My Authors
Read all threads
#பிரஷாந்த்கிஷோர்
சென்ற தேர்தலில் ஜஸ்ட் 1.1 % வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது திமுக. வைகோ முன்னின்று ஒரு கூட்டணியை உருவாக்கி, கம்யூனிஸ்டுகளை கூட விஜயகாந்த் முதல்வர் என ஒப்புக் கொள்ள வைத்து (ஆனா, அவர் மட்டும் தேர்தலில் இருந்து எஸ்கேப்!) உருவாக்கிய அணி
இந்த மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு முன் ஒவ்வொரு தேர்தலிலும் வெல்லும் கட்சிக்கும், தோற்கும் கட்சிக்கும் குறைந்தபட்சமே 14% வித்தியாசம் இருந்தது. இதற்கு முன்னர் ஒருபோதும் ஒரு எதிர்கட்சி 100 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்ததில்லை.
மூன்றாவது அணி பெற்ற வாக்குகள், இடங்கள் ஒருபோதும் மாநிலத்தை ஆளும் கட்சியை முடிவு செய்ததில் பங்கு வகித்திருக்கவில்லை. தமிழக மக்கள் எப்போதுமே தங்களை யார் ஆள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக, தீர்க்கமாகவே முடிவெடுத்து வந்துள்ளனர். கும்மிடிபூண்டியில் மக்கள் மனநிலை என்னவோ அதுவே
நாகர்கோவிலிலும் இருந்து வந்ததுண்டு. கடந்த் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்! முதன்முறையாக மாநிலத்தின் ஒருபாதி (வடக்கு & கிழக்கு) முழுமையாக திமுகவுக்கும், மறுபாதி (மேற்கு & தெற்கு) அதிமுகவும் வாக்களித்தனர் மக்கள். இந்த மாடலும் இதற்கு முன் தமிழக அரசியல் களம்
கண்டறியாத புதுமை. அதன் பிறகு நடந்த 21 தொகுதி இடைத்தேர்தல்களில் 13 இடங்களை திமுக வென்றது. இதற்கும் முன் ஒருபோதும் ஒரு எதிர்கட்சி இத்தனை இடங்களை இடைத்தேர்தலில் வென்றதில்லை. இதுவும் புதிய முன்னுதாரணம்.
இப்படி தேர்தல் களம் பல கண்ட அரசியல் கட்சிகள், விமர்சகர்கள், கூர்நோக்கர்கள் என
அத்தனைப் பேரையும் குழப்பி அடித்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள். இந்தச் சூழலில் அடுத்த பொதுத் தேர்தல் வரப் போகிறது. இடைப்பட்டக் காலத்தில் ஆளும்கட்சியான அதிமுக மத்திய ஆளும் பாஜாவின் கிளைக்கழகமாகவே மாறிவிட்டது. (இப்படியொரு நிகழ்வும் இதற்கும் முன்பு தமிழகத்தில் நடந்ததில்லை. )
(இன்றைய) அதிமுக எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், தமிழகம் போராடிப் பெற்ற பல உரிமைகள் இனி மீண்டும் மீட்டெடுக்க முடியாதளவு பறிபோய் கொண்டிருக்கிறது. இவர்கள் இன்று செய்யும் கொடுஞ்செயல்களின் விளைவுகளை இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் சரி செய்ய முடியாதளவு, கல்வி, மொழி, பண்பாட்டுச் சூழலையே
சிதைத்துக் கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்பதுதான் ஒவ்வொரு தமிழர்களின் முதல் கடமையாக இருக்க முடியும். ஆளும் கட்சி இப்போது அமைத்துள்ள கூட்டணி (அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக) அமைப்பாலும், பணத்தாலும், அதிகாரத்தாலும் ஏன் சாதியாலும் கூட வலிமையான ஒரு கூட்டணி.
இந்தக் கூட்டணியை வீழ்த்தும் வலிமை கொண்ட ஒரே கட்சி இப்போதைக்கு திமுக மட்டும்தான். எனவே திமுக அமைக்கவிருக்கும் கூட்டணி, எடுக்கவிருக்கும் தேர்தல் யுத்தி முக்கியமாகிறது. அதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மதச்சார்பற்றக் கூட்டணியை உருவாக்க முனைந்து (வைகோவைகூட உடன் இணைத்து)
அதில் 99% வரலாற்று வெற்றியைப் பெற்றார். இந்தக் கூட்டணியை குலைக்க இப்போதே பல முயற்சிகள் நடந்து வருகிறது. அதிலும் சென்ற தேர்தலில் திடீரென உருவான ம.ந.கூ ஏற்படுத்திய சேதம் இன்னமும் மாநிலத்தின் தனித்தன்மையையே சிதைக்கிறது. எதிர்வரும் தேர்தலில் ரஜினி வருவதாக சொல்லியிருக்கிறார். கமல்
ஏற்கனவே புதியதாக களத்தில் இருக்கிறார். சொல்ல முடியாது., தேர்தல் என்பதால் விஷால் கூட களமிறங்க வாய்ப்பிருக்கிறது. புதிய பேளேயர்ஸ் இதுவரையில் தமிழக தேர்தல் களத்தின் untested. எம்ஜிஆர் போல முதல் வாய்ப்பிலேயே முதலமைச்சராக எண்ணி களம் இறங்குபவர்கள் அதற்குத் தேவையான 40% வாக்குகளை
பெறவேண்டும். அதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், அவர்கள் பெறப்போகும் எந்தவொரு சதவீதமும் (எனது கணிப்பு 8-9%) தமிழக ஆளும்கட்சியை நிச்சயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்ககூடும். ஒருவேளை இதுவேகூட திமுகவின் வெற்றியை தடுப்பதற்கான, கலைப்பதற்கான ஒரு strategy ஆக இருக்கக் கூடும். மேலும்,
கூட்டணிகள் வேற இருக்கும். சீட்டுகளைக் கலைத்துப் போட்டு அடுக்குவதைப் போல இந்தத் தேர்தலிலும் புதிய கூட்டணிகள் உருவாகும். நரி, பரியுடனும், பரி, எலியுடனும், எலி, புலியுடனும் சேருவார்கள். சினிமாவில் 30 ஆண்டுகாலம் நேரெதிராக மோதிய கமலும், ரஜினியும் அரசியலில் கூட்டணி அமைக்கலாம் என
பேசப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தனது முழு சக்தியையும் ப்ரயோகித்து தன் பங்குக்கு சில பல முயற்சிகளை மேற்கொள்ளும். இடையா சாதி, மதக் கணக்குகள் வேறு., வேட்பாளர் தேர்வு மிக, மிக முக்கியமான காரணியாக இருக்கும். இந்தச் சூழலில் சென்ற முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட திமுக
எந்தவொரு சிறிய ஓட்டைகளையும் விடாமல் தேர்தல் யுத்தியை அமைக்க வேண்டியிருக்கிறது. 100 எம்.எல்.ஏக்களை வைத்திருந்து என்ன பயன்? மாநில சட்டமன்றத்தில் நீட், சி.ஏ.ஏ எதிர்ப்புத் தீர்மானத்தை கூட கொண்டு வர முடியாத நிலைதானே உள்ளது. இந்த இழிநிலை மாற வேண்டுமானால் தனித்த மெஜாரிட்டியை பெற்றே தீர
வேண்டும். அதற்கு திமுகவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, கூட்டணிக் கணக்குகளை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து பரிந்துரைக்க (சென்றமுறை கோட்டைவிட்ட இடம் இதுதானே!), வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காண உதவ, எல்லாவற்றுக்கும் மேலாக விர்ச்சுவல் உலகமான சோஷியல் மீடியாவில் கட்சியின்
தடத்தை தெளிவாகப் பதிக்க, அநியாயத்துக்கு ஏவப்படும் அவதூறுகளை சமாளிக்க ஒரு தொழில்முறை ஆலோசனை தேவைப்படுகிறது. இது இந்தக் கால அரசியல் சூழலுக்கு, வெற்றிக்குத் தேவை. இப்படியான ஆலோசனையால்தான் காங்கிரஸை வீழ்த்தி மோடியால் பிரதமராக முடிந்தது. பஞ்சாபில் காங்கிரஸ், பீஹாரில் நிதிஷ்,
ஆந்திராவில் ஜகன்மோகன் என பலரும் பணம் கொடுத்துப் பெற்ற இந்தத் தொழில்முறை தேர்தல் பிரச்சார ஆலோசனையும் வெற்றிக்கு உதவியது. அதே வழித்தடத்தில், திமுக தலைவரும் அதே நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளார். இப்படி ஆலோசனைக்கு அமர்த்தப்பட்ட ஐபேக் நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோரை தமிழகத்தில்
எடப்பாடி பழனிச்சாமி & ஓபிஎஸ் அழைத்துப் பேசினர். கமல்ஹாசன் அழைத்துப் பேசினார். ரஜினிகாந்த் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக பாஜகவும் முயன்றது., இறுதியாக அந்த நிறுவனம் திமுகவுக்காக பணிபுரிய (வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாலோ!) முன்வந்து பணியாணையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதில்
இத்தனை பரபரப்பும், கேள்விகளும், நையாண்டிகளும் எழுவதைக் காண வியப்பாக உள்ளது. இதில் அதிமுகவை தவிர நையாண்டி செய்யும் பிற கட்சிகள் இப்படியான தொழில்முறை ஆலோசனை பெற்றவைதான்., “மாற்றம், முன்னேற்றம், அன்புமணி” நினைவிருக்கா? அதுகூட ஒரு நிறுவனம் வடிவமைத்துத் தந்த யுத்திதான். இந்த முறை
அதிமுக கூட வேறு தகுதியுள்ள நிறுவனத்தை பணியமர்த்த பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். திமுகவின் முடிவு மட்டும் ஏன் இத்தனை விமர்சனத்துக்குள்ளாகிறது என்பது வியப்பு. ஒரு கட்சியின் கொள்கை சார் முடிவுகளை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் யார்
எந்தப் பணிகளை செய்ய வேண்டும் என்பதை அக்கட்சியின் தலைவர்தான் தீர்மானிக்க வேண்டும். அது முழுக்க முழுக்க அந்தக் கட்சியின் உள்விவகாரம் அல்லவா? ஒருவேளை இந்த ஐபேக் நிறுவன நியமனத்தால் கட்சியின் கொள்கையில் தடுமாற்றம் இருந்தால் விமர்சியுங்கள். ஆனால், நியமனத்தையே கேள்விக்குள்ளாக்குவது
நியாயமல்ல. ஒரு திமுககாரனாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே வாழ்வா? சாவா? வகையிலான தேர்தல் என கருதுகிறேன். இந்தமுறை(யும்) வாய்ப்பைத் தவற விட்டால் அதன் விளைவுகள் தமிழ்ச் சமூக, மொழி, பண்பாட்டுக்கே அபாயம் என நான் நம்புகிறேன். அதன் பொருட்டு
எனது தலைவர் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன். பிரஷாந்த் கிஷோர் பல மாநிலங்களில், குறிப்பாக பல கட்சிகள்,பல கூட்டணிகள் கொண்ட மாநிலங்களில் மிகச் சரியான கூட்டணியை உருவாக்கி, அசாத்திய வெற்றிகளை சாத்தியமாக்க உதவியுள்ளர். அவருடைய ஆலோசனைகளும் இப்போது தேவையானதுதான்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SKP KARUNA

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!