#திருச்செந்தூர்_முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால் அவர் திருவுருவத்தில் எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது என்கின்றனர். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி
விடுவர். மாலை சந்தனம் வழிக்கும் போது நிறைய தண்ணீர் இருக்கும். சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும். வெள்ளையர் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருக்கிறான். 1803 ஆம் ஆண்டு
திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவன் திருச்செந்தூர் வந்திருந்தான். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டான். இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான
விசிறியை வீசுவதை கண்டான் லூசிங்டன். அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்” என்று கேலி செய்தான்.
அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம் எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்” என்று கூறி, முருகன்
அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தான் லூசிங்டன். வீடு திரும்பிய கலக்டருக்கு மனைவியின் வடிவில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால் துடித்தாள்.
சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்து கொண்டான். உடனே தனக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை
கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் என்று கேட்டான். அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்க முடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என்
சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக் கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிப்பெரும் கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது. முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த
லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப் பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தான். அவற்றில் ‘லூசிங்க்டன் 1803’ என்று முத்திரை பொறித்து கொடுத்தான். அவன் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803’ என்ற முத்திரையை இப்போதும் காணலாம்.

இந்த முக்கிய
சம்பவம் 350 வருடங்களுக்கு முன் நடந்தது. 1648ம் ஆண்டு கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு வந்த டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலை கைப்பற்றினர். அந்த சமயத்தில் அந்த பகுதியை ஆண்டு வந்தவர் மிகச் சிறந்த முருக பக்தரான திருமலை நாயக்கர். திருமலை நாயக்கர் பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு
டச்சுக்காரர்களுடன் போர் நிகழ்த்தினார். ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை. போரில் வெற்றிபெற்றதாகக் கருதிக்கொண்ட டச்சுப் படையினர் அங்குள்ள சுப்பிரமணியரின் சிலைகளை தங்க விக்ரகங்கள் எனக் கருதிக்கொண்டு கடத்திச் சென்றனர். செல்லும் வழியிலேயே சிலைகளை உருக்க முயற்சித்தனர். கடல்
வழியாக பயணித்து அவர்கள் ஊருக்கு செல்வதற்கு முன்னரே இந்த சிலைகளை உருக்கிவிடுவது என்பது அவர்கள் திட்டம். அப்போது திடீரென கடல், அலைக்கழிந்து சூறாவளியுடன் கப்பலை தடுமாறச் செய்தது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருக்க தடுமாறி கீழே விழுந்தது முருகன்
சிலை. ஆழ்கடல் என்பதால் அவர்களால் கீழே விழுந்த சிலையை எடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் அந்தச் சிலை திரும்ப திருச்செந்தூர் வந்தது. அவ்வளவு எடை கொண்ட சிலை, அதுவும் ஆழ்கடலில் விழுந்த சிலை எப்படி திருச்செந்தூர் திரும்பி வந்தது என்ற ஆச்சர்யம் அப்பகுதி மக்களிடையே இன்னும் இருக்கிறது.
ஆறுமுகம் எனும் பக்தரின் கனவில் வந்த முருகன், சிலை இருக்கும் இடத்தை காட்டியதாகவும், அவர்தான் படகில் சென்று சிலையை மீட்டதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. அகநானுறு, புறநானுறு, சிலப்பதிகாரம், தேவாரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல்வேறு பழம் பெறும் இலக்கியங்களில் இக்கோவிலைப் பற்றிய
தகவல்கள் உள்ளன. குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவும், பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே எனும் அருணகிரி நாதரின் திருப்புகழும் நந்தூர் அலைவாயில் செந்தூர் முருகனை கந்துதல் இல்லாத சந்த மார்த் தமிழில் சிந்தை மகிழப் பாடப்பெற்ற பழம் பனுவல்கள்.
அகத்திய முனிவர் முருகனை வழிபட்டு அருள் பெற்ற ஸ்தலம். ஆதிசங்கரரின் உடற்பிணி நீங்கப் பெற்று அவரால் சுப்பிரமணிய பூஜங்கம் என்னும் பாமாலை பெற்ற தலம். செந்தில் ஆண்டவர் கோவில் திருப்பணியில் தேசிக மூர்த்தி சுவாமிகள், மெளனசுவாமிகள், காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள்
ஆகிய 5 துறவிகளால் மேற்கொள்ளப் பட்டது. கோவிலின் இராஜ கோபுரம் 137 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் கம்பீரமாக அமைந்துள்ளது. இராஜ கோபுரம் கட்டும் காலத்தில் முருகன் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். உதாரணமாக வேலையாட்களுக்கு கூலி கொடுக்க பணம் இல்லாமல் அப்போது திருப்பணியை மேற்கொண்ட தேசிக
மூர்த்தி சுவாமிகள் முருகனிடம் மனமுருகி வேண்டினார் அப்போது முருகன், சுவாமிகளின் கனவில் வந்து வேலையாட்களுக்கு இலை விபூதியை கூலியாகக் கொடுக்குமாறும் அதை கோவிலின் அருகே இருக்கும் விநாயகர் சன்னதியின் முன் திறந்து பார்க்கும்படியும் கூறினார். வேலை ஆட்கள் அந்த இலை விபூதியை விநாயகர்
சன்னிதியிப் சென்று திறந்து பார்த்தால் அவர்தம் உழைப்புக்கேற்ற பணம் இருந்த அதிசயமும் நிகழ்ந்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல பல அதிசயங்களை முருகக்கடவுள் அன்று முதல் இன்று வரை இத்தலத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துவாரகையில் கிருஷ்ணனைப் பார்க்க பலரும் வந்து போய் கொண்டு இருந்தனர். ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணன் நாரதரிடம், எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே, நான் போய் பார்க்கும் அளவுக்கு ஒரு பக்தன் இப்பூமியில் இருக்கிறானா என்று கேட்டார். இருக்கிறானே! புண்டலீகன் என்று பெயர். Image
அவனுடைய தாய், தந்தையைத் தன் கண்ணைப் போல் பராமரித்து வருபவன் என்றார் நாரதர். உடனே புண்டலீகன் இருக்கும் எளிய குடிசையின் முன் தோன்றினான் பாண்டுரங்கன். குடிசைக்கு வெளியே மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. வெளியே நின்றபடி பாண்டுரங்கன் புண்டலீகா புண்டலீகா என்று குரல் கொடுத்தான்.
யார் அது, யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். என்னுடைய தாயும், தந்தையும் அசதியாக இருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு வருகிறேன் என்று அவர்களின் காலை வலது கையால் பிடித்துவிட்டபடி, இடது கையால் ஒரு செங்கல்லை வெளியே எடுத்துப் போட்டான் புண்டலீகன். அந்தக் கல்லின் மீது கொஞ்ச
Read 8 tweets
Jun 6
#MahaPeriyava
In the early 1980’s my income began to increase and I was able to save some money for punya kainkaryam. Maha Periyaval was camping in Maharashtra at a place near Sholapur. My father told His Holines “Raman is now getting some good income. Please advise him what is Image
the best punyakainkaryam for which he can spend his money and get the maximum punyam.” His Holiness was silent for a few minutes and then replied “All of you as Brahmins should have studied the Vedas and spent your life teaching the Vedas to others. It is now too late. Many in
your family have become doctors. The next best thing you can do since you have not done Veda Adhyayanam is to support Veda Patasalas and Vedic scholars. Give the maximum possible money for this and you will compensate to some extent for you not having studied the Vedas.” With His
Read 18 tweets
Jun 6
#know_our_good_souls A young man in his thirties used to stand on the footpath opposite the famous Tata Cancer Hospital at Mumbai and stare at the crowd in front- fear plainly written upon the faces of the patients standing at death's door, their relatives with equally grim
faces running around. These sights disturbed him greatly. Most of the patients were poor people from distant towns. They had no idea whom to meet, or what to do. They had no money for medicines, not even food. The young man, heavily depressed, would return home. Something should
be done for these people, he would. think. He was haunted by the thought day and night. At last he found a way. He rented out his own hotel that was doing good business and raised some money. From these funds he started a charitable activity right opposite Tata Cancer Hospital,
Read 11 tweets
Jun 5
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் #ஸ்ரீராமஜெயம் கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிவா விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம்.
#நாரயணனில் இருந்து வருகின்ற 'ரா'வும்,
#நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம'வும் சேர்ந்த நாமமே #ராம
சொல்லில்
அடங்கா புகழவன்!
சொல்லின் செல்வன்!
அஞ்சனைப் புதல்வன்!
சிவனின் அவதாரன்!
அவன் அழகைக் காண கண் கோடி வேண்டும்!
அவன் புகழ் பாடி வையகமே திரள வேண்டும்!
அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பானம். வானுயர வளர்ந்தாலும் வானரன், தானுயரப் பார்பதில்லை.

அனுமார் மார்கழி மாதம் மூலம்
நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவர் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்"
Read 9 tweets
Jun 5
#MahaPeriyava
Sri Maha Periyava used to talk in a humorous way also when blessing His devotees. Once, Navarathri festival was going on in Kanchi Kamakshi Amman temple. Many Maestros used to sing in that festival. One day of such an evening, a devotee came to have a darshan of
Periyava. He was a writer and he was showing his books to Maha Periyava and was explaining about them to Him about it. There were lot of other devotees who were waiting for having Maha Periyava’s darshan. On seeing them, Periyava told the writer “Go and have a darshan of Kamakshi
Amman. Darbar is going on there and it will end soon. Go quickly.”
The writer misinterpreted the decoration for Amman to be Darbar alankaram. When the writer went there, Amman was in a different alankaram and not in Darbar alankaram. The writer was confused thinking Periyava told
Read 6 tweets
Jun 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஐயனே, பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. தூங்க முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள்
என்றவாறே முனிவர் பரசுராமின் முன்பாக நின்றிருந்தான் கபிலன். அப்போது மாலை நேரம். முனிவர் பரசுராமன் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன, அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்ற கபிலன் திரும்பி வந்து, 100
மாடுகள் இருக்கும், எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன என்றான். “நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துல இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(