#தூயபக்தி #ஶ்ரீராமானுஜர் #அரங்கன் #சலவைத்_தொழிலாளி #ஶ்ரீவைஷ்ணவம் #விசிஷ்டாத்வைதம்
உண்மையான பக்தர்கள் மற்றவர்களை பற்றித்தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள். ஒரு சமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த
உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்ட போது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். “அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவை தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும்
அவனை மனமாறப் பாராட்டுவார். ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க, ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான். ஒருநாள் அவன்
இடம் பேசினால் தான் என்ன எனக் கேட்டார். உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். “சாமி, கிருஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே, அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும்” என்றான். “அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே
அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன்” என்றார் ரங்கநாதர் இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமானுஜர், கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்கலை எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்க பார்த்துக்குவீங்க சாமி என்றான். இதனைக் கேட்ட
ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார். உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப் படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை ஆச்சார்யனிடம் விட்டு விடுவார்கள்.

ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர், தேசிகன் திருவடிகளே சரணம்

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 16
#மார்கழி_ஸ்பெஷல் 16.12.2022 மார்கழி மாத பிறப்பு. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இந்த மாதம் தேவர்களுக்கான அதிகாலை நேரமானதால் மாதம் முழுவதும் இறை வழி பாட்டிற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப் Image
படுகிறது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வணங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில்
மேற்கொள்ளப்படுகிறது. அதிகாலை வழிபாட்டைப் பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
Read 18 tweets
Dec 16
#மார்கழி_ஸ்பெஷல்
#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி

ஆண்டாள் குரு பரம்பரைப்படி ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் வந்துதித்த பெண் குழந்தை கோதா Image
பெரியாழ்வார் இக்குழந்தையை எடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை, வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என Image
எண்ணி தினமும் கொடுத்து அனுப்புவாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு இது தகாத காரியம் என்று கோபித்துக் கொண்டார். உடனே புது மாலை தொடுத்து கோதை சூடாத மாலையை எடுத்துக் கொண்டு சென்ற போது பெருமாள் அந்தப் பெண் சூடிய மாலை தான் எனக்கு உகப்பானது அதை எடுத்து வாரும் என்றார். Image
Read 11 tweets
Dec 15
#மகாபெரியவா "சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர், நளன் வரலாற்றை #நைஷதம் என்ற பெயரில் எழுதியுள்ளார். நிஷத நாட்டு மன்னர் என்பதால் நைஷதம் என்று பெயரிடப்பட்டது. நேர்மையும், ஒழுக்கமும் கொண்டவன் நளன். அவன் அழகைக் கேள்விப்பட்ட தமயந்தி நளனைப் பார்க்காமலே காதல் கொண்டாள். ஆனால், இதை Image
அறியாத தமயந்தியின் தந்தை பீமன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். பூலோக அரசர்கள் மட்டுமில்லாமல் தேவர்களும் தமயந்தியின் அழகு கண்டு மயங்கினர். தமயந்தி நளனை விரும்பும் விஷயம் அறிந்த தேவர்கள் தாங்களும் நளன் போல உருமாறினர். சுயம்வர மண்டபத்தில் ஐந்து நளன்கள் அமர்ந்திருந்தனர். மணப்பெண்
தமயந்திக்கு சரஸ்வதி தேவி ஒவ்வொரு ராஜகுமாரன் பற்றியும் விளக்கம் அளித்தாள். அதில் இருந்த காஞ்சிபுரம் மன்னர் பற்றி, இவர் காஞ்சியில் கடல் போல பெரிய குளம் உருவாக்கியுள்ளார். ஸ்படிகம் போல தூய நீர் நிரம்பிய, அந்தக் குளத்தின் அழகை வர்ணிக்க முடியாமல் கவிஞர்களே மௌனமாகி விட்டனர். அதில்
Read 6 tweets
Dec 15
#பூதநாராயணர் திருக்கோவில் #சுருளித்தீர்த்தம்.
தேனியிலிருந்து 48 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சுருளி தீர்த்தம் என்னும் அழகிய ஊர். அங்கு மகாவிஷ்ணு, பூதநாராயண பெருமாள் எனும் திருநாமம் ஏற்று, கோயில் கொண்டிருக்கிறார். திரேதாயுகத்தில் ராவணனின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள், பின்னர் ImageImage
சுருளிமலைப் பகுதியில் இருந்த #பண்டாரத்துறை என்னும் இடத்தில் மறைந்திருந்தனர். இதை நாரதரின் மூலமாகத் தெரிந்து கொண்ட ராவணன், நாரதர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து வரும்படி, தன்னிடம் அடிமைப்பட்டு இருந்த சனீஸ்வரரை அனுப்பி வைத்தான். அவரும் வேறு வழி இல்லாமல் சுருளிமலைப் பக்கம்
வருகிறார். உடனே பெருமாள் தன் சக்ராயுதத்தை ஏவி, சனீஸ்வரரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறார். அப்படி சனீஸ்வரர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஊர்தான் #குச்சனூர். பெருமாளின் சக்ராயுதம் தடுத்துத் தாக்கியதால், குச்சனூர் சனீஸ்வரரின் இடது கரம் சேதம் அடைந்தது. அந்தக்
Read 12 tweets
Dec 15
#MahaPeriyava
When Sri Periyaval was camping at Orirukkai, a foreigner came to India. He wanted a ticket from Delhi to Mumbai. He was not able to get it. So he took the flight to Madras. When he came out of Meenambakkam he wondered where to go. He asked the taxi driver, "Is there
any self-realized leader here?"
The taxi driver replied, "The Shankaracharya Swami of Kanchipuram is here."
"Take me to Kanchipuram at once," said the man and soon reached there. Sri Periyaval was then staying in a thatched shed at Orirukkai. He was resting after taking his
bhiksha. The foreigner was very eager to see Sri Periyaval. We told him, "Please wait for sometime. Swami is taking rest."
After a while Periyaval got up, did achamana and applied vibuthi on His person, He asked us "Has he come?"
A devotee, Nagalakshmi and some other ladies were
Read 11 tweets
Dec 13
#மகாபெரியவா கட்டுரை எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாக Image
செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பரம்பரையாக வந்த வீட்டில் வசித்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பில் இருந்து வந்த வருமானம் ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி செய்தது. மகா பெரியவாளை
நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார் ராமஸ்வாமி. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. "பெரிய பெண்ணுக்கு 22வயதாகிறது. அடுத்தவளுக்கு 20. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(