#செளந்தர்ய_லஹரி
#உருவான_வரலாறு
ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார். கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம், பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள், கீழே பூலோகத்தில் இருந்து நம் கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்து Image
இருக்கிறது. இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று பேசிக் கொண்டார்கள். திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர். அவரின் இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான் Image
அவர் பிடித்தார். மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார். நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி, Image
பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார். அம்பாளை நோக்கி, அம்மா இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது. இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார்.
எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார். அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே. என்னைப் பார்த்து
தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது. நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள்” என்றாள். முதல் 41 ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்து இருந்தார்.அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59 Image
ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார். இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி! முதல் 41 ஸ்லோகங்கள் மந்திர, யந்திர, தந்திர, தத்துவ ரகசியங்களைத் தெரிவிக்கின்றன. மீதி உள்ள 59 ஸ்லோகங்களில் மிகுதியான பாகம் அம்பாளின் சௌந்தர்யத்தை துதிக்கும் வர்ணனை வடிவில்
உள்ளது. சௌந்தர்ய லஹரி வியாக்கியானங்களில் மனோரமா வியாக்கியானம், அப்பய்ய தீக்ஷிதரின் வியாக்கியானம், ஸ்ரீகண்ட தீக்ஷிதர் உரை, சுதா வித்யோதினி, ரங்கதாச வியாக்கியானம் போன்ற பல உள்ளன. சௌந்தர்ய லஹரியைக் கேட்கையில் ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இதனை எழுதுவதற்கு ஆதி சங்கரருக்கு அவருடைய பரம Image
குருவே ஸ்பூர்த்தி அளித்தார்.
சிகரிணீ என்றால் பர்வதம் என்று பொருள். அதே போல் இதன் ஸ்லோகங்கள் கூட மலை மேலே ஏறுவது போலவே இருக்கும். சிகரிணீ விருத்தம் கூட ஆரோஹண வரிசையில் நடப்பது போலவே இருக்கும். உண்மையில் யோக பரிபாஷையில் பர்வதம் என்றால் சுஷும்னா நாடியின் இறுதி பாகம் அல்லது சகஸ்ரார Image
கமலம் என்று பொருள். இன்னொரு உட்பொருள் என்னவென்றால் அம்பாள் பர்வத ராஜ புத்ரி. அம்பாளை பற்றிய ஸ்தோத்திரம் சிகரிணியில் படைக்கப்படுவது சிறப்பு. இந்த சந்தஸ்ஸில் அம்பாள் எப்படி இருப்பாள் என்றால், பிறந்த வீட்டில் பெண் குழந்தை எத்தனை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பாளோ அப்படி இருப்பாளாம்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 25
#மணி
இறைவனுக்கு அடிக்கும் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று பொருள்.

கணகணவென்று அடித்தால்
தூபம், தீபம் ஆகிறது என்று பொருள்.

இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் Image
நடக்கிறது.

மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் Image
தட்டை எடுக்க வேண்டும். பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும். இடது கையால் மணியை எடுக்கவே கூடாது. கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் துவனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட புரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக Image
Read 4 tweets
Nov 25
#நற்சிந்தனை
பக்தியிலே 9 விதமான பக்தி பற்றி பேசுகிறான் பிரஹலாதன். "நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?" என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் பிரஹலாதன்.

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதசேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம்
ஆத்மநிவேதனம் Image
இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவ லக்ஷணா
( ஶ்ரீமத் பாகவதம் ஸப்தம ஸ்கந்தம்)

1. இறைவனின் பெருமைகளைக் காதால் இடை விடாமல் கேட்பது #சிரவணம்
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து, தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

2. இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது #கீர்த்தனம்
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் மகாவிஷ்ணு முதல் கொண்டு. அதே போல சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

3. நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வது #ஸ்மரணம்
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

4. குறையாத
Read 7 tweets
Nov 25
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது #ஸ்ரீகச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாக மந்த்ர மலை இருக்க, அது கடலில் அழுந்தவே, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆமை Image
உருவெடுத்து இறைவனைப் பூஜித்ததால் இறைவனின் நாமம் கச்சபேஸ்வரர் ஆயிற்று. இந்த வரலாறு கோவிலுள் பல ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
1700ம் ஆண்டில் சென்னையில் வாழ்ந்து வந்த தளவாய் செட்டியார் சிறந்த சிவ பக்தர். கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அவர், தினமும் காஞ்சி சென்று Image
கச்சபேசுவரரை தரிசித்து வருவதை தனது வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் காஞ்சிக்குச் சென்றபோது வெள்ளப் பெருக்கால் இறைவனையும் வழிபட முடியாது, சரியான நேரத்திற்குப் பணிக்கும் செல்லமுடியாது போனது. மிகவும் மனம் வருந்திய அவர் கனவில் இறைவன் தோன்றி சென்னையிலேயே ஆலயம் அமைத்து வழிபடப் Image
Read 13 tweets
Nov 25
#MahaPeriyava who is the omnipotent Parameswara Himself, was camping in Sri Kanchi Matham, Kumbakonam. The Vyasa Puja was being held there with all glory. The ChandraMouleeswara Puja being over, all the devotees were in a hurry to get Maha Periyava's darshan, who was distributing Image
the abhisheka tIrtham (holy water of ablution) with His holy hands. A devotee's turn came in the line formed by them to receive the prasadam. Giving him the prasadam, the Mahan looked at him, raising His head. He told the devotee, "You come early tomorrow for the Veda parayanam
(recitation)."
As ordered by the Mahan the devotee came up early the next morning and participated in the occasion of Veda parayanam. When the parayanam was going on, Maha Periyava made a surprise visit, which was unusual. He noticed that the devotee who got his anugraha the
Read 9 tweets
Nov 24
#கார்த்திகை_ஸ்பெஷல் #சபரிமலை_கோவில்_சிறப்புகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் #தத்வமசி என்று எழுதப் பட்டிருக்கும். இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும். சபரி மலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல் Image
கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள், அந்த மாலை தன் நெஞ்சில் படும்போது எல்லாம், ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாகக் கூறப்படுகிறது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அந்த அரக்கியின் உடல் வளர்ந்து Image
பூமியின் மேல் பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக, அவள் உடல் மீது கனமான கல்லை வைத்ததாக தல புராணம் சொல்கிறது. இதை நினைவுகூரும் வகையில் தான் அழுதா நதியில் எடுக்கப்படும் கற்களை, பக்தர்கள் கல்லிடும் குன்று என்ற பகுதியில் போடுகிறார்கள். மனிதனின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று Image
Read 8 tweets
Nov 24
#சேலம்_அழகிரிநாதர்_கோவில், #கோட்டைப்பெருமாள்_கோவில்

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில். இது வரலாற்று சிறப்பு மிக்க வைணவத் தலங்களில் ஒன்று. சிறப்பு பெற்ற கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளின் படி, கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் ImageImage
தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும், அதற்கு ஏற்ப கோட்டை அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோயிலுக்கு முன்பு, திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக் கலைக்காக பெரிதும் அறியப் Image
படுகிறது, இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது. திருமணி முத்தாற்றில் நீராடி திருமாலை தினம் துதித்தால் துயரங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடும் என்பது ஐதீகம். அதியர்கள் காலத்தில் சமஸ்கிருத மொழி கொங்கு மண்டலத்தில் கோலோச்சியது. Image
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(