சங்ககாலப் பாலைத் திணை மக்களின் வாழ்வாதாரம்...!

பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.

குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.

கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.

வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.

இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,

அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.

இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
பாலையில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், மரஞ்செடி கொடிகள் கரிந்து காய்ந்து நிற்கும்.

விலங்குகள் உணவுக்கும், நீருக்கும் ஓயாது அலைந்து கொண்டிருக்கும்.

இந்தக் கடுமையான சூழலைச் #சுரம் என்று அழைத்தனர்.
இந்தச் சுரத்தின்போது பாலை நிலத்தில் நடப்பது கடினமானது எனும் பொருளில் அதனை;

#அருஞ்சுரம் - பெரும்பாண். 117, #வெஞ்சுரம் - கலி. 13: 9

-என்றழைத்தார்கள்.

பாலை நிலத்தில் காணப்படும் 'பரல் கற்கள்', வேல் போன்று நடப்பவரின் கால்களை வருத்தும் (நற். 240).
இங்கு உச்சி நேரத்தின் போது கண்களை மயக்கும் கானலை, விலங்குகள் #நீர் என நினைத்து ஏமாந்து போகும். பாலையில் பறந்த #கானல்;

‘உருகில்பேய் ஊராத்தேர்' (அகம். 67: 15-17), #இலங்குதேர் (கலி. 26:10), #பேய்த்தேர் என்று அழைக்கப்பட்டன.
வளமிழந்து நின்ற இந்நிலத்தைப் #புன்நிலம் என்றார்கள்.

மக்கள் பாலைத் திணையில், #எயினர்கள் வேட்டுவக் குடியினராக வாழ்ந்தனர். பல்வேறு விலங்குகளை வேட்டையாடி உண்டனர்.

கூகைகளின் நெற்கூட்டிலிருந்து, #நெல் எடுத்துண்டதை #பட்டினப்பாலை பின்வருமாறு கூறுகின்றன.
வேட்டையில் பெரிதும் ஈடுபட்டதாலும், வில்லை அதிகமாகப் பயன்படுத்தியதாலும், #எயினர்கள் ‘கொடுவில் எயினர்' என்றே பரவலாக அறியப் பெற்றனர்.

'கொலைவில் எயினர்' (ஐங்.364)

'வல்வில் எயினர்' (வேட்டு.13)

- என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.
#எயினர்கள் வழிப்பறியிலோ, கொள்ளையடிப்பதிலோ ஈடுபட்டதற்கான குறிப்புகள் இல்லை.

பாலையில் வாழ்ந்த #மறவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். வழிப்பறியிலும், கொள்ளையடிப்பதிலும், ஆநிரை கவர்தலிலும், போர்ச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள்.

அதனாலேயே இவர்களை பின்வருமாறு புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
இவர்கள் கொள்ளை கொள்ளுங்கால் துடியினை ஒலித்தனர் (கலி. 15: 4).

நிரை கவரும்போது தண்ணுமை முழக்கினர் (அகம். 297: 16).

பாலைத் திணையில் வழிப்பறி கள்வர்களாக வாழ்ந்தவர்கள் 'ஆறலை கள்வர்கள்'.

'அத்தக் கள்வர்' - அகம். 7,
'வேட்டக் கள்வர்' - அகம். 63, 'கன்னுடைக் கொள்ளையர்' - அகம். 101.
என இவர்கள் குறிக்கப் பெற்றனர்.

#ஆநிரை கவர்ந்தும் வாழ்ந்தனர். #ஆகோள் பூசலில் தொடர்புடையவர்களாகவும், #வெட்சி, #கரந்தை வீரர்களாகவும் வாழ்ந்தனர்.

இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதால் #கள்வர் எனும் சொல்லாட்சியுடன் கூற வேண்டிய தேவையை வீரயுகக் காலச்சூழல் முன் வைக்கிறது.
பாலைத் திணையில் #கூளியர் எனப்படுவோர் பற்றிய குறிப்புகளும் கிடைக்கின்றன.

#சேரர் படைகள் மலைப் பிரதேசங்களைக் கடப்பதற்கு, கற்களை அகற்றிப் பாதை அமைத்தவர்கள் இவர்கள் எனப் #பதிற்றுப்பத்து பின்வருமாறு கூறுகிறது.
பாலைத் திணைப் பாடல்களை நுணுகி ஆராயும்போது,

#வம்பலர் (அகம். 263, 313),
#மழவர் (அகம். 337),
#இளையர் (அகம். 375),
'கொடுவில் ஆடவர்' (அகம். 167)

- முதலான பெயர்களையும் காணமுடிகிறது.
இவர்கள் போர் நடவடிக்கைகள், வேந்துவிடு தொழில், தூது செல்லுதல், ஒற்று பார்த்தல் முதலானவற்றைச் செய்தவர்கள்.

மேலும், இப்பாலைத்திணைப் பாடல்களில் #பழையர், #வேட்டுவர் முதலான குடியினரையும் அறிய முடிகிறது.

இவர்கள் வேட்டுவத் தொழில் செய்தவர்களாக இருந்தனர்.
குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்து உருவாகும், வறண்ட பாலை நிலத்தின் தன்மையானது வளமானதாக இல்லை.

இந்நிலையில் பாலைத் திணைக் குடிகள் பல்வேறு தகவமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

வேட்டை, சேகரித்தல், ஆநிரை கவர்தல், நிரை மீட்டல், வழிப்பறி, கொள்ளையடித்தல் முதலானவை...
இத்திணையின் முக்கியச் செயல்பாடுகளாய் இருந்தன.

இறைச்சிக்காகவும், கள்ளுக்காகவும் #எயினர் வேட்டையாடினர். (அகம். 59, 97, 159, 249, 309).

இவர்கள் வில், அம்பு கொண்டு உடும்பு, முயல், கணமா, முளவுமா முதலான பல்வேறு விலங்குகளை வேட்டையாடி உண்டனர் (அகம். 249, 265, 309).
எறும்புப் புற்றுக்களை அழித்து, அவை சேகரித்து வைத்திருந்த மூங்கில் அரிசியை எடுத்து உண்டனர் (அகம். 319, 377).

பண்டைய காலத்தில் கால்நடைகள் செல்வம் எனக் கருதப்பெற்றன.

அதனால் ஆநிரை கவர்தலும், மீட்டலும் முல்லை, பாலை நிலங்களில் அடிக்கடி நிகழ்ந்தன.
#ஆநிரை மீட்டலில் ஈடுபட்டவர்கள் #மறவர் எனப்பட்டனர் (அகம்.131: 6-9).

இவர்கள் 'ஆடவர்', 'தறுகண் ஆளர்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.

நிரை கவர்தலில் ஈடுபட்டவர்கள் #மழவர்கள் (அகம். 131: 6-9, 309: 1-6, 127: 13-15, 129: 10-13).
#மழவர்கள் வெற்றியுடன் நிரை கவர்ந்தபோது #உண்டாட்டு விழா நடைபெற்றது.

நிரை மீட்ட மறவர்களின் வெற்றி #பிள்ளையாட்டு விழாவாக நடைபெற்றது.

வெட்சி வீரர்களின் (#மறவர்) வாழ்க்கையும், கரந்தை வீரர்களின் (#மழவர்) வாழ்க்கையும் வேறுபட்ட நிலையில் இருந்தன என்பதை அகப்பாடல்கள் காட்டுகின்றன.
காட்டு வழியில் செல்வோரை ஒளிந்திருந்து தாக்கி, அவர்களுடைய பொருள்களைப் பறித்துத் தமக்குள் கூறுபோட்டுக் கொண்டவர்கள் 'ஆறலைக் கள்வர்' (குறுந். 331).

வணிகச் சாத்துகளை வழிமறித்துப் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், ஆறலைக் கள்வர்களின் தொழிலாக இருந்தது என்பதை...
'செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை’ என #அகநானூற்று (245) கூறுகிறது.

பாலைத் திணை வாழ்வு ஆநிரை கவர்தல், கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல் முதலான கொடுஞ்செயல்கள் நிறைந்ததாக இருந்தது.

இதனைப் போர் பற்றிய மானிடவியலோடு புரிந்துகொள்ள வேண்டும்.

சங்ககாலம் என்பது வீரயுகக் காலம்.
சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் பல்கிப் பெருகியிருந்த காலமது.

இவர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செய்த காலமும் உண்டு; வேந்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து திறை செலுத்தி ஆண்ட காலமும் உண்டு.

இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மகட்கொடை மறுத்தலுக்கும்கூடப் போர் நடந்திருக்கிறது (புறம். 336–356).

எதிரி நாட்டு வளங்களை முழுவதும் அழித்தொழிப்பதுதான், வெற்றி பெறும் மன்னனின் இறுதி இலக்காக இருந்தது.

இவ்வாறான வெட்சி, கரந்தைப் போரில் ஈடுபட்ட மறவர், மழவர், பழையர், வம்பலர், வேட்டுவர் முதலான பாலைக்குடிகள்...
போர் இல்லாத காலத்திலும், போரில் சூறையாடியது போன்ற செயல்களின் நுண் வடிவங்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

போர் செய்யும் #மறக்குடியினர் போர் நடைபெறாத காலத்தில் தம் உணவாதாரத்திற்காகக் கொள்ளையடித்தலும், வழிப்பறி செய்தலும், ஆநிரை கவர்தலும் செய்தார்கள்.
இவற்றை மன்னர்கள் கண்டுகொண்டதில்லை.

போருக்குப் பிந்தைய காலத்தில், ஒரு வகையான முறைசாரா சலுகைகளை மறக்குடியினர் அனுபவிக்கும், செயலாக நிரை கவர்தலும் மீட்டலும் கொள்ளையும் வழிப்பறியும் காணப்பட்டன.
பாலைத் திணையில் வழிப்பறி, கொள்ளை முதலான செயல்களில் ஆடவர் ஈடுபட்டிருந்தாலும், பெண்கள் சிறு வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளீட்டினார்கள்.

பாலை நில மகளிர் பூ விற்றும், கள் விற்றும், பொருள் ஈட்டியதை #அகநானூறு பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

May 24
சங்ககாலக் மருதத் திணை மக்களின் உணவு முறைகள்...!

வேளாண் தொழில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் பேசுகிறது.

#சேற்று நிலத்தில் #நெல்லை விதைத்துப் பயிரிட்டுள்ளனர்.

நாற்றங்காலில் #நாற்று வளர்த்துப் பின்னர் பெயர்த்தெடுத்துப் பயிரிட்டனர். Image
#சேற்றுழவு செய்ததை பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

#விதை விதைத்து #நெல் பயிரிட்ட முறையை ‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்' என்கிறது #ஐங்குறுநூறு (3:4). Image
ஒரு வேலி நிலத்தில், ஆயிரம் கலம் செந்நெல்லை விளைவித்துள்ளதைப் பின்வரும் #பொருநராற்றுப்படை வரிகள் பதிவிடுகின்றன.

மேலும், விளைந்த நெற்பயிரை அறுத்துக் களத்திற்குக் கொண்டு வந்து, அடித்துக் காற்றில் தூற்றி நெல்லைக் குவித்தனர் என்கிறது #அகநானூறு (30: 6-8). Image
Read 20 tweets
May 22
சங்க கால #நெய்தல் திணை மக்களின் பன்மைத் தொழில் நுட்பங்கள்!

சங்க கால மீனவர்களின் தொழில்நுட்பம் பன்மைத் தன்மை வாய்ந்தது.

#பரதவர்கள் நள்ளிரவிலும் மீன் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு திண்ணிய திமிலில் அலைகடல் நடுவே சென்றுள்ளனர்.
விளக்கொளியைக் கண்ட சிறுமீன்கள் திரண்டெழும்; அவற்றைத் தின்ன வெஞ்சுறாக்கள் விரைந்து வரும்.

அவற்றைப் பரதவர்கள் பிடித்துத் திமிலில் ஏற்றி வந்தனர் - நற்.67:6-9

இரவில் மீன் வேட்டம் செய்வோர், கடலில் வெளிச்சம் வார் போடுவதற்குத் தாம் பிடித்த மீன்களின் கொழுப்பைச் சேகரித்து அதனை...
எண்ணெய்யாகப் பயன்படுத்தியுள்ளனர் என
பின்வரும் பாடலடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

இரவில் மீன் வேட்டத்திற்குச் செல்லும்போது, சுறா மீன்கள் கட்டுக் கடங்காமல் விரைந்து திரிவதுண்டு.

அவற்றைக் கனன்று எரியும் தீப்பந்தம் மூலம் கூர்ந்து நோக்கி, வலுவான கயிற்றில்... Image
Read 20 tweets
May 20
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!

மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.

இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.

இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.

#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 25 tweets
May 19
உப்பு விளைவித்தல்...!

சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.

▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.

▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.

சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 8 tweets
May 18
சங்க கால வேட்டைத் தொழிலில் கூட்டுழைப்பு!

#வேடர் சமூகத்தில் ஆண், பெண், சிறார் ஆகியோரிடையே #தொழிற்பகுப்பு காணப்படுவது இயல்பு.

எனினும் அவர்களிடம் கூட்டுழைப்பும், அதனையடுத்து உழைப்பால் ஈட்டியவற்றைக் கூட்டாகப் பாதீடு செய்துகொள்வதும் சிறப்பான பண்புகளாக விளங்கின.
#வேடுவர்கள் கூட்டு வேட்டையில் ஈடுபடுபவர்கள்.

#கெண்டி எறிந்தும், #அம்பு எய்தியும், #கண்ணி வைத்தும் விலங்குகளை வேட்டையாடினர். #வலை விரித்துப் பறவையினங்களைப் பிடித்தனர்.

புறநானூற்றுப் பாடல் (322) மூலம் வேட்டுவச் சிறுவர்கள்...
... வரகின் அரிகாலில் மேயவரும் எலிகளைப் பிடிப்பதற்கு, ஏற்ற சமயத்திற்காகக் காத்திருந்தனர் என அறியலாம்.

சிறுவர்கள் ஒன்று கூடி, எலி பிடித்த கூட்டுழைப்பை, 'புன் தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்' என்கிறது #புறநானூறு (322: 3-4).
Read 28 tweets
May 13
சங்க காலத்தில் கடல் வணிகமும், புலம்பெயர்வும்!

சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.

#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(