SOMASUNDARAPRABHU Profile picture
Apr 30, 2021 20 tweets 9 min read Read on X
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
அதற்கு, #அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்_ஆகனும்
பெண்களுக்கு அர்ச்சகர் பணியில் முன்னுரிமை அளிக்கனும். ஆம் ஆலயப்பணி பெண்கள் கைகளில் தானே இருந்தது!!! அவர்களிடமிருந்து, ஆலயங்களை எப்படி கைப்பற்றியது பார்ப்பனியம் என்பதை அறிந்து கொண்டாலே, அவர்களின் சதி மொத்தமும் புலப்பட்டுவிடுமே!!!👇
அந்தச் சதி தான், தமிழ் இலக்கியத்தால் பெருங்கொடையாளர்கள் என்று போற்றப்பட்ட தேவரடியார்களை தேவடியாளாக்கி ஆலயங்களை விட்டு வெளியே வீசி எறிய வைத்தது. அரச📸👇 குலத்தில் இருந்தே பலரும் #தேவரடியார் பணி செய்திருக்கிறார்கள், அப்படியிருக்க எப்படி அது வேசித் தொழிலாக்கப்பட்டது!?👇
ஆண் எளிதில் காமவயப்படக் கூடியவன், ஆகையால் ஆலயப்பணி பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது இம்மண்ணில். அப்பெண்கள், ஆலயப்பணி தவிர்த்து இசை நாட்டியம் உள்ளிட்ட கலைகளை உருவாக்கி வளர்க்கவும் செய்திருக்கிறார்கள். சான்றுகள் ஏராளமாக உள்ளது இவற்றுக்கெல்லாம், இருந்தும் இந்த இழிநிலை ஏன்👇
#தேவரடியார் பரத்தையாக்கப்பட்ட பொழுது, அவர்களது நாட்டியம் பரத்தை நாட்டியமாக்கப்பட்டு, பார்ப்பனியம் கைப்பற்றியவுடன் புனிதமடைந்து பரதநாட்டியம் ஆகிவிட்டது எப்படி!? இப்பொழுதும் அதன் நட்டுவனார்கள் தேவரடியார்களின் வழிவகையினர் தான். கோயிலையும் கலைகளையும் திட்டமிட்டுக் கைப்பற்றியதெப்படி👇
வேந்தர்களும் தேவரடியார்களும் துறவிகளாக, இறைவன் இறைவியாக வைத்துப் போற்றப்பட்டு வந்த இம்மண்ணில், அவர்களது துறுவு கெடுத்தது தான் ஆரியத்தின் முதல் சூழ்ச்சியே. அதுதொட்டு மன்னராட்சியையும் கெடுத்து, தேவரடியார் பணியையும் கெடுத்து, அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டது பார்ப்பனியம்👇
துறவு காத்த வேந்தர்கள், துறவு காக்கும் தேவரடியாரைப் புணர்ந்தால் உலகையே வெல்லலாம் என்று மதிமயக்கப்பட்டார்கள், விளைவு, அரண்மனைகளில் அந்தப்புரம் உருவானது, வேந்தர்களைத் தொடர்ந்து அதிகாரம் படைத்தோரின் சந்தைமடம் ஆகியது தேவரடியாரின் இல்லங்கள். தமிழ்க்குடியின் சிறப்பு சீரழிந்தது👇
துறவு காத்த வேந்தர்களுக்கும் தேவரடியார்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கே பொட்டுக்கட்டிப் பார்த்தது இந்தச் சமூகம், பார்ப்பனிய சூழ்ச்சியால். அவர்களது ஆண் குழந்தைகள் என்ன செய்தார்கள்!? அவர்கள் அறிவிற் சிறந்தவர்களாகிக் கலை வளர்த்தனர். தமிழிசை வளர்த்த மூவரும், தேவரடியாரின் வாரிசுகள்👇
தமிழிசை என்ன ஆனது!? அதனையும் பார்ப்பனியம் விழுங்கிக் கொண்டது. தமிழர் நாட்டியம், தமிழிசையொடு நமது உரிமைகளையும் பறித்துக் கொண்டது பார்ப்பனியம். அதனை எல்லாம் மீட்டு, பெண்ணுரிமையை மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டாமா!? அதற்கு ஒரே வழி பார்ப்பனியத்தை ஆலயங்களை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்
தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு என்று ஒத்தக்கால் டான்ஸ் ஆடுவானுக தமிழ்தேசியம் பேசுறவனுக. தேவடியாங்கிற வார்த்தைக்குத் தமிழில் பொருள் தேடிட்டு வாங்கடான்னு விரட்டியடிக்கனும். தமிழில் தேவரடியார்கள் தான் வட மொழியில் #தேவதாசிகள், அவர்களும் பார்ப்பனியத்தால் சீரழிக்கப்பட்டவர்களே👇
யார் இந்தப் பார்ப்பனர்கள்!? தமிழர் ஆதித் தத்துவங்களில் ஒன்றான சார்வாகம்(உலகாயதம்) எனும் இறை மறுப்புப் பொருள்முதல்வாதத் தத்துவத்தைக் கற்க வந்து, அத்தனையையும் சிதைத்து சைவத்தையும் போட்டியாக வைணவத்தையும் உருவாக்கி, இந்தப் பகுத்தறிவுச் சமூகத்தை மூடநம்பிக்கைக்குள் தள்ளியவர்கள் தான்👇
கவிஞர் #வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்ற பொழுது பொங்கியவன் எல்லாம் யாரு!? தெய்வத் தொண்டு செய்து வந்த தேவரடியார் எனும் தேவதாசிகளை தேவடியாள் ஆக்கிப் பொட்டுக்கட்டி விட்ட பார்ப்பானுக தான். இது தான் டா வரலாறு, வரலாறச் சொன்னா மிரட்டுவீங்கன்னா, நாங்க சொல்வதோடு ஓய மாட்டோம், செயல்படுவோம்👇
ஆகம விதி, பெண் தீட்டு என்றெல்லாம் வழக்காடும் ஆரியம், அதற்குரிய தரவுகளைத் திரட்டி, ஆணித்தரமாக வழக்காடிப் பெற்றே ஆக வேண்டும் இந்த உரிமையை. பெண்ணின் தூமை தீட்டு எனில், இவ்வுலகே, இவ்வுலகு உயிர்கள் அனைத்துமே தீட்டு தான் பார்ப்பனியம் உட்பட. இவற்றை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்👇
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் சாதி எப்படி ஒழியும்!? பெண்களுக்கு அதிலே முன்னுரிமைஅளிப்பதால் சமூகத்துக்கு என்ன பயன்!? இவை எல்லாம் அவ்வளவு எளிதா!? எளிதல்ல தான், ஏன் எளிதல்ல என்று சிந்தித்தாலே அதன் விளைவுகள் ஆதிக்கத்தைத் தகர்க்கக்கூடியதாக இருப்பதை நாம் உணர முடியும்👇
அச்சமே ஆண்டவன் எனும் மாயத் தோற்றமானது, மாயமே மந்திரம் தோன்றக் காரணம் ஆனது, மந்திரமே அதனைக் கையாள்பவனின் அதிகாரமானது, அந்த அதிகாரமே ஆண்டவன் எனும் மாயத் தோற்றத்திற்கு அஞ்சியவனை மந்திரம் ஓதுபவனின் கைப்பாவையாக்கியது!!!
அதனால் தான் #பெரியார் கடவுளை மறுக்கச் சொன்னார்👇
#அண்ணா ஆரியத்தின் மாயையை உடைக்கப் புறப்பட்டார்
#கலைஞர் ஆரியத்தையே அப்புறப்படுத்தத் திட்டம் வகுத்து சட்டமும் வகுத்தார்
#தளபதி திட்டவட்டமாக இதனைச் செயல்படுத்தினால் போதும். கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆரியமே இன்று அதிலே மறைமுக இடஒதுக்கீடு கேட்டுப் போர் தொடுக்கிறது👇
அதுபோல், கருவறைக்குள்ளும் இடஒதுக்கீடு கேட்டுப் போர் தொடுக்கும் ஆரியம், அப்படி ஒரு நிலை கண்டிப்பாக உருவாகனும். அதுவரை இடையறாது முயற்சித்து, இத்திட்டத்தை நிறைவேற்றனும். அப்படிச் செய்து விட்டால், ஆரியமே சாதியையும், இறை மூடநம்பிக்கைகளையும் மறுக்கும் நிலையை உருவாக்கும். எதனால்!?👇
ஆரியத்தின் அதிகாரமற்ற இடத்தை, வலிமையற்ற இடமாக்குவது ஆரிய இயல்பதனால்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"
அனைத்து சாதியினரும் பெண்களும் அர்ச்சகர் ஆவதை உறுதி செய்யுங்கள் @mkstalin முதல்வர் அவர்களே, அன்றே திமுக உண்மையாக வெல்லும் நாளாகும் என்பது உறுதி💪🔥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SOMASUNDARAPRABHU

SOMASUNDARAPRABHU Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @praboo_mass

Mar 11, 2023
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
Mar 10, 2023
தனக்கு வாக்களிக்க வருகிறவர்களையே வடிகட்டும் அரசியல் செய்யும் #சீமான், பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், சமயத்தில் பெரும்பான்மையினருக்கே எதிராகவும் செயல்படும் வரை டெபாசிட்டுக்கே முக்கிக்கிட்டு தான் இருக்கணும்.
இவனை எதிரியாகக் கருதுவதும், தலைவனாகக் கொள்வதும் பெரும் மடைமை
தமிழ்நாட்டில் வலிமையாக இருந்த காங்கிரசை, ஒன்றிணைக்கும் திராவிட அரசியலைக் கொண்டே வீழ்த்த இயன்றது.
இந்திய அளவில் காங்கிரசு வலிமை இழந்து பல காலம் கழித்தே, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வேரூன்ற வைக்க இயன்றது.

நேரு முன்வைத்த அரசியலை, காங்கிரசு கடைப்பிடித்தாலே பாஜக காணாமல் போகும்.
ஒன்றிணைக்கும் அரசியலின் வலிமை, பிரிவினைவாத அரசியலுக்குக் கிடையாது, உலகளவில் எங்குமே அது நிலைத்தது கிடையாது.

திராவிடம் எனும் பொதுவுடைமைத் தத்துவத்தை எவ்வளவு நீர்த்துப் போக விடுகிறோமோ, அவ்வளவு வாய்ப்பை நாம் பிரிவினைவாத அரசியலுக்கு அளிக்கிறோம் என்பதை நினைவில் கொள்க @CMOTamilnadu
👇
Read 4 tweets
Feb 28, 2023
#புலிகள்_கொலை_பாதகர்கள்
ஈவு இரக்கமற்ற கூட்டம் விடுதலைப் புலிகள், சக போராளிகள், சக புலிகள், சக தமிழ் இசுலாமியர்கள், சக உயிர்கள் எதையுமே உயிர்களாக மதிக்காத வெறி பிடித்த கூட்டம் விடுதலைப் புலிகள்.
*கொடுமையான காணொளிகள், அப்பாவிகள் பலியாகாமல் உணரும் பொருட்டு பகிரப்படுகிறது🔞💣🔴
#புலிகள்_கொலை_பாதகர்கள்
வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை வாங்கிக் கொத்தடிமைகளாக வதைத்தெடுத்தனர்.
இதற்கு அனுமதிக்காத வடக்குக் கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக பிள்ளைகளைக் கொடுக்க வைத்தனர்.
நீங்க உங்க பிள்ளைய கொடுப்பீங்களாடா போலித் தமிழ்தேசியத் தும்பிகளா?
#புலிகள்_கொலை_பாதகர்கள்
தமிழ் மக்களின் வீட்டு விலங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை, ஆடு மாடு நாய் என எண்ணற்ற உயிர்களைப் பயிற்சி என்ற பெயரில் கொன்று குவித்தனர்.
இவர்களின் அதிகார போதைக்கு, சக போராளிகள், சக மக்கள், சக உயிர்கள் என்று அனைத்தையும் காவு வாங்கினர்.
உண்மை சுடும், சுட்டது!
Read 9 tweets
Oct 24, 2022
யார் அசுரர்கள்!?
அப்படி யாரும் இல்லை எனினும், புனையப்பட்ட கதையில் கூட வஞ்சிக்கப்பட்டவர்களே அசுரர்கள்.
பாற்கடலில் அமுது கடைய, ஐந்து தலை நாகத்தின் தலைப்பக்கம், விசுணு வஞ்சகத்தோடு அசுரர்களை நிறுத்த, நாகமோ விடம் கக்க, சிவன் அசுரர்களைக் காக்க விடம் உண்டானாம்.
சைவ வைணவச் சண்டை இது👊👇
ஆரிய சூத்திரச் சண்டை இதுன்னு மேம்போக்காப் படிச்சாக் கூட புரிந்து கொள்ளலாம். அதனால தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா படிக்க விடல.
அசுரர்கள் சிவன்/ பிரம்மாவைத் தொழுதவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள், விசுணுவை அல்ல என்பதே சமய அரசியல் குப்பைகள் இவை என்பதற்குச் சான்றாகும்👇
மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் குணங்களையும் முகங்களையும் நியாயப்படுத்தவும், ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கவும் உருவாக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டுக் காக்கப்பட்டு வருவனவே சனாதனக் குப்பைகளும், அது கொண்டு வந்து திணித்த பண்டிகைகளும். இதற்கு ஆரிய சூத்திர வேறுபாடே கிடையாது👇
Read 5 tweets
Jun 13, 2021
அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா

இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா.
#திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
Read 24 tweets
Nov 23, 2019
#சிறுநீரகக்_கல்
#பித்தப்பைக்_கல்
#சிறுநீர்க்குழாய்த்_தொற்று

இவற்றிலிருந்து
#ஒரே_நாளில்
#ஒரே_மருந்தில் தீர்வு

இந்தக் கற்கள் குறிப்பிட்ட உணவுமுறையால் வருகின்றது என்பதை விட, சரியான சிறுநீர்க் கழிவு வெளியேற்றம் இல்லாததால் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
என்ன செய்யனும்!?👇
சரியாக சிறுநீர்க் கழிவை நாம் வெளியேற்றாத போது, சிறுநீரில் இருக்கும் தாது உப்புக்கள் உள்ளேயே படிவதாலும், சிறுநீரின் அளவு குறுகி அமிலத்தன்மை அதிகமாவதாலும், கற்கள் உருவாகின்றன. முறையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு, இந்த கற்களும் வராது, சிறுநீரகத் தொற்றுக் கிருமிகளும் வராது👇
அனைத்துக் கிருமிகளையும், கொன்று வெளியேற்றுவதில்லை நம் உடல்.
ஆம், சிறுநீரகத் தொற்றுக்குக் காரணம், வெளியே இருந்து பரவும் கிருமிகள் அல்ல. நமக்குள் நம்மால் அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரில் இருக்கும் கிருமிகள் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்வதால் ஏற்படுவது என்பதை யாரும் உணர்வதில்லை👇
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(