1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்
முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும்
2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.
கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
3.தரேன். புடிச்சுக்க!
முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.
ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.
4. இதுதான் ஆரம்பம். இனி அடுத்த பாரா.
அவன் தலையை யாரோ வெட்டிட்டாங்க. முண்டம் மட்டும் நடந்துபோய் விழுந்ததுன்னு சொல்லு. இல்லை… அவன் தலைல பானைய கவுத்துக்கிட்டுப் போயிருந்தான்னு சொல்லு. தடால்னு ஆரம்பி கதையை.
பலபலவென்று விடிந்தது. சார் போஸ்ட் என்று குரல் கேட்டது.
கதை ஆரம்பிச்சிட்ட. என்ன சொல்லப்போற? முடிஞ்சவரைக்கும் சிறுகதை நடக்கற காலத்தை ஒன் அவர், டூ அவர்ல வச்சுக்க. ஒரு இம்பாக்ட் மட்டும் போறும். ஒரு சிறுகதைல மூணு தலைமுறை சொல்லாதே.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில் என்று
6.முடிக்காதே. நீதி சொல்றது தப்பில்லை. உள்ளடக்கமா அமைதியா இருக்கட்டும். ஒரு சின்ன சண்டை, அதில ஒரு க்ளைமாக்ஸ், அதுல கிடைச்ச இம்பாக்ட் சிறுகதைக்குப் போறும்.
டீடெய்ல்ஸ் எங்க தரணும் தெரியுமா? ஒரு ஹால் பத்தி எழுதினா அந்த ஹால் எப்படி இருந்ததுன்னு எழுது. படிக்கறவங்க மனசுல டிராயிங்
7. மாதிரி விழட்டும். ஃபர்ஸ்ட் பர்சன் சிங்குலர்ல ஆரம்பிக்காதே. நான் தூங்கி எழுந்தபோது இருட்டாகி விட்டிருந்ததுன்னு எழுதாதே. தள்ளி நின்று அவன் எழுந்தபோது இருட்டாய் இருந்ததுன்னு எழுது. உன்னை பாதித்த விஷயம் பத்தி எழுது. உன்னை உன்கிட்டேர்ந்து தள்ளிப் பார்த்து எழுது. எழுதிட்டு
8. மறுவாரம் வரைக்கும் பொட்டில வச்சுட்டு மறுபடி பார். உன் தப்பு உனக்கே தெரியும்.
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும்
2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
3. யுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர்.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி
1. அந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டைநாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்ல மட்டுமே உபயோகப்படுத்தினான்.
அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக்
2. கொல்ல முடிவுசெய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.
மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை.. தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள்
3. அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"
சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.
அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.
ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.
உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும்
2. வாய்ப்பு.
இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.
ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
3. அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.
சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.
பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றியையே எதிர்பார்க்காத, நாடு, குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும்
கொரண்டைன் சமயத்தில் டேனிக்கு இன்று புதிதாய் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து, ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க் (hard work, smart work) பற்றிச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன்.
ஏதாவது ஒரு உதாரணத்தோடு சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று யோசித்த
2. போது, வாட்சப்பில் அந்த வீடியோ வர, அந்தக் காட்சியையே அன்றைக்கு அதற்கான உதாரணம் ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
திருவிளையாடலில் முருகனும், விநாயகரும் மாம்பழத்துக்காக சண்டை போடும் காட்சிதான் அந்த வீடியோவில் இருந்தது.
முருகனை ஹார்ட் வொர்க்கிற்கும், விநாயகரை ஸ்மார்ட்
3. வொர்க்கிற்கும் உதாரணமாய்க் காட்டி, ஹார்ட் வொர்க்கை விட ஸ்மார்ட் வொர்க் எவ்வளவு சுலபமாய், குறைந்த காலத்தில் வெற்றியைத் தரும் என்று சொல்லிக் கொடுப்பதுதான் திட்டம்.
ஹார்ட் வொர்க், ஸ்மார்ட் வொர்க் வித்தியாசம் எல்லாம் சொல்லி, எது சிறந்தது எப்படிச் சிறந்தது என்பதெல்லாம் விளக்கிச்
1. தில்லுதுரயின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், இனிமேல் அவர் எதற்குமே கவலைப்படக் கூடாது... எதற்காவது கவலைப்பட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்.
கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குடுக்க முடியாத நிலை. எப்படி கவலைப்படாமல் இருக்க
2. முடியும் என்று யோசித்தவர் கடைசியாய் ஒரு வழியையும் கண்டுபிடித்து விட்டார்.
ரெண்டொரு நாளில் பேப்பரில் விளம்பரம் கொடுத்து, இன்டர்வியூ செய்து, இவருக்காக கவலைப்படுவதற்கென்றே இப்போது ஒரு ஆளை மாதம் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.
அன்று
3. இரவு வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மனைவி கேட்டாள்.
"இப்பத்தான் உங்களைப் பாக்கவே நல்லாருக்கு. கவலைப்படறதுக்குனு ஒரு ஆளைப் போட்ட உடனே, பாக்க நல்ல தெளிவா இருக்கீங்க. கம்பெனி நல்லாப் போகுதா இப்ப.?"
கேட்ட மனைவியிடம் தில்லுதுர சொன்னார், "எங்க... முன்னைவிட நெலமை ரொம்ப
பஸ் அந்த மெய்ன் ரோட்டுத் திருப்பத்தில் இறக்கி விட்டது எங்களை.
நண்பர் வந்து அவர் வீட்டுக்கு கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்த நேரம்.
போய்க் கொண்டிருந்த கார் பஸ்களை இடைஞ்சல் செய்வது போல் சாலையில் இங்கும் அங்குமாக குறுக்கே துள்ளிக் குதித்து ஓடிக்
2. கொண்டிருந்தது ஒரு அழகான கழுதைக் குட்டி.
போகிற வருகிற கார் பைக்குகளெல்லாம் அந்த குட்டிக் கழுதைக்காக நின்று தயங்கிச் செல்வதை சந்தோஷமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.
பார்த்துக் கொண்டிருந்த நானும் மெல்ல டேனியைச் சீண்டும் நோக்கில், “அந்தக் குட்டிக் கழுதைதான் டேனி.!’
3. என்றதும்...
“நான் ஒண்ணும் கழுதையில்ல...” என்று சிணுங்கினான் டேனி.
“அது டேனிதான். பாரு எப்படிக் குறும்பு பண்ணுதுனு.!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே... ஒரு பஸ் அந்தக் கழுதைக்குப் பக்கத்தில் பெரிதாய் ஹார்ன் செய்தது.