#ஸ்ரீபோதேந்திர_ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதி ஆவார். #ராமநாம_மகிமையை விளக்கும் நூல்களை உலகுக்குத் தந்தவர் இவர். அவர் ஒரு முறை தீர்த்த யாத்திரை புறப்பட்டார். காசியிலிருந்து திரும்பும் வழியில் ஜகந்நாதர் கோயில் உள்ள புரியை அடைந்தபோது இருட்டிவிட்டது. ஸ்வாமிகள்,
தம் குருவான கவிஞர் லட்சுமிதரரின் வீட்டுக்குச் சென்றார். இரவில் எவரையும் தொந்தரவு செய்ய விரும்பாத ஸ்ரீபோதேந்திரர், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார். அப்போது அந்தணர் ஒருவர் பதற்றமாக வந்து லட்சுமிதரரது வீட்டுக் கதவைத் தட்டினார். லட்சுமிதரரின் மகன் லட்சுமிகாந்தன் கதவைத்
திறந்து, அந்த அந்தணரை உள்ளே அழைத்து பாய் விரித்து அமரச் செய்தார். "இரவில் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். எனக்கு ஒரு பிரச்னை" என்ற அந்தணர் தொடர்ந்து, "பல மாதங்களுக்கு முன் என் மனைவியுடன் காசி யாத்திரை போனேன். காசிக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் விடுதி ஒன்றில் தங்கினோம். காலையில்
எழுந்து பார்த்தால் மனைவியைக் காணவில்லை. அவள் இல்லாமலேயே காசி யாத்திரையை முடித்துக் கொண்டு, அதே விடுதியில் வந்து தங்கினேன். அவள் நினைவு என்னை வாட்டி எடுத்தது. ஒரு நாள் நதியில் குளிக்கும்போது ‘ஸ்வாமி’ என்று என் மனைவியின் குரல். நிமிர்ந்து பார்த்தால், பயங்கரத் தோற்றத்துடன் ஒரு கரிய
உருவம். அந்த உருவம், ‘ஸ்வாமி! விடுதியில் சில கயவர்கள் என்னைக் கடத்திச் சென்று நாசம் செய்து விட்டனர். உண்ணாமல், உறங்காமல் உடல் நலம் கெட்டு இந்த உருவில் வாழ்ந்து வருகிறேன். இன்று தங்களைக் காணும் பாக்கியம் பெற்றேன். என்னை அழைத்துச் செல்லுங்கள். இனி, தங்கள் அருகிலேயே இருந்து தாங்கள்
இடும் பணிகளை செய்ய ஆசைப்படுகிறேன் என்றாள். அவள் மீது தவறு இல்லை என்று அழைத்து வந்து விட்டேன். இதற்குப் பரிகாரம் சொல்லுங்கள்" என்றார். லட்சுமிகாந்தன், "அந்தணரே ராமா என்று மூன்று முறை தங்கள் மனைவியைச் சொல்லச் சொல்லுங்கள். சரியாகிவிடும்" என்றார். லட்சுமிகாந்தன் சொன்னதைக் கேட்டு
அறைக்குள் இருந்த அவர் தாயார், ராம நாமத்தை பக்தியுடன் ஒரு முறை சொன்னாலே குறை நீங்கிவிடும் என்று உன் தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீ ஏன் மூன்று முறை கூறச் சொல்கிறாய் என்றார். இந்த உரையாடலைச் செவிமடுத்தவாறே ஸ்ரீபோதேந்திரர் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவரை அடையாளம் கண்டு
கொண்ட லட்சுமிகாந்தன் அவர் காலில் விழுந்து வணங்கினார். ஸ்வாமிகள் லட்சுமிகாந்தனிடம், அந்தணருக்குத் தாங்கள் கூறிய பரிகாரத்துக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்று கேட்டார். உடனே லட்சுமிகாந்தன் தன் தகப்பனாரால் எழுதப்பட்ட, #நாமகௌமுதி என்ற நூலை ஸ்வாமிகளிடம் தந்தார். ஸ்வாமிகள் அதைப் படித்துப்
பரவசம் அடைந்தார். "இந்த நூலில் ராம நாம மகிமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட இந்தப் பரிகாரம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். இந்த அந்தணரின் மனைவி இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, ராம நாமத்தைக் கூறி பழைய உருவத்தை அடையட்டும்!" என்றார். அதன்படி மறு
நாள் காலையில் அந்தப் பெண் புஷ்கரணியில் மூழ்கி எழுந்து, #ராமா என்று ஒரு முறை கூறியதும், பழைய உருவம் பெற்றாள். அவள் முகத்தில்6 மங்களகரமான குங்குமப் பொட்டு பிரகாசித்தது. அனைவரும் இந்த அதிசயம் கண்டு மகிழ்ந்தனர். ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் அந்தப் பெண்ணின் கையால் பிட்சை பெற்று,
தம்பதியை ஆசீர்வதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறைக்கும் திருவிடைமருதூருக்கும் இடையே கோவிந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ போதேந்திரரின் பிருந்தாவனம் இருக்கிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 20
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத்.
#கோகுலாஷ்டமி #ஸ்பெஷல்
#HappyJanmashtami #HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும் Image
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
Read 7 tweets
Aug 20
#NahaPeriyava #Happyjanmashtami2022 #HappyKrishnaJanmashtami
Sri Maha Periyava’s Message on Gokulashtami.
“Bhagawan Sri Krishna, in the Gita, says that when the entire world is sleeping, Jnani is awake, to convey the meaning that the enlightened soul is always present in the Image
light of Superior knowledge, which is not visible to the non-enlightened, ignorant world. When it is absolutely dark everywhere and if a light appears, we welcome it. In a desert, if water and shade is found, it gives unlimited joy. The lightning that appears between two dark
clouds, is much brighter. Sri Krishna Paramathma, was born in the midnight of Krishna Paksha Ashtami, in the month of Avani during the Dakshinayana. What is one year for us, is one day for Devas. Our Utharayana is their day time. Dakshinayana is their night time. Therefore, the
Read 15 tweets
Aug 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது Image
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
Read 7 tweets
Aug 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் ஓர் அந்தணர், தீவிர விட்டல பக்தர் வசித்து வந்தார். குடும்பம் பெரியது என்பதால் அவருக்குப் பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப் பட்டது. ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு, கையில் ஏதோ கொஞ்சம் Image
குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது. வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான், மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப் பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி யார்
நீங்கள் என்றான். பண்டரி புரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு என்றார். உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். ராஜா அவரை உபசரித்தான். நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்குப் பூஜை செய்து விட்டு
Read 16 tweets
Aug 19
#நற்சிந்தனை போர்களத்திலே தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறந்து கிடந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும், கதறி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு, கண்ணா அபிமன்யு
உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். "இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன்" என்றான் கண்ணன். கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும்
கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது என்றான் அர்ஜுனன். "உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா" என்று கூறினார் கண்ணன். அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன்.
"அப்படியா இப்பொழுதே வா
Read 8 tweets
Aug 19
#ம்காபெரியவா #ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி
"ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், 'உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்' என்கிறார். எங்கும் ஒரே Image
இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவண Image
மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல், தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(