#மகாபெரியவா
பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, "பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. "அதுதான் சூரியன்” என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால்
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும் என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. தீபாவளிக்கு தானே நாம் வடை செய்வோம். பொங்கலுக்கும் அது உண்டு. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக
இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம். பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும். அவர் பூஜிக்கும் சந்திர மௌவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை,
மாவிலை தோரணங்கள் கட்டப் படும். காட்டுப் பூக்களால் மடத்தை அலங்காரம் செய்வார்கள். பொங்கலன்று அதிகாலையே, பெரியவர் சூரிய நமஸ்காரம் செய்து சூரிய நாராயண பூஜை செய்வார். புதுப்பானையில் சர்க்கரை பொங்கல் இடப்படும். அதை கற்கண்டு, கனி வகை, உளுந்து வடை, வழுக்கை தேங்காயுடன் சூரியனுக்கு
நைவேத்யம் செய்வார். பிறகு, அதை பக்தர்களுக்கு விநியோகிக்க உத்தரவிடுவார். சூரியனுக்கு நாம் இதுவரை வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்யாமல் இருந்தால், இனி வரும் காலங்களில் நிச்சயமாக செய்ய வேண்டும். வரும் ரதசப்தமியன்று (சூரியனுக்குரிய முக்கிய திதி) கூடசெய்யலாம். காரணம், இது மகாபெரியவரின்
அருள்வாக்கு. நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். நினைத்தது நடக்கும் என்று அவர் அருள் செய்துள்ளார். மேலும், பொங்கலன்று உணவில் பரங்கிக்காய், பூசணிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு ஆகியவை அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பொங்கலன்று தன்னைத் தரிசிக்க வரும் ஆண்களிடம், "குழந்தைகளை திட்டாதீங்கோ' என்று சொல்லி ஆசி வழங்குவார். பெண்களிடம், "நாளை கணுப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) கொண்டாடுங்க,'' என்பார். அத்துடன், மகாபாரத எடுத்துக்காட்டு ஒன்றும் அவர்களிடம் சொல்வார். பாஞ்சாலியை துயில் உறிந்த போது, அவளது சகோதரன்
கண்ணனை எண்ணி, "கண்ணா! கண்ணா!' என கதறினாள். அவன் ஓடி வந்து காப்பாற்றினான். நீங்களும் இந்தநாளில், உங்கள் உடன் பிறந்தவர்கள் நலமாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் உடன் பிறந்த சகோதரர்கள், உங்கள் குழந்தைகைளுக்கு மாமா முறை வேண்டும். ‘மா..மா..' என்ற சொல்லுக்கே, ‘பெரிய.. பெரிய' என்று
தானே பொருள் என்பார். இப்படியாக, பொங்கல் திருநாளை பொருள் பொதிந்ததாக கொண்டாட அறிவுறுத்தியவர் மகாபெரியவர்.
பொங்கலோ பொங்கல்!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 16
#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம் Image
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.
Read 52 tweets
Jan 16
#MahaPeriyava MahaPeriyava asked the devotees which deity has no teeth. None knew the answer. He said the Sun God does not have teeth. So for every #Pongal He offered the inside of tender coconut which is very soft to SunGod. Also He offered vada made from urud dhal which is soft
Also bananas were important as offering to Sun God. Whenever He was in Kanchipuram during Pongal the place was cleaned and the walls painted in stripes of white and saffron. Maha Periyava will do Surya Namaskar in the morning and along with sweet Pongal, soft vada, tender coconut
And bananas offered to the Sun God, He will ask the Matam employees to distribute the prasadham to all the devotees. If so far we had not offered this let us start doing it from now on. When men folk came to Him for blessings on He will advice them not to scold. If it were women
Read 4 tweets
Jan 16
#MahaPeriyava
Sri Maha Periyava's power of memory is incredible. It was His speciality to keep every little thing keenly in His mind and express it at the right time. We shall recollect one such incident here. This sage was a cherisher of nature and solitude. He liked staying in
places such as open sheds and choultries, shade of trees and roadside places during his yatra.
He was touring in the state of Andhra Pradesh once. He stayed in a shed by the roadside. A devotee came in a car to have a darshan of Sri Maha Periyava.
"My name is Kalyanam. I am
appellate authority in the customs department. I belong to the Thanjai district. There are lots of problems in my family, there is no peace of mind. Only Periyava should solve them. This is the reason why I have come for darshan."
Periyava asked him to sit down and heard his
Read 13 tweets
Jan 16
#சிருங்கேரி_சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி) திருக்கோயில் வரலாறு

அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்
(கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும். குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா
பீடம். சிருங்கேரி சாரதா மடம் கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் 7/8 நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யஜுர் வேதப் பிரிவு. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும்
Read 43 tweets
Jan 15
#கடவுள்_எங்கே கடவுளைக் காண்பிக்க இயலுமா? நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? என சிலர் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க
வேண்டும் என கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் பார்க்கிறார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர் பார்வையிலிருந்து வேறுபட்டுகிறது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர்
பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகிறது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும் பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கிறோம்! கீதையில் கிருஷ்ணர், ‘நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:’ நான் அனைவருக்கும் என்னை வெளிப்
Read 7 tweets
Jan 15
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ராயவரம் பாலு,ஸ்ரீமடம்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள் பெரியவாள்.
சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும்,
மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் உருகிப் போய்விடுவார்கள் பெரியவாள். அதிஷ்டானத்தில், ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவில் நின்று
கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ, யாரும் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள் அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(