அல்லாஹு அக்பர்'
நேற்று இரவு வரை
இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய
ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது

*'அல்லாஹூ அக்பர் '*
இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது
ஒரு சிறு பெண்
தனது சிறிய கீச்சுக்குரலால்
நாடு முழுக்க
ஒரு எதிர்க்குரலாக மாற்றிவிட்டாள்

*'அல்லாஹு அக்பர்'* என்றால்
என்ன? என்று
பல்லாயிரம் கைகள் கூகுளில் தேடுகின்றன.

அது ஒரு மத உணர்வின் வாக்கியம் என
சிலர் பொருள்கொள்ள விழைகின்றனர்.
இல்லை
எல்லாவற்றின் அர்த்தமும் மாறுகின்றன.

' *அல்லாஹு அக்பர்'* என்பதன் பொருளும்
ஓறே இரவில் மாறிவிட்டது

அல்லாஹு அக்பர் என்றால்
நீதி வேண்டும் என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்.

அல்லாஹு அக்பர் என்றால்
இது எனது நாடு என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
ஒருவர் அடையாளத்தை
மற்றவர்கள் பாதுகாத்தல் என்று பொருள்.

அல்லாஹு அக்பர் என்றால்
தேச பக்தி என்று பொருள்.

அல்லாஹு அக்பர் என்றால்
கோழைத்தனத்தின்மேல்
காறி உமிழ்தல் என்று பொருள்.

அல்லாஹு அக்பர் என்றால்
அது 'அடிபணிவதென்றால் அல்லா ஒருவனுக்கே'
என்று பொருள்.
இன்று 'அல்லாஹு அக்பர்' என்று சொல்ல
ஒருவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்பதில்லை.

அவன் அல்லாஹ்வை வணங்குபவனாக
இருக்கவேண்டும் என்று கூட
அவசியமில்லை.
நீதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற
எவரும் சொல்லலாம்
'அல்லாஹு அக்பர் '
சமாதானம் வேண்டும் என்று சொல்கிற
எவரும் முழங்கலாம்
'அல்லாஹு அக்பர்'
அநீதிக்கு தலைவணங்கமாட்டோம்
என்று சொல்கிற எவருக்கும் உரியதுதான்
'அல்லாஹு அக்பர்'

அதை ஒரு சிறுபெண்
நூறு அர்த்தங்கள் கொண்ட
ஒரு வரலாற்றுப் பிரகடனமாக்கிவிட்டாள்

8 2.2022
இரவு 11.01
மனுஷ்ய புத்திரன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Hyder🇮🇳

Hyder🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hyderali857685

Feb 11
மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா குறிப்படுவது:-

தற்போதைய இந்திய அமைப்பின் முரன்பாடுகள்:

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்:

1. ஒருகுடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
ஆனால்,
தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.

2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒருசிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்குதடை விதிக்கப்படும்,
ஆனால், கொலைஅல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரியகுற்றம் செய்யும் தலைவன் எத்தனைமுறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம்,
Read 11 tweets
Feb 1
♦️ *என்னவாயிற்று தமிழர்களுக்கு...? பணப்புழக்கம் ஏன் தமிழகத்தில் இல்லை.?

♦️இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ஏன்? எது?

♦️தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது!? அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை...
அதோடு சாராயம், மது மற்றும் சோம்பேறித்தனம், லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறுரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.

♦️நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன்.

♦️வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த
Read 18 tweets
Feb 1
● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில்
தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்*

● *இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.*

● *மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.*
● *சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.*

● *கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.*

● *ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.*

● *பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு
Read 6 tweets
Jan 31
காங்கிரஸ் கட்சியின் பிரபல பேச்சாளரும் சீனியருமான திருச்சி வேலுச்சாமி இந்திய தேசிய ஒன்றியத்தில் பிரதமரான நரேந்திர மோடியை மிக கடுமையாக தனது முகநூல் பக்கத்தில் சாடியுள்ளார்..

மோடியின் வெற்றுக் கூச்சல் இனிமேல் எடுபடாது. இனி மக்கள் நம்ப தயாராக இல்லை.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தியா கிழித்தது என்ன

*நரேந்திர மோடி கேட்ட கேள்விக்கு சாட்டையடிப் பதில் !!!
நம்ம நரேந்திர மோடி அவர் அம்மா கருவறையில் உருவாகும் முன்னமே - பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்
கொண்டிருந்த சமயத்திலேயே!-உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே-ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா !!!

*நரேந்திர மோடி கோலிக்குண்டு
Read 15 tweets
Jan 30
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.

ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை
படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?

அவை என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்விகற்க உரிமை உண்டுஎனவும், சத்திரியன் மட்டுமே நிலம்மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும்,சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும்
Read 10 tweets
Jan 29
ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.
ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகள வாங்க வந்தானாம் !
ஒரு குரங்க 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.
அந்த ஊர்ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு நினைச்சாங்களாம்.
யாராச்சாம் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு Image
கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம்.
இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்கள புடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.
கொஞ்ச நாள் கழிச்சு,
அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய்தரதா சொன்னானாம்.
அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனேகுரங்குபுடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.
பாக்கி இருக்கிற குரங்குகள எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(