''நான் பெண்ணில்லையா...?''

அமெரிக்காவின் ஓஹியாவில் 1851 ஆம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கரான சோஜோர்னர் ட்ரூத் ஆற்றிய உரையை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இம்மாதத்தில் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

#WomensDay
''அங்கிருக்கும் அந்த ஆண் கூறினார்.. பெண்களால் பிறரது உதவி இல்லாமல் கடினமான வேலைகள் எதையும் செய்ய இயலாது..அவர்களுக்கு எப்போதும் சிறந்த இடம் தரப்படுகிறது என்று... என்னைப் பாருங்கள் எனக்குக் கடின வேலைகளில் யாரும் உதவவில்லை. எனக்கான சிறந்த இடத்தை யாரும் தருவதில்லை. நான் பெண்ணில்லையா?
என்னைப் பாருங்கள்... என் கைகளைப் பாருங்கள்... நானே உழுது நானே நடவு செய்தேன். எந்த ஆணும் என்னை வழி நடத்தவில்லை. நான் பெண்ணில்லையா...?''

இசபெல்லா பௌம்ஃப்ரீ என்ற இயற்பெயர் கொண்ட சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்காவில் 1797 ஆம் ஆண்டு அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர்.
அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களில் வீடுகளில் வேலையாளாக விற்கப்பட்ட இசபெல்லா உடல் ரீதியகவும், மன ரீதியாகவும் பெரும் துன்பத்தை அனுபவித்தவர்.

அந்தக் கொடுமையிலும் பட்டாம்பூச்சியின் இருப்புப் போல, ஒரே மகிழ்ச்சியாக இசபெல்லாவுக்கு அங்கிருக்கும் மற்றொரு அடிமை மீது காதல் மலர்கிறது.
ஆனால், அவரது முதலாளியோ இசபெல்லாவின் ஒரே நம்பிக்கையைக் கொன்று விடுகிறார்.

ஒருகட்டத்தில் இசபெல்லா தனது அடிமை விலங்கை உடைத்துக்கொண்டு, சோஜோர்னர் ட்ரூத்தாக உருமாறுகிறார்.

தொடர் செயல்பாடுகள் மூலம் அடிமைத்தனதுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைக்காகவும்..
முக்கியக் குரலாக சோஜோனர் ட்ரூத் அமெரிக்க வரலாற்றில் அறியப்படுபடுகிறார். இன்றுவரை அறியப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சோஜோர்னர் ட்ரூத் மட்டுமல்ல, பெண்களின் சம உரிமைக்களுக்காகவும், பெண்களின் சமத்துவத்திற்காக டோரதி ஹைட், இடா.பி. வேல்ஸ், பட்சி மிங்க்,
வன்செட்டா போன்றோர்களும் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள்.

ஆனால், இந்தக் குரல்களுக்கான மதிப்பு இதுவரை முழுமையாக கிடைத்திருக்கிறதா?..

2020 ஆம் ஆண்டு மகளிர் தினத்துக்காக எழுதியது..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Indu Gunasekar ~ இந்து குணசேகர்

Indu Gunasekar ~ இந்து குணசேகர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @indusaaral

Jun 6, 2021
12- ஆம் வகுப்பு முடிந்த பெண், தனக்கு தையல் மிஷின் வழங்கி உதவி புரியுமாறு அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது, ”தையல் மிஷின் வாங்கி தரன்.. மேலே படிக்கிறதுக்கு உதவி செய்றன்... படிங்க.. நீங்க படித்தால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டுவீர்கள்” என்கிறார்.
’தையல் மிஷன்’ இதற்கு பின்னால் இருக்கும் குடும்ப அரசியலும், சமூக அரசியலும் ஏராளம்... பள்ளி படிப்பை முடித்து குடும்ப வறுமையால் மேற்படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு தையல் மிஷின் ஒரு மந்திர கோல்... அவர்களது பல குட்டி கனவுகளை இந்தத் தையல் மிஷின் சொந்தமாக்கி தந்திருக்கிறது.
ஒட்டு வீடுகளில் தையல் மிஷினை மிதிக்க தொடங்கியபோது அவர்கள் எழுப்பிய ஒலி...அவர்கள் அடுக்க மாடி கட்டிடங்களுக்கு சென்ற பிறகு ஒலித்து கொண்டே இருக்கும். இம்மதிரியான பெண்களுக்கு தையல் மிஷின் வாழ்நாள் தோழி...
Read 10 tweets
Jun 4, 2021
தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டில் ( குறிப்பாக வார்ட் 11) அமைந்துள்ள கழிவறைகள் மோசமான பராமரிப்பில் உள்ளன.

இதனால் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களை உடனிருந்து பார்த்து கொள்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ImageImageImageImage
மேலும் ஒரே வார்டில் 40 க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவுக்கு சிகிச்சிசை பெற்று வருகின்றனர்.
அவர்களை காலையில் மட்டும் ஒரு மருந்துவர் மேற்பார்வையிட்டு சென்றுவிடுவதாகவும் மற்ற நேரங்களில் மருந்துவர்கள் இல்லை என்றும் அங்கிருக்கும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

@Subramanian_ma
அங்குள்ள கரோனா நோயாளிகளை பாராமரிக்கும் உறவினர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத நிலையில் இங்கு வந்து எங்கள் அன்பானவர்களை சேர்ந்தோம். ஆனால் இங்கு சிகிச்சை சரியில்லை என்று உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Read 4 tweets
Feb 15, 2019
#Kashmir 20 வருடங்களுக்கு மேலாக காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. .
ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவன் பல ஆண்டுகள் கடந்தும், வீடு திரும்பாததால் ஏதோ பித்து பிடித்த நிலையில் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் காஷ்மீரில் உள்ளனர்.
கிட்டதட்ட 5 லட்சம் ராணுவ வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் அதிகளவில் ராணுவ வீரர்கள் சூழப்பட்ட பகுதி காஷ்மீர் என்றும் கூறப்படுகிறது.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(