#ஜல்லிக்கட்டு #சாமி_மாடு.
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விவரம் அறிந்தவர்களுக்கு
தெரியும் அந்த மாடு மாவீரன்
அழகாத்தேவன் நினைவாகவே
அவிழ்த்து விடப்படுகிறது என்பது. அழகாத்தேவன் என்பவர் யார்? மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன் பட்டியை (இன்றைக்கு சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் பொறுப்பில்லாமல்
தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு போட்டு விட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார். நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும்
கருத்தமலையின்
மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்த மாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்.
கருத்தமலைக்கோ ஏகமகிழ்ச்சி. தனது மகளைப் பெண்பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த
பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளை கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார். அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப் போனாலும், நிபந்தனை
ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன்
அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள். இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக்கொள்கிறான். காளையை
அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு
இணைந்து கடும்
பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத் தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப்பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் சனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். அனைத்துக் காளைகளையும் மிகத்திறமையாகக் கையாண்டு வீழ்த்திய
அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற் கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும்
வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். சுத்துப் பட்டு கிராம ஜல்லிக் கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கி விட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப்
பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து,
அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்து விடுகிறார்கள்! இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத்
தெரியவரும் போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு
உடன்கட்டை ஏறி தனது உயிரை
மாய்த்துக் கொள்கிறாள். அழகாத்தேவன் நினைவாக
அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு
வளைவில் நண்பன் தோட்டி
மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர். கீழக்குயில்
குடிக்காரர்களிடம்
சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக் கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள்
இன்றும் தழும்பாய் சுமந்து
கொண்டிருக்கின்றன. சொரிக்காம்பட்டி கிராம
எல்லையில். தோட்டி மாயாண்டி காவல் நிற்க அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறான்.
ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்!
அறிவோம் நம் தமிழ் மண்ணின் பெருமையை!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 21
About thirty years back, Bairava Subramanya Aiyer was running a prasadam shop in Tiruttani hills. I was among the people who worked in that shop. Once I fell ill because of incessant work. As time passed, the fever shot up. Thinking that I could reach home by ten in the night, Image
started walking slowly down the steps in the mountain path, staggering, and repeatedly taking rest here and there, and finally reaching the last step. There was a mena (palanquin) parked on the banks of the Teppakkulam. A man came towards me from that direction. He asked me, have
you come down from the hill top? I said, yes. Then you come here. He took me to the mena. I peeped slightly inside the mena. From there Maha Periyava gave darshan to my darkened eyes as Shantha Swaroopi. I good joining my palms forgetting about myself. “You come from the hill top
Read 15 tweets
Jan 20
அனுமனின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் மணி எப்படி வந்தது என்று கூறும் பதிவு இது.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீராமன் கிஷ்கிந்தாவில் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்கள் பல வகை. அதில் #சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான Image
வானரங்களைக் கொண்டு ஒரு படை அமைத்தார். இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர் Image
அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில்! அதைக் கவனித்த ஸ்ரீராமன், "யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு” என்று உறுதி கொடுத்தார். போர் ஆரம்பமாயிற்று. கடும்போர் நடந்தது. ராவணனின் படையில் பல முக்கிய Image
Read 18 tweets
Jan 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதையரவர்கள் தமிழ்த்
தாத்தா என போற்றப்படுபவர். ஆற்றொழுக்கு போன்ற அழகிய தமிழ் நடையில் சுவையான பாரம்பரியச் செய்திகளைத் தருவதில் அவர் வல்லவர்.
அவரது என் சரித்திரத்தில் (1941 ஆம் வருடம் எழுதியது) முதல்
அத்தியாயமாக
மிளிர்வது உத்தமதானபுரம் எப்படித்
தோன்றியது என்பது பற்றித்
தான். சற்றேறக்குறைய இருநூறு
வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர்
ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த
காலகேயன் எனும் அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு
முழுவதையும் சுற்றிப் பார்க்கும்
பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரில் இருந்து
புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டுகளித்தும், ஸ்தலங்களைத்
தரிசித்துக் கொண்டும் சென்றார்.
இடையில், தஞ்சைக்குக் கிழக்கே
பதினைந்து மைல் தூரத்திலுள்ள
பாபநாசத்திற்கு அருகில்
ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்
போல் அங்கே போஜனம் முடித்துக்
கொண்ட பிறகு தாம்பூலம்
Read 10 tweets
Jan 19
சுந்தர தெலுங்கில் என்ன அருமையான ஆன்மீக கதை! தமிழில் சப்டைடில் உள்ளது. கதை சொல்பவர் பஜனை பாடலும் பாடி கதை சொல்கிறார். Don’t miss it :) a lazy person too can be transformed into a pure Bhakta! தேவை வெகுளித்தனமான இறை நம்பிக்கை.
தொடர்ச்சி…
ஏகாதசி விரதத்தின் மகிமை!
Read 6 tweets
Jan 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய மன்னன் வைகை பாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்
பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன் படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு
கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான். தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும்
ஊரில் இந்த கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு
Read 5 tweets
Jan 19
John D Rockfeller was once the richest man in the world. The first billionaire in the world. By age 25, he controlled one of the largest oil refineries in the US. By age 31, he had become the world’s largest oil refiner. By age 38, he commanded 90% of the oil refined in the U.S.
By 50, he was the richest man in the country. By the time he died, he had become the richest man in the world. As a young man, every decision, attitude, and relationship was tailored to create his personal power and wealth. But at the age of 53, he became ill. His entire body
became racked with pain and he lost all of his hair. In complete agony, the world’s only billionaire could buy anything he wanted, but he could only digest soup and crackers. An associate wrote, He could not sleep, would not smile and nothing in life meant anything to him. His
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(