கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பைரவர் தீர்த்து வைப்பார்.
பைரவரை ஒவ்வொரு இராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை உள்ளது.
இவ்வாறாக இராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இராசியினரும், ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது.
மேஷ இராசிக்காரர்கள் பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப்பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும்.
ரிஷப இராசிக்காரர்கள் கழுத்து பகுதியையும்,
மிதுன இராசிக்காரர்கள் தோல் பகுதியையும்,
கடக இராசிக்காரர்கள் மார்பையும்,
சிம்ம இராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும்,
கன்னி இராசிக்காரர்கள் குறியையும்,
துலாம் இராசிக்காரர்கள் தொடை பகுதியையும்,
விருச்சிக இராசிக்காரர்கள் முட்டியையும்,
தனுசு இராசிக்காரர்கள் மற்றும் மகர இராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியையும்,
கும்ப இராசிக்காரர்கள் கணுக்காலையும்,
மீன இராசிக்காரர்கள் பாதம் பார்த்து வழிபட தோஷங்கள் நீங்கும்.
வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கால பைரவருக்கு அஷ்டமி திதிகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 முறை வலம் வந்து, செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, பைரவர் அஷ்டகம் வாசித்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால், இறுதி வழிபாடு பைரவருக்கு.
அஷ்டமி தினத்தன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் சகலவிதமான வளங்களையும் பெறுவர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அகத்தியர் சித்தர் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.
அகத்தியர் - ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!
காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா.
அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது,
அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால்,
அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால்,
இரணியன் தன் மடியில் கிடத்தி,
வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை,
`#தட்சிண_அஹோபிலம்’
என்று போற்றுவர்.
வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீ நரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன்,
அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்
காட்சி தருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு,
சிறப்புத் திருமஞ்சனத்தோடு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீ நரசிம்மரைச் சாந்தப்படுத்த, பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
புலவர் காளமேகத்திடம் விதண்டாவாதம் செய்யும் வகையில் ஒரு புலவர் கேட்டார்.
" ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே.
உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”
"முருகன் அருளால் முடியும்.
வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?"
என்றார் காளமேகம்.
"வேலிலும் தொடங்க வேண்டாம்.
மயிலிலும் தொடங்க வேண்டாம்.
செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்"
என்று விளையாட்டாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை?
இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?
அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.