#அறிவும்_மகான்கள் #கணக்கம்பட்டி_சித்தர் #கணக்கம்பட்டி_மூட்டைசாமி பழனி முருகன் திருக்கோவிலில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் கணக்கன்பட்டி. இங்கும் வாழ்ந்த மிக சக்தி வாய்ந்த மகான் கணக்கன்பட்டி மூட்டை சாமி என்கிற சத்குரு காளிமுத்து பழனிசாமி சித்தர். ஷீரடி பாபாவின் மறு Image
அவதாரம் என்கின்றனர். இவர் பல அதிசயங்களை நிகழ்த்தியவர். ஒருநாள் வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்பம் பேச முடியத அவர்கள் குழந்தைக்கு பேச்சு வர பழனி முருகனை தரிசிக்க காரில் போய் கொண்டிருந்தனர். அந்த கார் கணக்கன்பட்டி வழியே போகும் போது, பச்சை வேஷ்டி சட்டை, தலைப்பாகை அணிந்த ஒரு பெரியவர் Image
வழிமறித்தார். அவர்கள் பயத்துடன் இறங்கினர். குழநதையின் தாயைப் பார்த்து, "எதிரில் இருக்கும் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வா" என்று கட்டளை இட்டார். அவர்கள் சுத்த சைவம், முழித்தனர். அருகில் இருந்தவர்கள், சாமி சொல்வதை செய்து விடுங்கள் சாமி சக்தி வாய்ந்தவர் என்றனர். அந்தப் பெண்ணும் Image
வாங்கி வந்தார். இந்த சாப்பாட்டை அந்த பையனுக்கு கொடு என்றார். தடுமாறினர், ஆயினும் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தார் தாயார். வாங்கி வந்த பிரியாணி சாம்பார் சாதம் ஆக மாறி இருந்தது. இதை கண்டு ஆச்சரியத்துடன் கை எடுத்து வணங்கிவிட்டு பழனி நோக்கி சென்றனர். அப்போது அவர்களின் காருக்கு
எதிரில் ஒரு வண்டி வந்தது. அதை கண்ட அந்த சிறுவன் அம்மா வண்டி என்று கத்தினான். அந்த சிறுவனிடம் இதை சற்றும் எதிர் பார்க்காத அக்குடும்பத்தினர் சாமியின் மகிமை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கினர். இவ்வாறு பலரின் கர்ம வினைகளை தீர்த்து அவர்கள் வாழ்க்கையை
மாற்றியவர் கணக்கன்ப்பட்டி மூட்டை சாமி. இவரிடம் யார் சென்றாலும் போய் அந்த கல்லு எடுத்து அங்க போடு, இங்க கூடு கட்டு என்று சொல்லுவார். ஒருமுறை ஒருவர் நிலம் வாங்க இவரிடம் உத்தரவு கேட்கும் போது, கிழக்கு போய் வடக்கு போ என்று சூசகமாக கூறினார். உத்தரவு கேட்கவந்தவர் இரண்டு நிலம் பார்த்து
இருந்தார். அதில் ஒன்று வடக்கில் இருந்தது. அதன் வழி கிழக்கு பார்த்து இருந்துள்ளது. கிழக்கு போய் வடக்கு போ என்று சுவாமி இதை தான் சூசகமாக கூறி உள்ளார் என்று எண்ணி அவரும் அந்த நிலத்தை வாங்கி வளர்ச்சி அடைந்துள்ளார். இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும்.
ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக சில நேரங்களில் எவரேனும் மூட்டை அருகே நெருங்கினால் போதும்
கன்னாபின்னாவென்று கத்தி அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார். ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர்
ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார். சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறி போன
சேலத்து பக்தர் ஒருவர், ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மூச்சே இல்லை. இறந்து விட்டார் என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில்
தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி. அங்கே இவர் இல்லை. சிலரிடம் மண்வெட்டி கொடுத்து மண் தோண்ட சொல்வார் சிலரிடம் பள்ளமாக இருக்கும் குழிகளை மூடச் சொல்வார் சிலரிடம் கற்களை எல்லாம் பொறுக்கி வந்து ஓரிடத்தில் குவித்து போடச்
சொல்வார் சிலரிடம் சாக்கடைத் தண்ணீரை சரி செய்ய சொல்வார் பெரிய பாறாங்கல்லை கொஞ்ச தூரத்துக்கு புரட்டி போடச் சொல்வார். ஒரு குறிப்பிட்ட மரத்தை சுற்றி வா என்பார். சிலருக்கு அடி விழும். சிலரை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார் சற்று தொலைவில் வரும்போதே அயோக்கியபய வர்றான் அவனை திரும்பி போகச்
சொல்லு என்பார். இப்படி அவர் எந்த உத்தரவிட்டாலும் அவை மக்களின் கர்மவினைகளை விரட்டினர் காலப்போக்கில் தான் இந்த உண்மையை மக்கள் உணர்ந்தனர். அதன்பிறகு மூட்டைசாமிகளை நோக்கி தினம் தினம் நூற்றுக் கணக்கானவர்கள் படையெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய விவரங்கள் வெளி உலகுக்கு தெரிய
வந்தன. சிலரை அருகில் அழைத்து வைத்துக் கொண்டு அன்பாகப் பேசுவார் கருணையோடு பார்ப்பார் சிலரிடம் போய்டடீ வாங்கிட்டு வா என்பார். சிலரிடம் எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்கி தரியா என்று கேட்பார். வெகு சிலருக்கு தன்னை பழனிமுருகன் ஆகவே உருமாற்றி காண்பித்தது உண்டு. இப்படி நிறைய சம்பவங்களை
சொல்லலாம். முக்காலமும் உணர்ந்த ஞானியாக உலா வந்தார். பஞ்சபூதங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தார். பறவைகள் விலங்குகள் பேசுவது அவருக்குப் புரியும் ஆனால் எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இவர் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார் என்று சொல்லவும் தேவை இல்லை. சாய் பாபாவுக்கும் மூட்டை ImageImageImage
சாமிகளுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளது. சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கியது போல மூட்டை சாமிகளும் கல்லில் அமர்ந்து ஆசி வழங்கினார் பாபா அமர்ந்திருந்த கல் ஷீரடி துவாரகாமாயியில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது போல கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் ImageImage
அமர்ந்த கல்லும் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப் பட்டுள்ளது. பாபாவுடன் எப்போதும் ஒரு நாய் காணப்படும். மூட்டை சாமிகளுடன் மணி என்ற நாயும் இருக்கும். அந்த நாய் மூட்டை சாமிகளின் ஜீவசமாதி அருகிலேயே படுத்திருக்கும். மூட்டை சாமியாரை சாய்பாபாவின் அவதாரமாகவே பார்க்கிறார்கள். இவரின் ஜீவ
சமாதிக்குச் சென்றால் நிச்சயம் மாற்றம் உண்டாகும். இவரின் ஜீவ சமாதியில் அதிர்வலைகளை இன்றும் நன்றாக உணராலம். பழனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் உள்ளது. பஸ் வசதியும் உள்ளது. மகான் 11 3 2014 அன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் பரிபூரணமானவர். எனவே ஒவ்வொரு ImageImage
புனர்பூசமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குருபூஜை அன்றும் நடக்கின்றன. தினமும் மூன்று வேளை அன்னதானம் இங்கே. அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் ஆசி பெற தவறியர்கள் இன்று இங்கு சென்று அதை பெறலாம்.
ஓம் சத்குரு கணக்கன்பட்டி மூட்டை சாமிகளே போற்றி!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾 ImageImageImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 31
#தந்தவக்ரன் ​​(தந்தவக்ரன், சிசுபாலன் மகாவிஷ்ணுவின் வாயிற் காப்போற்கள் ஜய விஜயர்களின் இறுதி இரு அரக்கப் பிறவிகளாகும்) மதுராவின் மன்னன் சூரசேனனுக்கு (வாசுதேவரின் தந்தைக்கு) ஐந்து மகள்கள் இருந்தனர்: பிருதா (குந்தி), ஷ்ருததேவா, ஷ்ருதகீர்த்தி, ஷ்ருதஷ்ரவா மற்றும் ராஜாதிதேவி. சிசுபாலன் Image
ஷ்ராதஸ்வராவுக்கு பிறந்தார். ஷ்ருததேவா க்ருஷ ராஜ்ஜியத்தின் அரசரான விருத்தசர்மாவை மணந்தார். அவர்களுடைய மகன் தான் தந்தவக்ன். அவன் பல் கோணலாக இருந்ததால் தந்தவக்ரன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் நெருங்கிய கூட்டாளி. பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்திற்கு
முன் சகாதேவனால் தோற்கடிக்கப் பட்டான். பீமன் ஜராசந்தனைக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை. அதன் பின் நடந்த அஸ்வமேத யாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலனைக் கொன்றார். சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க நினைத்தான்.
Read 5 tweets
May 31
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை சிவபெருமான் நாரத மகரிஷியைப் பார்த்து, "ஓ நாரதரே! சோழ தேசத்தில் காவேரி மத்தியில் #சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் மிகுந்த லட்சுமிகரமாக விளங்கும் #ஸ்ரீரங்கத்தலம் என்னும் புண்ணியத் தலம் உண்டு. அந்தத் தலத்தைச் சென்று தரிசித்தவர்கள் நரகத்திற்குப் போக Image
வேண்டியதில்லை. எமலோகத்திற்குப் போக வேண்டியதில்லை. அவர்களை மரண வேதனை வருத்தமாட்டாது. மீண்டும் அவர்களுக்கு எவ்விதமான பிறவித் துன்பங்களும் ஏற்படாது. ஆகையால், பூலோக மண்டலத்தில் புத்திசாலியாக இருக்கின்றவர்கள், ஸ்ரீரங்கத்துக்குப் போகாமலும், காவேரி தீர்த்த ஸ்நானம் செய்யாமலும், ஸ்ரீரங்க
விமானத்தைத் தரிசிக்காமலும், ஸ்ரீரங்கநாதரை சேவை செய்யாமலும், தங்களால் இயன்றவரை பெரியோர்களுக்குத் தான தருமங்கள் செய்யாமல் இருக்க மாட்டார்கள்" என்றார். அது மட்டுமல்லாமல், தும்மல் வந்து தும்முகற போதும், நடக்கும் போதும், உடலில் ஒரு நோய் கண்ட போதும், எதிரிகள் எதிர்த்த போதும், பாவிகளோடு
Read 8 tweets
May 31
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்
35வது திருநாமம்
ப்ரபவே நம:

வசுதேவரின் சகோதரியான ஸ்ருதஸ்ரவா, சேதி தேசத்து மன்னன் தர்மகோஷனை மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தான் சிசுபாலன். சனகாதி முனிவரின் சாபத்தால் வைகுந்தத்தின் வாயில் காப்பாளர்களான ஜய-விஜயர்களே ஹிரண்யகசிபு- ஹிரண்யாக்ஷனாகவும், ராவணன்- Image
கும்பகர்ணனாகவும், சிசுபாலன் -தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள். இதில் சிசுபாலனின் பிறப்பு அதிசயமானது. பிறக்கும் போதே நான்கு கைகளோடும் மூன்று கண்களோடும் பிறந்தான். திருமால்-சிவன் இருவரின் ஒருங்கிணைந்த அம்சமாகத் தனக்குக் குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் ஸ்ருதஸ்ரவா. அச்சமயம்
வானில் ஓர் அசரீரி ஒலித்தது: “யார் இந்தக் குழந்தையைத் தூக்கும் போது, இக்குழந்தையின் கூடுதல் இரு கைகளும், மூன்றாவது கண்ணும் மறைகின்றனவோ, அவரால் தான் இக்குழந்தைக்கு மரணம் ஏற்படும்!” இதைக் கேள்வியுற்ற அனைவருமே அந்தக் குழந்தையை நெருங்க அஞ்சினார்கள். கண்ணனும், பலராமனும் தங்களின் அத்தை
Read 14 tweets
May 30
பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச Image
மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்)
நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மைவிளையாமல் தடுத்து
Read 4 tweets
May 30
#மகாபெரியவா
ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர். மகா பெரியவா வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார். பக்தரைப் பார்த்து, “இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார். அன்று வெள்ளிக் கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும் Image
கோமாதாவை வேண்டாம் என்கிறாரே பெரியவா என்று மனசுக்குச் சஞ்சலம். பெரியவாளிடம் மெல்ல சொன்னார் மானேஜர், “இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர் ரொம்ப நாளா மடத்து பக்தர். திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு”
"நீ சொல்றது சரிதான். வெள்ளிக் கிழமை அன்னிக்கு ஒரு பக்தர்
மனப்பூர்வமாகக் கொடுக்கிற
பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வது தான் நியாயம்”
மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.
“ஆனால் இந்தக் கன்றுக்கு இந்த மாடு தாய் இல்லை"
எப்படி? ஒருவருக்கும் புரியவில்லை.
"பாரு கன்னுக்குட்டி பசுமாடு கிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக் குட்டியை நக்கிக்
Read 6 tweets
May 30
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்யதேசம்- திருசெம்பொன் செய்கோயில் திவ்யதேசம் சீர்காழியில் உள்ளது. 108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ImageImage
ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் #பேரருளாளன் ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன்
என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை ‘ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார். மேலும்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(