#ராமநவமி ஸ்பெஷல்_* 

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.

🙏🇮🇳1
இராவணனின் கொடுமைகளால் துன்பமுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்கள். மகாவிஷ்ணு அவர்களிடம், " கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் அயோத்தி மன்னன் தசரதன் பெற்ற வரப்பயன் காரணமாக அவனுக்கு மைந்தனாக நாம் அவதரிக்கப் போகிறோம்.

🙏🇮🇳2
அச் சமயம், இராவணனை அழித்து, உங்கள் துன்பம் துடைப்போம் " என்று அபயம் அளித்தருளினார்.

🙏🇮🇳3
அயோத்தி மன்னனாகிய தசரதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால், ரிஷ்யசிருங்க முனிவர் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் பயனாக, தசரதச் சக்கரவர்த்தி நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார். 🙏🇮🇳4
அவர்களுள் முதல்வன் ஸ்ரீ ராமன். ( மற்றவர்கள் லக்ஷ்மணன், பரதன், சத்துருக்கன் ஆகியோர்.) ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாளே ' ஸ்ரீ ராம நவமித் திருநாள்.

🙏🇮🇳5
ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடுகின்றார்கள்.

🙏🇮🇳6
நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து, பெரியவர்கள் மூலமாக இராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று இராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று, மோட்சப் பேறு கிடைக்கும் என்பது நிச்சயம்.

🙏🇮🇳7
இராமாயணம் ஒரு சரித்திர நூல் மட்டுமல்ல, தலை சிறந்த பக்திக் காவியமாகவும் திகழ்கிறது. ஆகவே, இராமாயணத்தைப் படிக்கப் படிக்க நம் உள்ளம் தூய்மையடைகின்றது.

🙏🇮🇳8
மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூச் சூடி, நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லிப் பூஜிக்க வேண்டும்.

🙏🇮🇳9
இராம நாமம் சொல்லுங்க.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே 

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே 

சன்மமும் மரணமு மின்றித் தீருமே 

இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்"

🙏🇮🇳10
என்பது கம்பரின் வாக்கு. ஆம், ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.

🙏🇮🇳11
ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், தசரத ராமன் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். 🙏🇮🇳12
அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப் படுகின்றன.

இதைத்தவிர, பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். 🙏🇮🇳13
ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.

🙏🇮🇳14
ராம நவமியில் இப்படிப்பட்ட சிறப்பு நைவேத்தியங்கள் படைத்து இறை பூஜை செய்ய இயலாதவர்கள் வருந்தத்தேவையில்லை. எச்சில் கனியையும் உண்டு, சபரிக்கு அருள் செய்தவர் அல்லவா, நம் இராமன்?

🙏🇮🇳15
எனவே, வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம்.

🙏🇮🇳16
ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கியபிறகு, பூஜையில் கலந்துகொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும்கூட வணங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும். ஏன் தெரியுமா?

🙏🇮🇳17
ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன்மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.

🙏🇮🇳18
இது மட்டுமா? ஒருமுறை விசுவாமித்திர முனிவருக்கு அளித்த வாக்கின்படி, ஸ்ரீ ராமன் அனுமனோடு போரிட நேர்ந்தது. அச்சமயம், அனுமன் ராமநாமத்தை உச்சரித்து அதையே தனக்குக் கவசமாகக் கொண்டாராம்.

🙏🇮🇳19
மேலும், பாவங்களைப் போக்கும் அக்கினி பீஜமாகிய 'ர', ஞானம் தரும் சூரிய பீஜமாகிய 'அ', செல்வத்தை அள்ளித்தரும் சந்திர பீஜமாகிய 'ம' - ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஸ்ரீ ராம நாம மந்திரத்தை தினமும் ஓதுவதால், 🙏🇮🇳20
நம் பாவங்கள் யாவும் நீங்கி, கல்வி, செல்வம், வீரம் ஆகிய யாவும் பெற்றுச் சிறப்படையலாம். அது மட்டுமா ?

🙏🇮🇳21
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரைப் போற்றிப் புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும். 🙏🇮🇳22
அதாவது, " அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமனிடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது " என்று பார்வதிதேவியிடம் இராம நாமத்தின் மகிமையைச் சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம்.

🙏🇮🇳23
ஆகவே, நாமும் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.

ஸ்ரீ ராம சீதா ஜெயம் !!!!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

#ஜெய்_ஸ்ரீராம் 🙏🇮🇳🙏

#வாழ்க_பாரதம் 🇮🇳🙏
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 10
ஸ்ரீராம நவமி பதிவு!!

சீதையைக் கண்டுபிடி’ — என்று ராமன் கட்டளையிட்டான். அதைச் சிரமேற்கொண்டு பறந்தான் இலங்கைக்கு...

வழியிலோ பல இடையூறுகள் அவைகளையும் கடந்தான். இலங்கைக்குள் வந்த பின்னரும் மனதில் கொஞ்சம் சம்சயம்; அதாவது ஐயப்பாடு. Image
இப்படி இடையூறுகளாக வருகிறதே, நான் என்ன செய்வது! அப்போது அவனுக்கு மனதில் பளிச்சிடுகிறது ராம நாமம்:

“ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா

தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீர

ஏறும்வகை எங்கு உ ளது? “இராம!” என எல்லாம்

மாறும் அதின்மாறு பிறிதுஇல் என வலித்தான்”.
இதன் அர்த்தம்,

இது என்னடா! கடும் துன்பங்கள் வழியில் ஏற்படுகின்றதே! அரக்கர்களோ தெளிவில்லாதவர்கள். 

கெடுதல் இல்லாத அறம் என்பதையே அறியாதவர்கள். இவர்கள் செய்யும் தீமைகளைக் கடந்து செல்ல நான் என்ன செய்வேன்? 

இதற்கு வழி என்ன?
Read 5 tweets
Apr 10
#ஸ்ரீ_ராமரின்_68_தலைமுறை முன்னோர்களை பற்றி #ராம_நவமி ஆன இன்று தெரிந்து கொள்வோம்..!!

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா Image
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
Read 9 tweets
Apr 10
பல்கலைகளில் நிர்வாக குளறுபடி: கவர்னரிடம் குவியும் கடிதங்கள்

தமிழகத்தில் இருக்கும், அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் நிர்வாக செயல்பாட்டை கண்காணிக்க, கவர்னர் ரவிக்கு உதவ, பிரசன்ன ராமசாமி என்பவர் துணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் பதவி ஏற்றதும், தமிழக பல்கலை நிர்வாகம் குறித்த விபரங்களை விசாரிக்க துவங்கி உள்ளார்.இதையடுத்து, அவருக்கு பல்கலை நிர்வாக குளறுபடிகள் தொடர்பாக, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.
அதுபற்றி, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பல்கலைகளின் நிர்வாகம் அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்பதில், கவர்னர் ரவி உறுதியாக உள்ளார். அதற்காக, பல்கலை துணைவேந்தர்களுடன் பேசியுள்ளார்.
Read 4 tweets
Apr 9
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.

(இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர்தான்!)
இவர்களுள் கே.வி.மகாதேவன் அவர்கள் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
கே.வி.மகாதேவன் அவர்களின் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல், கொள்ளாமல் வீட்டை விட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான்.
Read 16 tweets
Apr 9
*திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)*

*இறைவன் பெயர்*

*தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்*

*இறைவி பெயர்*

*வாள்நெடுங்கண்ணி*

*தேவாரப் பாடல்கள்*

*சம்பந்தர்*    

*அக்கிருந்த ஆரமும் (2-42)*

*அப்பர்*

*முடித்தா மரையணிந்த (6-21)*

🇮🇳🙏1
*மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 3 கி.மி. தூரத்தில் இருக்கிறது*

🇮🇳🙏2
*இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.*

🇮🇳🙏3
Read 19 tweets
Apr 8
மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, 'நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனால், பிரச்சினைகள் தீரவே இல்லை. பகவான் இன்னும் கண்திறந்து பார்க்கலை' என்று வருத்தப்பட்டார்.
அதைக் கேட்ட மகாபெரியவர், "ஸ்லோகம் சொல்லும்போது சுவாமி முன்னே உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேளா?" என்று கேட்டார் மகா பெரியவர்.
உடனே அந்தப் பெண்மணி, "வேற வேலை பார்த்துக்கிட்டே தான் சொல்றேன். அந்த அளவுக்கு மனப்பாடம் பண்ணியிருக்கேன் எல்லாமே" என்றார் பெருமையுடன். அதற்கு மகா பெரியவர் சொன்னார்:
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(