My Authors
Read all threads
இன்னுமா இந்த நாட்டிற்கு நீட் தேவை?

#Vivek_Gananathan_Thread

இந்தியாவில் இருக்கும் மதச்சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக்கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என 29.04.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஒரு மருத்துவ பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொருபுறம் நடக்கும் சுகாதாரத்துறை தொடர்பான நடவடிக்கைகள், இந்த நாடு எப்படி சம்பந்தமே இல்லா பாதைகளில் மாட்டிக்கொள்கிறது என்பதற்கு சாட்சி.

நீட் - ஐ முன்னிறுத்துவதில் முஸ்தீபு காட்டும் இந்தியாவின் அடிப்படை சுகாதாரச் சிக்கல் என்ன?
"மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ கால இறப்பு விகிதம் போன்றவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் தொற்று நோய்களும்,'Non communicable disease' நோய்களுமே இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது"
2017, மார்ச் 16ம் தேதி பாஜக அரசு வெளியிட்ட தேசிய சுகாதாரக் கொள்கை தான் இப்படிச் சொல்கிறது.

2017 மார்ச்சில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை, 2020 மார்ச்சிலிருந்து கண்கூடாக நம் கண்முன் நடந்துவருகிறது.
கொரோனா என்கிற மாபெரும் தொற்றுநோய் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஊரடங்கு நடவடிக்கைக்கு அப்பால் சுகாதார ரீதியாக இந்தியா அதை எப்படி சமாளிக்கிறது?
பீகார் மாநிலத்தில் தனது மூன்று வயது குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு சாலையில் அழுதுகொண்டே ஓடுகிறார் ஒரு தாய்.
அவருக்குப் பின்னால் அவருடைய கணவர் பீகார் மாநிலத்தின் மருத்துவ வசதிகளைத் திட்டிக்கொண்டே ஓடுகிறார்.

காரணம் என்ன தெரியுமா?
சளியும் இருமலும் ஏற்பட்ட அக்குழந்தையை அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டியுள்ளார் தந்தை. குழந்தையின் நிலைமை மோசமடைந்தது. ஆனால், அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. டெம்போ வேனில் குழந்தயைத் தூக்கிக்கொண்டு ஜஹானாபாத் சதர்
மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் குழந்தையை பாட்னாவுக்கு அழைத்துச் செல்ல சொல்கின்றனர். இப்போதும் ஆம்புலன்ஸ் கொடுக்கவில்லை மருத்துவமனை. வாகனம் ஏற்பாடு செய்து அழைத்துச் செல்வதற்குள், குழந்தை இறந்துவிட்டது.

இறந்தபிறகும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
ஊரடங்கின் நிசப்தத்தில் முடங்கியிருக்கும் வீதியில், 3 வயது குழந்தையின் சவத்தை 25 கி.மீ அழுதுகொண்டே தூக்கிச்சென்றார் அந்த தாய்.

இருதயத்தை குலைநடுங்கச் செய்யும் இந்தக்காட்சி நடக்கும் 2020, இந்தியா வல்லரசாகிவிடும் என ஒரு தலைமுறையே நம்பிக்கொண்டிருந்த ஆண்டு என்பது வரலாற்று முரண்நகை.
இந்த முரணிலிருந்துதான் இந்தியாவுக்கான சுகாதாரத்திட்டங்களின் படிப்பிணை இருக்கிறது.

2018ல் வெளியிடப்பட்ட, சாமானியனுக்கு மருத்துவ வசதியை எளிமையாக அணுகுவதற்கான சாத்தியக்கூறுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 145வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவைவிட வங்கதேசமும், இலங்கையும் மேலே உள்ளன.
உலக நாடுகள் பலவும் சுகாதாரத்துக்காக தங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 5-6 சதவீதம் செலவு செய்கின்றன. இந்தியா 2025ல் 2.5% நிதியை செலவு செய்ய வேண்டும் என இப்போதுதான் உத்தேசித்திருக்கிறது. இந்தியா, ஒட்டுமொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கு ஒதுக்கிவரும் நிதி வெறும் 1.3%
சுகாதாரத்துக்காக ஒதுக்குகின்ற தொகை குறைவு என்றால், சுகாதாரத்துக்காக ஒதுக்கிய தொகையில் உண்மையில் பயன்படுத்தப்படும் தொகை தெற்காசிய கண்டத்திலேயே இந்தியாவில் தான் குறைவு என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் 2018 அறிக்கை.
அரசு போதுமான நிதியை சுகாதாரத்துறைக்கு ஒதுக்காகததால், தனியார் சுகாதாரச் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்தியாவில் சுமார் 3.9 கோடி பேர் ஆண்டுதோறும் வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்கின்றனர் என்கிறது உலகப்புகழ்பெற்ற ஆய்விதழான LANCET.
சுகாதார செலவுகளால் ஆண்டுக்கு 6 கோடி பேர் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்கிறார்கள் என்கிறது மோடி அறிவித்த பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் அறிக்கை. அதாவது, இந்தியாவில் சுகாதார செலவுகளால் ஒரு மணிநேரத்திற்கு 7,000 பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்கின்றனர்.
உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா இன்றைக்கு கொரோனா தொற்றில் ஆட்டம் கண்டிருக்கிறது. காரணம் கேட்டால் ஒரே வரியில் சொல்கிறார்கள், 'அமெரிக்க சுகாதாரத்துறை தனியார் கைகளில் இருக்கிறது' என்று.
சுகாதாரத்துறை முழுமையாக தனியார் வசம் சென்றுவிடக்கூடாது என உலகம் உணர்ந்துகொண்டிருக்கும்போதே, சுகாதாதத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான விதைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறது பாஜக அரசு.
2018 செப்டம்பர், இந்தியாவில் இருக்கும் 50 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், 10 கோடி குடும்பங்களுக்கு, வருடம் 5 லட்சம் வரை மருத்துவ உதவி செய்யும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார் மோடி.

2019 ஜனவரி திட்டத்திற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
அதில் முதன்மையானது, இந்தியாவில் உள்ள 2ம்,3ம் நகரங்களில் மருத்துவமனை தொடங்கும் தனியாருக்கு, 40% பணத்தை முன்கூட்டியே வழங்கி, போதுமான நிலம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் - 50% வரை மாநிலஅரசு இத்தனியார் மருத்துவமனைகளுக்கு நிதி உதவலாம்.
இந்த அறிவிப்புக்கு என்ன வரவேற்பு? பிரதமர் அறிவித்த திட்டம் எப்படிச் செயல்படுகிறது? என்பதைக் குறித்து முறையான எந்த ஆய்வும் செய்யப்படவில்லை. ஆனால், அடுத்த ஓராண்டில், ஜனவரி 2020 அடுத்த அறிவிப்பு வந்தது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை தனியாருடன் இணைக்கும் நாசகார அறிவிப்பே அது.
ஏனென்றால், சொந்த நிதியில் 50%செலவு செய்து, மக்கள் வரிப்பணத்தில் 50% கூடுதலாக பெற்றுக்கொண்டுகூட, இரண்டாம் கட்ட நகரங்களில் மருத்துவமனை தொடங்க தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லை.
தனியார் மருத்துவமனைகளின் இலக்கு எல்லாம், சென்னை, கோவை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இருக்கும் 'பணம் கொழிக்கும் மனிதர்கள் தான். இரண்டாம் தர, மூன்றாம் தர நகரங்களில் வாழும் சாமானியனை நோக்கி நகர தனியார் துறை தயாராக இல்லை.
அதனால், ஏற்கனவே உருவாக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான அரசு மருத்துவமனைகளை தனியாருக்குத் தாரைவார்க்க திட்டமிட்டது மோடி அரசு.

இந்த அறிவிப்புக்கு மிகக்கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இந்திய மருத்துவ பணியாளர்களின் உயர்ந்த அமைப்பான இந்திய மருத்துவ கூட்டமைப்பு ,
"கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் இதுவரை இந்தியா செய்திருப்பது எல்லாம், அரசுக்கு சொந்தமான பொது சுகாதார கட்டமைப்பு மூலமாகத்தான். மோடி அரசு நினைப்பது போல, தனியார் மேலாண்மையில் அரசு பொது சுகாதாரத்தை ஒப்படைத்தால் குழப்பமும், பேரழிவுமே மிஞ்சும்" என சமீபத்தில் எச்சரித்தது.
இந்த எச்சரிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தொற்றுநோய் காலத்தில் ஒரு தேசத்தின் ஆரோக்யத்தைக் காப்பாற்றக் கூடியது, அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு தான்.

அந்த சுகாதார கட்டமைப்பின் அடிப்படைகள் மூன்று.
1. முறையான கிராமப்புற மருத்துவமனைகளுடன் பொதுசுகாதார கட்டமைப்பு
2. போதுமான மருத்துவர்கள்
3. எந்நேரமும் உறுதிசெய்யப்பட்ட மருத்துவ வசதிகள்,
உட்கட்டமைப்பு

இந்த மூன்றிலும் இந்தியாவிலேயே தேர்ந்த மாநிலம் தமிழ்நாடு. இந்த மூன்றுக்கும் எதிரான சமூகச் சூழலை உருவாக்கக்கூடியது நீட் தேர்வு.
2018, டிசம்ப 31 வரையிலான கணக்குப்படி இந்தியாவில், MCI கீழ் பதிவு செய்து வைத்திருக்கும் நவீன மருத்துவர்களின் எண்ணிக்கை 11.54 லட்சம். இதில், தமிழகத்தில் மட்டும் 1.33 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த இந்திய மருத்துவர்களில் 8.6% பேர் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுத்தல்படி, 1000 பேருக்கு ஒரு அல்லோபதி மருத்துவர் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கு 1445 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் 580 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.
மத்திய சுகாதாரத்துறை 2018 தகவலின்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார நிலையங்கள், தாலுகாக மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் எல்லாம் சேர்த்து இந்தியாவில் இன்று 37,725 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 7 லட்சத்து 40 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.
தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 2580 அரசு மருத்துவமனைகளும், 74 படுக்கை வசதிகளும் உள்ளன. இது குஜராத்தைப் போன்று கிட்டத்தட்ட இருமடங்கு. இந்தியாவிலேயே அதிக படுக்கை வசதிகொண்ட சுகாதாரக் கட்டமைப்புக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு என்பது கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளை மையப்படுத்தியது. தமிழகத்தில் 692 ஊரக மருத்துமனைகளில் மட்டும் 41 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கட்டமைப்பு இருக்கிறது. இது கர்நாடகா போல 2 மடங்கு; மகாராஷ்டிரத்தைப் போல 3 மடங்கு; குஜராத், ம.பி போல 4 மடங்கு.
சாமானிய மக்களுக்கு மருத்துவம் வழங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் தான், எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள், அரசு மருத்துவத்துறையின் கடினமான வாழிடங்களில் பணியாற்றினால், முதுகலை மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீடு என நடைமுறைப்படுத்தியது திமுக அரசு.
இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டப் பிறகே தமிழகத்தின் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பும், மருத்துவர் எண்ணிக்கையும் புலிப்பாய்ச்சல் வேகத்தோடு வளர்ந்தது.

2010வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 86 ஆயிரம். 2019ல் 1.34 லட்சம். இந்தியாவிலேயே மிக அதிகமான வளர்ச்சி விகிதம் இது.
இன்று தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 2750 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இந்தியாவிலேயே மிக அதிகமான எண்ணிக்கை இது.
தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்திய, அரசு மருத்துவ சேவைக்கான 50% இட ஒதுக்கீடு இப்போது கிடையாது. அதற்கு பதிலாக சேவை செய்தால் Incentive மதிப்பெண்வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது உரிமைகளை அடகு வைக்கும் எடப்பாடி அரசு.
சேவை செய்தால், சீட் உறுதி என்கிற இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, சேவை செய்தால் நீ வாங்கும் மதிப்பெண்ணில் கொஞ்சம் கூடுதலாக்குவோம் என்கிற தரகு அழைப்புக்கு எந்த சாமானியன் வீட்டுப் பிள்ளை வருவான்?
2019 வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில், தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு வழுக்கி விழுந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை மோசமடைந்தது தரவரிசை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதை 2019 சுகாதார வளர்ச்சிக்குறியீடு அறிக்கை மூலம் அறிய முடிகிறது.
மாநில அரசின் கையாலாகாத நடவடிக்கைகள் ஏற்கனவே இருக்கும் உயர்ந்த கட்டமைப்பை பலவீனமாக்குகிறது. இன்னொருபுறம், மத்திய அரசு இருக்கின்ற கட்டமைப்பை
தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கின்றது.

இரண்டு கேடுகளுக்கும் ஒரே சூத்திரம், நீட் தேர்வு.
மருத்துவத்தை ஒரு பொது சேவைத்துறையாகக் கருதி, சமூகத்தின் பல்வேறு தரப்பு மாணவர்களை மருத்துவக் கல்விக்குள் இழுத்து, அவர்களின் அரசின் பணியாளர்களாவும் மாற்றிக்கொள்ளும் சமூக நீதி அணுகுமுறையைக் குழிதோண்டி புதைத்துவிட்டு, மருத்துவத்துறை 'மதிப்பெண் போட்டியாக' மாற்றுகிறது நீட் தேர்வு.
இந்த மதிப்பெண் போட்டி மருத்துவத்தை வணிகக்கல்வியாக்கி, சுகாதாரத்தை தனியார்மயப்படுத்துகிறது. அரசு சேவைகளையும், மக்கள் சேவைகளையும் உதாசினப்படுத்தி அரசின் பொது சுகாதாரத்துக்குள் சாமானியர்கள் சேவை செய்வதற்கான வாய்ப்புகளை அடைக்கிறது.
விளைவு, சமீப ஆண்டுகளில் தமிழகத்தின் அரசு மருத்துவர்களின் விகிதம்
கணிசமாக குறைந்துள்ளது. இந்தியா அளவில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையில், 10% பேர் அரசு மருத்துவர்கள். தமிழகத்தின் இவ்விகிதம் 5.6% ஆக குறைந்துள்ளது.
அரசு சேவையை நோக்கி மாணவர்கள் வருவதை நீட் தேர்வு தடுக்கிறது என்றால், குறைவான ஊதியம், அதிக பணிச்சூழல் போன்றவை ஏற்கனவே இருக்கும் மருத்துவர்களை அரசு ஊழியத்திலிருந்து வெளியேற்றுகிறது.
மாநிலத்திலேயே முதல்மாணவனாக வந்த ஜெயமோகனை, தமிழ்நாடு எல்லையில் இருக்கும், யானையும் புலியும் திரியும் ஒரு மலைக்குக்கிராமத்தில் பணி அமர்த்தி, கொரோனா பேரழிவின் போதும் மக்களுக்கு சேவை செய்யும் மகத்தான மனப்பக்குவத்தையும், கட்டமைப்பையும் வளர்த்தது திராவிட இயக்கத்தின்
சமூக நீதி !
அந்த ஜெயமோகனுக்கு முறையான மருத்துவ உபகரணங்கள் கூட கொடுக்காமல் சாவடித்தது ஒரு அடிமை அரசு.

அப்படியான சேவை செய்யும் ஜெயமோகன்கள் உருவாகவேக்கூடாது என்கிற நீட் தேர்வு.
குக்கிராமத்தில் இருக்கும் சாமானியருக்கு சேவை செய்யும் முறையான கட்டமைப்பை உருவாக்குங்கள் - அதுதான் உங்களைக் காப்பாற்றும் என ஜெயமோகன் மரணம் வழியாக செய்தி சொல்லியிருக்கிறது கொரோனா வைரஸ்.
ஆம்.

அன்றைக்கு அனிதா சாட்சியாக நாங்கள்
கேட்டது. இன்றைக்கு அகில உலக சாட்சியாக கொரோனா வைரஸ் கேட்கிறது.

ஏய், ஏழை இந்திய தேசமே... உனக்கு எதற்கு நீட் தேர்வு ?

- விவேக் கணநாதன்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vivek Gananathan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!