என்ன செய்தார் அண்ணா?

ஆட்சியிலிருந்ததோ வெறும் இரண்டு ஆண்டுகள்தான். அதிலிருந்து சில,

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை '#தமிழ்நாடு' என்று பெயரிட்டார்.

2. சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை,கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
7. புன்செய் நிலங்களுக்கு #நிலவரி #ரத்து செய்யப்பட்டது.

8. #பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

10. பேருந்துகளில் #திருக்குறள் இடம்பெற செய்தது.

11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது
12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.

13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப்
பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

15. 1968-ல் இரண்டாவது #உலகத் #தமிழ் #மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார்,பாரதிதாசன், ஔவையார்,
கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)

17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள்
பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

#HBDAnna

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthanaraam

Keerthanaraam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Sep 14
நடிகர்களுக்காக காத்திருக்கிறது! இளைய சமுதாயம்!!!
காவிரி,'சல்லி கட்டு, ஈழம்,ஸ்டெர்லைட், இந்தியெதிர்ப்பென நடிகன் பின்னால் ஒழிந்துகொள்கிறது, இளைய தலைமுறை!
எல்லா பிரச்சனைகளுக்கும் குரல்கொடுக்கிற இடதுசாரி இயக்கங்களின் பின்னால், எந்த காலத்திலும் அணிதிரண்டதில்லை, குரல்கொடுத்ததுமில்லை!
40 வருட இளையதலைமுறையை அரசியல் பேசவிடாமல், அரசியலுக்குள் நெருங்கிவிடாமல், அரசியலை சாக்கடையென கற்பித்ததில்! எம்ஜி.ராமசந்திரனுக்கும், பார்ப்பனிய ஊடகங்களூக்கும் பெரும்பங்குண்டு.
இல்லையென்றால்! தமிழகத்தின் அண்ணா தலைமையிலான அன்றைய இந்தியெதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தோடு, இன்றைய
இளையசமுதாயம் வீறுகொண்டு எழுந்திருந்திருக்கும்!

தமிழகத்தின்மீது விழும் ஒவ்வொரு அடிக்கும், ஏதாவது நடிகன் அழுதால்தான், இளைஞர்கள் மத்தியில் சலசலப்பே உண்டாகிறது!
கேடுகெட்ட இளையசமுதாயம்! வரும் தேர்தலிலும், ஈபிஎஸ்,ஓபிஎஸ் மற்றும் மஃபா.பாண்டியராஜனை கண்டிப்பாக மீண்டும்
Read 8 tweets
Sep 13
தேசம் காக்க ஒரு பயணம்:

ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார் என்றவுடன் அதனை சங் பரிவாரம் எப்படி எதிர்கொள்ளும் என்பது இந்திய அரசியலை கவனிக்கும் சிறு பிள்ளைக்கும் தெரியும். கேலிகள், கிண்டல்கள், சர்ச்சைகளை ஊதிப் பெருக்குவது என்று பரிவாரத்தின் காலாட்படை செயல்படுமென்று தெரியும்.
சங் பரிவாரத்தை எதிர்க்கும் தரப்பென்று ஒன்றிலிருந்தும் "சுருட்டு புடிச்சவனெல்லாம் சர்ச்சிலா? நடை பயணம் போனவரெல்லாம் காந்தியா?" என்றும் "ஐயோ ஜார்ஜ் பொன்னையாவை சந்திக்கலாமா? இவரிடமா நம்பிக்கை வைப்பது" என்றும் ஓலங்கள் கேட்கின்றன.

ஐயன்மீர், காந்தியார், அதாவது மோகந்தாஸ் காந்தி, உப்பு
எடுக்க நடக்கப் போகிறேன் என்ற போது ஆங்கிலேயர் மட்டுமல்ல ஜவஹர்லால் நேருவும் தலையிலடித்துக் கொண்டார் என்பதே வரலாறு. யாருக்கும் நம்பிக்கையில்லை அது தேசத்தில் ஒரு தீ மூட்டும் என்று. காந்தியாரும் தண்டிக்கு போனார், உப்பு அள்ளினார், தேசம் எழுச்சி அடைந்தது. ஆனால் உப்பு வரியும் ரத்து
Read 18 tweets
Sep 12
இந்த தீர்ப்பு ஏற்கனவே அறிந்ததுதான்

முஸ்லிம்கள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் செய்ய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் அல்லது தூங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தாலும் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும்.

ஞானவாபி கோயிலில் ஒரு இந்து சிற்றரசரின் மனைவியை பிரத்யேக பூஜை என கர்ப்பகிரகத்திற்குள் Image
அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்தார்கள் இரண்டு குருக்கள். எவ்வளவு மன்றாடியும் சிற்றரசருக்கே நியாயம் கிடைக்கவில்லை. தெய்வ குற்றம் என சாக்கு கூறி இளவரசியையும் பிரத்யேக பூஜைக்கு அனுப்பினால்தான் சனி விலகும் என்று கூறினார்கள். சிற்றரசர் வேறு வழியின்றி பேரரசர் ஔரங்கசீப் கிட்டே
முறையிட்டார். பேரரசர் தளபதியை அனுப்பி கற்பழித்து கொன்ற கயவர்களை தலையை வெட்டி நீதியை நிலை நாட்டினார். சிற்றரசர் மகிழ்ந்து கோயில் பக்கத்தில் இருந்த காலி நிலத்தை பேரரசுக்கு விட்டுக் கொடுத்தார். இதுதான் ஞானவாபி மசூதியின் அசல் உண்மை வரலாறு.
இனி இந்தியாவில் கோர்ட் தீர்பு எல்லாம்
Read 4 tweets
Sep 9
சங்கி என்பவன் யார்?

அவனது பார்வையில் மண்டையில் மூளையே இல்லாத ஒரு தலைவனை நெல்சன் மண்டேலா ரேஞ்சுக்கு கற்பனை செய்துகொள்வான்

அவன் கண்களுக்கு மாரிதாஸ் மகானாக தெரிவான்!

சுப்பிரமணிய சாமி சாணக்யனாக தெரிவான்!

ரஜினி ராஜதந்திரியாக தெரிவான்!

குருமூர்த்தி அரசியல் ஞானியாக தெரிவான்! 😂
அர்ஜுன்சம்பத் அரிசந்திரனாக தெரிவான்!

ஹெச். ராஜா மத காவலானாக தெரிவான்!

மனிதகுலத்தின் எதிரியான அறிவு கெட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் அவனுக்கு மட்டும் புனித படையாக தெரியும்!

வரலாற்றை படிக்க மாட்டான்!
மண்டையில் மாட்டுச்சாணம் மட்டும் தான் இருக்கும் என்று எளிதில் கடந்து போகவும் முடியாது
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அழிக்கப்பட வேண்டிய எதிரிகள் என்ற எண்ணம் அவன் மரமண்டையில் கலந்து இருக்கும். 😒

சம்யுக்தா என்ற வார்த்தையை கேட்டால் காட்டுக் கூச்சல் போடுவான்! 🕪

நல்ல பேச்சைக் கேட்டால் அவன் காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துன மாதிரி கதறுவான்! 📣
Read 7 tweets
Sep 8
#பரவும்_விஷச்செடி
By
ஶ்ரீதர் சுப்ரமணியம்

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப், நாகார்ஜுனா போன்றோர் நடித்த 'பிரம்மாஸ்த்ரா' படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. பெரும் பொருட் செலவில் பேன்-இந்தியா லெவலில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பயணத்தில் ரன்பீர், ஆலியா மற்றும்
இயக்குனர் அயான் முகர்ஜி ஈடுபட்டுள்ளனர். அதற்காக மத்தியப் பிரதேசத்தில் பயணத்தில் இருக்கும் போது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள மகாகால் கோயிலுக்கு போயிருக்கிறார்கள். அங்கே ரன்பீருக்கு எதிராகக் கூடிய பஜ்ரங்தள உறுப்பினர்கள் பெரும் கோஷங்களை எழுப்பி இவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துப்
போராடி இருக்கிறார்கள். போலீஸ் வந்தும் கூடப் பயனின்றிப் போனதில், இயக்குனர் அயான் முகர்ஜி மட்டும் கோயிலுக்குள் போய் வழிபட்டு விட்டு வந்திருக்கிறார்.

பஜ்ரங் தளத்தினரின் போராட்டத்துக்குக் காரணம்: ரன்பீர் கபூர் மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்பதுதான். அதாவது 2011ல் ஏதோ ஒரு பேட்டியில்
Read 14 tweets
Sep 7
பாசிசத்தை வேர் அறுக்க திரு. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

இந்த பிடிப்பு நடிப்பு அல்ல இந்திய தேசியத்தையும் மக்களையும் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட துருவ நட்சத்திரங்கள்

ராகுல் பற்றிய மூன்று இழைகள் இங்கு கொடுத்துள்ளேன்
அதனை பரப்பி விடுவோம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(