SOMASUNDARAPRABHU Profile picture
தனக்கென ஓர் அடையாளம் உடையவனே மனிதன், அந்த அடையாளத்தைக் கொண்டு ஊருக்கு உழைப்பவனே மனிதர்களின் தலைவன்..

Apr 30, 2021, 20 tweets

திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇

சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇

அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇

அதற்கு, #அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்_ஆகனும்
பெண்களுக்கு அர்ச்சகர் பணியில் முன்னுரிமை அளிக்கனும். ஆம் ஆலயப்பணி பெண்கள் கைகளில் தானே இருந்தது!!! அவர்களிடமிருந்து, ஆலயங்களை எப்படி கைப்பற்றியது பார்ப்பனியம் என்பதை அறிந்து கொண்டாலே, அவர்களின் சதி மொத்தமும் புலப்பட்டுவிடுமே!!!👇

அந்தச் சதி தான், தமிழ் இலக்கியத்தால் பெருங்கொடையாளர்கள் என்று போற்றப்பட்ட தேவரடியார்களை தேவடியாளாக்கி ஆலயங்களை விட்டு வெளியே வீசி எறிய வைத்தது. அரச📸👇 குலத்தில் இருந்தே பலரும் #தேவரடியார் பணி செய்திருக்கிறார்கள், அப்படியிருக்க எப்படி அது வேசித் தொழிலாக்கப்பட்டது!?👇

ஆண் எளிதில் காமவயப்படக் கூடியவன், ஆகையால் ஆலயப்பணி பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது இம்மண்ணில். அப்பெண்கள், ஆலயப்பணி தவிர்த்து இசை நாட்டியம் உள்ளிட்ட கலைகளை உருவாக்கி வளர்க்கவும் செய்திருக்கிறார்கள். சான்றுகள் ஏராளமாக உள்ளது இவற்றுக்கெல்லாம், இருந்தும் இந்த இழிநிலை ஏன்👇

#தேவரடியார் பரத்தையாக்கப்பட்ட பொழுது, அவர்களது நாட்டியம் பரத்தை நாட்டியமாக்கப்பட்டு, பார்ப்பனியம் கைப்பற்றியவுடன் புனிதமடைந்து பரதநாட்டியம் ஆகிவிட்டது எப்படி!? இப்பொழுதும் அதன் நட்டுவனார்கள் தேவரடியார்களின் வழிவகையினர் தான். கோயிலையும் கலைகளையும் திட்டமிட்டுக் கைப்பற்றியதெப்படி👇

வேந்தர்களும் தேவரடியார்களும் துறவிகளாக, இறைவன் இறைவியாக வைத்துப் போற்றப்பட்டு வந்த இம்மண்ணில், அவர்களது துறுவு கெடுத்தது தான் ஆரியத்தின் முதல் சூழ்ச்சியே. அதுதொட்டு மன்னராட்சியையும் கெடுத்து, தேவரடியார் பணியையும் கெடுத்து, அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டது பார்ப்பனியம்👇

துறவு காத்த வேந்தர்கள், துறவு காக்கும் தேவரடியாரைப் புணர்ந்தால் உலகையே வெல்லலாம் என்று மதிமயக்கப்பட்டார்கள், விளைவு, அரண்மனைகளில் அந்தப்புரம் உருவானது, வேந்தர்களைத் தொடர்ந்து அதிகாரம் படைத்தோரின் சந்தைமடம் ஆகியது தேவரடியாரின் இல்லங்கள். தமிழ்க்குடியின் சிறப்பு சீரழிந்தது👇

துறவு காத்த வேந்தர்களுக்கும் தேவரடியார்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கே பொட்டுக்கட்டிப் பார்த்தது இந்தச் சமூகம், பார்ப்பனிய சூழ்ச்சியால். அவர்களது ஆண் குழந்தைகள் என்ன செய்தார்கள்!? அவர்கள் அறிவிற் சிறந்தவர்களாகிக் கலை வளர்த்தனர். தமிழிசை வளர்த்த மூவரும், தேவரடியாரின் வாரிசுகள்👇

தமிழிசை என்ன ஆனது!? அதனையும் பார்ப்பனியம் விழுங்கிக் கொண்டது. தமிழர் நாட்டியம், தமிழிசையொடு நமது உரிமைகளையும் பறித்துக் கொண்டது பார்ப்பனியம். அதனை எல்லாம் மீட்டு, பெண்ணுரிமையை மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டாமா!? அதற்கு ஒரே வழி பார்ப்பனியத்தை ஆலயங்களை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்

தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு என்று ஒத்தக்கால் டான்ஸ் ஆடுவானுக தமிழ்தேசியம் பேசுறவனுக. தேவடியாங்கிற வார்த்தைக்குத் தமிழில் பொருள் தேடிட்டு வாங்கடான்னு விரட்டியடிக்கனும். தமிழில் தேவரடியார்கள் தான் வட மொழியில் #தேவதாசிகள், அவர்களும் பார்ப்பனியத்தால் சீரழிக்கப்பட்டவர்களே👇

யார் இந்தப் பார்ப்பனர்கள்!? தமிழர் ஆதித் தத்துவங்களில் ஒன்றான சார்வாகம்(உலகாயதம்) எனும் இறை மறுப்புப் பொருள்முதல்வாதத் தத்துவத்தைக் கற்க வந்து, அத்தனையையும் சிதைத்து சைவத்தையும் போட்டியாக வைணவத்தையும் உருவாக்கி, இந்தப் பகுத்தறிவுச் சமூகத்தை மூடநம்பிக்கைக்குள் தள்ளியவர்கள் தான்👇

கவிஞர் #வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்ற பொழுது பொங்கியவன் எல்லாம் யாரு!? தெய்வத் தொண்டு செய்து வந்த தேவரடியார் எனும் தேவதாசிகளை தேவடியாள் ஆக்கிப் பொட்டுக்கட்டி விட்ட பார்ப்பானுக தான். இது தான் டா வரலாறு, வரலாறச் சொன்னா மிரட்டுவீங்கன்னா, நாங்க சொல்வதோடு ஓய மாட்டோம், செயல்படுவோம்👇

ஆகம விதி, பெண் தீட்டு என்றெல்லாம் வழக்காடும் ஆரியம், அதற்குரிய தரவுகளைத் திரட்டி, ஆணித்தரமாக வழக்காடிப் பெற்றே ஆக வேண்டும் இந்த உரிமையை. பெண்ணின் தூமை தீட்டு எனில், இவ்வுலகே, இவ்வுலகு உயிர்கள் அனைத்துமே தீட்டு தான் பார்ப்பனியம் உட்பட. இவற்றை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்👇

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் சாதி எப்படி ஒழியும்!? பெண்களுக்கு அதிலே முன்னுரிமைஅளிப்பதால் சமூகத்துக்கு என்ன பயன்!? இவை எல்லாம் அவ்வளவு எளிதா!? எளிதல்ல தான், ஏன் எளிதல்ல என்று சிந்தித்தாலே அதன் விளைவுகள் ஆதிக்கத்தைத் தகர்க்கக்கூடியதாக இருப்பதை நாம் உணர முடியும்👇

அச்சமே ஆண்டவன் எனும் மாயத் தோற்றமானது, மாயமே மந்திரம் தோன்றக் காரணம் ஆனது, மந்திரமே அதனைக் கையாள்பவனின் அதிகாரமானது, அந்த அதிகாரமே ஆண்டவன் எனும் மாயத் தோற்றத்திற்கு அஞ்சியவனை மந்திரம் ஓதுபவனின் கைப்பாவையாக்கியது!!!
அதனால் தான் #பெரியார் கடவுளை மறுக்கச் சொன்னார்👇

#அண்ணா ஆரியத்தின் மாயையை உடைக்கப் புறப்பட்டார்
#கலைஞர் ஆரியத்தையே அப்புறப்படுத்தத் திட்டம் வகுத்து சட்டமும் வகுத்தார்
#தளபதி திட்டவட்டமாக இதனைச் செயல்படுத்தினால் போதும். கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆரியமே இன்று அதிலே மறைமுக இடஒதுக்கீடு கேட்டுப் போர் தொடுக்கிறது👇

அதுபோல், கருவறைக்குள்ளும் இடஒதுக்கீடு கேட்டுப் போர் தொடுக்கும் ஆரியம், அப்படி ஒரு நிலை கண்டிப்பாக உருவாகனும். அதுவரை இடையறாது முயற்சித்து, இத்திட்டத்தை நிறைவேற்றனும். அப்படிச் செய்து விட்டால், ஆரியமே சாதியையும், இறை மூடநம்பிக்கைகளையும் மறுக்கும் நிலையை உருவாக்கும். எதனால்!?👇

ஆரியத்தின் அதிகாரமற்ற இடத்தை, வலிமையற்ற இடமாக்குவது ஆரிய இயல்பதனால்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"
அனைத்து சாதியினரும் பெண்களும் அர்ச்சகர் ஆவதை உறுதி செய்யுங்கள் @mkstalin முதல்வர் அவர்களே, அன்றே திமுக உண்மையாக வெல்லும் நாளாகும் என்பது உறுதி💪🔥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling