#அக்னிநட்சத்திரம் மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலம் இது. நம் பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எவ்வாறு தொடங்கியது?
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி
சுவேதகி என்ற மன்னன் யாகம் செய்தான். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை தின்றால் அவரது ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும் என்றார் பிரம்மா. எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த வனம், இந்திரனுக்கு
மிகவும் பிடித்தமானது. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய்வித்து அக்னியை அடக்கினான். பலமுறை முயன்றும் அதே நிலை நீடித்தது. அக்னி பகவான் கிருஷ்ணரைக் கண்டு வலம் வந்து துதித்தார். தனது நிலையைக் கூறி வருந்தினார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு
உதவுமாறு கேட்டுக் கொண்டார். ராஜ தந்திரியான கிருஷ்ணர், அர்ஜுனனை அர்த்தத்தோடு பார்த்தார். உடனே குறிப்பறிந்த அர்ஜுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அதைத் தொடர்ந்து கிருஷ்ணர், காண்டவ வனத்தைப் புசிக்கும்படி அக்னி பகவானிடம் கூறினார். வழக்கம் போல இந்திரன்
மழையைப் பொழியச் செய்ய, ஒரு துளி மழை நீரும் உள்ளே விழாதபடி செய்தான் அர்ஜுனன். செய்வதறியாமல் தவித்த இந்திரன், பூமிக்கு வந்து கண்ணபிரானிடம் முறையிட்டார். கண்ணா! அக்னி பகவான் வளம் முழுவதையும் எரித்தால், இதில் வாழும் உயிர்களின் நிலை என்ன? ஒருவேளை இந்த வனத்தைப் புசித்தும் அவரது பசி
அடங்காவிட்டால் என்ன ஆகும்? வேறு காடுகளைத் தேடிப் புசிக்க ஆரம்பித்து விடுவாரே? அப்படியானால் என் நிலை என்ன? என்று வேண்டினார். அனைத்தையும் கேட்ட பரந்தாமன், அக்னி பகவானுக்கு ஒரு கட்டளை இட்டார். அக்னியே! எண்ணி இருபத்தோரு நாட்கள் மட்டுமே நீ காண்டவ வனத்தைப் புசிக்கலாம். அதன்பிறகு உன்
வயிற்றுவலியும் தீர்ந்து விடும். அதன் பின்னர், அர்ஜுனனின் சரக்கூடம் கலைந்துவிடும். பூமியைக் குளிர்விக்க இந்திரன் வருவான். அப்போது நீ இடைஞ்சல் செய்யக்கூடாது! என்றார். அப்படியே செய்வதாக அக்னியும் வாக்களித்தார். அக்னி பகவான் தனது ஏழு நாக்குகளால் முதல் ஏழு நாட்கள் பூமிக்கு அடியில்
இருந்த வேர்களையும் பூச்சிகளையும் புசித்தார். அடுத்த ஏழு நாட்களில் மேலே இருந்த மரங்கள், செடிகள் ஆகியவற்றை உண்டார். கடைசி ஏழு நாட்கள் அங்கிருந்த பாறைகளை விழுங்கினார் என்கின்றன புராணங்கள். காண்டவ வனத்தை அக்னி புசித்த அந்த இருபத்தொரு நாட்கள்தான் அக்னி நட்சத்திர காலம். பின்னாட்களில்
இந்தக் கணக்கில் முன்கத்திரி, பின் கத்திரி என்று சில நாட்களை சேர்த்துக் கூறுவது எப்படியோ வழக்கமாகிவிட்டது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் வெப்பம் சற்றே குறைவாகவும், அடுத்த ஏழு நாட்கள் மிக மிக அதிகமாகவும், கடைசி ஏழு நாட்கள் மீண்டும் மிதமாகவும் இருக்கும். அதே போல
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பு இந்திரன் பூமியைக் குளிர்விக்க மழையை பொழிவிப்பான் என்றும் சொல்கிறார்கள். கோடை மழை பெய்வது அதனால்தான். அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு
உரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து (தண்ணீர் பந்தல், நீர்மோர், செருப்பு, விசிறி தானம் போன்றவை) இறைவனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறுவோம்.
உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய
நவகிரக கோலமிட்டு,
‘அஸ்வத் த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.
பாஸ்கராய வித்மஹே!
மஹத் யுதிகராய தீமஹி!
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்
என்று கூறி சூரியனை வழிபட பாதிப்புகள் நீங்கும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 24
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ விஷ்ணு ஆசிரமத்துக்கு அருகே இருந்த பேரையூரில் மிகப்பெரிய செல்வந்தன் கோபாலன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான். கோபாலனின் போதாத காலம் ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் Image
அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக் கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்து
விட்டான். கோபாலன் விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர் தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்து கொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தள்ளிப் போடலாம் என்ற
Read 14 tweets
Apr 24
#MahaPeriyava #Ilayaraja
“The Jeer sent Sri Desikan to Swamigal to apprise Him (MahaPeriyava) that the Mantralaya temple which had initally accepted to take responsibility to construct the Gopuram of #SrirangamTemple was having second thoughts on that and requested Him to come ImageImage
with another person for this task. He was in silence at that time. He Himself drew the picture of a gramaphone on the ground and asked the persons near Him to start telling the names from the cine field. One by one the names were told and He asked them to continue… Suddenly, Image
someone mentioned my name and upon hearing that He gestured with His Hand that I was indeed the one! I came to know of His decision through an acquaintance of mine, a person called Chandramouli from Trichy. This person used to play the Mridangam. He met me unannounced at Prasad
Read 21 tweets
Apr 24
#பாஜினாத்_மகாதேவ்_கோவில் மத்யப்ரதேஷ்.
யோக யாத்ரா என்ற புத்தகத்திலும் அரசு கெஜட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது. இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய பதிவு. 1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் Image
மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கர்னலின் மனைவியின் கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் #பைஜிநாத்கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார்.
Read 11 tweets
Apr 23
#SankaraJatanthi #சங்கரஜெயந்தி 6.5.22 #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிசங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார். தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும்
மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள
ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, பின்னர் மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா நீ இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான்
Read 7 tweets
Apr 23
#MahaPeriyava
A wrestler whose strength it was said was immeasurable, came to Kanchipuram. If a fistful of sesame seeds were given to him, he could crush it to oil quite casually. He had also won a number of competitions in boxing and martial arts. So he had a horde of followers
that admired him. His intention was to get a prize from Periyava. He was ready to exhibit his prowess in front of Periyava and was all set to wrestle with any one Periyava deputed as his opponent. A youngster who visited SriMatham now and then and served there let us call him
Manakkal Krishna Sastri was a hefty, well-built man. Periyava sent for Krishna Sastri.
“Krishna, stand near the entrance for an hour. You must not move, what do you say?”
“As commanded…”
Although no one including Krishna Sastri understood this strange command, he stood near the
Read 7 tweets
Apr 22
#SankaraJayanthi #சங்கரஜெயந்தி 6.4.2022
எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு பங்கம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் பூமியில் அவதரித்து, தர்மமாகிய விளக்கை தூண்டி விட்டு நன்றாக எரியச் செய்வேன் என்று கீதையில் வாக்கு கொடுத்து இருக்கிறார் ஶ்ரீ கிருஷ்ண பகவான். ஆனால் கலி முடிவதற்கு, கல்கி
அவதாரம் எடுக்க, இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்கு முன் ஒன்பது அவதாரங்கள் ஶ்ரீமன்நாராயணன் எடுத்தார். அந்த அவதாரங்களில் எல்லாம், யார் நல்லவர் யார் கெட்டவர்கள் என்பது ஓரளவு தெளிவாக தெரிந்தது. ராமாவதாரத்தில் ராவணன் வில்லன், ராமர் அவனை  வதம் செய்தார். கிருஷ்ணாவதாரத்தில்
துர்யோதனாதிகள், துஷ்டர்களாக இருந்த அரசர்கள் அனைவரையும் மஹாபாரத யுத்தத்தை வைத்து அவர்களை முடித்து, கிருஷ்ணர் பூபாரத்தையே குறைத்தார். இந்தக் கலியில் அப்படி ராக்ஷசன் கோர பற்களை, மீசையை வைத்துக் கொண்டு நடமாடுவது இல்லை. இந்த ராக்ஷசர்கள் மனிதனின் புத்திக்குள்ளேயே இருக்கிறார்கள். கலி
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(