#ஶ்ரீராமானுஜர் ஸ்ரீ ராமானுஜர் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த #யாதவப்பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் பயிலச் சென்றார். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது
பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றே உண்மை. மற்றவை பொய்த் தோற்றம் என்ற கொள்கையுடையது அத்வைதம். வேதத்தில், பரம்பொருள் வேறு, மற்றவையான அறிவுடைய, அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு எனப் பொருள்படும் வாக்கியங்களும், அப்பரம்பொருள் எல்லாப் பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ளமையால் பரம்பொருள் ஒன்றே எனப்
பொருள்படும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றைப் பேதச் சுருதி, அபேதச் சுருதி என்றும் கூறுவர். இவ்விரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை (அபேத வாக்கியங்கள்) மட்டும் முடிந்த முடிவாகக் கொண்டு அதற்கு ஏற்ப மற்றப் பிரிவு படக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளைக் கூறுவது அத்துவைத
மரபு. இவ்வாறு யாதவப் பிரகாசர் அத்வைதக் கண்ணோட்டத்தில் வேத வாக்கியங்களுக்குப் பொருள் கூறும்போதெல்லாம், இளையாழ்வார் மறுத்துவந்தார்.
‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ ’ என்ற வேதத்துக்குப் பொருள் கூறினார் ஆசிரியர். இந்தச் சுருதிக்கு, ‘அந்தப் பிரம்மத்துக்குச் சூரியனால் மலரச்
செய்கிற தாமரை போன்ற கண்கள்’ என்பது பொருள். இவ்வாறு கூறினால் அப்பிரம்மத்துக்கு உருவம் உண்டென்றும், குணங்கள் உண்டென்றும் பொருள்படும். ஆனால் அத்வைதக் கொள்கையில் உருவமும் குணமும் இல்லை ஆகையால் பொருளை மாற்றிக் கூறினார். பிரம்மத்துக்குக் கண்கள் கப்யாஸம்- குரங்கின் பின்புறம் போல்
இருக்கிறது என்று வேதம் பரிகாசம் செய்கிறது என்று பொருள் கூறினார். இதைக் கேட்ட உடையவர் வேதனை அடைந்து கண்ணீர் விட்டார். அது கண்ட யாதவப் பிரகாசர், ‘ஏன் அழுகிறாய்?’ என்றார். அதற்கு ராமானுஜர், கம் + பிபதி = கபி: கம் நீர்; பிபதி அதைப் பானம் செய்பவன் சூரியன். அச்சூரியனால் அலர்த்தப்படும்
தாமரை போன்ற கண்கள் என்று உண்மைப் பொருள் இருக்க, பிரம்மத்தை இப்படி இழிவு படுத்தலாமா என வினவினார். ராமானுஜரின் அறிவு மேம்பாட்டை உணர்ந்த ஆசிரியர், அவரைக் கொன்றுவிட எண்ணிக் காசி யாத்திரை அழைத்துச் சென்றார். வழியில் கோவிந்தன், தமையனுக்கு இதைக் குறிப்பாக உணர்த்த, உடனே ராமானுஜர்
காஞ்சிக்குத் திரும்பி நடக்கலானார். விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது, காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து, மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர். தாயார், “நீர்
வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர். உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும் அக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார். காசி யாத்திரையில் கோவிந்தருக்கு
கங்கையில் ஒரு லிங்கம் கிடைக்க, அவர் அத்வைதியாகிக் காளஹஸ்தி சென்று ஆலயப் பூஜைகளைச் செய்து வந்தார். பின்னர் யாதவப் பிரகாசர் காஞ்சி திரும்பி உடையவரைக் கண்டு திடுக்கிட்டு, விவரமறிந்து அவரிடம் மதிப்புடையவராகி, மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு பாடம் நடத்தி வந்தார். அக்காலம்
காஞ்சியை ஆண்ட மன்னனின் மகளைப் பிரம்ம ராட்சசம் பீடித்திருந்தது. யாதவர் வந்து ஓட்ட, அது அகலவில்லை, பின் இளையாழ்வார் வந்து ஓட்ட, அது அகன்றது. சிஷ்யன் நம்மை மிஞ்சுகிறானே என்று இந்நிகழ்வு அவரை கோபப் பட வைத்தது. யாதவப் பிரகாசர் மறுபடியும் ‘ஸர்வம் கல்விதம் ப்ரம்ம’ என்பன போன்ற
சுருதிகளுக்கு அத்வைதக் கருத்துப்படிப் பொருள் கூறினார். இளையாழ்வார் அதை ஏற்காமல், பிரம்மம் வேறு, சித்து அறிவுடைய பொருள்; அசித்து அறிவற்ற பொருள், இவற்றை அது சரீரமாகக் கொண்டுள்ளது. (இது சரீர அசரீர பாவனை எனப்படும்) என விசிஷ்டாத்வைதக் கருத்துப்படி பொருள் கூறினார். அது கேட்ட யாதவப்
பிரகாசர், ‘நீர் இனி இங்கு வரவேண்டாம், உம் அறிவுக்குத் தக்கவரிடம் போம்’ என்று கூறிவிட்டார். இளையாழ்வாரும் விலகி திருக்கச்சி நம்பிகளை அடைந்து, முன்புபோலத் தீர்த்தக் கைங்கர்யம் செய்துவந்தார்.
அதன் பின் பல நிகழ்வுகளால் ராமானுஜர் துறவியாகி திருவரங்கம் சென்று மடத்தின் பொறுப்புகளை
ஏற்று திருவரங்க கோவிலையும் நிர்வகித்து வந்தார். இந்நிலையில் யாதவப் பிரகாசர் தம் தாயாரின் அறிவுரையை ஏற்று, ராமானுஜ முனியை அடைந்து, அவரை வலம் வந்து வணங்கிப் பிராயச்சித்தம் செய்து கொண்டு, சீடரானார். உடையவரும் அவரை ஏற்று உரிய சடங்குகளைச் செய்து, முக்கோல், துவராடைகளைத் தந்து
உபதேசித்து, கோவிந்த ஜீயர் எனத் திருப்பெயரும் அருளினார்.
அவரை யதிதர்ம சமுச்சயம் என்னும் நூலை சாஸ்திர விரோதமின்றிச் செய்யும்படி நியமிக்க, அவரும் அவ்வாறே செய்து அளித்தார். பின் குறுகிய கால அளவிலேயே யாதவப் பிரகாசர் பரமபதம் அடைந்தார். இவ்வாறு தம்மைக் கொல்லத் துணிந்தவருக்கும் நன்மை
செய்தவர் ராமானுஜராவார்.
உடையவர் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 10
#MahaPeriyava One of my most vivid memories which changed the entire course of my life was the granting of permission by Maha Periyaval for me to go abroad. It was around April or May 1960. The first batches of students for the prestigious Commonwealth Scholarships were to be Image
selected. The scholarship scheme was a unique decision from the Commonwealth Prime Ministers’ Conference at Colombo a few weeks earlier. I appeared for the interview at Delhi and a few days later I received intimation of being selected for neurosurgical training at Edinburgh for
two years. I informed my father (Dr V.Subramaniam) who was at Trichy. In those days I knew that Maha Periyaval did not favour the idea of young boys from orthodox families going abroad for a long period of time. My father told me that I could go abroad only if Maha Periyaval gave
Read 10 tweets
Jun 9
#ஶ்ரீராமானுஜர்
எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. அவை நவரத்தினங்களாக கருதப்படுகின்றன.
#ஸ்ரீபாஷ்யம் அவரின் மிகச் சிறந்த படைப்பு. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் இது.
#வேதாந்த_சங்கரஹம். உபநிஷத்துகள் Image
புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு.
#வேதாந்த_சாரம், #வேதாந்த_தீபம் இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது.
#கீதா_பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
#நித்யக்கிரந்தங்கள்.
அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும். பக்தியின் வெவ்வேறு நிலைகளை விளக்கும் நூல்.
#கத்யத்ரயம் -
#சரணாகதிகத்யம், பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.
#ஸ்ரீரங்ககத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. #வைகுண்டகத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான
Read 4 tweets
Jun 9
#மகாபெரியவா
என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் ஓன்று சேர்ந்து எங்களுடைய பூர்வீக கிராமமான (தஞ்சாவூர் பந்தனை நல்லூர் அருகிலுள்ள) ஸ்ரீரங்கராஜபுரத்தில் மஹாவாமிகளுக்கு ஒரு திருக்கோயில் அமைத்து 2021 மார்ச் 10ஆம் தேதியன்று காஞ்சி பால பெரியவா முன்நிலையில் குருவருளுடன் கும்பாபிஷேகம் Image
செய்வித்தோம். அதன் பிறகு என் தந்தை பெயரில் S.V. Raja mani Iyer Educational & Chartable Trust என்ற ஒரு டிரஸ்டை தொடங்கி செவ்வனே நிர்வகித்து வருகிறோம். அடுத்த கட்டமாக தேவையான வசதிகளுடன் மஹாஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஒரு கோசாலை தொடங்கப் பட்டது. அதன் முதல் கட்டமாக 3 கறவைப் பசுகளை
வாங்கினோம். வாங்கிய முதல் பசுவை பரசவித்த 4 வது நாளே கோசாலைக்கு கொண்டு வந்தோம். அந்த பசு பரசவித்த போது நஞ்சு முற்றிலும் வெளியேறாமல் கொஞ்சம் கர்பப்பையிலேயே தங்கியுள்ளது. அதை யாரும் அறிந்திருக்கவில்லை. கோசாலைக்கு வந்த 5 நாளுக்குள் பசுவின் உடல்நலத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.
Read 9 tweets
Jun 9
இந்தியாவின் பொக்கிஷமாக விளங்கும் #10_செல்வம்_மிக்க_கோயில்கள்
1. பத்மநாபசுவாமி திருக்கோயில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது இக்கோயில். மூலநாதரான பத்மனாபசுவாமி அனந்தசயனம் எனப்படும் யோக நித்திரையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பழமையான Image
இக்கோயில் திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் பெரும் புகழுடன் விளங்கியது. அச்சமயத்தில் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு 12000 சாளக்கிராமத்தினாலும் #கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்டது. இக்கோயிலில் பாதாள ரகசிய அறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறைக்குள் விலை
மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் உள்ளதாக உறுதிப்பட சொல்லப்படுகிறது. அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கருதப்படுகிறது. உலகிலேயே மிக பணக்கார கோவிலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

2. திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோயில்
ஆந்திரப் பிரதேசத்தின்
Read 23 tweets
Jun 9
#நாலாயிரம்_பிள்ளையார்_கோயில் சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையார் கோவில் சீர்காழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் உள்ளது. இக்கோவில் மூல மூர்த்தி இராமாயண காலத்தே சுயம்புவாக உருவானவர். கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் Image
பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரம்ம தேவனிடம் பெற அவரை நோக்கிக் கடுமையான தவத்தை ஒரு குகைக்குள் இருந்து செய்து வந்தான். நெடும் காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில் கடும்
தவத்தின் பலனாக வாலிக்குப் பிரம்மனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன் வரமளித்து மறைந்தார். குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான்.
Read 11 tweets
Jun 8
#மகாபெரியவா காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக் குப்பம் மடத்தில், 1930ல் தங்கி இருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒரு நாள் இரவில் யானையைக் கட்டி
இருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டு இருப்பதாக
தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சி செய்தார். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(