அன்பெழில் Profile picture
May 7 8 tweets 3 min read Twitter logo Read on Twitter
#ராமநாம_மகிமை
காசியில் வாழ்ந்து வந்த பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி , குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டார். மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லா விட்டால் என்ன பலன்’ என்று வருந்தினார். ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார் Image
அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்’என்றார். முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்.
குமரனை துாக்கிப் போய், அவர் தலையிலும்
கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர். அந்த நேரத்தில், #கபீர்தாசரின் சீடரான #பத்மநாபர், அங்கு வந்து, விவரம் அறிந்தார். என்ன அக்கிரமம் இது! புல்- பூண்டு என பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை Image
தற்கொலை செய்வதில் ஈடுபடுத்தலாமா என அறிவுரை கூறினார். ‘ஐயா பரிகாரங்கள் பலவும் செய்து விட்டேன். பலன் ஏதும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு’ என்றார் செல்வந்தர். நடந்ததை விடுங்கள் இப்போது நீங்கள், 'ராம ராம ராம' என்று 3 முறை சொல்லுங்கள். பகவான் அருளால் உங்கள் நோய் குணமாகும்.
ஆத்மார்த்தமாக, 'ராம நீ தான் இந்த கொடிய நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்’ என்றார் பத்மநாபர். அதன்படியே செல்வந்தரும், சுற்றி இருந்தவர்களும் சொல்ல, அவரின் நோய் நீங்கியது. பத்மநாபரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், குமரன்.
‘அனைத்தும் ஸ்ரீ ராமன் செயல்’ என்றபடியே அங்கிருந்து போய் விட்டார் பத்மநாபர். தகவல் அறிந்து, பத்மநாபரை அழைத்து, 'சீடனே வியாதி நீங்க, #ராமநாமத்தை, ஆத்மார்த்தமாக ஒரு முறை சொன்னாலே போதுமே, நீ மூன்று முறை ஏன் சொல்லச் சொன்னாய்’ எனக் கேட்டார் கபீர்தாசர். ‘குருநாதா திருவடிகளைப் பணியாத
அச்செல்வந்தரின் குறை தீர ஒரு முறை, அவருடைய நோயும் பிறவியும் தீர ஒரு முறை, சுற்றியிருந்த மக்கள் நல்வழியில் நடக்க ஒரு முறை என்பதற்காகவே மூன்று முறை, 'ராம' நாமா சொல்லச் சொன்னேன்’ என்றார் பத்மநாபர். தம் சீடனை வாழ்த்தினார், கபீர்தாசர்.
தெய்வத்தைத் தவிர வேறு துணை நமக்குக் கிடையாது.
அவரவர் இஷ்ட தெய்வ நாமாவை, ஆத்மார்த்தமாகச் சொல்வோம். துயர் தீர்க்க வேண்டுவோம். படுத்தும் நோய் பறந்து போய் விடும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 8
#மகாபெரியவா அருள்வாக்கு

மனத்தினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டு விடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.

அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டு Image
விடக்கூடாது.

நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.

அன்பே சிவம் என்கிறார் #திருமூலர், அறிவான தெய்வமே என்கிறார் #தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம்
பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.

அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.

கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம்
Read 4 tweets
May 8
#மகாபெரியவா
சொன்னவர்-ரேவதி கிருஷ்ணமூர்த்தி சென்னை 33
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

திருமணமாகிப் 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு இல்லை. பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது - புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை. என் மாமனார், Image
புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி. மகா பெரியவாள் இளையாத்தங்குடியில் தங்கி இருந்தபோது (1965) சிறிது உடல் நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடி விட்டு, என் மாமனார்தான் பெரியவாளை தொட்டு சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்
மகா பெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப் பட்டிருந்த போது, சில மாதங்கள் எங்கள் மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என்
Read 10 tweets
May 8
#நற்சிந்தனை
ஒரு முறை #மகாகவி_காளிதாசர் வயல் வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப் பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா என்று கேட்டார் Image
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்
இன்னொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், மற்றொன்று இளமை. இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள். சற்று
Read 8 tweets
May 7
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள் Image
செலுத்துவார். ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு
விட்டுப் போய்விட்டார்கள். மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.

"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை. காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படி எல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும்,வேகாததுமாக சாதம்
Read 5 tweets
May 7
#MahaPeriyava
Source: Translated from Chapter 11 of the book Anbe Arule by Sri Bharanidharan

He was a Maha Siddhar (A Yogi of great stature). He was capapble of performing a lot of miracles. He had the capacity to cure some diseases too. After a surgery, my brother was having Image
unbearable stomach pain and so I wanting some immediate relief for him I took him to this Yogi at that time. After doing Pooja, the Yogi gave some Vibhoothi Prasadam to my brother. As I had gone to him, the Yogi thought that I would definitely write about him. But when he saw
that I showed no interest in doing that, he kept sending invitations to me to attract me towards him. (So that I would get interested enough to write about him). During yet another unavoidable situation, I went to him again. It was almost midnight. He closed the door and
Read 38 tweets
May 7
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..
#திருவிளையாடல் படப் பாடல் இது.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -
மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பாடலின் இடையில் வரும் வரிகள் இவை.
பாடலை எழுதியவர் #கவியரசர்_கண்ணதாசன்.
இந்த ஓர் வரிக்குப் பின்னால் அரிய புராண நிகழ்வு உள்ளது. Image
காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுரையிலேயே வாழ்ந்து வந்தான். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும் அவள் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனத்துக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள் அரதன குப்தனின் தங்கையும் அவள் கணவரும் இறந்துவிட்டதாக தகவல் வர
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(