SSR🚩 Profile picture
Aug 7 21 tweets 8 min read
தஞ்சாவூர் என்றால் உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வரும்?

தஞ்சை பெரியகோயில்,
திருமுறைகளை மீட்ட இராஜராஜன்,
தலையாட்டிப் பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியம்.
இதானே ?

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தஞ்சாவூர் நாவில் நீர் ஊறவைக்கும் உணவுகளுக்கும் பெயர் போனது என்பது தெரியுமா?

1/20
#SSRThreads
உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.

ஒருமுறை தஞ்சை மாவட்ட உணவுகளைச் சுவைப்பவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்னை போல,

காவேரி பாய்ந்து வளம் சோ்த்த விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சும்மாவா சொன்னாங்க

2/20
வயல்வெளிகளும் தண்ணீரின் சுவையும் அப்பப்பா,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்,

தஞ்சாவூரில் ஓங்கி வளர்ந்த உணவு வரலாற்றில் இன்று இடம் பிடித்திருப்பது லஸ்ஸி.

நல்ல ருசியான தயிர்தான் லஸ்ஸிக்கு மிகமுக்கியமான அடிப்படை பொருள். கறந்த பாலை வாங்கி, ஒன்றுக்கு பாதியாக சுண்டக்காய்ச்சி,

3/20
உரைக்கு ஊற்றி, தயிராக்கி லஸ்ஸி தயாரிக்கின்றனர்.

தஞ்சாவூரில் 40 வருட பாரம்பரியம் கொண்ட அன்பு நிலையம் லஸ்ஸி கடையினர்.

மேலாக, பாலாடை மிதக்க மிதக்க, ஜில்லென்று குடிக்கும் லஸ்ஸி வெயிலுக்கு அமிர்தம்.

அடுத்து,

தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரியமான அடை ‘தவலை அடை’.

4/20
பருப்பு அடையில் எல்லா பருப்பும் சேர்க்கப்படும்.

ஆனால், தஞ்சாவூர் தவலை அடைக்கு பிரதானமானது துவரம் பருப்பு. பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஊறவைத்து அரைத்து அதில் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து, தேங்காய்த்துருவல் தாளித்து கொட்டி இந்த அடை செய்கின்றனர்.

5/20
சாதாரண அடை போல இதை தோசைக்கல்லில் வார்ப்பதில்லை.

குழிவான பாத்திரமே இதற்கு சிறந்தது. கிட்டதட்ட ஒரு கேக் வடிவில் பொன்னிறமாக வார்க்கப்படும் இந்த அடைக்கு தேங்காய்துவையல் சரியான காம்பினேஷன்.

தஞ்சாவூரின் அடுத்த பாரம்பரியம், இனிப்புகளில் உள்ளடங்கும் அசோகா எனப்படும் அல்வா.

6/20
தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எல்லா விசேஷங்களிலும் இந்த அசோகா அல்வா முக்கிய இடம் பிடித்திருக்கும்.

பாசிப்பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு சேர்த்த வித்தியாசமான அல்வா இது.

திருவையாற்றில் ஆண்டவர் ஹல்வா கடையில் கிடைக்கும் அசோகா அல்வா உலக பேமஸ்.

7/20
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அதன் டிகிரி காபிக்கு பெயர் போனது.

பித்தளை அல்லது தாமிரத்தால் ஆன டம்ளர் - டபரா செட்களில் நுரை பறக்க பறக்க சூடாகவும், சுவையாகும் மனதை நிரப்புகிறது டிகிரி காபி.

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலய பின்புறம்,

8/20
அமைந்திருந்த ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ டிகிரி காபிக்கு வெகு பிரசித்தம்.

பசும்பாலை நுரை ததும்பக் கறந்து, துளிக்கூட தண்ணீர் கலக்காமல், காய்ச்சி எடுத்து, ப்ரெஷாக வறுத்து அரைக்கப்பட்ட தரம் குறையாத காபி தூளில் ஒரே ஒரு முறை டிகாஷன் இறக்கு மணக்க மணக்க டிகிரி காபி கிடைக்கும்.

9/20
உண்மையான டிகிரி காபியின் தரமே ஏ.ஒன் காபிக்கொட்டைகளில்தான் இருக்கின்றன,

மேலும், ஒரே ஒருமுறைதான் காபிதூளில் டிகாஷன் இறக்க வேண்டும்.

அதிக நேரம் சூடாக இருக்கவே பித்தளை, தாமிர டபரா செட்டுகள் உபயோகிக்கப்பட்டன.

இயற்கை எழில் கொஞ்சும் நீடாமங்கலம் கிராமம்,

9/20
பால்திரட்டு என்னும் சுவையான இனிப்புக்கு புகழ்பெற்றது.

நீடாமங்கலம் மேல ராஜவீதியில் மட்டுமே தரமானதாக கிடைக்கிறது இந்த பால்திரட்டு.

பால் சுண்டும் மணம் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பால்திரட்டில் நல்ல பசும்பால் ஆடையின் ருசியும் நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.

10/20
இன்றும் விறகடுப்பில்தான் இந்த பால்திரட்டு செய்யப்படுகிறது.

கும்பகோணத்தில் புகழ்பெற்ற மற்றொன்று ‘கும்பகோணம் கடப்பா’. தஞ்சை மண்டலத் திருமணங்களில் கடப்பாவிற்கு பிரிக்க முடியாத ஒரு பிணைப்பு உண்டு. வெண்மையாக குழம்பும் இன்றி, குருமாவும் இன்றி ஒரு கெட்டியான கூட்டாக செய்யப்படும்,

11/20
இந்த கடப்பாவில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு ஆகியவை முக்கியமானவை. தேங்காயுடன், பொட்டுக்கடலை அரைத்துவிடுவது சூடான இட்லியுடன் செம காம்பினேஷன்.

தஞ்சாவூரில் மற்றொரு வெயிலைத் தணிக்கும் ஸ்பெஷல் உணவு சர்பத் வகைகள். இதில் மிக முக்கியமான சர்பத் ‘நன்னாரி நார்த்தங்காய் சர்பத்’.

12/20
தஞ்சாவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும் நார்த்தங்காயை வைத்து, எலுமிச்சை சர்பத் போலவே நாவில் நடனமாடும் சுவை கொண்ட ருசியான ஜில்ஜில் சர்பத் இது.

ஐஸ்ஸுடன், பாதம்பிசினும் கலக்கப்படுவது இந்த சர்பத்தின் சிறப்பு.

13/20
இதிலேயே குளிர்ந்த பாலும் கலந்து கொடுத்தால் அது பால் சர்பத். குளிரக் குளிர இனிப்பும், புளிப்புமாக எலுமிச்சம்பழ சர்பத்துக்கு நல்ல மாற்று இது.

தஞ்சாவூரில் கிடைக்கும் மற்றொரு இனிப்பான உணவு ‘சுருள் ஆப்பம்’. தோசை மாவில், தேங்காய், சர்க்கரைத் தூவி சுருட்டி தரப்படும் இந்த ஆப்பம்,

14/20
புதுமணத்தம்பதிகளுக்கு தஞ்சாவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செய்து தரப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு.

மண் பானை சோறு, வாழை இலை, பாரம்பரிய அரிசி வகைகள், செக்கில் ஆட்டிய எண்ணெய், மணக்க மணக்க ருசியான உணவுகள்,

சிரித்த முகத்துடன் பரிமாறுதல் என்று தனித்துவமாக இருக்கிறது தஞ்சாவூர்,

15/20
செல்லம்மாள் மண்பானைச் சமையல் என்ற சைவ உணவகம்,

எல்லா வகையான உணவையும் மண் பானையில் தயாரிக்கின்றனர்.

அரிசி சாதம் தொடங்கி பொரியல்,கூட்டு வரை மண் சட்டி,மண் கலயம்,மண் தட்டு போன்றவற்றிலேயே பரிமாறுகின்றனர். சாம்பார்,பருப்பு உருண்டை,வாழைப்பூ உருண்டை என 8 வகைக்குழம்புகள் உள்ளன.

16/20
கொள்ளு, பருப்பு ரசம் என இரண்டு வகை ரசம், வெந்தயக் கீரை, புளிச்சக் கீரை என 5 வகை கீரைகள், 5 வகையான காய்கறி வறுவல்கள், வாழைப்பூ வடை, முடக்கத்தான் கீரை சூப், சாப்பிட்டு முடித்து செரிமானத்துக்கு பானகம் என நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.

17/20
சாதம் தொடங்கி ஊறுகாய் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடலாம். 200 ரூபாய்க்கு எல்லாவற்றையும் ருசி பார்க்கலாம்.

18/20
மாலை மயங்கினால் போதும்,

சுப்பையா மெஸ்ஸில் பூண்டு போடி தோசை, முடக்கத்தான் தோசை, காளான் தோசை,வாழைப்பூ வடை, இடியாப்பம் தேங்காய்ப்பால் எல்லாம் வேற ரகம்

பர்வீன்’ தியேட்டர் அருகே இருக்கிற அக்கா கடை கௌசா மற்றும் வாழைத்தண்டு சூப்,
பயங்கர பிரபலம்,

19/20
இப்போதைக்கு இவ்வளவு தான் இந்த திரேட் பார்ட்-II கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து எழுதுறேன்.

நன்றி 🙏
வணக்கம் 🙏🙏

20/20

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR🚩

SSR🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

Aug 5
என்னப்பா மகள் பிறந்திருக்காளா ?

ஆமான்னே, அதான் புது Fan வாங்கிட்டு போறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும் பிள்ளை தூங்க கஷ்டபடுவா,

என்னப்பா கோவிலுக்கு போறேம்னு பணம் கேட்டியே எதுக்கு ?

மகளுக்கு காது குத்தி மொட்டை போடத்தான்னே,

கையில காசு இல்ல அதான்,

1/6
#SSRThreads
#FBPost
என்னடா செருப்பு கடைல நிக்கிற ?

மகளை கான்வென்டுல சேர்த்தேன் அதான் புது ஷூ வாங்க வந்தேன்,

என்னடா பத்திரிக்கை ?

மகள் ஆளாயிட்டான்னே,

வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல வாடகை கம்மி நீ அவசியம் வந்திருங்கண்ணே.

1/5
என்ன செல்போன் கடை பக்கம் ?

பொண்ணு கூட படிக்கும் பிள்ளைகள் எல்லாம் செல் வச்சிருக்காம், ஆதான் அவளுக்கும் வாங்க வந்தேனே,

என்னடா மெடிக்கல் பக்கம் வந்திருக்க ?

மவளுக்கு வயித்த வலி, வீட்டுக்கு தூரமாம், வீட்ல போன் பண்ணி ஜூஸ், நாப்கினும் வாங்கிட்டு வர சொன்னா அதான் வந்தேன்.

1/4
Read 7 tweets
Nov 18, 2021
கொக்கரை:- (Thread)

நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.

பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.

கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.

1/1
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.

1/2
#நோக்கம்சிவமயம்
கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.

நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில்,

1/3
Read 10 tweets
Nov 15, 2021
தென் கைலாயம்:-

சிவபெருமானின் இருப்பிடமான கைலாயம் வடக்கே உள்ளது என நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால்,

தென் கைலாயம் எங்கு உள்ளது
என நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை,

தெரிந்துகொள்வோம் தொடர்ந்து படியுங்கள்.

#இராஜராஜசோழன்
#ஐப்பசி_சதயம்
#சதயவிழா Image
தஞ்சைப் பெரியகோவிலுக்கு தென் கைலாயம் என்று ஒரு பெயரும் உண்டு.

கைலையாக் காட்சிகளை  பெருவுடையார் கோவில் ஸ்ரீவிமானத்தில் சிற்பமாக எம்பெருமான் இராஜராஜசோழன் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார்.

இதை தட்சிணமேரு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. Image
தஞ்சை பெரியகோவில் 216 அடி உயர ஸ்ரீவிமானத்தில் கீழ்த்திசை சிகரத்தில் கைலாயக் காட்சி அமைந்துள்ளது.

உயர்ந்த மலைபோன்ற அமைப்பில் நான்கு பக்கமும் சற்று பிதுங்கியவாறு கைலாயம்.

கைலாயத்தின் நடுநாயகமாக உமையும்சிவனும். வலப்புறம் கணபதி இடப்புறம் வள்ளி தெய்வானை சகிதமாய் முருகன். Image
Read 7 tweets
Nov 12, 2021
தஞ்சை பெரிய கோவில் (Thread)

பெரியகோவிலை கட்ட இராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது.

மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார்.

இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு.

#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
1/1
அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.

அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார்.

1/2
அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சை பெரியகோவில்.

வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது.

கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார்.

1/3
Read 19 tweets
Nov 11, 2021
பெண்களும் நிலஉரிமையும் இராஜராஜ சோழனும்:- (Thread)

சொத்துரிமையில் இருந்து பெண்களை விலக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில் சோழர் ஆட்சிக்குப் பின்னர் நேர்ந்த சீரழிவுகளில் ஒன்று என்பது ஆச்சரியம் தரும் உண்மை.

சோழ அரசில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது,

#இராஜேந்திரசோழன்

1/1
அரசிகள் சொத்து வைத்திருந்தனர்.

இளவரசிகள் சொத்து வைத்திருந்தனர்.

சாமானிய பெண்களும் சொத்து வைத்திருந்தனர்.

தனது சொத்துக்களைப் பாதுகாக்க அடியாட்களை நியமித்த பெண்களும் சோழர்கள் ஆட்சியிலிருந்தனர்.

இது தான் வரலாறு பென்னுரிமை என்பதெல்லாம் சோழர்களால் துவங்கபட்ட ஒன்று.

1/2
தஞ்சைப் பெரிய கோவில் தமிழ்க் கல்வெட்டுகளின் முதல் வரி,

‘நாம் கொடுத்தனவும்,
நம் அக்கன் கொடுத்தனவும்,
நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க....’
என்று தொடங்குகின்றது.

இதில் அக்கன் என்றால் அக்கா, பெண்டுகள் என்றால் மனைவிகள்,

1/3
Read 15 tweets
Nov 10, 2021
சிவச் சக்கரம்:-

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம்மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் மெய்சிவச்சக்கரம் தானே.

#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்💪

திருநீறு அபிஷேக தரிசனத்துடன் சொந்தங்களுக்கு சிவ காலை வணக்கம் 🙏
அட்ட திக்குப் பாலகர்கள்:
(1). நிருதி (2). வருணன் (3). வாயு (4). குபேரன் (5). ஈசானன் (6) இந்திரன் (7) அக்கினி (8) இயமன்

சட்டர் :
(1) அசிதாங்க பைரவர் (2) குரு பைரவர் (3). சண்ட பைரவர் (4). குரோத பைரவர் (5). உன்மத்த பைரவர் (6). கபால பைரவர் (7). பீடண பைரவர் (8). சம்மார பைரவர்,
சதிரர் :
(1). நந்தி (2). மகா காளர் (3). பிருங்கி (4). விநாயகர் (5). விருஷபர் (6). ஸ்கந்தர் (7). தேவி (8). சண்டிகேஸ்வரர்

இவர்களை வெளிச் சுற்று வட்டங்களில் அமைக்க வேண்டும். உள் சுற்றுப் பதினாறு கட்டங்களில் உயிர் எழுத்துக்களை ‘அ’ முதல் ‘அ :’ வரையில் அமைக்க வேண்டும்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(