அறுபடை வீடு
முருகனுக்கு                             
மட்டுமல்ல ஐயப்பனுக்கும்  உண்டு....

ஐயப்பனின் அறுபடை வீடுகள்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

1
பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! என்று இருக்கும். அவ்வாறெல்லாம் போற்றப்படும் ஐயப்பனின் அறுபடைவீடுகள் பற்றி பார்ப்போம்...

2
தர்ம சாஸ்தாவான                                      ஐயப்பனின் அறுபடை வீடுகள் :

1. ஆரியங்காவு
2. அச்சன்கோவில்
3. குளத்துப்புழா
4. எரிமேலி
5. பந்தளம்
6. சபரிமலை

3
1. ஆரியங்காவு :

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார்.

4
2. அச்சன்கோவில் :

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.

5
இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் ஐயப்பனையும் தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர்.

6
இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா" என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

7
3. குளத்துப்புழா :

செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இந்த ஊர். இங்கு ஐயப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ளதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார்.

8
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளது.

9
4. எரிமேலி :

கேரளாவில் உள்ள இத்தலத்தில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

10
5. பந்தளம் :

இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

11
பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் பந்தள அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன.

12
6. சபரிமலை :

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, கேட்பவர்களுக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார். 

13
சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் ஆறுபடை வீடுகளான இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை ஆகும்....

#சுவாமியே_சரணம்_ஐயப்பா

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Nov 21
*கொடி மரம் பிறந்த கதை*

மகாபாரத போருக்கு பிறகு தர்மர் நிறைய நன்கொடைகள் வழங்குவதன் மூலம் தன்னை உலகிலேயே ஒரு சிறந்த நீதிமானாக நினைத்து கொண்டார். கிருஷ்ணர் இந்த விஷயத்தில் தர்மருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க எண்ணி, அவரை அசுவமேத யாகம் செய்ய சொன்னார்.
தர்மரும் யாகத்தை தொடங்கினார். அசுவமேத குதிரை, மற்ற பாண்டவர்களுடன் வலம் வர தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் உலகம் அறிந்த விஷயம் என்பதால் எல்லா மன்னர்களும் தர்மரின் அதிகாரத்தை ஏற்றுக்
கொண்டனர்.
குதிரை மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைகிறது. அந்த ராஜ்ஜியத்து அரசன் மயூரத்வஜன் சிறந்த கிருஷ்ண பக்தன்,.அவனுக்கு இந்த குதிரை கிருஷ்ணர் ஆதரிக்கும் பாண்டவர்களை சேர்ந்தது என்று தெரிந்து கொள்கிறான். ஆயினும் விட்டு கொடுக்க மனம் இல்லை.
Read 13 tweets
Nov 21
*திருவாறன்விளை திருக்குறளப்பன் திருக்கோயில் பந்தனம் திட்டா* 

மூலவர்: திருக்குறளப்பன் பார்த்தசாரதி

தாயார்:  பத்மாசனி

தீர்த்தம்:  வியாச தீர்த்தம், தேவ புஷ்கரணி

ஊரின் புராணப் பெயர்: ஆரம் முளா

ஊரின் பெயர்:  திருவாறன்விளை, பந்தனம்திட்டா, கேரளா

 1
மங்களாசாசனம் பாடியவர்:

 நம்மாழ்வார்

*தலச்சிறப்பு*

 திவ்ய தேசங்களில் இது 74 வது திவ்ய தேசம் ஆகும்.

 இங்குள்ள மூலவர் மகாபாரத அர்ஜுனரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி ஆவார்.

மூலவருக்குத் தங்கக் கவசம் சாட்டப்பட்டு உள்ளது.

2
பம்பை நதி இக்கோவிலின் வடக்கு வாசல் வழியாகச் செல்கிறது.  இந்தத் தலத்தில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக 
சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

3
Read 12 tweets
Nov 20
ஆனந்த விகடன்' ஆசிரியராக இருந்த எழுத்தாளர்  மணியன். பிற்காலத்தில் தனக்குச் சொந்தமாக 'இதயம் பேசுகிறது' என்கிற பத்திரிகையை  ஆரம்பித்தார்.

அந்தப் பத்திரிகையில் அவர் வெளிநாட்டுக்குச் 
சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமான விஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எந்த  நாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில் 
இருக்கும் மேஜை மீது காஞ்சி மஹானின் படத்தை  வைத்து, தினமும் வணங்குவது வழக்கம். அவர் 

அப்போது தங்கி இருந்தது ஓர் ஆங்கிலேயரின் வீடு.

வீட்டின் சொந்தக்காரர், மணியனிடம் 

"படத்தில் இருப்பவர் யார்?" என்று கேட்டு இருக்கிறார்.
"அவர் நான் வணங்கும் தெய்வம்" என்று பதில் சொன்னார் மணியன்.

"சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது 
நடக்குமா? என்று ஆங்கிலேயர் ஒரு வினா எழுப்ப, அதற்கும் மணியன் பதில் சொன்னார்.
Read 9 tweets
Nov 19
*மனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது?* 

*சீதா பிராட்டியார் சொன்ன நீதி ...* 

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். Image
ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அசோக வனத்தில் சீதை இருந்த போது, அவளை அரக்கியர்கள் 
பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக் கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.
Read 16 tweets
Nov 19
எழுதியவர் யார் என்று 

தெரியவில்லை ; ஆனால்

படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;" 

வாழைத்

தோட்டத்திற்குள்

வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்

எதாவது...

ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...

முள்ளு மரம் நான்...!
தாயும் நல்லவள்...

தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ

நான்...

படிப்பு வரவில்லை...

படித்தாலும் ஏறவில்லை..

பத்து வயதில் திருட்டு...

பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...

பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...
எட்டாவது பெயிலுக்கு...

ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

எவர் சொல்லியும் திருந்தாமல்...

எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்

போனதென்று...

கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

மூக்குமுட்டத் தின்னவும்...

முந்தானை விரிக்கவும்...

மூன்று பவுனுடன் ...
Read 27 tweets
Nov 19
திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில் சிறப்புகள்

யோகிகளில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒருவரான யோகீஸ்வர யாக்ஞ வல்கியர்,ஜனக மன்னருக்கு,இத்தலத்தின் மகிமையை விரிவாகச் சொல்லி இருக்கிறார்.

1
திருப்பெயர்கள் 18

திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு,18 திருப்பெயர்கள் உண்டு.அவை:
1.ஆன்ம நாதர்,
2.பரமசுவாமி,
3.திருமூர்த்தி தேசிகர்,
4.சதுர்வேத புரேஸ்வரர்,
5.சிவ 6.யோகவனாதீசர்,
7.குந்தவனேஸ்வரர்,
8.சிவ க்ஷேத்திர நாதர்,
9.சந்நவகேஸ்வரர்,
10.ஜனவந்நாதர்,

2
11.மாயாபுரி நாயகர்,
12.விப்பிர நாதர்,
13.சப்த நாதர்,
14.பிரகத் தீர்த்தேஸ்வரர்,
15.திருசனதக்கர்,
16.அஸ்வ நாதர்,
17.சிவபுரவதி மகாதேவர்,
18.திரு ஜகத்குரு என,

3
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(