Tomorrow is not only our #75thYearOfIndependence also #MahaSangataharaChathurthi
15.08.22 #மஹா_சங்கடஹர_சதுர்த்தி
தீராத சங்கடங்களும் சீக்கிரமே தீர இந்த விசேஷ சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு நம் கையால் அருகம் புல்லை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும். மாதம் தோறும் வரும் சங்கடஹர Image
சதுர்த்தி தினத்தில் விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் கூட நாளை வருகிற மஹா சங்கட சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 11 சங்கட சதுர்த்திக்கும் விநாயகரை வழிபட்ட பலனை நம்மால் பெற முடியும். விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் இந்த Image
ஆவணி மாத சங்கட ஹர சதுர்த்தியை நாளை, யாரும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றே வீட்டை, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நாளை காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்துவிட்டு, பூஜை அறையில் விநாயகரை நினைத்து ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து நம் விரதத்தைத் Image
தொடங்க வேண்டும். அவரவர் உடல் சௌகரியத்தைப் பொறுத்து விரதம் இருந்து கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டுபவர்கள், பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். விளக்கேற்றி நம் பிரார்த்தனையை சங்கல்பம் செய்து வேண்டி கொள்ள வேண்டும். பின்பு காலையிலேயே விநாயகர் Image
கோவிலுக்கு சென்று விநாயகருக்கு நம் கையால் அருகம்புல் மாலையை வாங்கி கொடுக்க வேண்டும். முடிந்தால் பசுமையாக விளைந்திருக்கும் அருகம்புல்லை நம் கையாலேயே பறித்து, அதை மாலையாகத் தொடுத்து விநாயகருக்கு கொடுப்பது மிக மிக நல்லது. விநாயகருக்கு 11 தோப்புக்கரணம் போட்டு, விநாயகரை 11 முறை வலம் Image
வரவேண்டும். நாளைய தினம் முழுவதும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விநாயகர் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளை மாலை 6 மணி அளவில் வீட்டில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை தொடங்க வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, முடிந்தால் விநாயகருக்கு பிடித்த
கொழுக்கட்டையை 11 என்ற கணக்கில் செய்து நிவேதனமாக வைத்து, விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல்லினை சூட்டி, விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள் ஒரு டம்ளர் பசும்பாலில் இனிப்பு சேர்த்தும் நிவேதனம் செய்யலாம். பூஜை அறையிலேயே அமர்ந்து
‘ஓம் கம் கணபதயே நமஹ’
என்ற
மந்திரத்தை 108 முறையும், விநாயகர் அகவல், கணேஷ பஞ்சரத்னம் ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லி இறுதியாக சங்கடங்கள் தீர வேண்டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, பிரார்த்தனையை முடித்து, இறைவனுக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வது வழக்கம். தொடர்ந்து 12
சங்கடஹர சதுர்த்தி மேற்கொள்ள இருப்பவர்களும் இந்நாளில் தான் முதல் விரதத்தை தொடங்குவார்கள். சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 17
#FAQ #ஆன்மீக_சந்தேகங்கள்
1 - வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் Image
வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை.

3 - கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே, உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், Image
கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி
Read 62 tweets
Aug 16
#RakeshJhunjhunwala It is rare to find a Nationalist, a Philanthropist and a very successful businessman all rolled into one. Mr.Jhunjhunwala was one such rare person, who passed away on the eve of our Independence Day at the age of 62. He was often referred to as India’s own
Warren Buffet. He was a Chartered accountant. He was an investor and a trader in the Stock Market. According to Forbes' Rich List, Jhunjhunwala is the 36th richest man in the country. In 1985 he invested Rs 5,000 as capital. By September 2018, that capital was at Rs 11,000 crore. Image
He was born on July 5, 1960. He grew up in Mumbai, where his father was posted as an Income Tax Officer. After graduating from Sydenham College in 1985, he enrolled at the Institute of Chartered Accountant to become a CA. He married Rekha Jhunjunwala, also a stock market investor Image
Read 16 tweets
Aug 15
#நற்சிந்தனை
ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்.
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல, தன் நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம். சில விநாடிகள் Image
யோசித்தவர், எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா, இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கி விட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி,
ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோ தானோவென்று வீடு கட்டினார்.
வேலையிலிருந்தே ஓய்வுபெறப் போகிறோம். இனி இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது என்கிற அலட்சிய மனப்பாங்கோடு அவர் வேலை செய்தார். முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.
வாசலிலேயே
Read 8 tweets
Aug 13
#ஆவணிஅவிட்டம் உபாகர்மா என்றால் என்ன என்று பலருக்கும் சரியாக தெரிவதில்லை. கடமையாக, அதன் உட்பொருள் அறியாமல் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள்.

அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் 8 வயதில் உபநயனம் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் 5 வயதில் கூட
பூணூல் போட்டு விடலாம். 16 வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உபநயனம் என்பதில் இரண்டு செயல்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்
சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையின்
ஆன்மிக உயர்நிலை
அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்திரி மந்திரத்தை ஏற்றுக் கொள்வதே முக்கிய
Read 19 tweets
Aug 13
#நற்சிந்தனை
ஆசிரியர்கள் மூன்று வகையினர்
(1) குறை கண்டுபிடிப்பவர்கள் (complain)
(2) தெளிவுபடுத்துபவர் (Explain)
(3) ஊக்குவிப்பவர் (Inspire)

குறை கண்டுபிடிப்போர் அனைத்தையும் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவர். அனைவரையும் குறை சொல்வர். மாணவர்களை பலவீனமாக்குவார்கள். அவர்கள் தமக்கு
மாத்திரமன்றி முழு பாடசாலைச் சமூகத்துக்கும் இழுக்கைக் கொண்டு வருகின்றனர்.

தெளிவு படுத்துபவர் அவர்கள் அறிந்த அனைத்து விஷயங்களையும் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு விளக்குவர். தகவல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் வெற்றியடைகின்றனர். இந்த ஆசிரியர்களிடையே நேர்மனப்பாங்கைக் கொண்டோரும்
எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் அடங்குகின்றனர்.
கற்பித்தலில் எவ்வளவுதான் வெற்றிபெற்றாலும் தவறானதை கற்பிப்பவர்கள் ஆபத்தானவர்களே.

ஊக்குவிப்போர் உணர்வுபூர்வமாக இதயத்திலிருந்து இதயத்துக்கு பேசக்கூடியவர்கள். மாணவர்களோடு திருப்தியாக மகிழ்ச்சியோடு கடமையாற்றுகின்றனர். மாணவர்கள் செல்ல
Read 4 tweets
Aug 13
#MahaPeriyava
A poor old lady came and prostrated Maha Periyava. She said that she had shifted her residence to Chennai and was making a living by selling her home-made, sun-dried edibles such as appalam and vadakam. The Karunamoorti blessed her immediately with two saris, a
woolen blanket and the travel fare for her return trip to Chennai. Patti received them with great happiness and asked, "It would be good if I can get a madisanji?" (a bag made of reed or wool to keep the clothes in ceremonial purity).
The Dhayalu ordered the assistant to search
and bring a madisanji. When he brought the bag, the Gurunathar gave it to Patti. The Patti dragged on her words, “Perhaps a rudraksha mala from the hands of Periyavaa"
With a smile, the Krupalu ordered the assistant to bring a rudraksha mala. When it came, Sri PeriyavaL made the
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(