சபரிமலை கோவிலில் உள்ள மற்ற சன்னதிகள்.. பற்றி தெரிந்து கொள்வோம்..!!

சுவாமி ஐயப்பன் இருக்கும் சபரிமலை 
கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.

1
மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது. அதில் நாம் இன்று இங்கே உள்ள பிற சன்னதிகள் பற்றி பார்ப்போம்..!!

2
மஞ்சமாதா :

மஞ்சள் மாதா சன்னதி ஐயப்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. இந்த தேவியை மாளிகாபுரத்தம்மன் என்றும் அழைப்பது உண்டு.

3
அரக்கி மகிஷியின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி, ஐயப்பன் முன் மண்டியிட, அவளுக்கு மாளிகாபுரத்தம்மன் என்று ஐயன் பெயர் சூட்டி அருளினார். மேலும், ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருக்கும் கன்னித் தெய்வமாகவும் திகழ்கிறாள்.

4
இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி, பூஜை செய்ய வேண்டும். இந்த மாளிகாபுரத்தம்மன் சன்னதியில் வேண்டிக்கொண்டால், திருமண பாக்கியம் கைகூடும்.

5
இந்தச் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட துணியை, திருமணமாகாத கன்னிப் பெண்கள் தைத்து, அணிந்துகொண்டால், உடனடியாக திருமணம் கைகூடும். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கி வருவர்.

6
நவகிரக சன்னதி :

மஞ்சள் மாதா சன்னதிக்கு பின்புறம் நவகிரக சன்னதி உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.

7
கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தோஷம் உள்ளவர்கள், இந்தச் சன்னதியில் கொடிகொட்டிப் பாடல் பாடி வழிபடுவது வழக்கம்.

8
மணிமண்டபம் :

மஞ்சள் மாதா சன்னதியின் பின்புறத்தில் மணிமண்டபம் உள்ளது. இந்த இடத்தில்தான், ஆதிகாலத்தில் அகத்தியர் லலிதா சாஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்தார்.

9
இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் அல்லது ஸ்லோகம் சொன்னால்,
நாம் வேண்டியது நடக்கும். 
சபரிமலைக்கு மணி கட்டுவது என்று சொல்லுவது உண்டு.

10
பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நினைத்துக் கொண்டு இங்கே மணி கட்ட வேண்டும். இந்த மணியிலிருந்து எழும் ஓசையானது, ஐயப்பனிடத்தில் நமது வேண்டுதல்களை எடுத்துச் செல்லும் ஓசையாக இருக்கும்.

11
அதனால் குறைகள் தீர்ந்து வேண்டுதல்கள் யாவும் உடனுக்குடன் நடைபெறுவதாக நம்பிக்கை. சபரிமலையில் பிற இடங்களில் மணி கட்டுவதை விட, இந்த மணி மண்டபத்தில் கட்டுவதே சிறப்பு.

12
ஜோதி தரிசனம் :

எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார்.

அன்று மட்டும், தியானத்திலிருந்து சாஸ்தா கண் திறப்பதாக ஐதீகம். 

13
அதன் தொடர் நிகழ்வாக, வானில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் ஒளிரும், அப்படி ஒளிரும் நட்சத்திரமே சாஸ்தாவாக நம்பப்படுகிறது. 

14
அத்துடன் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.

#சுவாமியே_சரணம்_ஐயப்பா
#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Nov 24
*கடல் எப்போதும் சேறாகாது!*

கடலை ஞானியுடன் ஒப்பிடுகிறார் கிருஷ்ணன்

பொறுமை கடலினும் பெரிது என்பார்கள். 

அப்படியென்றால் என்ன? எவ்வளவுதான் மகா பெரிய சமுத்திரமானாலும், அது அமைதியாக இருக்கிறது.
அவ்வப்போது காற்று அதை, சுருட்டிச் சென்று கரையோர அலையாகத் தள்ளினாலும், அது தன் இயல்புக்குத் திரும்பி விடுகிறது. 

இந்தக் கரையோர அலைத் தோற்றத்தை வைத்து அதனுடைய முழு சுபாவத்தையும் எடை போட்டுவிட முடியாது.
கரையிலிருந்து உள்ளே சென்றால், அதன் அமைதி நம்மை வியக்க வைக்கும். ஆழ்கடலினுள்ளே எரிமலையும் இருக்கும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிலிருந்து கடல் எந்த அளவுக்குப் பொறுமை காக்கிறது என்பது புரியும்.
Read 14 tweets
Nov 24
காகம் சுயநலம் சிறிதும் இல்லாத பறவை

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், Image
மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.
காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை.  கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.
Read 25 tweets
Nov 24
*பணத்தை*  கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...

அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்...*
கோவில் உண்டியலுக்கு  செலுத்தினால் *காணிக்கை*

யாசிப்பவருக்குக் கொடுத்தால் *பிச்சை*

அர்ச்சகருக்குக் கொடுத்தால் *தட்சணை*

கல்விக் கூடங்களில் *கட்டணம்*

திருமணத்தில் *ஸ்ரீதனம்*

திருமண விலக்கில் *ஜீவனாம்சம்*

விபத்துகளில் இறந்தால் *நஷ்டஈடு*
இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் *காப்பீடு*

வங்கிகளில் வைத்தால் *வைப்புந்தொகை* 

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
*தர்மம்*

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் *தானம்*

திருமண வீடுகளில் பரிசாக *மொய்*
Read 9 tweets
Nov 24
பெயர்: தட்சிணாமூர்த்தி

வாகனம்: நந்தி தேவர்.

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களுக்கு வேதம் மற்றும் ஞானம் கற்பிக்க எடுத்த வடிவமே தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

1 Image
படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்களான சநகர், சநந்தனர், சனத்குமாரர், சதானந்தர் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள்.

2
பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் லட்சுமி பிராட்டியுடன் பக்தர்களை காத்தால் தொழிலில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.

3
Read 28 tweets
Nov 23
*காகத்திற்கு இப்படி சாதம் வைத்தால் நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.*

காகத்தைப் பற்றி இதுவரை அறிந்திடாத அபூர்வமான தகவல்கள் இதோ.... Image
காக்கை ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம்.
ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ சக்தி நிறையவே இருக்கின்றது.
Read 25 tweets
Nov 23
*#பண்பியல்

கருத்ததரங்கு ஓன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்து சபையோருக்கு காட்டினார். 

இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?
என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின.
பின்னர் அவர் விளக்கு எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். 

சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(