#பகுத்தல் - #பாதீடு!

பற்றாக்குறைப் பொருளியல் நிலை காரணமாக யாரும் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில்,

'தொல்குடிச் சமூகங்கள்' #பகுத்தல் மரபை ஒரு விதியாகவே (The Law of Division) பின்பற்றினர்.

இம்மரபு #உரிமை, #உழைப்பு, #துய்த்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் கடைபிடிக்கப்பட்டது.
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.

போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
#பாதீடு என்றால் #பங்கிடுகை என்பது பொருள். செல்வத்தைக் கொள்ளையிடல், உலகெங்கும் வீரநிலைக் காலத்தில் காணப்படும் போர் நிகழ்வாகும்.

கொள்ளையிடப்பட்ட செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளுதலும் (#பாதீடு), கொடையாக வழங்குதலும் உண்டு என்பதை சங்க இலக்கிய செய்யுட்கள் நமக்கு எடுத்துக்காட்டும்.
கிட்டும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கொள்ளைப் போர்களின் நியதி.

இப்பாதீடு குருதித் தொடர்புடையோர் இடம்பெறும் சபையில் நிகழும்.

கொள்ளைப் பொருளைப் பாதீடு செய்யும் பணியைக்குழுத் தலைவன் (அ) முதியவர் ஏற்பர்.

#தாயம் (கழங்கு) உருட்டியோ #குடவோலை (கரையோலை) எடுத்தோ ஒவ்வொருவருக்கும்...
உரிய பங்கு தீர்மானிக்கப்படும்.

சங்கப்பாக்களில் தலைவனின் முன்றிலில், தலைவியின் மேற்பாற்வையில் #பகுத்தல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

பாதீடில் ஏற்றத்தாழ்வைத் தவிர்ப்பதற்காக #சீட்டுக்குலுக்கல் கடைபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
தொல்குடிச் சமூகங்களில், #பகுத்தல், #நியதி குலுக்குச்சீட்டு (#குடவோலை) எடுத்தல், தாயம் உருட்டுதல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டதால்,

தனக்கு நல்ல பங்குகிட்டவேண்டி வடபுலத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய பங்கைத் தீர்மானிக்கும் (#பாகம், #அம்சம்) தெய்வங்களை வழிபட்டனர்.
இதுவே காலப்போக்கில் தனக்குரிய பங்கு தலைவிதியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதும் மரபாக மாற்றமுற்றது என அறியலாம்.

#பால் எனும் தமிழ்ச்சொல் குறித்த ஆய்வில் கைலாசபதியும் (1986) இக்கருத்தையே எதிரொலிக்கிறார்.

‘அணங்கறி கழங்கு' எனும் அடிகள், பகுத்தலில் கழங்கு பயன்படுத்தப்பட்டதால்...
அது தெய்வத்தன்மை பெற்றதாக இச்செய்தி அறிவிக்கின்றது.

கால்நடைகள், #ஆயர் சமூகத்தில் கூட்டுரிமைக்கு உரியவைகளாதலால் இம்மக்களுக்கு #பொதுவர் என்ற பெயரும் உண்டு.

சமூகத்தின் மையமாகச் செயல்பட்ட ஊரின் மன்றத்தின் காவல் அரணில் கூட்டுரிமைக்குரிய கால்நடைகள் பாதுகாக்கப்பட்டன.
எனவே, கால்நடைகளுக்கு #மந்தை என்ற பெயரும் உண்டு. இதன் வேர்ச்சொல் மன்றத்திலிருந்து பிறந்தது.

#மாடு என்றாலே #செல்வம் என்று பொருள். #செல்வம் என்றாலே #பகிர்ந்து கொள்ளப்படுவது எனும் மரபு தொல்குடிச் சமூகங்களில் கடைபிடிக்கப்பட்டதாலேயே...
கால்நடைகளும் சமூகத்திற்கு பொதுவானதாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆநிரை கவர்தலில் கொள்ளையிடப்பட்ட கால்நடைகளும், பொதுவாக #பாதீடு செய்யப்பட்டது.

புலவர்களும் தாம் பெற்ற பரிசிலை தம் சுற்றத்தாரோடு பகிர்ந்து கொண்டனர் என்பதை மோசிகீரனாரின் பாடல் நமக்கு விளக்குகிறது.
#சீறூர் மன்னன் பயிர்ச்சாகுபடியில் பெற்ற 'வரகு தானியம்' முழுமையையும் சுற்றத்திற்கும்,

இரவலர்க்கும் பகிர்ந்தளித்துவிட்ட நிலையில் மேலும், இரவலர்க்கு அளித்தல் வேண்டி குறியெதிர்ப்பை முறையில் 'வரகு கடன்' பெற்ற செய்தியும் உண்டு.
கொள்ளைப் பொருள், உணவு தானியங்கள் மட்டுமல்லாது கடும் வறட்சி நிலையில், நீரையும் முறை முறையாக பகுத்துண்ணும் நிலைக்கு #எயினர் தள்ளப்பட்டனர்.

உழவரும், பரதவரும் உற்பத்தியை இரவலர்க்குப் பகிர்ந்தளித்தனர், எனும் செய்தி #பகுத்தல் மரபைக் குறிப்பதாகும்.
பாரியின் பறம்புமலையில் வரகு, திணை, அவரை பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிகழ்வைக்கூறும் பாடற்செய்தியைக் கூட்டுழைப்பின் போது நிகழ்ந்த கூட்டுண்ணலாகக் கருதலாம்.

இப்பாடலில் நிலத்தில் புதைக்கப்பட்ட முற்றிய தேறல் புல்வேயக் குரம்பைக் குடிதோறும் பகிர்ந்து உண்டதாக கூறப்படுகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் #கூட்டுண்ணல் மரபு அரிதாகவே காணப்படுகின்றது.

ஏனல் உழவர் மென்றினை நுவணை முறை முறையாகப் பகுத்துண்டனர்.

#எயினர் கொள்ளைப் பொருளைத் தாம் வசித்த ‘குறும்பில் கோள்முறைப் பகுத்தனர்'.

ஆகோளில் கவர்ந்து கொணரப்பட்ட கால்நடைகள் வீரர்களிடையே #பாதீடு செய்யப்பட்டது.
மீன் வேட்டையில் கிடைத்த மீன்களைச் சிறுகுடிப்பாக்கத்தில் #பரதவர் பகிர்ந்து கொண்டனர்.

பரதவரால் சேகரிக்கப்பட்ட முத்துக்களும் #பாதீடு செய்யப்பட்டன.

#எயினர் குடியிருப்பில் வீட்டு முன்றிலில் உடும்பின் தசை கூறு செய்யப்பட்டது.

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jul 19
மதிப்புறு பண்டம்...!

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் அழகு மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன.

அதிலும் கூட கொங்கு நாட்டு அகழாய்வில் மிகுதியும் கிடைக்கின்றன.

#கொடுமணல் அகழாய்வில் ஓர் ஈமச்சின்னத்தில் 2500 மணிகள் வைத்திருந்தனர். 900 மணிகள், 800 மணிகள், 750 மணிகள், 600 மணிகள் Image
என எண்ணிக்கை மிகுந்த மணிகள் #கொடுமணல் ஈமச்சின்னங்களில் வைக்கப்பெற்றிருந்தன.

#கொடுமணல் வாழ்விடத்தில் இந்த அளவுக்கு எண்ணிக்கையில் மணிகள் கிடைக்கவில்லை.

அதனால் ஈமச்சின்னப் பொருள்கள் 'ஈகை அரிய நன்கலம்' (Prestigious Goods) என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
இதுபற்றி ஷெரீன் ரத்னாகர் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

மெசபடோமியாவில் இறந்தபின் புதைக்கும் போது, இதுபோன்ற மதிப்புமிகு பண்டங்களை வைத்துப் புதைத்தனர்.

தங்கள் கைவசம் அந்தப் பொருட்கள் இல்லையானாலும், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பறித்துக் கொண்டுவந்து ஈமக்குழியில் வைத்துப்புதைப்பர்.
Read 17 tweets
Jul 18
#குலக்குறி வழிபாடு...!

பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குலத்திற்கும், ஒரு குறியீடு இருந்தது.

அக்குறியீடு அக்குலத்தின் அடையாளமாகவும், பெருமைக்காகவும் மதிப்புடன் அவ்வின மக்களால் போற்றப்பட்டு வந்தது.
ஆவி வழிபாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நிலையாக ஒரு குறிப்பிட்ட குலத்தின் வீரன் இறந்துபட்டால்,

அவனது நினைவுச்சின்னத்தில் அவன் குலத்தின் குறியீடான விலங்குகளையோ, மரங்களையோ சேர்த்து வைத்து வழிபடுவது பண்டு வழக்காயிருந்தது.

உடலில் இருந்து ஆவி எளிதில் பிரிந்து விடாது.
அதை வெளியேற்றுவதற்கு உடலைத் தீயிட்டு அழிக்கின்றனர். தீயிட்ட பின்னரும் எலும்புகளில் உயிர் தங்கியிருப்பதாக நினைக்கிறார்கள்.

அதனால் எலும்புகளையும் உடைத்துவிடுகிறார்கள். இறுதியாக ஆவி பிரிந்து விடுகின்றது. அது வானத்தில் மேகங்களுக்கும் மேல் சென்று நின்று விடுகிறது.
Read 22 tweets
Jul 17
பெருவழிகளில் #சமணம்...!

தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமான சான்றுகளாக விளங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட 'சமணர் படுக்கைகள்' பெருவழிகளிலேயே அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

பண்டைய வணிகர்கள் பண்டு பெரும்பாலும் சமண சமயத்தைப் பின்பற்றியுள்ளனர். Image
சமண முனிவர்களும் வணிகர்களை நெறிப்படுத்தியுள்ளனர்.

அதன் நன்றி நிமித்தமாக வணிகர்கள் தாங்கள் வணிகத்திற்காக செல்லும் நகரங்களில் அமைந்த மலைப்பகுதி குகைத்தளங்களில்,

சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டிக் கொடுத்து அச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளாக்கியுள்ளனர். Image
'வெள்அறை நிகமதோர்' #மாங்குளம் சமணக்குகைக் கல்வெட்டில், #நிகமம் என்பது வணிகக் குழுவினைக் குறிக்கும் சொல்லாகும்.

சிலப்பதிகாரத்தில் காவிரிக்கரையோரமே ஒரு பெருவழி சென்று, #உறையூர் அடைந்து, சோழநாட்டு எல்லையில் மூன்று பிரிவாகப் பிரிந்து, #கொடும்பாளுர் வழியாக #மதுரை அடைந்துள்ளது.
Read 12 tweets
Jul 12
பெருவழிகள் உருவாக்கம்...!

பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.

#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.

இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.

இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.

மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,

தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.
Read 20 tweets
Jul 12
#நெகமம், #நிகமம், #நியமம்...!

சங்க இலக்கியத்தில் நியமம் என்ற சொல் பயின்று வரக்காணலாம். நியமம், #சேரர் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டில் இருந்துள்ளது.

முல்லை நிலம் சார்ந்த வன்புலத்தில் நியமம் இருந்தமை #பதிற்றுப்பத்து கூறும். அந்த நியமத்தில் கொடி நுடங்கும் படைகள் நிறைந்திருந்தன.
கள் நொடை தீர்ப்பதற்கு #வேட்டுவர்கள் யானைத் தந்தத்தைக் கொடுத்தனர்bஎன்றும் கூறப்பெறுகின்றது.

மேலும் கத்தும் கடல் ஓசை கேட்கும் செல்லூர்க்குணாஅது கோசர் நியமம் இருந்தமை பற்றி அகப்பாடல் ஒன்று கூறும்.

வடமொழி நிகமம் என்ற பெயரே தமிழில் நியமம் என்று திரிந்தது.
வடமொழி நிகம என்பது அம்மொழி நெகம என்பதின் திரிபு என்று கொள்வர்.

நெகம என்பதை நே + காம என்று பிரித்துப் பொருள் கொண்டால் கிராமமல்லாதது என்று பொருள் கூறலாம்.

#பதிற்றுப்பத்து நியமம் #பொள்ளாச்சி அருகில் உள்ள #நெகமம் என்று கருதப்பெறுகின்றது.
Read 6 tweets
Jul 11
#கிழார்....!

பண்டைத் தமிழகத்தில் குடித் தலைவர்களாக விளங்கிய கிழார்களின் ஆட்சியே முதலில் ஏற்பட்டது.

அக்கிழார்கள் ஊர்க்குடிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற வயது முதிர்ந்த தலைவர்களாவர்.

அவர்கள் இரத்த உறவின் அடிப்படையில் எழுச்சிபெற்ற குடித்தலைவர்கள்.
குடியாட்சித் தலைவர்கள் என்றும் கொள்ளலாம்.

அத்தலைவர்கள் வேளிரும், வேந்தரும் அரசியலில் உருவாவதற்கு முன், அரசியல் அதிகாரம் பெற்றிருந்தார்கள்.

வேளிர்களின் வீறார்ந்த பூசலினால் கிழார் ஆட்சி, #வேளிர் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பெற்றது.
கிழாரின் பழைய மக்களாட்சி தன்மை மாறி, வேளிர்களுக்குத் தங்கள் குடியிலிருந்து #திறை அல்லது #காணிக்கை வாங்கித் தரும் பேராளர்களாக மாறினர்.

வேளிரும், வேந்தரும் குடிகளிடமிருந்து #வரி வாங்குவதில் கடுமையாக இருந்தனர்.

#தொல்குடி வாழ்க்கையில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு #தலைவன்...
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(