M.SivaRajan Profile picture
Oct 31 11 tweets 3 min read
#சூரசம்ஹாரம்_உணர்த்தும்_தத்துவம்

🌟முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம்.

🌟சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர் புரிந்தான்.

தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான்.

ஆனால்,ஆதி முதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன.
🌟முருகனின் கை வேலுக்கு #சக்திவேல் என்று பெயர்.

அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார்.

அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

🌟வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன்,இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான்.
🌟வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது.மாயையை இருகூராகக் கிழித்தது.

🌟ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது.

🌟சூரசம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப் போக பகைவனான சூரபத்மன்
முருகக் கடவுளின் புகழ் போற்றும் கொடியும் வாகனமும் ஆனான்.

🌟ஆணவம் அழிந்து ஞானமும் பெற்று விட்டால் எந்த ஆன்மாவும் அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடலாம் என்பது #கந்தசஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

அந்த ஞானத்தைப் பெற்றுத் தரும் அற்புத விரதமே கந்த சஷ்டி.
✨முருக பக்தர்கள் ஆறு நாட்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவர்.

ஆறு நாட்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து,
முருகக் கடவுளை வணங்க வேண்டும்.

✨அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு.
யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம்.

✨ஆறு நாட்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.

ஒரு சிலர் பால் பழம் உட்கொள்வது வழக்கம்.
சிலர் ஒரு வேளை மட்டும் உப்பில்லா உணவை உண்பர்.

✨எதுவாக இருந்தாலும் ஆறு நாட்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று.
✨முருகனின் பெருமைகளைப் பாடும் கந்தசஷ்டிக் கவசம்,
கந்தகுரு கவசம்,
வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள் முழுவதும் பாட வேண்டும்.

இதன் மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும்.
✨ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும்.சிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு.

✨ஏழாவது நாள் முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.
✨விரதத்தில் முக்கியமானது #பக்தி.

இந்த ஆறு நாட்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும்.

அவ்வாறு விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.
✨உயிர்,உணர்ச்சி வளர்க்கும் விரதமாதலால் பழச்சாறு பருகுதல் தவிர்க்கப்படுகிறது.

இவ்விரதத்தில் உண்ணா நோன்புடன் மௌன விரதம் கடைப்பிடிப்பவரும் உண்டு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 1
#சைவ_வைணவ_ஒற்றுமை

சைவ- வைணவ ஒற்றுமை பேசிய பொய்கையாழ்வாரின் திரு அவதார நாளான ஐப்பசி திருவோணம்  இன்று.

அரனும் அரியும் ஒன்றே’  என்று கூறும் முதல் குரல், ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல். Image
பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்,

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று. (5)
-என்றவாறு,
“அரன்,  நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள்.

ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள்.

மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள்.

அழித்தலும், காத்தலும் நினது தொழில்கள்.
Read 10 tweets
Nov 1
#பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் ஜெயந்தி இன்று.

இவரே பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார்.

இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர்.

பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். Image
இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார்.

இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.

இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது.

ஹரியும் சிவனும் ஒன்றுதான்.

ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.

சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும்
Read 11 tweets
Nov 1
#கண்_நோய்_விலக

*கண் நோய் போக்கும் நேத்ரபதீஸ்வரர்!*

தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். Image
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.

ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.

ராஜ ராஜ சோழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது,
Read 16 tweets
Oct 31
#கந்த_சஷ்டி_திருவிழா

#முருகன்_சிறப்பு_தகவல்கள்

முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மஹாகவி காளிதாசர்.
முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.

இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

பிரம்மசரிய - கிருகஸ்த - சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
Read 11 tweets
Oct 31
சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகன் தலம்.

கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம்.
ஆனால் முருகனின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

அப்படிப்பட்ட முருகனின் படைவீடு தான் திருத்தணி. முருகனின் 5 ஆம் படைவீடு.
முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோவில் ஆகும்.

தணிகை என்பது சினம் தணிதல்.

திருத்தணி முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.
Read 5 tweets
Oct 31
#பாவாடை_தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று பாவாடை தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரமும் நடந்தது.
இன்று காலையில் சட்ட தேரோட்டம்  நடைபெறும் . 

இந்த நிலையில் வழக்கம் போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு மாலையில் நடைபெறும்.
இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும் .
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(