#வாழும்கலை ஆங்கிலத்தில் MYOB ரொம்ப பிரபலமானது. அதாவது Mind your own business. நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த ஒரு வரி சொல்லி விடுகிறது. இது என் அனுபவத்திலும் நான் கண்ட உண்மை. நம் உற்றார் உறவினர் மத்தியில் நம்மை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். நாம் எதைச்
செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக் கூடிய மனிதர்களும் இருப்பார்கள். எதையும் பெரிது பண்ணாமல் நம் லட்சியத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். முக்கியமாக நாம் ஒன்றை உணர வேண்டும். மனிதர்கள் அனைவரும் தனித்தனி பிறவிகள், தனித்தனி ஆன்மாகள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள்
இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று முனையக் கூடாது. செய்தால் வேதனை தான் மிஞ்சும். அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால் தான் அவர்களுக்கு உண்மை தெரியும். அந்த உண்மையை நாம் முன்கூட்டியே சொன்னால் நம்மை அவர்களுக்கு பிடிக்காது. மேலும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இது தான் வாழ்க்கையின் தத்துவ உண்மை. ஒவ்வொருவரின் பூர்வ புண்ணியத்தின்
அடிப்படையில் தான் அவரவர் குணங்களும் செயல்களும் இருக்கும்.
அது யாராக இருந்தாலும், உடன் பிறந்தவர்களாக, நண்பர்களாக,
கணவன், மனைவியாக, பெற்ற குழந்தைகளாக, பேரன் பேத்திகளாக, எந்த உறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வது தானே
அவர்களின் விதி. இதை நாம் மாற்றி அமைக்க முடியுமா? ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமே நம் கையில் உள்ளது. ஆனால் நாம் பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் அனுபவம் தான் குரு. அந்த அனுபவம் ஏற்பட்ட
பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் திருத்திக் கொள்வார்கள். அதுவரை நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி நம்மிடம் அன்பை காட்டினாலும், தான் யார், தன் குணம் என்ன என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்
கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். (Transient) அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. எல்லை இல்லாத அன்பை
வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது வீண். (அந்த எல்லையில்லாத அன்பை கடவுளிடம் வைப்போம். அவன் என்றும் நம்மை கை விட மாட்டான்.) கடலுக்கும் ஒரு எல்லை வைத்து இருக்கிறான் கடவுள். அதையும் மீறி சில வேளைகளில் எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்களைப் போல்
மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும். நாம் நம்மை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுதல் மட்டுமே நம் கையில் உள்ளது. அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், நமக்கும் ஓர் அனுபவம் கிடைக்கும். அதை
வைத்து நம்மையும் திருத்திக் கொள்ளலாம். இன்பமானாலும் துன்பமானாலும் அதை நாமே சந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேட வேண்டாம். நம் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் நம்மை கைவிடாமல் சேர்ந்தே
பயணிப்பார். அது நம் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர் கொள்ளக் கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நம்
கண்ணீரும் நம் கவலையும் நம்மை பலவீனமாக காட்டி விடும். அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் அந்த சுமையை நாம் தான் சுமந்து ஆக வேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது சிரமம் இல்லாமல் இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு
மனிதனை உலகத்தில் வாழ வைக்கும். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் நம்மை நெருங்காது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீராமானுஜர் ஸ்ரீ ராமானுஜர் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த #யாதவப்பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் பயிலச் சென்றார். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது
பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றே உண்மை. மற்றவை பொய்த் தோற்றம் என்ற கொள்கையுடையது அத்வைதம். வேதத்தில், பரம்பொருள் வேறு, மற்றவையான அறிவுடைய, அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு எனப் பொருள்படும் வாக்கியங்களும், அப்பரம்பொருள் எல்லாப் பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ளமையால் பரம்பொருள் ஒன்றே எனப்
பொருள்படும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றைப் பேதச் சுருதி, அபேதச் சுருதி என்றும் கூறுவர். இவ்விரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை (அபேத வாக்கியங்கள்) மட்டும் முடிந்த முடிவாகக் கொண்டு அதற்கு ஏற்ப மற்றப் பிரிவு படக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளைக் கூறுவது அத்துவைத
#மகாபெரியவா காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக் குப்பம் மடத்தில், 1930ல் தங்கி இருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒரு நாள் இரவில் யானையைக் கட்டி
இருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டு இருப்பதாக
தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சி செய்தார். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாள் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரம். பிரம்ம லோகத்தில், பிரம்மாவால் ஆராதிக்கப் பட்டு, பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு, அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய
பெருமாள். அக்குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும், பின் நம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டு வந்தார்கள். இந்நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார். பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷ்ணன், அங்கு
ஏள்ளப்படிருந்த பெரிய பெருமாளைப் பார்த்து, மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான். ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார். பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆயர்கள் இந்திரனுக்கு விழா எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது குறுக்கிட்ட கண்ணன், “எதற்காக இந்த விழா எடுக்கிறீர்கள்” என்று கேட்டான். இந்திரன் தான் நமக்கு மழை தருகிறான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்விழா அனுசரிக்கப்படுகிறது
என்றார் நந்தகோபர். அதற்குக் கண்ணன், “மழை பொழிய வேண்டியது இந்திரனின் கடமையாயிற்றே! அதற்காக தந்தையே நீங்கள் ஏன் விழா என்ற பெயரில் கையூட்டு வழங்குகிறீர்கள்?” என்று கேட்டான். ஆயர்கள் பதில் உரைக்க முடியாமல் திகைத்தனர். “இவ்வாறு இந்திரனுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக கோவர்த்தன மலைக்கு
விழா எடுங்கள். அந்த மலை இருப்பதால் தான் மேகங்கள் இங்கு வந்து மழை பொழிகின்றன. நம் ஆடு, மாடுகள் அந்த மலைக்குத் தான் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. சிறுவர்களான நாங்களும் அங்கு சென்று தான் விளையாடுகிறோம். இப்படிப் பலவிதமான நன்மைகள் செய்யும் அந்த கோவர்த்தன மலைக்குப் படையல் இடுவதே
#ஶ்ரீராமானுஜர்#சுருக்கமாக_அவர்_வரலாறு புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் பொயு 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர்
அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு #இளையபெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி
கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள். இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்து கொண்டு இருந்தார்
#மகாபெரியவா
ஆந்திராவில் யாத்ரை பண்ணிக் கொண்டு இருந்த போது, மகா பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமும் இருக்காது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் மகா பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து
வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ, பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்! வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. மகா பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார்.
கிராமத்து ஜனங்கள் வந்து தரிசனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. மகா பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக்