#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
கண்வ மகரிஷி யசோதையின் தந்தை சுமுகரின் இல்லப் புரோகிதர். அவர் தினமும் சாளக்கிராம வடிவிலுள்ள திருமாலுக்குப் பக்தியுடன் பூஜை செய்வார். தான் எந்தப் பொருளை உண்டாலும், அதை முதலில் சாளக்கிராமப் பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிய பிறகு தான் உண்பார். நந்தகோபர் கண்வரிடம்
அடியேனுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் வந்து அக்குழந்தையைப் பார்த்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நெடு நாட்களாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். கண்ணன் பிறந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கண்வர் கோகுலத்துக்கு வந்தார். தான் பூஜிக்கும் சாளக்கிராமத்தை
நந்தகோபரின் மாட்டுக் கொட்டகையில் வைத்தார். ஏனெனில் மாட்டுக் கொட்டகையில் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னதற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அங்கேயே அவர் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டிய உணவுகளைத் தயாரிக்கவும் யசோதை ஏற்பாடு செய்து தந்தாள்.
காய்கறிகள்,
விறகு முதலானவற்றை ரோகிணி தயார் நிலையில் வைத்து இருந்தாள். கண்வர் நீராடிவிட்டுப் பூஜையைத் தொடங்கினார். அவர் பூஜை செய்யும் முறையை நந்தகோபர், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோர் வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். பெருமாளுக்குப் பிரசாத நிவேதனம் செய்ய வேண்டிய நேரம் வந்த போது,
மற்றவர்களை அவ்விடத்தை விட்டு நகரச் சொல்லி விட்டுப் பிரசாதத்தைச் சாளக்கிராமப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். பக்திப் பரவசத்தில் கண்வர் ஆழ்ந்திருந்த போது, குழந்தை கிருஷ்ணன் இவர் சமர்ப்பித்த பிரசாதத்தை எல்லாம் உண்டுவிட்டான். கண்விழித்த கண்வர், “என்ன இது அநியாயம்?” என்று கத்தினார்.
ஓசையை கேட்டுப் பதறிப் போய் நந்தகோபனும் யசோதையும் ஓடி வந்தார்கள். நடந்ததைக் கேள்வி உற்றுக் கண்வரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினார்கள். மீண்டும் புதிதாக உணவு தயாரிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தாள் ரோகிணி. களைத்துப் போயிருந்தாலும் கண்வர் மீண்டும் உணவு தயாரித்தார்.
யசோதை கண்ணனை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டாள். மீண்டும் சாளக்கிராமப் பெருமாளுக்கு உணவைச் சமர்ப்பித்தார் கண்வர். பக்திப் பரவசத்தில் மூழ்கிய அவர் கண் விழித்துப் பார்த்து மறு முறையும் அதிர்ச்சியில் கத்தினார். யசோதையும் நந்தகோபரும் ஓடி வந்து பார்த்தார்கள். மீண்டும் கண்ணபிரான்
அங்கிருக்கும் பிரசாதத்தை உண்டு கொண்டிருந்தான். கடும் கோபம் கொண்ட யசோதை, “கண்ணா! இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது. உன்னை அடிக்க வேண்டாம் என்று விட்டால், இவ்வளவு தீம்புகள் செய்கிறாயே! எப்படி அறையை விட்டு வெளியே வந்தாய்? பதில் சொல்!” என்றாள். என்னைத் திட்டாதே அம்மா! அந்த தாத்தா
தான் சில மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி என்னை வாவா என்று அழைக்கிறார். அதனால்தான் நான் வந்தேன்! அந்த தாத்தாவிடம் போய் சண்டை போடு என்றான் கண்ணன். தன் வாயிலிருந்த பாயசத்தைக் கண்வரின் முகத்தில் உமிழ்ந்தான். அடுத்த நொடியே கண்ணன் யார் என்பதைக் கண்வர் உணர்ந்தார். தான் சாளக்கிராம வடிவில்
ஆராதிக்கும் திருமால் வேறல்ல, கண்ணன் வேறல்ல என்று புரிந்துகொண்டார். பேரானந்தத்தில் மூழ்கிய அவர்
“அக்ரா ஹ்யாய நமஹ” என்று கண்ணனைத் துதித்தார். ‘அக்ராஹ்யன்’ என்றால் சிந்தைக்கு எட்டாதவன் என்று பொருள். கண்வர் பெரிய ரிஷியாக இருந்த போதும், அவராலும் கூடக் கண்ணனை இன்னார் என்று அறிந்து
கொள்ள இயலவில்லை. கண்ணன் மனமுவந்து தானே உணர்த்திய பின்னர்தான் அவனை திருமால் என்று கண்வர் உணர்ந்தார். எனவே அவன் மனம் வைத்தாலன்றி அவனைச் சிந்தையால் அறியவே முடியாது. அதனால் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவனை ‘அக்ராஹ்ய:’ என்றழைக்கிறது.
“அக்ராஹ்யாய நமஹ” என்ற 56-வது திரு நாமத்தைத் தினமும்
சொல்லி வந்தால், எட்டாத பொருட்களும் நமக்கு எட்டும்படி எட்டெழுத்தின் நாயகனான எம்பெருமான் அருள்புரிவான்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 31
விநாயகரை பற்றி தெரிந்து கொள்வோம்.
#வினாயகசதுர்த்தி #GaneshChathurthi #மகாபெரியவா
“விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் ImageImage
சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் ImageImage
சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான்
Read 23 tweets
Aug 31
#நற்சிந்தனை #மகாபெரியவா
வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும்.
இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம். அதாவது அன்றன்றைக்கும் நாம் Image
தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’
போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும். வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால்
Read 7 tweets
Aug 31
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #வினாயகசதுர்த்தி #ஸ்பெஷல் #HappyGaneshChaturthi
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதை எண்ணிக் குழப்பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் முறையிட்டனர். Image
பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான். மற்றவர்களது கண் படாமல் இருக்கப் பார்வதி தேவி பிறரை மயங்கச் செய்யும் அழகான வடிவத்தை மாற்றி
பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி புது உருவத்தை தந்தாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கு எல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக் காரியம் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத்
Read 7 tweets
Aug 30
#மணிமூர்த்தீஸ்வரம்
#உச்சிஷ்டகணபதி #பிள்ளையார்சதுர்த்தி_ஸ்பெஷல்
தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு விநாயகர் தன்னுடைய 32 திருத்தோற்றங்களில் 8வது வடிவமாக போற்றப் படுகின்ற உச்சிஷ்ட Image
கணபதியாக அவதரித்து அருள் பாலித்து வருகிறார். ஜீவநதியான தாமிரபரணி கரையில் 5 நிலை ராஜகோபுரத்துடன் எட்டு மண்டபங்கள், 3 பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது. இக் கோவிலுக்குள் Image
நுழைந்தால் பலி பீடம், கொடி மரம் தாண்டி விநாயகரின் மூஷிக வாகனம் இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே நுழைந்தால் நேராக கருவறை. கருவறையில் உச்சிஷ்ட கணபதியும் அவருக்கு அடுத்த தனி சன்னதியில் நெல்லையப்பரும் காட்சித் தருகிறார்கள். திருக்கோவில் உள் சுற்று பிரகாரத்தில் 32 விநாயகரின் சன்னதிகள், Image
Read 17 tweets
Aug 30
#மகாபெரியவா
சொன்னவர்- இந்திரா சௌந்தர்ராஜன்
ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும் Image
கேட்டார்.
"எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில். எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில். சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப் படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்
படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின் மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவது போல தெய்வமே ஒரு கற்பனையா?” என்பது தான் அவர் கேட்ட கேள்வி. காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை. மிகுந்த வருத்தமுடன் கேள்வி
Read 7 tweets
Aug 30
#வராகஜெயந்தி #varahajayanti இன்று வராக ஜெயந்தி. மகா விஷ்ணுவின் ஓர் அவதாரம் வராகம் (பன்றி). பூமியைக் கைப்பற்றிய இரணியனின் தம்பி இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். தன் பக்தர்களையும் தேவர்களையும் காக்கவும் பூமா தேவியை மீட்கவும் பிரம்மாவின் நாசித் துவாரத்திலிருந்து, வெள்ளைப்
பன்றியின் உருவில் தோன்றினார் மகா விஷ்ணு. முதலில் கட்டை விரல் அளவாக இருந்தவர், அதன் பின் ஒரு யானையின் அளவாக வளர்ந்தார். அப்படியே மேலும் மேலும் மேகமண்டலம் வரை வராஹ மூர்த்தி வளர்ந்தார். தன் இரு கொம்புகளால் கடலுக்கு அடியில் இருந்த பூமாதேவியைத் தூக்கி, உலகத்தை காப்பாற்றினார். ஆத்திரம்
அடைந்து, வராஹ மூர்த்தியிடமே போர் புரியத் துணிந்த இரணியாட்சனை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். இங்கே அரக்கன் என்பது மனிதனின் தீய குணங்களைக் குறிக்கிறது. பூமி என்பது மனிதனின் உடலாகும். தீய குணங்களுக்கு ஆட்பட்ட இந்த உடல் மிகவும் தாழ்மையான நிலைக்குச் சென்றுவிடுகிறது. இறைவனின் கருணை
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(