#பாஜினாத்_மகாதேவ்_கோவில் மத்யப்ரதேஷ்.
யோக யாத்ரா என்ற புத்தகத்திலும் அரசு கெஜட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது. இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய பதிவு. 1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல்
மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கர்னலின் மனைவியின் கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் #பைஜிநாத்கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார்.
துயருற்ற முகத்தைக் கண்ட வேதியர்கள் காரணத்தைக் கேட்ட பிறகு, சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை உபதேசித்து,
தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர். கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்துத் தருவதாக வேண்டிக் கொண்டு வீடு திரும்புகிறார். லகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கி சரியாகப் 11ஆம்
நாள் செய்தி கொண்டு வருபவர், கர்னலிடம் இருந்து செய்தியைக் கொண்டு வருகிறார். அந்தக் கடிதத்தில் அவர், போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்துப் புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர். நாங்கள்
தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கிக் கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியைக் கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளை உடைய கூறிய ஆயுதம் வைத்திருந்தார். மேலும், அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும், அவர் தனது கையில் இருந்த அந்த
ஆயுதத்தைக் கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது. இந்த சிறந்த மனிதனைக் கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்தத் துறவியின் கருணையினால் தோல்வியைத் தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியைப் பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமாகக் காரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கையில்
இருந்த மும்முனை கூரிய ஆயுதமே. அந்த உன்னதத் துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் உன மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, காக்க வந்ததாகவும் கூறினார் என்று எழுதியிருந்தார். இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன, அவரது
இதயம் ஆனந்தத்தில் மூழ்கியது. அவர் சிவபெருமான் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்குப் பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவர் நடந்தவற்றை விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு கர்னலும் அவர் மனைவி 16000 ரூபாய், ஆலயத்தை
புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 25
#மகாபெரியவா #பூர்வாசிரம_வாழ்க்கை மஹா பெரியவா, சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார் என்ற திவ்ய தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாக வைகாசி அனுஷத்தில் மே 20 ம் தேதி 1894 அவதாரம் செய்தார். பெரியவாளுக்கு முன் பிறந்தவர் கணபதி சாஸ்திரிகள். பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து Image
பிரார்த்தனை செய்து, அவர்கள் குலதெய்வமான சுவாமிமலை முருகனை பிரார்த்தனை செய்து குழந்தையாக பிறந்தவர் மஹா பெரியவா. அதனால் பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன் என்று பேர் வைத்தனர். அடுத்து, லலிதாம்பா, பிறகு சாம்பமூர்த்தி, சதாசிவம் என்கிற சிவன் சார், கடைசியாக கிருஷ்ணமூர்த்தி பிறந்தனர். இவர்கள் Image
எல்லோரும் தாத்தாவில் இருந்து ஆரம்பித்து, அதற்கு முன் எத்தனை தலைமுறைகளோ தெரியாது அனைவரும் மடத்த்திலிருந்து ஒரு பைசா கூட எடுத்துக்காமல் மடத்திற்காக வாழ்க்கை முழுதும் சேவை செய்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரோட பேரைப் பார்த்தாலே, கணபதி, ஸ்வாமிநாதன், லலிதாம்பா, சாம்பமூர்த்தி, சதாசிவம், Image
Read 12 tweets
Apr 25
#SankaraJayanthi #சங்கரஜெயந்தி 6.5.22 சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதி செய்த பிரார்த்தனையின் பலனாக, ஆதி சங்கர பகவத் பாதாளாக தக்ஷிணாமூர்த்தி காலடி க்ஷேத்திரத்தில் அவர்களுக்குக் குழந்தையாக பிறக்கிறார். வைகாசி மாசம் சுக்ல பஞ்சமி திதியில் அவர் அவதாரம் நிகழ்கிறது. மஹா பெரியவா இது பொயுமு 509 Image
வது வருஷம், 2500 வருஷங்களுக்கு முன் அதிசங்கரரின் அவதாரம் என்று 150 பக்கம், சரித்திர சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். மஹா பெரியவா சொல்வது, ஆங்கிலேயன் ஜீசஸ் க்ரைஸ்டுக்குப் பிறகு தான் இந்து மதமே வந்தது என்று establish செய்வதற்காக வரலாற்றை திரித்து எழுதியிருக்கான். அவன் எல்லாத்தையும்
பின்னாடி தள்ளிட்டான், அது சரி இல்லை, 800 கிபி தான் ஆதி சங்கரர் அவதாரம் 1200 வருஷம் தான் ஆச்சு என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள், அரசும் அவ்வாறே செய்கிறது. ஆனால் மஹா பெரியவா சங்கரர் அவதாரம் 509 BC என்று சொல்லி உள்ளார். அதில் இருந்து 68 பீடாதிபதிகள் காஞ்சி மடத்தில் வந்துள்ளார்கள்.
Read 12 tweets
Apr 24
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ விஷ்ணு ஆசிரமத்துக்கு அருகே இருந்த பேரையூரில் மிகப்பெரிய செல்வந்தன் கோபாலன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான். கோபாலனின் போதாத காலம் ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும்
அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக் கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்து
விட்டான். கோபாலன் விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர் தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்து கொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தள்ளிப் போடலாம் என்ற
Read 14 tweets
Apr 24
#MahaPeriyava #Ilayaraja
“The Jeer sent Sri Desikan to Swamigal to apprise Him (MahaPeriyava) that the Mantralaya temple which had initally accepted to take responsibility to construct the Gopuram of #SrirangamTemple was having second thoughts on that and requested Him to come
with another person for this task. He was in silence at that time. He Himself drew the picture of a gramaphone on the ground and asked the persons near Him to start telling the names from the cine field. One by one the names were told and He asked them to continue… Suddenly,
someone mentioned my name and upon hearing that He gestured with His Hand that I was indeed the one! I came to know of His decision through an acquaintance of mine, a person called Chandramouli from Trichy. This person used to play the Mridangam. He met me unannounced at Prasad
Read 21 tweets
Apr 23
#SankaraJatanthi #சங்கரஜெயந்தி 6.5.22 #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிசங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார். தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும்
மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள
ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, பின்னர் மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா நீ இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான்
Read 7 tweets
Apr 23
#அக்னிநட்சத்திரம் மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலம் இது. நம் பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எவ்வாறு தொடங்கியது?
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி
சுவேதகி என்ற மன்னன் யாகம் செய்தான். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை தின்றால் அவரது ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும் என்றார் பிரம்மா. எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த வனம், இந்திரனுக்கு
மிகவும் பிடித்தமானது. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய்வித்து அக்னியை அடக்கினான். பலமுறை முயன்றும் அதே நிலை நீடித்தது. அக்னி பகவான் கிருஷ்ணரைக் கண்டு வலம் வந்து துதித்தார். தனது நிலையைக் கூறி வருந்தினார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(