#திருவோணம் மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம். ஸ்ரவண விரதம் என்று கூறுவார்கள். 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. வைஷ்ணவர்கள், மாதந்தோறும்
திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் மிகவும் ஸ்பெஷல். ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகையை திருவிழாவாக கேரள மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில் தான் அவதரித்தார். மஹாபலியின் ஆணவத்தை அடக்கி மூன்று அடி
மட்டுமே மண் கேட்டார் வாமனர். பலியும் கொடுத்தவுடன் வாமனர் பிரம்மாண்ட உருவெடுத்தார். பின்னர் மஹா பலியை மன்னித்து பாதாள லோகத்தின் சக்கரவர்த்தியாக நியமித்தார் பரமாத்மா. கேரள மக்களை அதாவது தன் மக்களை பார்க்க வருடம் ஒருமுறை பூமிக்கு வருகிறார் மஹா பலி சக்ரவர்த்தி.
அதை ஓணம் பண்டிகையாக
கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்து கொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திம் அன்று தான். எனவே, ஒப்பிலியப்பர்
கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடை பெறுகிறது. திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவர் என்று விஷ்ணு புராணம், சிவ புராணங்கள் கூறுகின்றன. முக்கியமாக குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவர்.
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக் கூடாது. உப்பில்லாமல் உணவை உண்டு (ஒப்பிலியப்பர் அவ்வாறுறே பிரசாதம் ஏற்றுக் கொள்வதால்) திருவோண தினத்தில் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதிகாலை நீராடி, ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்க வேண்டும்.
வீட்டில் சாளக்கிராம பூஜை செய்து வசதி உள்ளவர்கள் முடிந்தால் ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை போலவே கலசம் வைத்து ஸத் ப்ராம்மண போஜனம் செய்யலாம். தான தர்மங்கள் செய்ய ஸ்ரீமஹா விஷ்ணுவின் அருளால் அளவில்லாத புகழ் கல்வி செல்வம் சந்தோஷம் என எல்லாம் கிடைக்கும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே
எடுத்துக் கொண்டு, பெருமாளைக் குறித்த பாடல்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் விஷ்ணு சூக்தம் நாராயண சூக்தம் பாராயணம் செய்தல் பாகவத புராணம் படித்தல் ஸ்ரீராமாயணம் படித்தல் வேண்டும். சில நேரங்களில் பெளர்ணமி அன்று வரக்கூடும் அந்த சமயம் மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால் சந்திர தோஷம்
இருந்தால் விலகிவிடும். விரதத்தன்று செய்த தான தர்மங்கள் மற்றும் பூஜையின் பலன்களை ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கு அற்பணம் செய்ய வேண்டும். ஒரு முறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை மேற்கொண்டால் நிச்சயம் நம் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்‌ஷம், சுபிக்ஷம் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சி குடிகொள்ளும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 9
காரியமும் எண்ணமும் நெருங்கின தொடர்புடையவை. காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனத்தில் இல்லாத கெட்ட எண்ணங்கள் படை எடுத்து வரும். There is a proverb ‘an idle mind is a devil’s workshop’. ஆகவேதான்—சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்குமுன்
அந்தச் சித்தம் சுத்தப்பட வேண்டும்! கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும் என்பதால்தான் ஆதி சங்கரர் வேத கர்மாக்களை நிலைநாட்டினார்.
பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம்.
இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவதுதான் பக்தி. நமக்கு அந்தப் பரமாத்மாவே ஆதாரமாகையால் அதனிடம் மனசைத் திருப்பப் பழக்கினால் சுலபமாக அது அங்கே ஈடுபட்டு நிற்கிறது. பாப சிந்தனையே இல்லாமல் போய், ஏற்கனவே ஜன்மாந்தரங்களாக ஏற்றிக் கொண்டிருந்த பாப
Read 10 tweets
Sep 9
#MahaPeriyava It is a must read for all Periyava devotees.
Once Maha Periyava undertook his divya darshana yatra with His entourage to Sri Saila kshetra which is known as the 'Dakshina Kailash'. When they reached Kurnool, Acharyal was given a grand reception at the borders of the Image
city. Sri Maha Periyava was accommodated in a bhajan mandapa where He gave a discourse on Sanatana Dharma in Telugu to the large gathering of devotees. At the end of the lecture, He gave the devotees His blessings and prasadam and continued on His yatra. After they passed a
distance of seven or eight miles, a fertile Zamin village was sighted. All the people in the village with their family and children came to the boundary of the village and welcomed Maha Periyava with purna kumbham. Thereafter, the Zamindar of the village prayed to Sri Maha
Read 57 tweets
Sep 9
#நற்சிந்தனை
சுமாலி என்ற வேடுவரின் மகன் ரத்னாகரன். அவன் அம்பெய்யும் கலையில் தலைசிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவனுக்குத் திருமணமாகி மனைவி மக்கள் எனப் பெரிய குடும்பம் உருவான பின், குடும்பம் நடத்துவதற்குப் போதுமான அளவு வருமானம் வேடுவத் தொழிலில் கிடைக்காததால், வழிப்பறி கொள்ளைக்காரனாக Image
மாறினான். சில சமயங்களில் அவன் வழிப்பறி செய்யும் போது, தங்கள் உடைமைகளை வழங்க மறுக்கும் மக்களைக் கொல்லவும் துணிந்து விட்டான். ஒருநாள் ஒரு துறவி அந்த வழியாக வருவதைக் கண்டான்.
அவர் கையில் வீணை இருப்பதையும் பார்த்தான். வீணைக்குள் பொற்காசுகளை அந்தத் துறவி ஒளித்து வைத்திருப்பதாகக் Image
கருதிய ரத்னாகரன், கத்தியைக் காட்டி அவரை வழிமறித்து அவரது உடைமைகள் அனைத்தையும் தன்னிடம் தந்து விட்டுச் செல்லுமாறு கூறினான். ஆனால் அவனையோ அவனது கத்தியையோ பார்த்து அந்தத் துறவி அஞ்சவில்லை.
“இந்த வீணை மட்டும் தான் என் உடைமை. வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளப்பா!” என்று கூறினார். தன் Image
Read 15 tweets
Sep 8
#Thiruvonam Every month, on the day the star of Shravanam falls, fasting is done. It is called Shravana Vratham. Among the 27 stars only Thiruvonam belonging to Vishnu & Thiruvadhirai belonging to Lord Shiva have the special prefix 'Thiru' which marks the respect for those stars. Image
It is customary for Vaishnavites to undertake the Thiruvona (Shravana) fast every month. Thiruvonam in Avani (Aug-Sept) month is very special. Kerala Hindus celebrate Onam festival in this month. When Vamana took incarnation, Maha Vishnu incarnated on Thiruvonam. Just with a Image
request of 3 ft of land He vanquished Mahabali's arrogance. After Bali agreed to give, Vamana became gigantic. Then the Supreme Lord forgave Maha Bali and appointed him as the Emperor of the Underworld. Maha Bali Chakravarty comes to Earth once a year to see the people of Kerala, Image
Read 11 tweets
Sep 8
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான். சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும். ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும். குயவன் மீண்டும் அவற்றை பயன்
படுத்த முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது. ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும் புது பானை செய்ய உபயோகப் படுத்துவான். அதே
போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும். நன்றாக வேக வைக்கப்பட்ட விதை அல்லது வறுத்த பயறு மீண்டும் முளைக்காது. அதே போலத் தான், ஸ்ரீ கிருஷ்ணன் மீது கொண்ட பக்தித் தீயால் தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும்
Read 4 tweets
Sep 8
#நற்சிந்தனை
ஒரே வ‌குப்பில் ப‌டிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளான‌ 2 மாண‌வ‌ர்க‌ள் ஒரு குறும்பு செய்ய தீர்மானித்தனர். மாலை இருட்டிய பிறகு கிராம‌த் தெருவில் மேய்ந்து கொண்டு இருந்த‌ 3 எருமைக‌ளின் முதுகில் 1, 2, 4 என்று எண்க‌ளை எழுதி விட்டு யாருக்கும் தெரியாம‌ல் எருமைக‌ளை ப‌ள்ளி வ‌ளாக‌த்துக்குள்
ஓட்டி விட்டு எதுவும் தெரியாத‌து போல் வீடு திரும்பின‌ர். காலையில் ப‌ள்ளிக்குள் நுழைந்த‌ த‌லைமை ஆசிரிய‌ருக்கு ஏதோ வித்தியாச‌மாக‌த் தெரிந்த‌து. "என்ன‌து இது, ஏதோ கெட்ட வாடை ப‌ள்ளிக்கூட‌ ந‌டைபாதைக‌ளில் வீசுகிற‌தே?” என்று ச‌க‌ ஆசிரிய‌ர்க‌ளை அழைத்து விசாரித்த‌ போது, "வாச‌ம் ம‌ட்டும்
இல்ல‌ சார், சாணி கெட‌க்குது சில‌ வ‌குப்ப‌றைக‌ளில்" என்று முக‌ம் சுளித்த‌ன‌ர் ஆசிரிய‌ர்க‌ள். உட‌னே ப‌ள்ளி முழுவ‌தும் தேடிய‌தில் மூன்று எருமைக‌ளும் சிக்கின. தேமே என்று இர‌வு முழுவ‌தும் ப‌ள்ளிக்கூட‌ வ‌குப்ப‌றைக‌ளில் சுற்றிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்த‌வை இப்போது
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(