My Authors
Read all threads
கொரோனாவும், இசுலாமியர்கள் மீதான வரலாற்று வன்மமும் !

#Thread

"ஒரு பேரழிவு என்பது நம் எதார்த்த நிகழ்காலத்தில் இருக்கும் தார்மீக ரீதியான சமூக உறவுகளின் உண்மையான மதிப்பீடுகளை அறிந்துகொள்ள உதவுகிறது" என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
ஏனெனில், ஒவ்வொரு பேரழிவின்போதும், நம் சமூகத்தின் ஏதோ ஒரு பிரிவின் மீதான பழிசுமத்தலாகவும், ஒடுக்குமுறை வடிவமாகவும் பேரழிவு மாற்றப்படுகிறது.
14ம் நூற்றாண்டு ப்ளேக்கின் போது, யூதர்கள் மீதான வெறுப்பாகவும், வன்முறையாகவும் நோய்த்தொற்றுக்கான காரணமும், அதன் விளைவுகளும் மாற்றப்பட்டன. யூதர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். படுகொலைகள் நடந்தன. சுமார் 1500 ஆண்டுகால வன்மம் அது.
உலகிலேயே மிக உயர்ந்தவர்களாக தங்களைக் கருதிக்கொண்டு, பொது வரன்முறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, அன்றாட வாழ்க்கையிலேயே சாமானியர்களிடமிருந்து சமூக விலக்கை கடைபிடிப்பவர்களாக இருந்த யூதர்களை, வெறுத்துக்கொண்டிருந்த பெரும்பான்மை கிறித்துவர்களால் அந்தத்தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், 16,17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ப்ளேக்கின்போது நோய்த்தொற்று யூதர்களின் மீதான வெறுப்பாக அது மாறவில்லை. காரணம், பெரும்பான்மைவாத மதம் அன்று முழுமையாக நிறுவனமயமாகியிருந்தது. மத நிறுவன ஆதிக்கத்தால் அரசுகள் நடத்தப்பட்டன. ஜனநாயக - குடியரசு அரசு உருவாக்கம் நோக்கி உலகம் நகர்ந்தது.
இதனால், யூதர்களுக்கு மாறாக, மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான கோபமாக ப்ளேக் உருவெடுத்தது. தங்களுடைய சொந்த லாபத்துக்காக ப்ளேக்கை பரப்புகிறார்கள் என அவர்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள்.
இந்த தாக்குதல்கள் தான், அரசின் பொது சுகாதார அமைப்புகளை உருவாக்குவதை நோக்கி நகர்த்தியது. ஏழைகளுக்கான சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யாமல் அரசுகள் பிழைக்க முடியாது என்றாக்கியது. ஆனால், யூதர்களின் வியாபார எல்லைகளை இந்த ப்ளேக் சுருக்கி துணிவியாபாரத்தை முடக்கியது.
17ம் நூற்றாண்டு ப்ளேக், தேசங்களின் மேலாண்மை, இனமேட்டிமை, செல்வாக்குக்கு இடையிலான போட்டியால்,
இத்தாலியில் பிரான்ஸ் நோய் என்றும், பிரான்ஸில் 'நியோபாலிட்டன் நோய்' என்றும் (இத்தாலியின் நேப்பிள் நகர்), ஜெர்மனியில் போலிஷ் நோய் என்றும், போலந்தில் ஜெர்மன் நோய் என்றும் அழைக்கப்பட்டது.
ஆனால், 18ம் நூற்றாண்டுக்கு பிறகான சூழலில், பேரழிவு காலத்தில் பழிபோடும் தன்மை என்பது கணிசமாக மாறியது. ஏகாதிபத்தியங்கள் உச்சத்திலிருந்த இக்காலகட்டத்தில், இனங்களையோ, மதங்களையோ குற்றம்சாட்டுவதைத்தாண்டி, நேரடியாக அரசாங்கங்களின் மீது மக்கள் குற்றம் சுமத்தத் தொடங்கினர்.
அரசுக்கு எதிரான போராட்டமாக, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மாறின. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலாரா நோய் பரவலின்போது, இந்தியர்களின் கிணறுகளில் பிரிட்டிஷார் நச்சைக் கொட்டிவிட்டனர் என்ற கருத்துருவாக்கம் பிரபலமாக இருந்தது.
18,19 நூற்றாண்டு இந்திய பஞ்ச பேரழிவுகள் பிரிட்டிஷ் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான ஆவணங்களும், ஆய்வுகளும் இன்றளவும் தொடர்கின்றன. பஞ்ச காலத்தில் இறந்தவர்களில் கோடிக்கணக்கான பேர் அடித்தள மக்கள்.
அடித்தள மக்களுக்குத் தேவையான உணவை பதுக்கியதில், பிரிட்டிஷ் அரசின் அதிகார உறுப்புகளில் இருந்த உயர்சாதியினருக்கும், வணிக சாதிகளுக்கும் பெரும்பங்கு உண்டு. பஞ்ச காலத்திலும் நடந்த சாதிக்கொடுமைகளின் அவலத்திற்கு மத்தியில் மதமாற்றம் என்பது கணிசமாக நடந்தது.
இந்திய உயர்சாதி மனநிலை நடத்திய 'அவர்கள் சாகத்தக்கவர்கள்' எனும் வகையிலான, அடித்தள மக்கள் மீதான இந்த பண்பாட்டு ஒடுக்குமுறை, பஞ்சத்துக்கு எதிரான மனநிலை அரசுக்கு எதிரான போராட்டமாக பெருமளவில் திரளாது தடுக்க உதவியது. இல்லையென்றால், பிரிட்டிஷ்க்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியிருக்கும்.
1896ல் ஏற்பட்ட ப்ளேக் பரவலின்போது, கொல்கத்தா, மும்பை, புனே நகரங்களில் அரசுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. கவர்னர் மாளிகைகளும், அரசு அலுவலகங்களும் தாக்குதலுக்குள்ளாகின.
முதல் உலகப்போருக்கு பிறகான, 1917-19 ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின்போது, அமெரிக்கா வரலாற்றிலேயே மிகமோசமான பாஸ்டன் நிறவெறி கலவரத்தைச் சந்தித்தது.
முதல் உலகப்போரில் எஞ்சிய ஆயுதங்களின் நச்சு வாயுவை பரப்பி, பிரிட்டிஷார் இந்தியர்களை கொல்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இந்தியாவில் 1.2 கோடிபேரை 3 மாதத்தில் காவுவாங்கிய ஸ்பானிஷ் காய்ச்சல், 1920களில் பிரிட்டிஷுக்கு எதிராக சுதந்திர போராட்டம் வேகமெடுக்க முக்கிய காரணம்.
ஆனால், 1980களில் ஆய்வக அறிவியல் கணிசமாக வளர்ந்தபிறகு, நோய்த்தொற்று பரவல் என்பது ஆய்வகங்களிலிருந்தது பரப்பப்படுகிறது என்ற கருத்துருவாக்கம் அரசுகளுக்கு எதிரான போராட்டத்தை கணிசமாக குறைத்திருக்கிறது.
ஒருநாட்டை அழிக்க, இன்னொரு நாடு நடத்தும் 'உயிரியல் போர்' எனும் கருத்தாக்கமும், அது சார்ந்த வெறுப்புவாதமும் வலுவடைந்தது. 14ம் நூற்றாண்டு ப்ளேக்கிலிருந்தே இந்தக்கருத்தாக்கம் இருக்கிறது என்றாலும், ஒரு அறிவியல் போராக அதைக்கருதும் வழக்கம் இப்போதே வலுவானது.
சார்ஸ் நோயின்போது, அமெரிக்கா திட்டமிட்டு வைரஸை பரப்புகிறது என ரஷ்ய ஆய்வாளர்கள் குற்றம்சாட்டினர். சார்ஸ் தட்டம்மை வைரஸிலிருந்து உருவாக்கப்பட்டது என்றனர். சார்ஸால், சீனா - ஹாங்காங் - தைவான் நாடுகள் பாதிக்கப்பட்டன; அமெரிக்க நேச நாடுகள் பாதிக்கப்படவில்லை என முன்வைக்கப்பட்டது.
ஆனால், சார்ஸ் ஒரு கொரோனா வைரஸ் என்பதும், கொரோனா வைரஸை தட்டம்மை வைரஸிலிருந்து உருவாக்க முடியாது என்றும் பின்னர் கண்டறியப்பட்டது.
பேரழிவுகள் உருவாக்கும் புதிய பழக்கவழக்கங்களும் சமூகப் பொருளாதார மாற்றங்களும், பேரழிவுக்குப் பிறகான சமூக பண்பாட்டை கணிசமாக பாதித்துள்ளன. பேரழிவு காலத்தில் உருவாகும் சொற்கள், சமூகத்தின் திசைப்போக்குகளையும், உளவியலையும் பாதித்துள்ளன.
இசுலாமியர்கள் மீதான தங்கள் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள கொரோனாவை இந்துத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு விழிப்புணர்வுள்ள தமிழகத்தின் சுகாதாரத்துறையே மத சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில்
சமூக விலக்கம் என்பதை முன்னிறுத்தி,
ஷாகின்பாக் போராட்டக் குழுவின்மீது இந்துத்துவர்கள் தாக்குதல் நடத்தியது நாடு செல்லும் திசையைக் காட்டுகிறது. உ.பி-யில் சுமார் 156 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
மதுரையில் சாதாரண காய்ச்சல் கொண்ட ஒரு இசுலாமியரை, மன அழுத்தத்துக்கு ஆளாக்கி 'தற்கொலை' என்கிற சமூகக் கொலை செய்திருக்கிறார்கள்.
நெல்லை மேலப்பாளையம் இசுலாமியர்கள் பெரும்பான்மை கொண்ட 1.2 லட்சம் பேர் வாழும் பகுதி. அங்கு சுமார் 17 பேருக்கு தொற்று என்கிறது அரசு. சிலநாட்களுக்கு முன்புவரை அந்த பகுதி இசுலாமியர்கள் தான், பசியோடிருந்தவர்களுக்கு 'ஊரடங்கு சோறு' போட்டிருக்கிறார்கள்.
ஆனால், 'டெல்லி சென்று வந்தவர்கள்' என்ற பரப்புரை மொத்த பகுதி மீதும் விலக்கை கடைப்பிடிக்கும் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது. பின்னர் பல்வேறு தரப்பினரும் பேசி சூழல் கொஞ்சம் மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.
கர்நாடகாவில் உணவுவிநியோகம் செய்த இசுலாமியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்; ஊருக்குள் விடக்கூடாது என சுவரொட்டிகள் ஒட்டியிருக்கிறார்கள். டெல்லி மசூதி ஒன்றில் 200 இசுலாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். குஜ்ஜர் முஸ்லீம்கள் பால் வியாபாரம் செய்யக்கூடாது என ராஜஸ்தான் இமாச்சலில் தாக்கப்பட்டுள்ளனர்
பேரழிவு கால பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், புதிய சொல் உருவாக்கமும் சமூகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது.
'சமூக விலக்கம்' என்ற சொல்லாடல் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.
போப் ஆண்டவர் தி கிரேட் கிரிகாரியன் நோயாளிகள் குணமடைய பயன்படுத்திய 'God Bless You' என்ற வாசகம் பின்னாளில் ப்ளேக் நோய் பரவலின்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சொற்களானது.
18,19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஏராளமான பஞ்சங்களே இந்தியாவில் யார் ஒருவரைச் சந்திக்கும்போதும், 'சாப்பிட்டீர்களா?' என்று கேட்கும் வழக்கத்தை உருவாக்கியது.
18,19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஏராளமான பஞ்சங்களே இந்தியாவில் யார் ஒருவரைச் சந்திக்கும்போதும், 'சாப்பிட்டீர்களா?' என்று கேட்கும் வழக்கத்தை உருவாக்கியது.
சமூக விலக்கம்' என்ற சொல்லாடல் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. இந்தியாவின் அடிப்படைவாத தீண்டாமை உணர்வுகளையும், ஒடுக்குமுறைகளையும் அரசியல்படுத்தும் சொற்களாக 'சமூக விலக்கம்' மாறிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
ஆம். கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தோடு, பண்பாட்டு வெறுப்புக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது !
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vivek Gananathan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!