, 18 tweets, 4 min read Read on Twitter
#தமிழ்
#கோ
தமிழால் ஒன்றுபடாமல் பிரிவினைவாதம் பேசும் சிலருக்கு எளியவர்களின் கேள்விகள்.
1)தமிழ் தான் ஆதி மொழியெனில், எல்லோருமே பேசியது தமிழ் தானே!? பிறகு ஏன் இந்த இன வெறி!?
2)தமிழ் என்பது வெறும் மொழியென்று சுருக்கும் முன் அந்தத் தமிழை நீங்கள் முழுமையாக உள்வாங்கியிருக்கிறீர்களா!?
பிழையின்றி எழுதவாவது தெரியுமா!?
*தமிழில் மெய்க்கு(18) தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பொய்க்கு அல்ல.
உயிரற்ற(12) மெய்யும்(18), மெய்யற்ற உயிரும் மேன்மையற்றுப் போகும் என்பதை உணர்த்தவே, உயிரையும் மெய்யையும் பிணைத்துப் படைத்த மொழி தமிழ்👇
உயிரையும் மெய்யையும் மதிக்காத ஆயுதம் அழிவைத் தேடிக் கொள்ளும் என்பதை உணர்த்தவே, ஆயுதத்தைச்(1) சுருக்கச் சொன்ன மொழி தமிழ். அந்த ஆயுதத்தை ஏந்தி அழிவைத் தேடிக் கொள்வதா தீர்வு? பிற்கால இலக்கியங்களை தூக்கிக் கொண்டு வந்து வீரம் என்பதே போர் புரிவது தான் என்று வாதாடாதீர். அறமே வீரம்👇
அதற்கும் முந்தைய குடி தமிழ்க்குடி, அங்கே நெறி கொண்டு ஆண்ட மன்னனின் குடிக்குள், பிற குடியின் மக்களே குடி புகுந்தது தான் தமிழ்க்குடியின் சிறப்பே. அவனுடைய போர் இயற்கைக்கு முரணான வாழ்வுமுறைக்கு மட்டுமே எதிரானது, மானிடத்துக்கு எதிரானதல்ல. வேந்தரு தொழிலே யாண்டினது அகமே என்கிறது👇
தொல்காப்பியம். வேந்தனுடைய தொழிலே இயற்கை கெடாது பாதுகாத்து, இயற்கை சீற்றம் வராமல் காத்து, புவி சுழற்சி முந்தாது பிந்தாது பாதுகாத்து, ஆட்டை என்று வழங்கப்பட்டு வந்த ஆண்டுக் கணக்கு முந்தாது பிந்தாது பிழை திருத்தி தன்னகம்(தன்குடி) ஆள்வதுவே என்று பொருள். பட்டினப்பாலை திருமாவளவன்👇
திருமாவளவன் என்னும் கரிகாலன் பட்டினப்பாலையில்
"மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே, வான் வீழ்க்குவனே, வளி மற்றுவன்" இது முழுக்க முழுக்க இயற்கையை தான் கையாண்ட விதத்தையே விளக்குகிறது. சங்கம் வைத்து வளர்க்கும் முன்பே நெறி கொண்டு வளர்த்த மொழி தமிழ். அடுக்குகிறேன் ஆதாரம், ஊன்றிப் படி👇
மண்ணாசை கொண்டு போர் புரிந்த பின்பு தான் தமிழ் இனமே அழிவு நோக்கிச் சென்றது, ஊன்றிப் படி...

"மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
#கோத்தொழி லாளரொடு #கொற்றவன் கோடி
#வேத்தியல் இழந்த வியினலம் போல
வேனலங் கிழவனொடு #வெங்கதிர்_வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் 👇
குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"
கோத்தொழிலும் வேத்தியலும் இதுவே, வெங்கதிரை கையாளும் செந்நெறி அறிந்த வெங்கதிர் வேந்தனின் தொழிலே திணை திருத்துவது தான் என்கின்றது சிலப்பதிகாரம். மண்ணாசை அல்ல👇
"வேத்தியல் இழந்த வியனலம் போல", திணை திருத்துவது ஒன்றே வேந்தனின் தொழில், அதை தன்னலத்தால் மறந்த வேந்தனின் குடியின் கீழிருந்த நிலங்கள் திரிந்து பாலையானதாக குறிப்பிடுகின்றது இந்தப் பாடல். செந்நெறி என்பது கதிரவனின் வடசெலவு தென்செலவு கணக்கு மாறாது நிலம் திருத்தி ஆட்சி செய்வதாகும்👇
மண்ணாசையால் போர் புரிவது அல்ல வேந்தனின் தொழில். தொல்காப்பியத்துக்கும் முந்தைய இலக்கியங்கள் யாவும், "உ.வே.சாக்களின்" உறவினர்கள் வீடுகளில் செல்லரித்துப் போய்க் கிடக்கும், அதையெல்லாம் மீட்டெடு. சொந்தக் குடியோடு சண்டையிடாதே, பார்ப்பனன் போல் நீயும் இங்கே பிரிவினை வளர்க்காதே, திருந்து
*தமிழ் செம்மொழி, ஆதி மொழி, சிறப்பு வாய்ந்த மொழி தானே!? பிறகு ஏன் இந்த மொழியை விடுத்துப் பிற மொழிகளை உருவாக்கினான்!? அன்றைய தமிழன், இன்றைய வந்தேறி!?

சொல்கிறேன் கேள், ஆதி மனிதன் எழுப்பிய ஓசைக்குள், உச்சரிப்பில், உடல் மன வலிமையை ஓங்கச் செய்யும் வகையில், மொழிக்குள் வாழ்வியலுக்கான👇
மொழிக்குள் வாழ்வியலுக்கான தத்துவங்களைக் கணித்து, மாத்திரைக் கணக்குகளாக்கி, உடல் மன வலிமையைக் கூட்டிய ஒரே மொழி தமிழ் தான். சூழ்ச்சியால் விளைந்த அடக்குமுறை எந்நாளில் இந்தச் சமூகத்தில் வந்ததோ, அன்றே வேறு மொழி இனம் சமயம் மதம் என்று புகலிடலானான். மீண்டும் அதே பிழையைச் செய்வது நலமா!?👇
ஒற்றுமை பேண ஒரு சொல் கொண்டான், திராவிடனென்று, அது வேற்று மொழிச் சொல் என்ற ஒற்றைச் சாக்கு, நொண்டிச் சாக்கென்று உனக்கே உறுத்தவில்லையா. திராவிடத்தை மற்றவர்கள் தாங்கிப் பிடிக்காத போது, தமிழன் மட்டும் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று கேட்கிறாய். இந்த மரத்தின் வேர் நீ தானே!!!👇
மரத்தை வேர் தானே தாங்கும், கிளைகளோ, காய்ந்து விழப் போகும் இலைகளோ அல்லவே. நீ உன் குடி உயர்த்து, உன் பெருமையும் புகழும், வந்தவரை வாழ வைக்கும் பண்பும், பிற குடிகளை உன் குடிக்குள் அதுவே ஈர்க்கும். இவ்வழியில் ஆண்டு தான் உலகையே வென்றான் தமிழ் வேந்தன்,போர் புரிந்து அல்ல.
ஒன்றுபடுவோம்👇
அப்படியே நீ போர் புரிந்து வென்றாலும், அந்த குடிமக்கள் அடிமையாக தானே இந்த வேந்தனுக்குக் கீழே வாழ்ந்திருப்பர், அப்படி ஏதேனும் சான்றுள்ளதா!? சிந்தித்து வாழ், சிறகு விரித்துப் பறக்கலாம். சிறப்பாய்ச் செழிப்பாய் ஆட்சி செய்து தான் பிற குடி மக்களை ஒரே குடிக்குள் ஈர்த்தான் தமிழ் வேந்தன்👇
#தமிழ்_மொழியின்_சிறப்பு
தமிழ் எழுத்துக்களில் 'த'கர வரிசை எழுத்துகளுக்கு மூளையில் சுரக்கும் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. குழந்தை பிறந்ததும் 'அத்தை' 'தாத்தா' என்று சொல்லச் சொல்வது, மூளையில் சுரப்பிகள் முறையாகச் சுரந்து வளர்ச்சி அடைய தான். தவறி விழுந்தால் 'தூ'👇
கீழே விழுந்ததும் 'தூ' என்று துப்பினால் பயத்தால் மூளையில் ஏற்படும் அமிலச் சுரப்பு உடனடியாக தடுக்கப் படும். இது போல் தமிழில் அறிந்து கொள்ள எண்ணற்ற சங்கதிகள் உண்டு. வரலாற்றில் எல்லாம் இது கிடைக்காது, பகுத்தறியப் பழகு, உனக்கே விளங்கும்.

நன்றி
ம.சோமசுந்தர பிரபு
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to SOMASUNDARA PRABHU M
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!