#மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்...* 

*உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. 

அது எந்த இடம் தெரியுமா?
கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது.* 

அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். 

கண்ணனுக்கே தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.
அப்போதும் கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,* *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான்.
கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. 

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான். 

கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.
கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். 

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 

"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான்.
இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 

கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை.
இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் தந்தான்.  அவனைக் கட்டி அணைத்துக்கொண்டான். கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான்.
இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான். 

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.
உலகளந்த பெருமாள்,அவனிடம் கை நீட்டி நின்றார். 

ஈகை எவ்வளவு பெரிய நற்செயல் !

🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

20 Dec
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,

உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.

*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.

🙏🇮🇳2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

🙏🇮🇳3
Read 41 tweets
19 Dec
#திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு..?

"முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?"

திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.

அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.
சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?

வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!

தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!

அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!

படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!

கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;
Read 15 tweets
19 Dec
#திருவாதிரை விரதம் - ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :

சிவபெருமானை வழிபடக்கூடிய பல்வேறு வகையான விரதங்களில் ஒன்று தான் திருவாதிரை. சிவபெருமானுக்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாள் தான் திருவாதிரை விரதம்.
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. ஆகவே சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும்.
தமிழ்நாட்டில் பழமையான சிவன் கோயில்கள் நிறைய உள்ளன. அவற்றில் சமயக்குறவர்கள் என்று கூறப்படும் நால்வரால் பாடப்பட்ட 276 சிவன் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
Read 14 tweets
19 Dec
#அருள்மிகு_பிரம்மன்_திருக்கோயில்

பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். 🙏🇮🇳1
அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரையும் தரிசிப்பது தலத்தின் சிறப்பம்சம்.

🙏🇮🇳2
பிரம்மா சிவனின் தலைமுடியைப் பார்க்க அன்ன வடிவெடுத்து பறந்ததாகவும், அம்முயற்சியில் தோற்றதால் பார்த்து விட்டதாக பொய் சொன்னதாகவும் ஒரு கதையுண்டு.

🙏🇮🇳3
Read 7 tweets
18 Dec
#ஐஸ்வர்யம் என்றால் பண கட்டுகளோ
லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல 

வீட்டு வாசலில் பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம் 

வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்

எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்

அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்
மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை ஐஸ்வர்யம் 

பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்

இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம் 

பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்

நம்மை சுற்றி இருக்கும் பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்

பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்

இயற்கை அழகு ஐஸ்வர்யம்
உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம் 

அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம் 

புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம் 

குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம் 

கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்
Read 4 tweets
12 Dec
*"இந்த விபூதியைத் தயங்காமல் கொண்டுபோய் கண்ணதாசன் நெற்றியில் பூசு. சூரியனைச் சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?"*
சாண்டோ சின்னப்பா தேவரும் கண்ணதாசனும் மிக நெருங்கிய நண்பர்கள். 

இருவரும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. 

அதில் சின்னப்பாத் தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.
ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும், அளவற்ற ஈடுபாடும் கொண்டவர் தேவர் அவர்கள்.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(