#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஓர் ஆங்கிலேயே ஆளுநர் கஜேந்திர மோக்ஷம் ஓவியத்தைப் பார்த்து விட்டு, தன உதவியாளரிடம், உங்கள் கடவுளான திருமாலுக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன்
கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்காகவா அவரே கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும்? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி
இருக்கலாமே. அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். அதை கேட்ட உதவியாளர் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆளுநருக்கு தான் நன்றாக இந்து மதத்தை மட்டம் தட்டி விட்டோம் என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டார். ஒரிரு நாட்கள் சென்றன.
ஆளுநரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் இந்த உதவியாளர், சில மெய் காப்பாளர்களும் காவேரி கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். ஆளுநரின் 3 வயது பேரக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டிருந்த உதவியாளர், படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும்
சைகை காட்டிவிட்டு ஆளுநரின் பேரனை ஆற்றில் தூக்கி போட்டு விட்டார். பதறிய ஆளுநர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து உதவியாளர் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அவரையும் குழந்தையும் தூக்கி வந்துபடகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய ஆளுநர் தன்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டு, உதவியாளரைப் பார்த்து, எப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கோபமாக கத்தினார். உதவியாளர் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செய்தேன் துரையே என்றார். நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உன்
திருமாலை நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம் என்றார் அவர். துரையே மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அன்று திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டீர்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10
சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன்? எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அப்படி இல்லை, என் பேரன் மேல் அளவு கடந்த பாசம். அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற
வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார். உங்கள் உயிர், உங்கள் இரத்தம் என்கிறபோது இவ்வளவு பாசம் இருக்கும் போது அண்ட சராசரங்களையும் படைத்து, ஆளும்
எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல்! அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். துரையே, இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று. நான் நீரில் வீசிய உங்கள் பேரனை
காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் என்றார். உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் ஸ்ரீமந் நாராயணன் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் அவர்.
அவனே தாய் தந்தை போல் நமக்கு இருக்கும் போது
அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது அவனின்றி அனுவும் அசையாது என்று மட்டும் நினைப்போம்.
ஓம் நமோ நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 16
#ரிஷி_ஆபஸ்தம்பர்
ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியவர் ஆபஸ்தம்பர். அவருக்கு அந்த பெயர் வந்ததை தெரிந்து கொண்டால் அவரின் அலாதி பெருமை நமக்கு தெரிய வரும். ஒரு சமயம் வேதவிற்பன்னரான பிராம்மணர் ஒருவர் ஸ்ராத்தம் செய்தார். போஜனம் செய்விக்க ஒரு பிராம்மணருக்காக காத்திருந்தார். வெகு நேரம் Image
கழித்து ஒரு பிராம்மணர் வந்தார். அவர் நல்ல பசியுடன் இருந்தார். அவரை அமர்த்தி இலை போட்டு தானே பரிமாறினார் கர்த்தா. வந்த பிராம்மணர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். பிராம்மணனுக்கு நல்ல பசிபோலும் என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். போடப் போட அனைத்தும்
ஒரு நொடியில் காலியாயிற்று! கர்த்தாவின் கண்களில் முதலில் இருந்த வினயம் மறைந்து ஏளனம் குடி கொண்டது. அதைத் தன் செயல்களிலும் காட்டினார். அதைப் பொருட்படுத்தாத அதிதி இன்னும் போடு இன்னும் போடு என்று கேட்டுக் கொண்டிருந்தார். அபரிதமாக உண்டும் திருப்தி அடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை
Read 16 tweets
Sep 16
Rare pithru stuithi from Skanda Puranam to be chanted during Mahalaya pithru Paksha to please pithrus irrespective of whether pithru dosham affliction is there or not in one's horoscope.
Please take advantage by chanting thrice a day during this time.
Sarvam Sri Krishnarpanam 🙏🏻 Image
Translation in English by @naradauvacha2 Image
Read 4 tweets
Sep 16
#மகாபெரியவா
ஓரு நாள் பெரியவாளை தரிசனம் செய்ய ஒரு வயசான தம்பதி வந்தார்கள்.
"பெரியவாட்ட ஒரு பிரார்த்தனை."
"சொல்லு."
"எனக்கு 81 வயசு ஆறது. கொழந்தைள் எல்லாம் ஸதாபிஷேகம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தறா"
"பண்ணிக்க வேண்டியதுதானே”
"இல்ல பெரியவா எங்களுக்கு அதுல இஷ்டமில்ல. மனசு ஒப்பலை”
"ஏன்?” ImageImage
"ஸதாபிஷேக பத்திரிக்கையில் ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் [ஆயிரம் பிறை கண்டவர்]ன்னு போடறோம். ஆனா, நெஜத்ல நான் அப்டி ஒண்ணும் பாத்ததில்லை. ஒவ்வொரு பக்ஷமும் மூணாம் பிறையை தரிசனம் பண்ற வழக்கமில்ல. அப்படி செய்யாத போது, நான் எப்டி ஆயிரம் பிறை கண்டவன்னு போட்டுக்கறது? அது பொய் இல்லியா? அதான்
வேண்டாம்னு தோணித்து பெரியவா" எளிமைக்கெல்லாம் எளிமையான பெரியவா அழகாக சிரித்துக் கொண்டே, மிக மிக எளிமையான ஒரு உபாயம் சொன்னார்.
“நீயும் ஆயிரம் சந்த்ரனை பாக்காம, பத்ரிகைல தர்ஶனம் பண்ணினேன்னு போட்டுக்க வேணாம். ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் பண்ணிட்டே, கொழந்தேள் ஆசைப்படி ஸதாபிஷேகம் பண்ணிக்கலாம்"
Read 9 tweets
Sep 15
#MahaPeriyava Once some learned people were conversing with Sri Maha Periyava. Even though the topic was on a high level Vedantic matter, Periyava’s talk and the language was so simple that even an illiterate could understand it easily. It was different from the lectures normally
delivered by Pundits. At that time, a young man from Australia came there to have His darshan. The young man was doing research on the comparison of various religions and he could speak small sentences in Sanskrit. After the normal enquiries, Periyava asked him what he wanted.
“How should I be? How should I live? What is way of life? What is the way to perform good deeds in life and to get good results?” The young man piled his queries, politely. After a few minutes silence, Periyava said, “All that is okay. But why come here (Kalavai was the place)
Read 20 tweets
Sep 15
#பக்தி மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக தாமாஜி வேலை பார்த்து வந்தார். தாமாஜி பண்டிதர் தீவிர விட்டல பக்தர். தினமும்  விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து பிறகுதான்
சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை நல்லொழுக்கம் ரொம்ப பிடித்து விட்டதால் அவனின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கு அவரை பொறுப்பாளியாக நியமித்தான். எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி  மெலிந்து போயின. பயிர் பச்சை எல்லாம் வாடி கருகின. மக்கள்
உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார்.  தாமாஜி அவரை அழைத்து உபசரித்து உணவளித்தார். அந்த மனிதர் அழத் தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே  வயிறார உண்கிறேன். பண்டரி புரத்தில் என் வீட்டில்  மனைவி குழந்தைகள் உணவின்றி
Read 16 tweets
Sep 15
#நற்சிந்தனை
ராம ராம ராம ராம!
ராம நாம ஜபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழ வேண்டி இருந்தால் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு பாதிப்பின்றி மாற்றி அமைக்கப்படும். ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது ராம நாமமே. எல்லாவித
பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ஸ்ரீராம நாமம். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜயம் சேர்க்கப்பட்டு ராம ஜயம்
என உச்சரிக்கப்படுகிறது. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜபத்தினால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி, ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கப்படும். வினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(