ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கும் கவர்னர்!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,
2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் மாதம் ஒரு மனதாக மசோதா இயற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் ரவி, அதை இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல், தன் பரிசீலனையில் வைத்துள்ளார்.இந்நிலையில், நடப்பாண்டு சட்டசபை கூட்டத்தை தன் உரையுடன் கவர்னர் ரவி,
சமீபத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, ஒரு நாள் விவாதம் நடந்தது. இரண்டாவது நாள், முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம், தலைமை செயலகத்தில் கூட்டப்பட்டது.
அதில், சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தார்.இது, கவர்னருக்கு அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. சட்டசபையில் உரை நிகழ்த்தும் போது,
‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழ், வாழிய பாரத மணித் திருநாடு, ஜெய்ஹிந்த்’ என்று கூறி, கவர்னர் தன் உரையை நிறைவு செய்ததாக
தெரிகிறது. தமிழக அரசு வெளியிட்ட கவர்னர் உரையில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை மட்டும் இடம் பெறவில்லை. இதுவும் கவர்னருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுமட்டுமின்றி,தமிழகத்தில் நடந்து வரும் சில செயல்களால்,கவர்னர் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.இதையடுத்து,முதல்வர் ஸ்டாலின் அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்,மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு,இ – மெயில் வாயிலாக ஒரு அறிக்கையை, சமீபத்தில் கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் மதமாற்றம்,சில NGO அமைப்புகள் வாயிலாக வரும் வெளிநாட்டு பணம்,பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவை குறித்து,மூன்று பத்திகளில் அந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கவர்னரும், மாதத்திற்கு இரண்டு முறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், இம்மாதம் அனுப்பியுள்ள முதல் அறிக்கையில், தான் பதவியேற்றது முதல் இதுவரை அனுப்பிய அறிக்கைகளில் இல்லாத அளவிற்கு காரசாரமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த அதிருப்திகளை,கவர்னர் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.இந்த அறிக்கையின் நகல்கள், ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களுக்கும்,
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திப்பது கடினம். எனவே, இ – மெயில் வாயிலாக இந்த கடிதத்தை, கவர்னர் அவசரமாக அனுப்பியுள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமையை விளக்குவதற்காக, அடுத்த வாரம்,
கவர்னர் டில்லி செல்லவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கவர்னரின் டில்லி பயணத்திற்கு பின், தமிழகத்தில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சட்டசபையில் வாசிக்கப்படும் கவர்னர் உரையை,
மாநில நிதி அமைச்சகம் தயாரிக்கும்.தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,2021ம் ஆண்டு நிகழ்த்திய உரையில், ‘ஜெய்ஹிந்த்’ வார்த்தை இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதை நிதிஅமைச்சர் தியாகராஜன், ‘கட்’ செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.நடப்பாண்டில் ஜெய்ஹிந்த் என்று கூறி,
கவர்னர் தன் உரையை நிறைவு செய்தாலும், அது அறிக்கையில் இடம் பெறவில்லை. எனவே, தமிழக அரசு வெளியிட்டுள்ள உரை நகலை இணைத்து, மத்திய உள்துறைக்கு கவர்னர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் இணைத்துள்ளார்.கடந்த முறை டில்லி சென்றபோது, ஜனாதிபதி, பிரதமர்,
உள்துறை அமைச்சர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கவர்னர் பேசினார். மீண்டும் டில்லி செல்லும் போது, யாரை எல்லாம் சந்திக்க போகிறார், என்னென்ன புகார்களை ஆதாரத்துடன் அடுக்க போகிறார் என்பது புதிராக உள்ளது.இவ்வாறு கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தகவல் :- தினமலர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

Jan 17
களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு! 🔥
@annamalai_k @Murugan_MoS
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள்.
இனி பிரதமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும்
Read 13 tweets
Jan 16
பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில்,
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
Read 14 tweets
Jan 7
தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?
Read 13 tweets
Dec 31, 2021
சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகத்தினை அரசாங்கம் கையகப்படுத்துமா அன்பில் மகேஷ்?!
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. கிருஸ்துவ பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
Read 12 tweets
Dec 30, 2021
தி.மு.க வினர் டார்ச்சர்..எஸ்.ஐ. தற்கொலையா! எஸ்.ஐ வெளியிட்ட ஆடியோ வைரல்! அச்சத்தில் மக்கள்!
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெண் குழந்தைகள் சீரழிக்கப்பட்டு தற்கொலை,செய்தும் கொலையும்,
நடந்து வருகிறது.இது ஒருபுறம் என்றால் திமுகவினர் டார்ச்சர் தாங்கமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்கும் காவல்துறையினருகே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் தமிழகத்தில் நிம்மத்தியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Read 12 tweets
Dec 29, 2021
மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி!
@annamalai_k
2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(