சங்க கால வேட்டைத் தொழிலில் கூட்டுழைப்பு!

#வேடர் சமூகத்தில் ஆண், பெண், சிறார் ஆகியோரிடையே #தொழிற்பகுப்பு காணப்படுவது இயல்பு.

எனினும் அவர்களிடம் கூட்டுழைப்பும், அதனையடுத்து உழைப்பால் ஈட்டியவற்றைக் கூட்டாகப் பாதீடு செய்துகொள்வதும் சிறப்பான பண்புகளாக விளங்கின.
#வேடுவர்கள் கூட்டு வேட்டையில் ஈடுபடுபவர்கள்.

#கெண்டி எறிந்தும், #அம்பு எய்தியும், #கண்ணி வைத்தும் விலங்குகளை வேட்டையாடினர். #வலை விரித்துப் பறவையினங்களைப் பிடித்தனர்.

புறநானூற்றுப் பாடல் (322) மூலம் வேட்டுவச் சிறுவர்கள்...
... வரகின் அரிகாலில் மேயவரும் எலிகளைப் பிடிப்பதற்கு, ஏற்ற சமயத்திற்காகக் காத்திருந்தனர் என அறியலாம்.

சிறுவர்கள் ஒன்று கூடி, எலி பிடித்த கூட்டுழைப்பை, 'புன் தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்' என்கிறது #புறநானூறு (322: 3-4).
வேட்டைத் தொழில் பெரும்பாலும் ஒரு கூட்டுத்தொழில் என்றாலும்,

தனியொரு வேட்டுவன் உடும்பு, நுணல், ஈயல், முயல் முதலான சிறு விலங்குகளைப் பிடித்தும், அகழ்ந்தும், கெண்டியும் எறிந்தும் தோளில் தூக்கி வந்ததை #நற்றிணை (59) கூறுகிறது.

இத்தகு தனிமனித வேட்டை இனக்குழு வாழ்வில் மிக அரிதாகும்.
#கானவர், #குறவர், #வேட்டுவர் போன்ற #குறிஞ்சி நில இனக்குழுச் சமூகத்தார்,

வேட்டைக்குரிய பல்வேறு பொருட்களைக் #கவை (கவட்டை) எனும் கருவியைத் தோளில் சார்த்தித் தூக்கிச்சென்றனர்.

வில், அம்பு, கவண், வேல், கல் அடார், வலை, கண்ணி, சுருக்குவார் பொறி முதலான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். Image
#சேகரித்தல்:

வேட்டையாடி உணவு சேகரிக்கும் இனக்குழு வாழ்வில், இது மிக முக்கியமானதாகும். பெரும்பாலும் இதனைப் பெண்களே செய்தனர்.

எனினும் #கிழங்ககழ்தல்,
#தேனிழைத்தல் ஆகியவற்றில் ஆண்களுங்கூடப் பங்கேற்றனர்
என்பதைப் பின்வரும் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. Image
#கிழங்கெடுத்தல், #தேனெடுத்தல், மா, பலாக்கொட்டை போன்ற உணவுப் பொருள்களைச் சேகரித்ததை #நற்றிணை கூறுகிறது.

மேலும், 'ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த' (அகம் 7:20-22) பாடலடி மூலம்,

#கானவர்கள் தமக்குரிய உணவுப் பொருள்களில் ஒன்றாகிய பலாக் கொட்டையினைச் சேகரித்த செய்தியை அறிகிறோம். Image
கிழங்கு வகைகளில்,

#வள்ளிக்கிழங்கு (புறம்.109:6),
#சேப்பங்கிழங்கு (பெரும்.360-361), #கூவைக்கிழங்கு (மலைபடு.137), #கவலைக்கிழங்கு (குறுந்.233:1),

ஆகியன முதன்மையானவையாக அகழப்பட்டன.

இவை தவிர, பல்வேறு காடுபடு பொருட்களையும் சேகரித்து அவர்களின் உணவாதாரத்தை வலுப்படுத்திக்கொண்டனர்.
குறிஞ்சி நிலமக்கள் மிளகின் பயன்பாட்டை அறிந்திருந்தனர்.

மலைச்சாரலில் விளைந்த மிளகினைச் சேகரித்து உணவில் சேர்த்துக்கொண்டனர்.

இதனைக் #குறுந்தொகை (90: 2-3)

'கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்'

- என்று பதிவிடுகிறது.
▪︎ #பகுத்துண்ணுதல், #பாதீடு, #பண்டமாற்றம்:

இனக்குழுச் சமூகமானது வரலாற்றின் நெடுங்காலம் வரை, கண சமூகமாகவே வாழ்ந்து வந்தது.

சமூக உடைமையே, அதன் தனித்துவமான பாங்காக இருந்தது.

காடும் மலையும் அனைவருக்கும் பொதுவானது. வேட்டைக் கருவிகளும் பொதுவானவை.
வேட்டைக்குச் செல்லும் மக்களும் ஒரு குழுவாகவே சென்றார்கள். அதனால் வேட்டையில் கிடைத்த இறைச்சியைக் குழுவினர் அனைவரும் சமமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

#கானவன் வேட்டையாடிய முள்ளம் பன்றியின் இறைச்சியைக் கொடிச்சி, தம் சிறுகுடியினருக்கு மகிழ்ச்சியுடன் பகுத்துக்கொடுத்ததைக் கூறும் #நற்றிணை Image
இன்னுமொரு #நற்றிணை பாடல் கொண்டும் இதை அறியலாம்.

கானவர்கள் வேட்டையில் கொண்டுவந்த ஆண் பன்றியை, அக்குறிஞ்சி நில மனையோள் தன் குடிமுறைக்குப் பகுத்துக் கொடுத்தாள் என இப்பாடல் கூறுகிறது.

முல்லைச் சமூகத்தின் இல்லத் தலைவி வீட்டில் இருந்த குறைந்த அளவுடைய தினையரிசியைச் சோறு சமைத்தாள். Image
ஆனால் அதை உண்பதற்குக் காத்திருந்தோர் மிகப் பரவலாக இருந்தார்கள்.

இருந்தாலும், அனைவரையும் வீட்டு முற்றத்தில் இருந்த பந்தலின் கீழ் வரிசையாக உட்கார வைத்துச் சமைத்த உணவை அனைவருக்கும் முறையாகத் தந்து உண்ணச் செய்தாள்.

அவளது பகுத்துண்ணும் இனக்குழுப் பண்பை வியந்த முதுகூத்தனார், அவளை..
'இற்பொலி மகடூஉ' என போற்றினார்.

கிடைக்கும் பொருள் எதுவாயினும் (வேட்டை, சமைத்த உணவு) அவற்றைப் பாதீடு செய்துகொள்ளும் கண சமூகத்தாராகப் பண்டைய குறிஞ்சி, முல்லை நில மக்கள் இருந்துள்ளனர்.
பண்டைய இனக்குழுச் சமூகத்தில் ஒருபடித்தான பாங்கும், சமூகச் சமவுடைமையும் மிகுந்திருந்ததால் அவர்களிடம் கூட்டுண்ணும் முறை இயல்பாக இருந்தது (குறுந். 331).

இதனால்தான் வேடர்களின் இனக்குழு வாழ்க்கையை நன்கு அறிந்த பின்னர் புலவர், மரபினர் சிறுகுடி மன்றத்தைக் குறிப்பிடும்போது...
'கூட்டுண்ணும் புல்லென் மன்றம்' (நற். 33) என்று குறிப்பிட்டுள்ளனர்.

வேட்டையாடி உணவு சேகரிக்கும் இனக்குழுச் சமூகவாழ்வில் சமூகப் பொதுவுடைமை மிக அதிகமாகக் காணப்பட்டதால் கிடைத்த உணவைப் பாதீடு செய்துகொண்டனர்.
இதனால் மட்டுமே #உணவாதாரம் முழுமை பெறவில்லை.

கிடைத்த
பொருட்களைப் #பண்டமாற்றம் செய்து உணவாதாரத்தை விரிவுபடுத்திக் கொண்டனர்.

அந்த வகையில் குறிஞ்சித் திணைக் குடியினர், அண்டைய சமூகத்தாரிடம் தம்மிடம் கிடைத்த பொருட்களைக் கொடுத்து வேண்டிய பொருட்களைப் பெற்றுள்ளனர் என்று தெரிகிறது.
#வேட்டுவர் கொண்டு வந்த மானிறைச்சியைப் பெற்றுக் கொண்டு,

மருத நில உழவர் மகளிர் அதற்குப் பதிலியாக #வெண்ணெல் கொடுத்ததைப் #புறநானூறு பேசுகிறது.

யானையின் வெண்மையான தந்தங்களோடு, கள்ளினையும் விற்று அவற்றிற்கு ஈடாக நெல்லைப் பெற்று வாழ்ந்ததை #மாமூலனார் குறிப்பிடுகிறார். Image
கொலைவில் வேட்டுவர் வேட்டையாடிய ஆமான் ஊணினையும் யானையின், தந்தத்தையும் கொடுத்துக் கடைத்தெருவில் கள்ளுண்டு களித்துள்ளனர் (பதி. 30:10-14).

மலையுச்சியில் கிடைக்கும் தேனையும், நிலத்தில் விளைந்து கிடக்கும் கிழங்குகளையும் அகழ்ந்து, அவற்றை நெய்தல் நில மக்களிடம் கொடுத்துப் பதிலியாக...
மீனையும், மதுவையும் பெற்று மகிழ்ந்தனர்.

#குறிஞ்சி நிலமக்கள் இயற்கையோடு இயைந்தும், இயற்கையை நம்பியும் வாழ்ந்தவர்கள்.

அவர்கள், வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த இயற்கையைத் தெய்வமாகப் போற்றினார்கள்; அதற்குரிய ஓர் அறத்தையும் கொண்டிருந்தார்கள் என #கலித்தொகை (39) கூறும் பாடல் பின்வருமாறு! Image
அல்லவை புரிந்து வாழ்ந்தால், மலையில் வாழும் நமக்குத் தேனும், கிழங்கும் கிடைக்காமல் போகும் எனும் அறம் சார்ந்த ஒரு தொன்மத்தைக் #கலித்தொகை காட்டுகிறது.

வேட்டைச் சமூகத்தில் #பகுத்துண்ணுதல் கூட்டுவாழ்வின் விழுமியமாக இருந்துள்ளது.

இது ஓர் உலகளாவிய பண்பாகும்.
இது எல்லா வேட்டைச் சமூகங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

சங்ககால இனக்குழுச் சமூகத்தாரும், காட்டரண்களில் உள்ளவர்கள் அலறுமாறு,

ஆநிரைகளைக் கொன்று அவற்றைப் பெரிய கற்பாறையின் முடுக்கில் தசையை அறுத்துண்டனர் என்பதை #அகநானூறு (97:4-6) கூறுகிறது.
வேட்டுவச் சமூகத்தார் தொன்மைப் பொதுவுடைமையை மிகச் சிறப்பாகக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்பது #இனவரைவியல் கண்டறிந்துள்ள முடிவாகும்.

சங்ககால வேட்டுவக் குடியினரும், ஆதிப் பொதுவுடைமைப் பண்புகளைப் பெரிதும் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது.
வேட்டையில் கிடைத்த உடும்பின் இறைச்சியைக் குடியிருப்பில் உள்ள குடியினர் அனைவரும், கூறுபோட்டுப் பகிர்ந்து கொண்டதைப் பின்வரும் #புறநானூறு வழி அறிகிறோம்.

வேடர்கள் கூடி உண்ணுவதற்கென்றே சில மன்றங்களும் இருந்துள்ளதைப் 'புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து' (நற் 33:3) என அறியலாம். Image
சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்கள் தேன், கிழங்கு, மான் இறைச்சி, மது போன்றவற்றைப் பிற திணை மக்களுக்குக் கொடுத்துத் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.
இத்தகு 'பண்டமாற்றம்' இவர்களின் வாழ்வில் ஒரு கூறாக இருந்ததைச் சிறுபாணா. (150-153), பெரும்பாணாற்றுப்படை (67-68), பொருநர் ஆற்றுப்படை (214-217), மூலமும் வேறு சில பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.
கடுங்கண்களைக் கொண்ட வேழத்தின் (யானை) கொம்புகளைக் கொடுத்து, அதனால் வந்த பொருளைக் கொண்டு உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைக் #குறுந்தொகை 'கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத்துண்ணும்' (குறுந்.100: 4) எனக் குறிப்பிடுகிறது.
புன்செய் விளைபொருட்களான வரகு, கொள் முதலானவற்றைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து வாங்கி உண்டுள்ளனர் (பதிற். 75:9-13).

குறிஞ்சித் திணையில் காணப்பட்ட 'தொடக்க நிலைப் பண்டமாற்றம்' (அ) 'சிறிய அளவிலான பண்டமாற்றம்' எனலாம்.

முல்லைத் திணையில் ஏற்பட்ட பண்டமாற்றமே விரிவானதாகும்.

- நன்று

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

May 20
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!

மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.

இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.

இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது. Image
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.

#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது. Image
Read 25 tweets
May 19
உப்பு விளைவித்தல்...!

சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.

▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது. Image
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.

▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.

சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது. Image
Read 8 tweets
May 13
சங்க காலத்தில் கடல் வணிகமும், புலம்பெயர்வும்!

சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.

#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.
Read 15 tweets
May 12
சங்ககால கைவினைக் கலன்கள்!

குயவர்கள் 'கலம்செய் கோவே' என அழைக்கப்பெற்றனர்.
கலத்தினை வனைவதற்குத் #திகிரி (மலைபடு.474) பயன்படுத்தினர்.

#குயவர்கள் சமைத்த கலன்களைச் சூளையில் சுட்டு உருவாக்கினார்கள். Image
▪︎ #தாழி:

இறந்தோரை அடக்கம் செய்யும் 'தாழி'யினையும் இக்குயவர்களே செய்து கொடுத்தனர்.

'முதுமக்கள் தாழி' எனப்பட்ட இக்கலம் பெரிய வாயகன்ற பானை போன்று இருந்தது.

உயிர் நீந்த மன்னர்களையும், நிலக்கிழார்களையும், தலைவனையும் இத்தாழிக்குள் வைத்துப் புதைந்தனர். Image
இதனை #பதிற்றுப்பத்து பின்வருமாறு உணர்த்துகிறது.

சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை நில மக்கள் #ஈசல் பிடித்து உண்டனர்.

அவ்வீயலைப் பிடிக்கத் #தாழி பயன்பட்டது என்பதை

‘நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்கெண்டி' எனும் #நற்றிணை (59: 2) அடி குறிப்பிடுகிறது. Image
Read 23 tweets
May 11
சங்க கால உண்கலன்கள்...!

சங்க காலத்தில் உணவுப் பொருள்களைச் சேகரிக்கவும், சேமித்து வைக்கவும், சமைப்பதற்கும், உண்பதற்கும் பல்வேறு புழங்கு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலை, ஓலை, மூங்கில், மண் பாத்திரங்கள் முதலான சாதாரண கலன்களும்... Image
இரும்பு, வெள்ளி, செம்பு, பொன் பாத்திரங்கள் முதலான விலையுயர்ந்த கலன்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன.

புழங்கு பொருள்கள் பண்பாட்டின் காலக் கண்ணாடியாகவும், அதன் வளர்ச்சியைக் காட்டும் அளவு கோலாகவும் உள்ளன.
அறிதிறன், தொழில்நுட்பத் திறன், உலகப் பார்வை முதலானவற்றைப் பூடகமாகக் காட்டும் தன்மையையும் இவை கொண்டுள்ளன.

தொழிற் பாகுபாடுகள், வேலைப் பிரிவினை, சமூகப் படிநிலை, வாழ்வியல் வேறுபாடுகள் முதலானவற்றையும் புழங்கு பொருள்கள் காட்டுகின்றன.
Read 16 tweets
May 9
சங்க கால இனக்குழு சமூகத்தின் வேட்டை வாழ்க்கை முறை...!

இனக்குழு வாழ்வில் குழு வேட்டையே முதன்மையானது. மிகச்சில தருணங்களில் தனிநபர்களும் வேட்டைக்குச் சென்றார்கள் (நற். 59).

சங்க காலத்தில் உடும்பு, நுணல், ஈயல், முயல் போன்ற சிறு விலங்குகளைத் தனிநபர்கள் வேட்டையாடினார்கள்.
இதற்கு மாறாக #கானவர், #வேட்டுவர், #குறவர் முதலானோர் காடுகளிலும் மலைகளிலும் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடினார்கள்.

இனக்குழுச் சமூகத்தில் வேட்டையாடி உணவு சேகரித்தல் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்ததால், விலங்கினப் புரதமும் தாவரவினப் புரதமும் ஏறக்குறைய சம அளவு இருந்தன.
இது உலகளாவிய நிலையில் இனவரைவியல் கண்டுள்ள உண்மையாகும்.

சங்க கால இனக்குழுச் சமூகத்தினரும் இதனையே பிரதிபலிக்கின்றனர்.

சங்க கால #வேட்டுவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே #விற்பயிற்சி மேற்கொண்டனர்.

ஊகம்புல்லின் நுண்ணிய குச்சியில் புழையையுடைய வெள்ளிய முள்ளைச் செருகி, அம்புகளாக்கி...
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(