயது 39, அமேத்கருக்கு வயது 57.
•அவர்களது திருமணத்திற்குப் பிறகு, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் இவரை பிரபலமாக "மா" (தாய்) என்று அழைத்தனர்.
•திருமணத்திற்குப் பிறகு சாரதா 'சவிதா' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
•ஆனால் அம்பேத்கர் இவரை "செரா" என்று பழைய பெயரில் அழைப்பார்.

•பௌத்த மதத்திற்கு
மாற்றம்.

•1956 14 அக்டோபர் அன்று அசோக விசய தசமி,
Read 16 tweets
30 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _8

அம்பேத்கரின் வாழக்கை வரலாறு அதன் தொடர்ச்சியாக....

•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்.

•சவிதா பீம்ராவ் அம்பேத்கர் 27 சனவரி 1909 - 29 மே 2003, சாரதா கபீர் என்ற பெயரில்,
பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார்.

•அம்பேத்கரை பின்பற்றுவர்களும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகேப் (மராத்தி மொழியில் அம்மா) என்று அழைத்தனர்.
•அம்பேத்கரின் பல்வேறு இயக்கங்களில், புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து குறியீடு சட்டங்கள் மற்றும் தலித் பௌத்த இயக்கங்களின் போது, இவர் அவ்வப்போது அவருக்கு உதவினார்.

•எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நீட்டித்ததற்காக அம்பேத்கர் தனது,
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(