#விசிஷ்டாத்வைதம் #ஸ்ரீவைஷ்ணவம் #த்வயம் என்பது
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ
திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின்
சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேண்டும் என்பதே ஆகும். எம்பெருமானின் இரு அவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாஸ்ரமத்தில் உபதேசித்தது. பகவானின் உடைமையான ஜீவாத்மா அவரின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன்
எளிய பொருள்.
#திருவாய்மொழி த்வயத்தின் பொருளை விளக்க ஆழ்வார்களின் தலைவரான #நம்மாழ்வார் நமக்கு அருளியது. ஆறாம் பத்தில் இறுதியில் நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார். ரகஸ்ய த்ரயத்திலே வீரு கொண்டு விளக்கும் மகா மந்திரம் முன் வாக்கியத்தாலே சரணாகதி அனுஷ்டிப்பதையும
பின் வாக்கியத்தாலே கைங்கர்யத்தை பிரார்த்திப்பதை விளக்க வந்தது. நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி த்வயார்த்த பிரதி பாதகம். #பிள்ளைலோகாச்சார்யார் #சாரசங்ரகம் என்ற நூலில் இதன் விளக்க உரையை அருளியுள்ளார். நம்மாழ்வார் மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழியில் கைங்கர்யத்தைப் பற்றி விளக்கி,
பின் ஆறாம்பத்தில் இறுதியில் சரணாகதி பற்றி சொல்கிறார். த்வய மந்திரத்தை மாற்றி விளக்குகிறாரே என்று நினைக்க வேண்டாம். முதலில் நாம் பெறப் போகும் பேறு என்ன எத்தகையது என்று விளக்கி, பின் அதை அடையும் வழிமுறையை விளக்கினால் நாம் வழிமுறையின் கடினமான பாதையைப் பற்றி கவலைப் பட மாட்டோம், ஏன்
என்றால் எத்தகைய பேற்றினை அடையப் போகிறோம் என்பது தெரிந்து விடுகிறது. அதனால் நம்மாழ்வார் இந்த உக்தியை கையாள்கிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம், தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே. (3.3.1)
மிக்க ஒலி
உடன் கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற அழகினைக் கொண்ட ஒளி உருவனான, தங்கள் குலத் தலைவனான, எம்பெருமானுக்கு எல்லையில்லாத காலமெல்லாம், எல்லா இடத்திலும், அவன் கூடவே உடன் இருந்து, ஒன்றும் குறையாதபடி எல்லா தொண்டுகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது பாடலின் பொருள்.
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி. நெடியாய் அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குல தொல் லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. (6.10.1)
பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் அமுது செய்த பெரிய வாயை உடையவனே, தேஜோ
மயமான திவ்ய விக்ரகத்தை உடையவனே, மிகப்பெரியவனே, அடியேனுக்கு உயிராய் இருப்பவனே, உலகுக்கெல்லாம் திலகம் போன்ற திருமலையிலே விளங்குகின்ற எம்பெருமானே, பரம்பரை பரம்பரையாக எம்பெருமானுக்கு அடிமையான அடியேன், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேரும்படி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.
பகவானிடம் சரணாகதி செய்வோம். பிறவியற்று, வைகுண்டத்தில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வோம்.
ஆழ்வார் ஆச்சார்யன் திருவடிகளே சரணம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 29
#மகாபெரியவா திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் Image
அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி!
திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார். சின்னஸ்வாமி ஐயர் தினம் வீட்டில் சிவபூஜை செய்து உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார்.
இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி
இல்லையே என்ற குறை எல்லார் மனத்தையும் அரித்துக் கொண்டு இருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை.
Read 14 tweets
Jan 29
#MahaPeriyava
Narrated by Archaeologist, Dr Sathyamurthy about one of his interactions with Him!

I have had His darshan right from my childhood. Once when I went to see Him after I became an archaeologist, He asked me, “What is your profession?”
I replied that I was involved in Image
the archaelogical studies of our temples.
“Have you been to Mahabalipuram? Can you tell me what you observed there?” He asked me.

“I saw the Pandavas’ chariot, Mahishasuramardhini etc there.”

“That place also has Pallavas’ clock, have you seen it there?” He asked me!

I assumed
that Periyava was teasing me and hence I responded, “Periyava, how come the Pallavas had timepieces in their olden days?”

“It is there, it is there. Try to see it when you go there next time” He replied emphatically!
When I went to have His darshan next time, He asked me,
Read 7 tweets
Jan 28
#பழநி பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். பழநி என்றதும் ஞானப் பழத்துக்காக நடந்த
போட்டியும், முருகன் பெற்றோரைப் பிரிந்து வந்து இங்கு கோயில் கொண்ட கதையும்தான் நம் நினைவுக்கு வரும். இதே போல் இன்னும் பல தெய்வக் கதைகள் பழநிக்கு உண்டு. தெய்வங்கள் பலரும் தேடி வந்து வழிபட்டு வரம்பெற்ற கதைகள் அவை!
‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச்
சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவ பெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரின்
Read 7 tweets
Jan 28
#ஒத்தபனை_ஜடாமுனீஸ்வரர் வேலூரில் அதிசய ஆலயம். கடன் பிரச்சினை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக் கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ரயில் பாதை Image
அமைக்கும் பணியைத் தொடங்கினார். வழியில் இருந்த ஒத்தப் பனையை அகற்றும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் இறங்கினர். ஆனால் முடியவில்லை. சிலர் வீம்பாக முயற்சி செய்தும் நடக்கவில்லை. மாறாக சில அபசகுணங்கள் நிகழ்ந்தன. அப்போது அந்த ஊர்க்காரர்கள், அந்த மரம் சக்தி வாய்ந்தது என்றும் அதில்
முனீஸ்வரர் குடியிருக்கிறார் என்றும் கூற உடனே ரயிலின் பாதையை சிறிது தூரம் தள்ளித் திட்டமிட்டு அவ்வண்ணமே அமைத்தனர். அது வரை ஒருசிலரே வழிபட்டு வந்த ஜடாமுனீஸ்வரரை அநேகர் வந்து வழிபட ஆரம்பித்தனர். இந்தப் பனைமரத்தைச் சுற்றி ஏழு வேப்பமரங்கள் உள்ளன. தானாகவே முளைத்த இந்த மரங்களில் சப்த Image
Read 8 tweets
Jan 28
#ரதஸப்தமி சனிக்கிழமை சுபக்ருத் தை மாதம் 14, 28.01.23

ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, Image
அர்க்க பத்ரம் என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று அர்க்க பத்ர ஸ்நானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்:
ஸப்த ஸப்தி ப்ரியே தேவி
ஸப்த லோகைக தீபிகே ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம் ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும்.
Read 5 tweets
Jan 28
#மகாபெரியவா பெரியவாளை தரிசனம் செய்ய ஒரு தம்பதி வந்தார்கள். நல்ல வசதியானவர்கள்.

"கார்லயா வந்தேள்?"

"ஆமா பெரியவா"

"ட்ரைவர் வெச்சிண்டு வந்தியா? நீயே ஒட்டிண்டு வந்தியா?"

"நாந்தான் ஓட்டிண்டு வந்தேன் பெரியவா"

"எந்த வழியா வந்தே?”

"காவேரிப்பாக்கம் வழியா வந்தோம்"

"நீ திரும்பி Image
போறச்சே நாசொல்ற வழில போ!"

“சரி பெரியவா"

வழியை சொன்னார்.
"அந்த வழில, அந்த க்ராமத்ல, ஒரு பெரிய சிவன் கோவில் வரும். அந்த கோவில் வாஸல்ல, ஒரு வயஸான தாத்தாவும் பாட்டியும் ஒக்காந்துண்டு இருப்பா. நீ அவாளப் போயி பாரு. நா அனுப்பிச்சேன்னு சொல்லு. அதோட, முக்யமா அவா என்ன கேக்கறாளோ அத
பண்ணிக் குடுப்பியா?”

"காத்துண்டிருக்கோம் பெரியவா!”

ப்ரஸாதம் குடுத்தனுப்பினார். அவர்களும் பெரியவா சொன்ன வழியில், அந்த க்ராமத்துக்கு சென்று சிவன் கோவிலையும் கண்டு பிடித்தார்கள். கோவில் வாசலில் இருந்த ஒரு சின்ன பெட்டிக் கடையில், மிகவும் ஏழைகள் என்று பார்த்தாலே சொல்லக்கூடிய ஒரு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(