இந்து மதத்தில் பெண்ணியம்!

By ஸ்டான்லி இராஜன் 

இந்துமதத்தின் அடிநாதமும் ஆணிவேரும் பெண் பாதுகாப்பும் சுதந்திரமுமே!

மேற்காசிய மதங்களெல்லாம் , ஐரோப்பிய மதங்களெல்லாம் கடவுள் ஒரு ஆண் என்றபொழுது கடவுளில் பாதி பெண், பெண் இல்லாமல் கடவுளே இல்லை என சொன்னமதம் இந்துமதம்.
மேற்காசியாவின் ஆபிரகாம் மனைவிக்கு தெரியாமல் மகனை பலியிட, அதாவது மனைவியினை ஒரு பொருட்டாக மதியாதபொழுது சிறுதொண்டரின் மனைவி சிவனுக்காய் தன் மகனை கணவனோடு சேர்ந்து பலியிட்டாள் என சொன்ன மதம் இந்துமதம்.
ஆண்டாளும், நாயன்மார்களில் 3 வரும் பெண்கள் என்பது இம்மத சிறப்பு; மீதி 60 நாயன்மாரிலும் கணவனோடு பக்திக்கு காவலாய் இருந்த மங்கையர்கரசிகள் உண்டு. இந்துமதம் அந்த சிறப்பை கொடுத்திருந்தது.இங்கு பெண்ணடிமை தனம் ஒரு காலமும் இல்லை,.
சுயம்வரம் என அவள் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கே இருந்தது.அது சீதா, பாஞ்சாலி, நளன் கதை என்றாலும் சரி, கிராமத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி அடையாளம் காட்டும் காட்சியானாலும் சரி. இந்துமதம் பெண்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருந்தது.கணவன் நீர் பாய்ச்சினால் பெண் களையெடுத்தாள்.
அவன் மாடுமேய்த்தால் அவள் பாலை காசாக்கினாள். அவன் நெசவு செய்தால் அவள் நூல் நூற்றாள்.

எல்லா காலமும் இங்கு பெண்கள் ஆணுக்கு சமமாக உழைத்து கொண்டேதான் இருந்தனர்.பாண்டிய மன்னனையே கேள்வி கேட்கும் உரிமை வழங்கி கண்ணகி எனும் பெண்ணை காவியமாக்கிய மண் இது.
குழந்தை திருமணம் என்பார்களே ஏன்?மானிடனுக்கு 13 அல்லது 14 வயதிலே பாலியல் உணர்வுகள் மேலோங்குகின்றன. அவனுக்கு அந்த காலத்திலே ஒரு வடிகால் கொடுத்து ஒரு வழியும் துணையும் கொடுத்தால் 20 வயதில் அவன் சாதனைகளை தொடங்குவான்.
மாறாக அவன் அந்த தீயில்வெந்து செத்து 30வயதில் திருமணம் செய்தால் அவன் ஆயுளில் பாதி கரைந்துவிடுகின்றது.

இந்துமதம் அன்றே சொன்னதைத்தான் ஹிட்லர் தன்நாட்டில் அறிமுகபடுத்தினான். அவனின் வெற்றிக்கெல்லாம் அதுதான் காரணம்.
இன்றும் ஐரோப்பியர் இளம் வயதிலே பல சாதனைகளை செய்ய தாலி இல்லாமல் அவர்கள் செய்யும் குழந்தை திருமணமே காரணம் .மறுக்க முடியுமா?
பெண்களை அடுப்படியிலே போட்டு வதைத்தார்கள் என்பதெல்லாம் எவ்வகை நியாயம்? ஜப்பான், கொரியா, சீனா, ஐரோப்பா என எந்த நாட்டில் ஆண் சமைத்துவிட்டு பெண்ணை வேலைக்கு அனுப்பினான்?
18ம் நூற்றாண்டு வரை பெண்கள் வேலைக்கு செல்லும் அவசியம் ஒரு நாட்டிலுமில்லை ஆனால் மாடு, கன்று, வயல், வரப்பு, விறகு என வீட்டிலே வேலை இருந்தது.எந்த நாட்டு பெண் சுகமாக இருந்தாள் ?
எல்லா நாட்டு பெண்ணும் உழைத்தாள்.இங்கு அதிகாரச்சி என அரசவையில் ஆதிக்கம் செலுத்திய பெண்ணே, மருத்துவச்சி என மருத்துவமும் செய்தாள்.
ஒவ்வொரு ஆணுக்கும் அடிப்படை கல்வியினை பெண்ணே சொல்லி கொடுத்தாள்.பெண்கள் போருக்கு செல்லும் காட்சி கைகேயி முதல் கண்ணனுடன் போருக்கு சென்ற ருக்மணி வரை வரலாற்றில் உண்டு.அதன் தொடர்ச்சிதான் அப்பக்கா, நாயகிதேவி, மங்கம்மாள், வேலுநாச்சியார் வரலாறுகள்.
சமையல் முழுக்க பெண்களுக்கு என இந்துமதம் என்று சொல்லிற்று? பீமனும் நளனும் சமையலில் கரைகண்டவர்கள் என்கின்றது இந்து இலக்கியம்.கோவில்களிலும் அரசவைகளிலும் விருந்து கூடங்களிலும் ஆண்களே சமைத்தனர். அது இன்றும் தொடர்கின்றது.
வீட்டில் 4 பேருக்கு சமைக்கும் எளிதான பணியே பெண்ணுக்கு கொடுக்கபட்டது.அதுவும் அன்றைய சமையல் அறுசுவை அல்ல. கூழும் கஞ்சியும் கொண்ட மிக எளிய சமையல்.தெய்வத்திலே பெண்ணை வைத்து வணங்கியது இந்துமதம்.
பெண்களை அரண்மனை ராணியாக்கி மகிழ்ந்தது இந்துமதம்.காந்தாரி முதல் மங்கம்மாள் வரை ராணிகள் சொல்லே இங்கு ஆட்சியாய் இருந்தது பைபிளில் ஒரு ராணியினை காட்ட முடியாது, ராணியாக ஆசைபட்டு கொல்லபட்டாள் கிளியோபாட்ரா.
விக்டோரியா ராணியின் காலம் மிக சமீபமே.ஆனால் அன்றே ருத்ரம்மாளும் மங்கம்மாளும் ஆண்ட பூமி இது.

அவ்வையார் முதல் எத்தனையோ பெண் கவிஞர்கள் மன்னனுக்கு மேல் கொண்டாடபட்ட பூமி இது.இன்றும் இந்து தர்மம் பெண்களை “தாயே” என்றுதான் அழைக்கின்றது,.
சிறுமி முதல் முதிர்பெண்கள் வரை “அம்மா தாயே” என அழைக்கும் தர்மம் நம்முடையது.ஆனால் ஐரோப்பாவில் தாய் என பொருள்படும் மதர் என சொல்லிபாருங்கள்,.அப்பெண்கள் ஆத்திரத்தில் கத்துவார்கள்.ஏனென்றால் அதுதான் கிறிஸ்தவ ஐரோப்பிய தர்மம்.தாயே என்றால் வயதானவள் என கருத்தாம்.ஏற்கமாட்டார்களாம்.
ஆனால், இந்துமதம் அந்த பெரும் மரியாதையினை இந்துமதம் கொடுத்திருந்தது.இந்துமதத்தில் பெண்களுக்கு சொத்தில்லை என சொன்னவன் எவன்? சொத்துக்கு ஈடாக நகையும் பணமும் கொடுத்து அவள் வாழும் வரை அவளுக்கு சீர் கொடுக்க தகப்பன் சொத்தில் உடன்பிறந்த ஆண்களுக்கு கட்டளையிட்ட மதம் இந்துமதம்.
பெண்கள் எப்பொழுது இங்கு அடக்கபட்டதாக சொன்னார்கள்?பாரத கண்டத்து உள்நாட்டு போரில் மன்னர்கள் வென்றால் அடுத்த பெண்டிரை தொடுவதில்லை, பெண்களும் குழந்தைகளு, அந்தணரும், பசுவும் கொள்ளையில் இருந்து விலக்கி வைக்கபட்டார்கள்.
ஆம்! பெண்களை அவ்வளவு பெரும் பாதுகாப்பு பொருளாக வைத்திருந்த சமூகம் இது.

ஆனால், ஆப்கானியரும் வெள்ளையரும் வென்றால் பெண்களை நாசபடுத்துவதிலே கண்ணாயிருந்தனர். அவர்களிடம் இருந்து காக்க பெண்களுக்கு இடபட்ட வேலிதான் பின் சில சிக்கல்களை கொடுத்தது.
அது ஆப்கானிய, கிறிஸ்தவ ஆட்சியின் விளைவே அன்றி இந்துக்களின் இயல்பு அல்ல‌.இத்தேசம் பூரண இந்துதேசமாகும் பொழுது ஒவ்வொரு இந்துவும் தன் மரபறிந்து, குலம் அறிந்து, தன் பாரம்பரியம் அறிந்து பெண்களை வணங்கும் தர்மம் நம்முடையது என உணரும் பட்சத்தில் அந்த பாதுகாப்பும் தேவையிராது.
ஆம், இந்துக்களின் நாட்டில் மட்டுமே பெண்கள் சுதந்திரமாக வாழமுடியும், இந்து தர்மமே அதை செய்யவும் முடியும்.இதைத்தான் காந்தி சொல்ல நினைத்தார் .
ஆனால், அவரின் போலிமதபற்றும், வெள்ளையனுக்கு அவர் காட்டிய விசுவாசமும் ஜின்னாவின் மேலான ரகசிய காதலும், “என்று ஒரு பெண் கழுத்து நிறைய நகை போட்டு..” என மேலோட்டமாக வசனம் பேச வைத்தன.

ஒரு இந்து எக்காலமும் பெண்களை காத்து நிற்கின்றான். தன் தாரத்தை தவிர எல்லா பெண்களையும் சகோதரியாக தெய்வமாக வணங்கும் பாடத்தை இந்துமதம் போதிக்கின்றது.
பெண்களை தொட்டவன் எப்படியெல்லாம் அழிவான் என்பதற்கே அது ராமாயணத்தையும் மகாபாரததையும் வாலி கதை, சந்திரன் கதை, இந்திரன் கதை என சொல்லிவைத்தது.
பெண்ணை மதித்தவன் எப்படிஎல்லாம் வாழ்வான் என்பதற்கும் அது ஏகபட்ட வரலாறுகளை சொல்லி வைத்தது.ஆம், இந்துமதத்தின் அடிநாதமும் ஆணிவேரும் பெண் பாதுகாப்பும் சுதந்திரமுமே.
அதை நல்ல இந்து அறிவான்.அறியாத பதர்கள் சில எப்படி கத்தினாலும் அவர்களுக்கு உரிய பதில் கொடுக்க இந்துமதம் எனும் மாபெரும் கோபுரத்தின் ஒவ்வொரு கல்லும் தயாராக இருக்கின்றது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

3 Dec
இது உங்கள் இடம்: எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. மக்களே உஷார்!

ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு.
மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற ஆணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், அது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே இருக்கிறது.
கடந்த ஞாயிறு, சென்னையில் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு சென்றிருந்தேன். உள்ளே வருவோரிடம், ஏதோ பேருக்கு வெப்ப பரிசோதனை செய்து, 'இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?' என்று சம்பிரதாயமாக கேட்க, 'போட்டாச்சு...'
Read 8 tweets
3 Dec
பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்

புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
இந்திய வம்சாவளி

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
Read 6 tweets
3 Dec
சோழனிடம் கணக்கராக இருந்த சுதண்மன் என்பவனது கணக்கில் ஏதோ தவறு இருப்பதாக கருதிய சோழன், நாளைக்குள் கணக்கை சீர் செய்து சமர்ப்பிக்காவிடில் தண்டனை என கட்டளையிட்டான். கவலைப்பட்ட கணக்கன் கணக்கு ஏடுகளை சிவ லிங்கத்தின் முன் சமர்ப்பித்து தன்னை காக்க வேண்டினான். 🙏🇮🇳1
இரக்கம் கொண்ட சிவபெருமான், அந்தக் கணக்கன் வடிவிலேயே சென்று கணக்குகளை சீர் செய்து மன்னனை தெளிவிபடுத்தித் திரும்பினார். மறு நாள் ஏதுமறியாத சுதண்மன் அரண்மனை கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு மன்னரை சந்திக்க சென்றான்.

🙏🇮🇳2
அவனைக் கண்ட மன்னன், "நேற்று இரவே அரண்மனை வந்து என்னை சந்தித்து கணக்குகளை நேர் செய்தீரே! மீண்டும் எமைக் காண வந்த காரணம்?'' என வினவ, கணக்கன் வடிவில் சிவபெருமான் வந்து சந்தேகம் தீர்த்தத்தை எண்ணி மன்னரும் கணக்கனும் மனம் நெகிழ்ந்தனர். 🙏🇮🇳3
Read 7 tweets
2 Dec
வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
Read 31 tweets
2 Dec
பொது சிவில் சட்டம்: பா.ஜ., - எம்.பி., கோரிக்கை

புதுடில்லி : ''நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, பார்லி.,யில் மசோதா நிறைவேற்ற வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா தொகுதி எம்.பி.,யாக, பா.ஜ.,வை சேர்ந்த நிஷிகாந்த் துபே உள்ளார்.லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
அரசியல் சட்டத்தின் 44வது பிரிவில், பொது சிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.
Read 4 tweets
2 Dec
அறநிலையத் துறை தணிக்கை பிரிவை நிதித் துறைக்கு மாற்றியது சரியா?

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி விவகாரங்களை தணிக்கை செய்யும் தணிக்கை பிரிவை, தமிழக அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வெளியான அரசாணை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆலய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:

தமிழக கோவில்களின் வருமானத்தை தணிக்கை செய்யும் பணியை, அறநிலையத் துறைக்குஉள்ளேயே இருக்கும் தணிக்கை பிரிவு கவனித்து வந்தது. இதற்காக, தமிழகம் முழுதும் பல தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன.
அவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றினர்.
தணிக்கை பணி செய்வதற்காக, ஒவ்வொரு கோவிலில் இருந்தும், அதன் ஆண்டு வருமானத்தில், 4 சதவீத தொகையை, ஹிந்து சமய அறநிலையத் துறை தனியாக வசூலித்து வந்தது.
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(