#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம்
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.
மஹா பெரியவா பக்தர். நல்ல மனுஷன். அவருடைய தகப்பனாருக்கு "சதாபிஷேகம்" அதை நன்னா விமரிசையா நடத்தணும்னு
பிரியப்படறார். அதுவும் நாகப்பட்டினம் மகாதேவ சாஸ்திரிகள் தான் நடத்தி வைக்கணும்னு ரொம்ப பிரியப்படறார். உங்களை பத்தி நிறைய கேள்விபட்டிருக்கார். அவர் உங்களுக்கு ஒரு லெட்டர் கொடுத்து
விட்டிருக்கார்" என்றார் வந்த சுப்பண்ணா சாஸ்திரிகள். "இங்க சென்னையிலேர்ந்து உங்களையும் சேர்த்து 11பேர் ஏற்பாடு ஆகியிருக்கு. நீங்க இல்லாம எங்களால போகமுடியாது. நீங்க சரின்னு சொன்னா நாங்க சந்தோஷப்படுவோம். எல்லாருக்கும் டெல்லி போகவர ரெயில்ல 1st class ticket, நல்ல சம்பாவனை, தானங்கள்,
எல்லாருக்கும் பட்டு வஸ்த்ரம், பார்யாளுக்கும் பட்டு புடவை, அப்படி, இப்படீன்னு ஏகப்பட்டது. நீங்க நல்லா யோஜனை பண்ணி சரின்னு சொல்லணும்" என்றார் சுப்பண்ணா சாஸ்திரிகள். இந்த மாசம் 26ஆம் தேதி சதாபிஷேகம், நாம 23ஆம் தேதி அங்க இருக்கணும். இங்கேயிருந்து 21ஆம் தேதியே புறப்படறோம். மறுபடியும்
28ஆம் தேதி புறப்பட்டு 30ஆம் தேதி இங்க வரோம்" என்றார்.
"நீங்க சொல்ற அதே தேதியில என்னோட உபாத்யாயத்துல ஒரு சிராத்தம், ரொம்பவும் சிரமப்படற குடும்பம். இப்பதான் அந்த பையன் கொஞ்சம் தலையெடுத்திருக்கான். அந்த பையனோட அப்பா என்னோட நண்பர் வேற. சாதாரணமா நான் எந்த சிரார்தத்துக்கும் சம்பாவனை
வாங்கிறது இல்லை. பிராமணாளுக்கு மட்டும் வாங்கி குடுத்துடுவேன். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் அந்த பையன் சந்துரு இங்க வந்து சிரார்தத்த ஞாபக படுத்திட்டு போனான். அதனால அந்த சிரார்தத்தை உதறி தள்ளிட்டு என்னால டெல்லிக்கு வரமுடியாது. நீங்க வேற யாரையாவது பாருங்கோ" என்றார் மகாதேவ
சாஸ்திரிகள். "சாஸ்திரிகளே சிராத்தம் வருஷமா வருஷம் வரும். ஆனா சதாபிஷேகம் வருமா. அதுவும் இல்லாம நீரோ சிரார்தத்தை தர்மமாத்தான் பண்ணி வைக்கப் போகிறீர். வருமானமும் இல்லே, ஆனா சதாபிஷேகத்தை பண்ணி வெச்சா, நல்லா வருமானமும் வரும், நமக்கு நல்ல பேரும் கிடைக்கும். அதனால நீங்க சரின்னு
சொல்லுங்கோ" என்றார்
"உங்க எல்லோருக்கும் சொல்றேன், எனக்கு வருமானம் முக்கியமில்லை. என்னோட தன்மானமும், மனுஷாளோட அபிமானமும் தான் முக்கியம். என்னை வற்புறுத்தாதீங்க" என்றார். இவர்கள், பேசுவதை கதவுக்கு பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மகாதேவ சாஸ்திரி மனைவி கௌரி, உள்ளே வரச் சொல்லி
குரல் கொடுக்க "ஒரு நிமிஷம்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார். "உங்களுக்கு புத்தி பிசகிபோச்சா, தானா வர்ற சீதேவியை வேண்டாம்னு சொல்றவர் நீங்களாத்தான் இருக்கும்" என்று சொன்னவள், மடமடவென்று வெளியில் வந்து சாஸ்திரிகளைப் பார்த்து, "இத பாருங்கோ மாமா உங்களோட டெல்லிக்கு வருவார். அதுக்க
நான் பொறுப்பு. நீங்க மத்த ஏற்பாட்டை பண்ணுங்கோ" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
"ரொம்ப சந்தோஷம் மாமி, உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை வருகிறேன்" என்று கிளம்பினார்.
"கௌரி, நீ செய்யறது ஒனக்கே அடுக்குமா? பாவம் அந்த பையன் அம்பி என்னைதான் நம்பியிருக்கான். ஏழைபட்ட
பையன். அவாத்துக்கு வரேன்னு சொல்லிட்டு, போகாத போனா, அது நான் பண்ற இந்த வைதீகத்துக்கு துரோகமாகாதா" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"துரோகம்னு சொல்லாதீங்கோ, சமயோஜிதம்னு சொல்லுங்க. ஏன்னா நீங்கதான் போய் சிராதத்தை பண்ணி வைக்கணும்னு எதாவது கண்டிஷன் இருக்கா? உங்க சிஷ்யன் இருக்கானே சீமாச்சு
அவனை அனுப்பி அந்த சிரார்தத்தை பண்ணி வைக்கச் சொல்லுங்கோ. அவனும் நன்னா சிராத்தம் பண்ணி வைக்கிறான்னு நீங்கதான் அடிக்கடி சொல்வேளே. அவனுக்கு இது ஒரு சந்தர்பமா அமையட்டுமே. நானே சீமாச்சுவை வரவழைச்சு சம்பாவனை, தட்சிணை, எல்லாத்தையும் குடுத்து விஷயத்தையும் சொல்லிடறேன். நீங்க கவலைப்படாம
டெல்லிக்கு போறவழியை பாருங்கோ. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்." என்று பொரிந்து தள்ளினாள்.
"ஏண்டீ, நான் போக போறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. நீ புடவையை பத்தி கனவு காண ஆரம்பிச்சுட்ட. ஒனக்கு புடவை வேணுங்கிறதுக்காக நான் தர்மத்த மீறணுமா" என்றார்.
"உங்களை யாரும் தர்மத்தை மீற
சொல்லலை. வேற ஏற்பாடு பண்ணிட்டு போகலாமேன்னு சொன்னேன்" என்றாள் கௌரி. பெரிய வாக்குவாதம் தொடர்ந்தது. இறுதியில் மிக மன வருத்தத்துடன் மகாதேவா சாஸ்திரிகள் மனைவியின் விருப்பத்திற்கு இணங்கினார். (மனத்துக்குள் பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரம் ஏறித்தானே ஆகணும் என்று மனத்திற்குள் சொல்லிக்
கொண்டார்) பின் அங்கே இருந்த மஹா பெரியவரின் படத்தை பார்த்து கை கூப்பிய படி "மஹா பெரியவா என்னை மன்னிச்சுடுங்கோ" என்றார் கண்கள் கலங்க.
சாஸ்திரிகள் கோஷ்டி சொன்னபடியே டெல்லி கிளம்பி போய்விட்டார்கள்.
26ஆம் தேதி, காலை ஒன்பது மணியிலேர்ந்து சந்துரு வாசலுக்கும், உள்ளுக்கும் அலைந்து கொண்டு
இருந்தான். அவனுடைய அம்மா விடியற்காலை அஞ்சு மணிக்கே எழுந்து வீட்டையெல்லாம் பெருக்கி துடைச்சு, குளிச்கி மடியா சிராத்த சமையலை சிரத்தையோட ஒன்பது மணிக்குள்ள தயார் பண்ணி விட்டாள். சரியாக ஒன்பதரை மணிக்கு பிராமணாளும் வந்து விட்டனர். சந்துரு சீமாச்சு வாத்யாருக்காக காத்துக் கொண்டிருந்தான்
மணி பத்தரையும் ஆயிற்று அப்பவும் வரவில்லை. சந்துருவுக்கு நிலை கொள்ள வில்லை. மகாதேவா சாஸ்திரி வீட்டுக்கு ஓடினான். "மாமி இன்னும் சீமாச்சு மாமா வரலை, அங்க பிராமணாள் வந்து ரெண்டு மணி நேரமா காத்துக்கொண்டு இருக்கா. மணியும் 11 ஆயிடுத்து" என்றதும், "என்னடா சொல்றே அம்பி, சீமாச்சு வரலையா"
என்றவள் 'ஐயோ என் வயத்துல புளியை கறைக்கிறதே. ஐயோ நான் என்ன பண்ணுவேன். ஒண்ணுமே புரியலையே. பகவானே நான் தப்பு பண்ணிட்டேன்' என்று புலம்பி கொண்டே சந்துருவை பார்த்து, "அம்பி நீ கவலைப்படாதே, சீமாச்சசு கண்டிப்பா வந்துடுவான் சிரார்த்தம் நன்னா நடக்கும். மஹா பெரியவாளை நம்பு. நீ ஆத்துக்குப்
போறதுக்குள்ள சீமாச்சசு அங்க இருப்பான். சீக்கிரம் ஆத்துக்கு போப்பா" என்றாள்.
வீட்டுக்கு வந்த சந்துரு சீமாச்சு இன்னும் வராதது கண்டு உடைந்து போனான். மணியோ 11.15ஆகி விட்டது. அவன் கண்களில் நீர் தளும்பியது அவன் அம்மாவோ "என்னடா குழந்தே இன்னும் அந்த சீமாச்சு வாத்தியார் வரலியே. நாழி
ஆயிண்டிருக்கு, பாவம் பிராமணாள் பசியோட காத்திண்டிருக்கா. பகவான் ஏன் இப்படி சோதனை பண்றானோ தெரியலையே" என்றபடியே அங்கு மாட்டியிருந்த மஹா பெரியவா படத்தை பார்த்து, "பகவானே இன்னிக்கு சிராத்தம் நல்லபடியா நடக்கணும். நீங்கதான் அனுக்கிரஹம் பண்ணனும் மஹா பெரியவா" சொன்னவள் தன்னையும் மீறி அழுது
விட்டாள். சந்துருவை அனுப்பிவிட்டு உள்ளே வந்த மகாதேவ சாஸ்திரிகள் மனைவி பூஜை அறையிலிருந்த பெரியவா படத்துக்கு முன்னால போய் நின்னு கண்களில் நீர் தளும்ப "மஹா பெரியவா நான் பெரிய பாவம் பண்ணிட்டேன். அல்பம் ஒரு பட்டு புடவைக்கு ஆசைப்பட்டு இவரை தர்மத்தை மீறச் சொன்னேன். பாவம், அந்த சீமாச்சு
அவனுக்கு என்ன ஆச்சோ. எனக்கு புத்தி வந்துடுத்து மஹா பெரியவா. இனிமே இப்படி ஒரு காரியம் பண்ண மாட்டேன்,என்னை மன்னிச்சுடுங்கோ. அம்பியோட அப்பா சிரார்தம் எந்த பங்கமும் இல்லாம நல்லபடியா நடக்கணும். அதுக்கு நீங்கதான் அனுகிரஹம் பண்ணனும் மஹா பெரியவா" என்று கதறி விட்டாள். மணி 11.40 இருக்கும்
ஆட்டோ ஒன்று சந்துரு வீட்டு வாசலில் வந்து நிற்க, அதிலிருந்து சாஸ்திரிகள் போல் ஒருவர் கையில் பையுடன் இறங்கினார். அவரை பார்த்ததும் சந்துரு "வாங்கோ மாமா, வாங்கோ, சீமாச்சு மாமா உங்களை அனுப்பினாரா. ஏன் அவருக்கு என்னாச்சு" என்று படபடன்னு கேட்க, அவர் ஒன்றும் புரியாமல், "சீமாச்சுன்னு
யாரையும் எனக்கு தெரியாதே. ஏன் என்ன விஷயம்" என்றார். "மாமா இன்னிக்கு அப்பாவோட சிரார்த்தம், சீமாச்சு மாமா வரேன்னு சொல்லியிருந்தார். பிராமணாள் வந்து ரெண்டு மணி நேரமா பசியோட காத்திண்டிருக்கா. ஆனா அவர் இன்னும் வரலை. அதுதான் உங்களை அப்படி கேட்டேன்" என்றான் சந்துரு.
"அடப்பாவமே மணி
ஆயிண்டிருக்கே. நீ கவலைப்படாதேப்பா. நீ சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாயிடு. சிராத்தம் நிக்க கூடாது நான் பண்ணி வைக்கிறேன்" என்று சொல்லியபடியே உள்ளே வந்தார். பிறகு மடமடவென காரியங்கள் நடந்து சிரார்தம் நல்லபடியாக முடிந்தது. சந்துருவும், அவனுடைய அம்மாவும் வந்தவரின் காலில் விழுந்து
நமஸ்காரம் பண்ணி, "மாமா தெய்வம் போல் வந்து இவனோட அப்பா சிராத்தத்தை கிரமமா நடத்தி கொடுத்திட்டேள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எங்களுக்கு தெரியலை" என்று ஆனந்தக் கண்ணீருடன் சொன்னாள்.
"நீங்க என்ன சொல்றேள். நான் நடத்தி குடுத்தேனா. எல்லாம் மஹா பெரியவா அனுக்கிரஹம்தான் இதை நடத்தி
வெச்சது. என்னை இங்கே அனுப்பி வெச்சதே அவர்தான்" என்றார்.
"மாமா, நீங்க என்ன சொல்றேள்னு
எங்களுக்கு புரியலையே" என்றாள் சந்துருவின் அம்மா.
"மாமி, என் பேர் வைதீகம் வைத்யநாதன், என் சொந்த ஊர் காஞ்சீபுரத்துக்கு பக்கத்துல காவேரிபாக்கம். எனக்கு ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கா. தெரிஞ்சவ
மூலமா எனக்கு ஒரு பையனோட ஜாதகம் கிடைச்சது. என் பொண்ணோட ஜாதகமும் அந்த பையனோட ஜாதகமும் நன்னா பொருந்தியிருக்கு. பையனோட பேர் கூட ராமச்சந்திரன்னு போட்டிருந்தது"
அம்மாவும், பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வைத்யநாதன் தொடர்ந்து பேசினார், "ரெண்டு ஜாதகமும் நல்லா பொருந்தி
இருந்ததால, மஹா பெரியவாகிட்ட போய் இந்த எடமாவது அமையுமான்னு கேக்கலாம்னு நினைச்சுண்டு கார்த்தாலயே மடத்துக்கு போயிட்டேன். ஆனா பெரியவா என் மனசுல இருக்கிறதை எப்படி புரிஞ்சுண்டாரோ தெரியலை. என்னை பார்த்த உடனேயே, நீ என்ன நினைச்சு வந்தியோ அது நல்லபடியா முடியும்னு அனுக்கிரஹம் பண்ணி, உடனே
அங்க கிளம்புன்னு உத்திரவு போட்டார். நானும் உடனே கிளம்பி இங்க வந்தேன். வந்த இடத்துலே ஒரு பித்ரு காரியம் பண்ணி வைச்ச புண்யம் கிடைச்சது. அதனால்தான் சொன்னேன் இத பெரியவாதான் நடத்தி வெச்சார்னு"
"ஆமாம் மாமா, வாத்யார் வராததால சிரார்தம் நின்னு போயிடுமோன்னு பயந்து, மஹா பெரியவாகிட்ட கண்ணீர்
விட்டு பிரார்த்தனை பண்ணிண்டேன். என் பிரார்த்தனை வீண் போகலை. பகவானோட கருணை கிடைச்சுடுத்து" என்றவள், "மாமா நீங்க சொன்ன ராமச்சந்திரன் என் பையன்தான், ஆத்துல சந்துருன்னு கூப்பிடுவோம்" என்றாள். உடனே அம்மா சந்துருவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இத பாருங்கோ மாமா உங்க பொண்ணு கருப்போ,
சிவப்போ படிச்சவளோ படிக்காதவளோ எங்களுக்கு தெரியாது. ஆனா அவதான் எனக்கு மாட்டுப்பொண்ணு, என் பிள்ளைக்கு பொண்டாட்டி, இத நான் மஹா பெரியவரோட அனுக்கிரஹமாகவும், இவன் அப்பாவோட ஆசீர்வாதமாகவும் எடுத்துக்கிறேன். நீங்க மத்த ஏற்ப்பாட்டை தாராளமா கவனிக்கலாம்" என்றாள் மகிழ்வோடு.
"ரொம்ப சந்தோஷம்
எல்லாம் பெரியவா அனுக்கிரஹம்தான். இதுல இன்னொரு அம்சம், என் பொண்ணு பேரு ஜானகி, உங்க பிள்ளையோட பேரு ராமச்சந்திரன், பேர் பொருத்தம் நன்னா அமைஞ்சிருக்கு பாருங்கோ. இதுவும் ஒரு நல்ல சகுனம் தான்" என்றவர் "என் பொண்ணு அழகாகவே இருப்பா, நன்னா படிச்சிருக்கா. ஆனா அவ வேலைக்கு போகலை. வேலைக்கு
போகவும் அவ பிரியப் படலை. இந்தாங்க அவளோட போட்டோ" என்று ஒரு போட்டோவை குடுக்க, வாங்கி பார்த்த இருவரின் முகத்திலும் திருப்தியின் சாயல் தெரிந்தது.
டெல்லியிலிருந்து சென்னை வந்து கொண்டு
இடிருந்த G.T.Express ல் மகாதேவ சாஸ்திரிகளும், அவருடன் டெல்லிக்கு சென்றோரும் சோகத்துடன்
திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரணம், சதாபிஷேகம் செய்து கொள்ளப் போகும் பெரியவருக்கு தீடீரென்று உடம்பு சரியில்லாமல் போக மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். சதாபிஷேகமும் நின்று விட்டது. இதனால் இவர்களையும் 26ஆம் தேதியே ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விட்டனர் அது மட்டுமில்லை, மகாதேவ
சாஸ்திரிகளின் கழுத்தில்தொங்கிக் கொண்டிருந்த தங்க பூண் போட்ட ருத்திராட்சத்தோடு கூடிய அஞ்சு பவுன் தங்க சங்கிலியை, இருட்டில் யாரோ திருடன் அடித்துக் கொண்டு போய் விட்டான். இந்த இரண்டு சம்பவங்களும் அவர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது. மகாதேவ சாஸ்திரிகளின் முகம் இறுகிப்
போயிருந்தது. அந்த மௌனத்தை கலைத்தார் சுப்பண்ணா சாஸ்திரிகள்.
"அண்ணா, நீங்க பெரிய மனசு பண்ணி, எங்களை மன்னிக்கணும். வரமுடியாது சொன்ன உங்களை நாங்க வலுக்கட்டாயமா டெல்லிக்கு அழைச்சுண்டு வந்தோம். எங்களால உங்களுக்கு ஒரு பெரிய நஷ்டம் வந்துடுத்து. நாங்க நினைச்சது ஒண்ணு, ஆனா நடந்தது ஒண்ணு.
தயவுசெய்து எங்களை தப்பா மட்டும் நினைக்காதீங்கண்ணா" என்றார்.
"இத பாருங்கோ சாஸ்திரிகளே, நாம ஒரு விஷயம் நன்னா தெரிஞ்சுக்கணும், பகவான் நமக்கு குடுக்கணும்னு நினைச்சுட்டான்னா அதை யார் தடுத்தாலும் சரி, கண்டிப்பா அது நமக்கு கிடைக்கும். அதே சமயம் பகவான் நமக்கு குடுக்க கூடாதுன்னு
நினைத்தால், அது யார் குடுத்தாலும் நமக்கு கிடைக்காம போயிடும். எனக்கு என் சங்கிலி போனது கூட பெரிசா தோணலை. பாவம் அந்த பையன் சந்துருவோட அப்பா சிரார்தம் நல்லபடியா நடந்ததான்னு தெரியலை. அதுதான் எனக்கு கவலையா இருக்கு" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"நாங்க தப்பு, பண்ணிட்டோம் சாஸ்திரிகளே.
வேதங்களை நன்னா அப்பியாசம் பண்ணி, அதுலேர்ந்து துளி கூட பிசகாம, பக்தி சிரத்தையோடும், தர்ம சிந்தனையோடும், வைதீக தர்மத்தோடும், கர்மாக்களை சாஸ்த்ர ரீதியோட பண்ணி வெச்சிண்டிருக்கிற உங்களை போய், எங்களோட சுயநலத்துக்காக தப்பு பண்ண வெச்சுட்டோம். நல்ல வருமானம் போயிடுமேன்ற எண்ணம், எங்களை
இப்படி ஒரு பாவம் பண்ண வெச்சது. இனிமே நாங்களும் தர்மத்துக்கு விரோதமாக நடக்க மாட்டோம். நீங்க எங்களை மன்னிச்சேள்னு சொன்னாதான் எங்களோட குற்ற உணர்ச்சி எங்களை விட்டு போகும்" என்றார் இன்னொரு சாஸ்திரிகள் வருத்தத்தோடு.
"இதுல, உங்களோட தப்பு, எதுவுமே இல்லை. இது எல்லாமே விதியோட விளையாட்டு.
நான் ஏதோ பாவம் பண்ணியிருக்கேன். அதனால்தான் கல்யாணம் ஆகி இத்தனை நாள் வரை என் சொல்லுக்கு மறுபேச்சு பேசாத என் ஆத்துக்காரி, அல்பம் ஒரு பட்டு புடவைக்கு ஆசைபட்டு, என்னை தர்மத்தை மீறச் சொல்லியிருப்பாளா? நானும் அதை மீறினதாலதானே இந்த நஷ்டமும், ஒரு அபகீர்த்தியும் எனக்கு ஏற்பட்டது. நடந்த
சம்பவத்துக்காக நீங்க யாரும் வருத்தப் படவேண்டாம் " என்று அவர்களை தேற்றினார் மகாதேவ சாஸ்திரிகள்.
"சாஸ்திரிகளே, அடுத்த ஸ்டேஷன்ல வண்டி அரை மணி நேரம் நிக்கும், நீங்க வேணும்னா அந்த பையனோட பேங்குக்கு போன் பண்ணி அவனிடம் சிரார்த்தம் பத்தின விவரத்தை கேளுங்கோ" என்று சொன்னார் ஒரு சாஸ்திரி.
அவர் அவனுக்கு போன் பண்ணி, "அம்பி என்னை மன்னிச்சுடுடா. நான் உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேண்டா, அதுக்குண்டான தண்டனையை பகவான் எனக்கு குடுத்துட்டான். எனக்கு இப்ப தெரிய வேண்டியது உன்னோட அப்பா சிராத்தம் நன்னா நடந்ததா? சீமாச்சு சிரார்தத்தை நன்னா பண்ணி வெச்சானா? அத சொல்லு" என்று அழாத
குறையாக கேட்டார். "மாமா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்கோ. ஏதோ போறாது காலம் அதான் இப்படி நடந்துடுத்து. நீங்க கவலைப் படாதீங்க, அப்பாவோட சிரார்தம் மஹா பெரியவாளோட அனுக்கரஹத்தினாலும் உங்களோட
ஆசீர்வாதத்தினாலும் நல்லபடியா நடந்தது. பாவம் இந்த சீமாச்சு மாமா எங்காத்துக்கு வர்ற வழியில
சைக்கிள்ளேர்ந்து கீழே விழுந்து அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி அடிப்படிருக்கு." என்றவன் நடந்த விஷயங்கள் அத்தனையும் சொல்லி முடித்து, "மாமா இன்னொரு நல்ல விஷயமும் நடந்திருக்கு, நான் அன்னிக்கு ஆத்துக்கு வந்த போது, ஒனக்கு சீக்கிரமே கல்யாணம் நடந்துடும்னு சொல்லி ஆசீர்வாதம்
பண்ணீங்களே. அது பலிச்சுடுத்து மாமா. என் கல்யாணமும் மஹா பெரியவா அனுக்கரஹத்தினால சீக்கிரம் நடக்க போறது. நீங்க நடந்த எதையும் மனசுல வெச்சிக்காம, ஊருக்கு வந்து, நீங்களும்
மாமியும்தான் என் கல்யாணத்தை நடத்தி வெக்கணும்" என்றான் சந்தோஷத்துடன் சந்துரு.
ஒருவர் வாழ்க்கையில விளையாடற விதியானது
அவர்களுக்கு துன்பத்தை தந்தாலும், அதே விதி இன்னொருத்தருக்கு நல்லது செய்கிறது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மஹாதேவ சாஸ்திரிகளுக்கு, நஷ்டத்தையும், வருமான இழப்பையும், ஏற்படுத்தின விதி, சந்துரு அப்பா சிராத்தத்தை நடத்தி கொடுத்து
அவன் கல்யாணத்தையும் நிச்சயம் பண்ணி உள்ளது. பகவான் அருளால்
இந்த பூமியில மனிதப் பிறவிகளாய் பிறந்த நாம எல்லோரும் விதியோட கோரப் பிடியில சிக்காமால் இருக்க, நாம நல்லவர்களா இருந்தா மட்டும் போதாது, நீதி, நியாயம், நேர்மை, தர்மம், அன்பு, தெய்வபக்தி இவைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது இந்த கதையின் சாராம்சம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#MahaPeriyava MahaPeriyava asked the devotees which deity has no teeth. None knew the answer. He said the Sun God does not have teeth. So for every #Pongal He offered the inside of tender coconut which is very soft to SunGod. Also He offered vada made from urud dhal which is soft
Also bananas were important as offering to Sun God. Whenever He was in Kanchipuram during Pongal the place was cleaned and the walls painted in stripes of white and saffron. Maha Periyava will do Surya Namaskar in the morning and along with sweet Pongal, soft vada, tender coconut
And bananas offered to the Sun God, He will ask the Matam employees to distribute the prasadham to all the devotees. If so far we had not offered this let us start doing it from now on. When men folk came to Him for blessings on He will advice them not to scold. If it were women
#MahaPeriyava
Sri Maha Periyava's power of memory is incredible. It was His speciality to keep every little thing keenly in His mind and express it at the right time. We shall recollect one such incident here. This sage was a cherisher of nature and solitude. He liked staying in
places such as open sheds and choultries, shade of trees and roadside places during his yatra.
He was touring in the state of Andhra Pradesh once. He stayed in a shed by the roadside. A devotee came in a car to have a darshan of Sri Maha Periyava.
"My name is Kalyanam. I am
appellate authority in the customs department. I belong to the Thanjai district. There are lots of problems in my family, there is no peace of mind. Only Periyava should solve them. This is the reason why I have come for darshan."
Periyava asked him to sit down and heard his
#மகாபெரியவா
பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, "பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. "அதுதான் சூரியன்” என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால்
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும் என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. தீபாவளிக்கு தானே நாம் வடை செய்வோம். பொங்கலுக்கும் அது உண்டு. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக
இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம். பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும். அவர் பூஜிக்கும் சந்திர மௌவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை,
அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்
(கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும். குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா
பீடம். சிருங்கேரி சாரதா மடம் கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் 7/8 நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யஜுர் வேதப் பிரிவு. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும்
#கடவுள்_எங்கே கடவுளைக் காண்பிக்க இயலுமா? நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? என சிலர் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க
வேண்டும் என கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் பார்க்கிறார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர் பார்வையிலிருந்து வேறுபட்டுகிறது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர்
பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகிறது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும் பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கிறோம்! கீதையில் கிருஷ்ணர், ‘நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:’ நான் அனைவருக்கும் என்னை வெளிப்
மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் உருகிப் போய்விடுவார்கள் பெரியவாள். அதிஷ்டானத்தில், ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவில் நின்று
கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ, யாரும் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள் அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின்