#கெடு_வைக்கும்_உபிஸ்_கவனத்திற்கு!
திருமுருக #கிருபானந்தவாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக் கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார். 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்த பொழுது அண்ணாதுரைக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist
வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார். "மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால், ஆனானப்பட்ட மில்லராலும் அவனை வெற்றி கொள்ள முடியாது" என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அவ்வளவு தான். அண்ணாவை இழிவு படுத்திவிட்டதாக
#திமுக ரவுடிகள் அவரை சூழ்ந்து தாக்கினர்கள். மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டு காயமின்றி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌. அவர் பூஜை அறையில் புகுந்து விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையும்
உடைத்தார்கள். அன்று ஊடகம் என்பது செய்தித்தாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கப்பட்ட்டது. (இன்று விலை போன ஊடகங்கள் - வேறு கதை!) வாரியார் தாக்கப்பட்டபோது கருணாநிதி, 'அண்ணா மீது தமிழக மக்கள் கொண்ட அன்பினைக் காட்டுகிறது' என்று தாக்குதலை நியாயப்படுத்தினார். அதை செய்தது திமுக
அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல‌. தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. வாரியார் தாக்கப்படும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்துக் கொண்டிருந்ததன் பெயர் திராவிட பகுத்தறிவு. வாரியார் தாக்கப்பட்ட செய்தி
சட்டமன்றத்தில் எதிரொலித்தது. வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர். ராஜாஜி மனம் வருந்தினார், தீட்சிதர்களும்
ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரிஅனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள். ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார். நிலமை எல்லை மீறி சென்றதை உணர்ந்த கருணாநித
ஒரு கில்லாடி திட்டம் போட்டர். அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கி இருந்த எம்.ஜி.ஆரை சரியாக பழிவாங்கினார். ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார். வாரியாரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும்
வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டார். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி. எம்.ஜி.ஆர் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார்.
அப்பொழுது உண்மையினை விளக்கினார் எம்.ஜி.ஆர். அந்த விழாவில் 'பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தைத் கொடுத்து எம் ஜி யாரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார் சுவாமி. வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ர் அவர் தான். அந்த வாழ்த்தில், கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக
அமர்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் பின் கருணாநிதியால் எழவே முடியவில்லை. 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. வாரியாரால் ஆசீர்வதிக்கபடும் காட்சியே எம்.ஜி.ஆர்க்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது. பொன்மன செம்மல் என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே அடையாளமாகி மங்கா புகழாகி அவர
அரசர் கோலத்துக்கு ஆக்கியது. சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு எம்.ஜி.ஆர் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது. அத்தோடு போலி நாத்திக அடையாளம் ஒழிய ஆரம்பித்தது. அதன்பின் செல்வி ஜெயலலிதா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார். வாரியாருடன்
மோதியதால் திமுகவின் அழிவு அன்று தொடங்கிற்று. முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த கூட்டத்தை சரித்துப் போட்டார். வாரியார் தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை. முருகபெருமானின் அடி அப்படி இருந்தது வரலாற்றின் மிக பெரிய சான்று. ஒரு சாதாரண முருகன் ஆண்டியிடம்
அவர் தோற்று அவமானப்பட்டது வரலாறு. வாரியார் சுவாமிகள், சித்தியடையும் வரை பூரண நலத்துடன் விளங்கி வெளிநாடு சென்று சொற்பொழிவு ஆற்றிவிட்டு திரும்புகையில் விண்ணில் பறந்த விமானத்தில் அப்படியே முருகன் அவரது ஆன்மாவை அழைத்துக்கொண்டான். ஆனால் தாக்கியவர்கள் கதி? அவர்கள் இறுதி காலமும் இறந்த
பிறகு நடந்தவையும் அனைவரும் அறிந்தது!இந்துகளின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மகான் திருமுருக கிருபானந்த வாரியார். வாரியார் சுவாமிகள் யாரையும் எதிரியாக நினைத்ததில்லை. அவரை எதிர்த்துப் பேசியவர்கள் அழிந்து போனார்கள் என்பது தான் கண்முன்னே நடந்த வரலாறு. அன்று போல் இன்றும் அராஜ கூட்டம்
சிவனையும் முருகனையும் இழித்துப் பேசுகிறார்கள், ஆதீனங்களை, இந்து மதாத்தை, பக்தர்களை அவமதிக்கிறார்கள். இந்த அராஜகக் கூட்டத்திற்கு அரசு அங்கீராமும் கொடுக்கிறது. எந்த வித தண்டனையும் இல்லை. இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 26
#மகாபெரியவா
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம். ஒரு அமாவாசை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. இன்னைக்கு Image
கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு, அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும் என்றார்கள்.
பெரியவா, "குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச் சொல்லு" என்றார்.
பரிகார ஹோமம் நடந்துகொண்டு இருந்தபோது பெரியவா அங்கே வந்து
பெரியவா பார்த்தார்கள். “கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?" என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை மூட்டம். மூட்டம் என்றால்
Read 7 tweets
May 26
#அறிவோம்_மகான்கள் #இராமலிங்க_அடிகளார் #சத்திய_தருமசாலை #வடலூர் #வள்ளலார் #அணையா_அடுப்பு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் 156 வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்த அன்னதானம் இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் ஒரு சிறப்பு, அவ்வடுப்பு இன்றுவரை அணையாமல் (அணையா அடுப்பு) இருக்கிறது. Image
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’
இந்த வரியைப் படித்ததும் நம் மனதில் வள்ளலார் உருவம் தோன்றும்.
வள்ளலார் பிறந்த ஊர் மருதூர். 1823ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர், வள்ளலார் என்கிற ராமலிங்கம். தந்தை இவரின் 6வது வயதில் இறந்து விட்டதால்
இவர் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கோ கல்வியில் நாட்டமில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகா
Read 15 tweets
May 25
#காட்டுப்பரியூர் #ஆதிநாராயண_பெருமாள்_கோவில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் அருள் பாலிக்கிறார் பெருமாள். ஆயிரம் வருடப் பழமையான இந்தக் கோவில் கொளஞ்சியப்பர் முருகன் கோவில் அருகில் உள்ளது. இவ்விடம் விவசாய நிலம். ஒருமுறை மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டு மக்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர் Image
பெருமாள் இவர்கள் விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து பெரு மழை பெய்ய வைத்து விவசாயம் செழிக்க வைத்தார். அடஹ்ர்கு நன்றிக் கடனாக அவர்கள் பெருமாளுக்கு சின்ன கோவில் எழுப்பினர். அது பின்னாளில் பெரிய கோவிலாக உருமாறியுள்ளது.மூலவர் இரு தாயார்களுடன் தெற்கு பார்த்து தரிசனம் தருகிறார். ஒவ்வொரு Image
அமாவாசையன்றும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் வைகுண்ட ஏகாதசியின் போதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வெளிப்பிராகாரத்தில் ஸ்ரீ வேணுகோபாலன், குருவாயூரப்பன், நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ ராமானுஜர், நம்மாழ்வார் மற்றும
Read 5 tweets
May 25
#கொளஞ்சியப்பர்_திருக்கோவில் விருத்தாசலத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. “குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்த பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.
திருக்கோவில் அமைந்துள்ள இடம் ImageImage
முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இடம். பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்து இருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை அவ்வூர் மக்கள் கண்டு சுவாமியை எடுத்து வழிபட தொடங்கினர். திருமுதுகுன்றத்து
ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் “சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லை. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார் என உறுதி ImageImage
Read 12 tweets
May 25
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஊரில் வசுதத்தன் என்ற பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்குச் சுவேதா என்ற பெண் இருந்தாள். நல்ல கல்வி அறிவு உடையன் ஆயினும், தனக்கு ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுமீறிச் செல்லம் கொடுத்து ஒரே அகங்கார சொரூபமாக அவளை Image
வளர்த்து வந்தான். சுவேதாவுக்கு மணப் பருவம் வந்ததும், தன் ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் அனாதையாக உள்ள ஒருவனுக்குத் தன் மகளை மண முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்பினான். சிவசர்மா என்ற ஏழை பிராமணனுக்குத் தன் மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டான்.
அகங்கார வடிவினளாகிய சுவேதா கணவனைத் தூசி போல மதியாது நடத்தி வந்தாள். மனைவியின் கொடுமையைத் தாங்க முடியாத சிவசர்மா ஒருவருக்கும் சொல்லாமல் ஒருநாள் வீட்டை விட்டே போய்விட்டான். வசுதத்தாவின் மனைவி தன் மகளை செல்லம் கொடுத்துக் கெடுத்ததையும், அந்த மகள் கணவனைத் தூசாக மதித்து நடத்தியதையும்
Read 8 tweets
May 24
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வால்மீகி தனது ராமாயணத்தை முடித்ததும் நாரதர் அதை பார்த்தார். நன்றாக உள்ளது ஆனால் அனுமனின் ராமாயணமே சிறந்தது என்றார். இது வால்மீகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அனுமனின் ராமாயணம் வாழை மரத்தின் 7 அகன்ற இலைகளில் பொறிக்கப்பட்டிருப்பத்தை கொண்டார். அவர் அதை
படித்து, அது மிகவும் சரியானதாக இருப்பதைக் கண்டார். இலக்கணம் மற்றும் சொல்லகராதி, மீட்டர் மற்றும் மெல்லிசை மிக நேர்த்தியாக அமைந்திருப்பதை கண்டார். அவர் மனமுடைந்து அழத் தொடங்கினார். அவ்வளவு மோசமா என்று அனுமன் கேட்டான். இல்லை, மிகவும் அருமையாக உள்ளது என்றார் வால்மீகி. அப்புறம் ஏன்
அழுகிறாய் என்று அனுமன் கேட்டான். ஏனென்றால், உங்கள் ராமாயணத்தைப் படித்த பிறகு என்னுடைய ராமாயணத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்று பதிலளித்தார் வால்மீகி. இதைக் கேட்ட அனுமன், என்னுடையதை இப்போது யாரும் படிக்க மாட்டார்கள் என்று வாழை இலைகளைக் கிழித்தார். ஏன் கிழித்தீர்கள் என்றார்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(