1. பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள்
2. வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட்
3. ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார், ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.
இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின்
4. நிலைக்கும் மீறி கடுமையாக தண்டித்தார். நினைத்தால் நாக்அவுட் செய்து போட்டியை முடித்திருக்க முடியும், ஆனால் அலி அதை செய்யவில்லை, என முகம் சுழித்தவாறே பத்திரிக்கைகள் எழுதின.
போட்டிக்கு முன் நடத்தபடும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே "உன்னை நான் கடுமையாக தண்டிப்பேன்" என்ற
5. சூளுரைத்தார்.
ஏன் அப்படி செய்தார் ?
ஒரே ஒரு காரணம் மட்டும் தான். Terell, அலியை "முஹம்மது அலி" என்று தற்போதைய பெயரை சொல்லி அழைக்காமல் அவருடைய பழைய பெயரான Cassius clay என்று அழைத்தார். பல தடவை அலி தன்னுடைய தற்போதைய பெயரை கூறுமாறு வற்புறுத்தியும் Terrell மறுத்துவிடுவார். அது
6. மட்டும் தான் காரணம்.
போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஒவ்வொரு அடியின்போதும் "say my name", "What is my name" என்று ஆக்ரோசமாக தான் சண்டையிட்டார். அந்த சண்டையே "whats my name fight” என்றே அடையாளப்பட்டு போனது.
அப்படி என்ன பழைய பெயரின் மீது அலிக்கு இவ்வளவு கோபம் ?
அந்த கால
7. கட்டத்தில் ஒரு வழக்கம் கடைபிடிக்கபட்டு வந்தது. கருப்பினத்தவர்கள் பண்ணை அடிமையாக பயன்படுத்தபட்டு வந்தனர், அப்படி எஜமானர்களுக்கு விசுவாசமான அடிமையாக வாழ்ந்த கருப்பர்களை விருப்பத்தின் பெயரில் விடுதலை செய்வார்கள் முதலாளி வெள்ளையர்கள்.
அப்படியாக விடுதலை பெற்ற கருப்பர்கள் தன்
8. பெயருக்கு பின்னால் அந்த வெள்ளை எஜமானரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த பெயரே அவரது சந்ததியினருக்கு குடும்ப பெயராகவும் தொடரும். அப்படி விடுதலை பெற்ற குடும்பம் தான் அலியின் குடும்பமும், விடுதலையளித்த எஜமான வெள்ளையரின் பெயர் தான் "Clay".
அந்த பெயரை அடிமை சின்னத்தின்
9. அடையாளமாக பார்த்தார் அலி. உண்மையில் அது அடிமைச்சின்னம் தான். அதனாலயே தன்னுடைய பெயரை முதலில் Cassius X என்று மாற்றினார். இது Malcom X உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பால் மாற்றிய பெயர். பின்னர் இஸ்லாமிய மதம் மாறிய பின் தன் பெயரை முஹம்மது அலி என்று மாற்றிக்கொண்டார்.
இந்த பெயரை கூற
10. மறுத்து, அடிமை பெயரை கூறிய Terrell ஐ தான் அலி தண்டித்தார். வெறும் பெயருக்கு கூட அலி அத்தனை போராட வேண்டியிருந்தது.
வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவரை கைது செய்ய FBI திட்டம் தீட்டியது, அவரை பல நாட்களாக கண்காணித்தும் வந்தது. இத்தனையும் தனி ஆளாக எதிர்கொண்டார். அலி
11. அடிமைத்தனங்களை உடைத்தெறிந்தவர். அவர் ஒரு கலகக்காரன், புரட்சியாளன்..
Ali is not just a sportsperson, he is a rebellion...
-மு. சித்திக்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்
முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும்
2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.
கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
3.தரேன். புடிச்சுக்க!
முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.
ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும்
2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
3. யுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர்.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி
1. அந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டைநாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்ல மட்டுமே உபயோகப்படுத்தினான்.
அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக்
2. கொல்ல முடிவுசெய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.
மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை.. தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள்
3. அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"
சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.
அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.
ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.
உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும்
2. வாய்ப்பு.
இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.
ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
3. அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.
சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.
பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றியையே எதிர்பார்க்காத, நாடு, குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும்
கொரண்டைன் சமயத்தில் டேனிக்கு இன்று புதிதாய் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து, ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க் (hard work, smart work) பற்றிச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன்.
ஏதாவது ஒரு உதாரணத்தோடு சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று யோசித்த
2. போது, வாட்சப்பில் அந்த வீடியோ வர, அந்தக் காட்சியையே அன்றைக்கு அதற்கான உதாரணம் ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
திருவிளையாடலில் முருகனும், விநாயகரும் மாம்பழத்துக்காக சண்டை போடும் காட்சிதான் அந்த வீடியோவில் இருந்தது.
முருகனை ஹார்ட் வொர்க்கிற்கும், விநாயகரை ஸ்மார்ட்
3. வொர்க்கிற்கும் உதாரணமாய்க் காட்டி, ஹார்ட் வொர்க்கை விட ஸ்மார்ட் வொர்க் எவ்வளவு சுலபமாய், குறைந்த காலத்தில் வெற்றியைத் தரும் என்று சொல்லிக் கொடுப்பதுதான் திட்டம்.
ஹார்ட் வொர்க், ஸ்மார்ட் வொர்க் வித்தியாசம் எல்லாம் சொல்லி, எது சிறந்தது எப்படிச் சிறந்தது என்பதெல்லாம் விளக்கிச்
1. தில்லுதுரயின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், இனிமேல் அவர் எதற்குமே கவலைப்படக் கூடாது... எதற்காவது கவலைப்பட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்.
கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குடுக்க முடியாத நிலை. எப்படி கவலைப்படாமல் இருக்க
2. முடியும் என்று யோசித்தவர் கடைசியாய் ஒரு வழியையும் கண்டுபிடித்து விட்டார்.
ரெண்டொரு நாளில் பேப்பரில் விளம்பரம் கொடுத்து, இன்டர்வியூ செய்து, இவருக்காக கவலைப்படுவதற்கென்றே இப்போது ஒரு ஆளை மாதம் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.
அன்று
3. இரவு வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மனைவி கேட்டாள்.
"இப்பத்தான் உங்களைப் பாக்கவே நல்லாருக்கு. கவலைப்படறதுக்குனு ஒரு ஆளைப் போட்ட உடனே, பாக்க நல்ல தெளிவா இருக்கீங்க. கம்பெனி நல்லாப் போகுதா இப்ப.?"
கேட்ட மனைவியிடம் தில்லுதுர சொன்னார், "எங்க... முன்னைவிட நெலமை ரொம்ப