#மார்கழி_ஸ்பெஷல் 16.12.2022 மார்கழி மாத பிறப்பு. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இந்த மாதம் தேவர்களுக்கான அதிகாலை நேரமானதால் மாதம் முழுவதும் இறை வழி பாட்டிற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப் Image
படுகிறது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வணங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில்
மேற்கொள்ளப்படுகிறது. அதிகாலை வழிபாட்டைப் பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் #மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி, பாவை நோன்பு, Image
திருவெம்பாவை நோன்பு, விநாயகர் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.
#திருவாதிரை திருவாதிரை பண்டிகை மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திரத்தில் ஆடலரசன் நடராஜப் பெருமானுக்காகக் கொண்டாடப் படுகிறது. திருவாதிரைக் கொண்டே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது Image
1500 ஆண்டுகள் பழமையான இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தங்களது பாடல்களில் குறிப்பிட்டு உள்ளனர். #ஆருத்ரா_தரிசனம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஆகியோரால் மிக விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. ImageImage
தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோச மங்கையிலும் சிறப்பாக வழிபாடு நடக்கிறது. திருவாதிரைக் களியும், ஏழுகறிக் கூட்டும் இறைவனுக்கு படைக்கப் படுகின்றன. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்
#வைகுண்ட_ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி
மார்கழியில் வளர்பிறையில் வரும் நன்னாள். திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். எல்லா பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு என்பது Image
முக்கிய நிகழ்சியாகும். அன்று பக்தர்கள் அனைவரும் சொர்க்க வாசல் வழியாக இறைவனை சென்று தரிசிப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்பது ஐதீகம்.
#பாவைநோன்பு
ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்கு சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயினி தேவியை வழிபட்டு நல்ல கணவன் கிடைக்க வேண்டினர். பெண்கள் கடைப்பிடித்த விரதம் என்பதால் பாவை நோன்பு என்ற பெயர் வந்தது. ஆண்டாள் பாவை நோன்பை மேற்கொண்டே அரங்கனை கணவனாக Image
அடைந்தாள். பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புற அழகில் நாட்டம் செலுத்தாமல் இறைவன் மேல் மட்டும் மனத்தினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள். எனவே கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில்
எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்கவும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

#திருவெம்பாவைநோன்பு
திருவெம்பாவை
நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப் பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும். இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின் போது ஒரு வேளை
அவித்த உணவினை மட்டுமே உண்பர். இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப் பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின் போது திருவெம்பாவை பாடல்கள் பாடப் படுகின்றன. இவ்வழிபாட்டில் பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு பிட்டு வழிபாடு என அழைக்கப்படுகிறது.

#விநாயகர்_சஷ்டிவிரதம்
இவ்விரதம்
கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி வளர் பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொண்டு, Image
கடைசி நாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவிதமான உணவுப் பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரப் பேறு ஆகியன கிடைக்கும்.

#அனுமத்_ஜெயந்தி
மார்கழி மாதத்தின் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமன் Image
ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப் படுகிறது. அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனைசெய்யப் படுகிறது. அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் அனுமன் சன்னிதி உள்ள கோவில்களிலும் தனி அனுமன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
மார்கழியை கொண்டாடுவோம். சைவ வைணவ ஒற்றுமைக்கான மாதம் மார்கழி.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 17
#வேல்மாறல் அருணகிரிநாதர் பாடிய 9 நூல்களுள், திருவகுப்பும் ஒன்று. அழகான சந்தத்தில் அமைந்த அந்த 25 வகுப்புகளுள், முருகவேள் திருக்கரத்து வேலாயுதத்தின்  பெருமையை விரிவாகக் கூறுவன வேல்வகுப்பும், வேல்வாங்குவகுப்பும். ஆண்டவனின் ஆயுதங்களை, வாகனங்களை, த்வஜங்களை (கொடி) ஓதுதலும்கூட அவனைப்
போற்றுதலைப் போலவே ஆகும்.  முருகனின் படையாம் வேலாயுதத்துக்கும் அருணகிரிநாதர் துதிகள் பாடியிருக்கிறார். அந்த இரண்டினுள் வேல்வகுப்பை எடுத்துக்கொண்டு அதன் 16 அடிகளை முன்னும்  பின்னுமாகவும், திரும்பத் திரும்பவும் அழகுறத் தொகுத்து அதன் பாராயண பலனை பன்மடங்காக்கி வேல்மாறல் என்ற பெயரில்
1923ம் ஆண்டில், மந்திர  நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள். சாக்த வழிபாட்டில் உள்ள பல்லவ ப்ரயோக முறையின்படி, 16 x 4 = 64 அடிகளிலும், ‘திருத்தணியில் உதித்தருளும்… வேலே’ எனும் வேல்வகுப்பின் 16வது  அடியை  ஓதுமாறு செய்தும், தொடக்கத்திலும்
Read 4 tweets
Dec 17
#வள்ளிமலை_சச்சிதானந்த_ஸ்வாமிகள் என்று ஒரு மகான் இருந்தார். இன்று நாம் எல்லோரும், உலகம் முழுக்க #திருப்புகழ் படிக்கிறோம் என்றால் அது அந்த வள்ளிமலை ஸ்வாமிகள் அளித்த அருட்கொடை என்றே கூறலாம். அவர் ஓர் வள்ளல். அவர் திருப்புகழை விடாமல் அவர் காலம் முழுவதும் எல்லா இடங்களிலும் கானம் Image
செய்ததால் தான் நாம் இன்று இவ்வளவு பேர் திருப்புகழை படிக்கிறோம். அவருக்கு ஆரம்பத்தில் அர்த்தநாரி என்ற பெயர். சின்ன வயதில் வறுமையினால் படிக்க முடியவில்லை. அவர் தன் மாமாவுடன் சமையல் வேலை செய்ய மைசூர் அரண்மனை போய்விட்டார்.
நல்ல புத்திமான். அதனாலே, நல்ல சமையல் செய்ய வந்தது.
கெட்டிக்காரராய் இருந்தார். எல்லோரிடமும் நல்ல பேர் வாங்கினார். ரொம்ப புஷ்டியாக பயில்வானாய் இருந்தார். அதனால் மல்யுத்தம் போடும் அளவிற்கு நல்ல சக்திமானாகவும் இருந்தார்.
புத்திமானாகவும் சக்திமானாகவும் இருந்தவருக்கு பக்திமானாக ஆகும் வேளை வந்தது. திடீரென்று நாற்பது வயதில், மனைவி
Read 25 tweets
Dec 17
இன்று #ஸ்ரீசேஷாத்ரி_ஸ்வாமிகள் ஆராதனை தினம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு சிவபெருமானே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து சன்யாசம் தந்தார். அவரின் அப்பா அம்மா அவர் Image
சின்ன வயதில் இருக்கும் போதே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாக்ஷி கோயிலை ப்ரதக்ஷிணம் செய்வார்”, என்று ஸ்ரீ #மஹாபெரியவா கோவிந்த தாமோதர சுவாமிகளிடம் சொல்லி இருக்கிறார். அப்பேற்பட்ட மகான். அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. அவரை அவரின்
சித்தி சித்தப்பா தான் வளர்க்கிறார்கள். ஶ்ரீ பாலாஜி சுவாமிகளிடம் இருந்து சன்யாசம் பெற்ற பிறகு, நான் ஒரு சன்யாசி வீட்டுக்குள் வரமாட்டேன் என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவிற்கு, இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ என்று கவலை வந்து விடுகிறது. அப்போது ஒரு நாள்,
Read 10 tweets
Dec 17
#சூர்தாஸ் #பக்தி
நந்தவனத்தில் ஒருநாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அசைந்தவாரே இருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத் தான் Image
ரசிக்கிறீர்களோ என்று கோபித்தாள் ராதை. என்ன அருமையான பாடல்,
சூர்தாஸரின் பாடல்! அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப்போடுகிறார் என்றார். எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்துவிட்டு வருகிரேன் என கிளம்பினாள்
ராதை. நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார். சூர்தாஸ் பாடிக் கொண்டு இருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள். அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம்
Read 7 tweets
Dec 17
#MahaPeriyava
Sri Maha Periyava was travelling to SriSailam through a path that went through a jungle. He asked the people in his entourage to do parayana (recitation) of the Vishnu Sahasranamam and walk their way.
However slowly recited, the Vishnu Sahasranamam would be over in Image
half an hour. But on that day, for whatever reason, the shishyas were not able to recite the stotram in unison and had to repeat the stanzas whenever a mistake was committed. The next camping site was also not in sight. Periyava said, "Neither does the Sahasranamam seem to end,
nor does the village of our destination seem to arrive."
After a long time they reached the village of their camping. Periyava said humorously, "You people did not recite Vishnu Sahasranamam. You have done a Laksharchana for Vishnu!"
Their night stay was at the Perumal temple in
Read 7 tweets
Dec 17
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவந்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்து இருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. Image
அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர். ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம் என
பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள். ஆச்சார்யர்கள் சொன்னதை விட, ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார். “கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார சேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(