My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿பாகம் : 3🌿

🌾ஆன்மீகம்🌾

இந்த தலைப்பைப் பொறுத்த வரை,

1) தெய்வம் / சிறு தெய்வம்
2) மூன்று தெய்வங்களின் தொழிலும் அதன் காரணங்களும்
3) இவற்றில் முக்கியம் எது? அதற்கு அடிப்படை என்ன?
4) ஸநாதன தர்மம் என்பதன் அர்த்தமும் பாரத்வாசிகள் வாழ்க்கையும்
5) வாழ்வின் பிரிவுகளும் அதன் உண்மைகளும்
6) கலியில் வாழ்வின் நிலை
7) இன்றைக்கு என்ன செய்ய வேண்டும்
8) இனி உங்கள் கைகளில்

ஆகிய பிரிவுகளில் நாம் இதைப் பார்க்கப் போகிறோம். மீண்டும் நினைவு படுத்த வேண்டிய ஒன்று,
இதை எந்த எந்தக் கால நிலைகளில் நடந்தது என அறிகிறோமோ, அதே காலத்தில் இருந்து நாமும் அதைப் பார்க்க வேண்டும். அது தான் சரியான புரிதலை ஏற்படுத்தும்.

எல்லாவற்றையும் இன்றைய கால நிலையில் வைத்துப் பார்த்தால் அது அபத்தம் என்பதை மனதில் நன்கு வைத்துக் கொண்டு படியுங்கள்.
ஆன்மீகம் என்பதைப் பொறுத்த வரைக்கும், அது மஹா ஸமுத்ரம். அதைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை முழுமையாகக் கூறும் அளவிற்கு நாம் இல்லை.

அவரவர் இதைப் பற்றி அறிந்து, கற்று, தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கின்றோம். காலம் முழுக்கக் கற்றாலும், திரும்பிப் பார்த்தால், அம்மஹா ஸமுத்ரத்தில்
கணுக்கால் நனையும் அளவு தான் நாம் கடந்திருப்போம். இறை ஞானம் பெற்றவர்க்கு படித்து அறிய வேண்டியதே இல்லை. அதைப் பெறத்தான் நாமும் இங்கே ஆளுக்கு ஒரு வழியில் போராடி வருகின்றோம்.

அந்த ஞானத்தை அடையும் வரையில் தான் நாம் இது பற்றி பேசக் கூடச் செய்வோம். அதன் பின் மௌனியாகி விடுவோம்.
இதையே பெரியோர் நாம் புரிந்து வாழ, *கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்* என்று கூறிச் சென்றுள்ளனர்.

நாம் இன்னும் ஆன்மீக அறிவைப் பெற, எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தக் கலியுகமானது தற்போது பெரியோர் வாக்கு, முன்னோர் வாக்கு
என்று எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. தற்போதெல்லாம் எதற்கு எடுத்தாலும், அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று எதிர் கேள்வி வருகிறது. அப்படிக் கேட்பவர்கள்,

”நான் எதையும் ருசிக்க மாட்டேன்! ஆனால் ருசியை நான் அறியும் விதமாக ஆதாரத்துடன் வேறுபடுத்தி நிரூபித்தால் தான் ஒப்புக் கொள்வேன்”
எனக்கூறும் பகுத்தறிவு வாதிகள். அவர்களை நாம் பதில் சொல்லித் திருப்தி படுத்தவோ, அல்லது இறை என்னும் உணர்வைப் புரிய வைக்கவோ முடியாது. அது விழலுக்கு இறைத்த நீரே.

3 : 1

3 : 1 : 1

🙏சிறு தெய்வம்🙏

இதில் ஆரம்பத்திலேயே ஒரு குழப்பம் உள்ளது. குல தெய்வம் தான் தமிழ்க் கடவுள்,
மற்றவை வடநாட்டுக் கடவுள் என்று ஒரு பேதத்தை; மொழியில் எப்படி ஒரு பொய்யான வேறுபாட்டை உருவாக்கினார்களோ, அதே போல இதிலும் உருவாக்கி விட்டார்கள்.

இதை உண்மை என நம்பி, பலரும் தற்போதெல்லாம் பெரும் ப்ரச்சனைகளும் வாதங்களும் செய்கின்றார்கள். இவற்றைச் சற்று உள்சென்று ஆய்ந்தால்,
பல உண்மைகள் புரிய வருகின்றன. அதாவது, கலி தோன்றி 5121 ஆண்டுகள் ஆகி விட்டன என்று பார்த்தோம்.

இதில் நாம் பொதுவாக, நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடும் வழக்கத்தையும் நம்மிடையே கொண்டிருக்கிறோம். அது எதற்காக? அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோவில் கட்டுவதில்லையே ஏன்?
அதாவது, முன்னோர்கள் மேல் உள்ள மரியாதையால், எந்த ஒரு விஷயம் செய்யும் போதும்,

“நீங்கள் மேல் உலகில் இருந்து என்னை ஆசியுங்கள்”

என்று நாம் வேண்டிக் கொள்வது நமது நம்பிக்கை.

அது போலத் தான், பல காலங்களாக, நாட்டிற்கும், ஊருக்கும் இடர்ப்பாடு ஏற்படும் போது அதைத் தவிர்க்கவும்,
பிறரின் உயிரைக் காக்கவும், பலர் ஏதோ ஒரு காரியம் செய்து, தனது இன்னுயிரைக் கொடுத்து, மக்களுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் செய்திருக்கின்றனர்.

அப்படிப்பட்ட மனிதர்களை மதிப்பதற்காக, ஊரே சேர்ந்து அவர் பெயரில் நடுகல் வைத்து ஒரு கோவிலை ஊரின் எல்லையிலோ, அல்லது ஊரின் மத்தியிலோ எழுப்பி,
அவர்களை வணங்கி எந்தக் காரியத்தையும் செய்வதை வழக்கம் ஆக்கினர். இதன் மூலம்,

”எங்களைக் காத்த நீ, என்றும் நல்ல காரியத்தை நடத்தி வை”

என்று வணங்கிடவும், அவரது தியாகத்தை மறக்காது இருக்கவும், திருவிழாக்கள் எடுத்தனர்.

இதன் மூலம் யாரும் ஊரில் இருந்து வெளியில் செல்லாமல் இருக்க
ஊர் காப்புக் கட்டி, திருவிழா அன்று பெரியதாக பூஜை செய்து, எல்லோருக் ஒன்று கூடி விருந்து சமைத்து, எல்லோருக்கும் கொடுத்து உண்டனர்.

இதனால் ஒரு ஒற்றுமை, கட்டுப்பாடு, நமக்கு மேற்பட்ட சக்தி என்று ஒன்றின் மேல் நம்பிக்கை எல்லாம் நமக்குள் வந்தது. இதைப் பரம்பரையாகச் செய்து வந்ததால்,
அந்த குலத்தின் கடவுள் எனக்கூறி, குலதெய்வம் என்றனர். இதைத்தான் தற்போது தமிழ்க் கடவுள் என்று மாற்றப் பார்க்கிறார்கள்.

உதாரணமாக, நாம் அனைவரும் அறிந்த மதுரை வீரன். இரு மனைவிகளுடன் வாழ்ந்த அக்காவல் வீரரை, சூது செய்து மதுரை அழைத்துச் சென்று, *மாறு கால் மாறு கை* வாங்கிட,
இதை அறிந்த அவர் இனத்தவர் வந்து மதுரையை த்வம்ஸம் செய்ய, கடைசியாக இவர் வேண்டுதலில் போரைக் கைவிட்டுச் சென்றனர். எனவே அவர் இன்றும் மதுரை கிழக்கு கோபுர வாசலில் கம்பத்தடி வீரனாக இருக்கின்றார்.

அடுத்து கருப்பண்ணசாமி என்று அழைக்கும் தெய்வம். நாட்டில் ஏற்ப்பட்ட போரின் முன்னர்,
போரில் தன் நாட்டின் வெற்றிக்காகத் தன்னை காணிக்கையாக இறைவனுக்குக் கொடுத்தவர் கருப்பண்ணன் என்னும் ஒரு மனிதர். அவரையே ஊரின் காவல் தெய்வம் என்று பின்னர் போற்ற ஆரம்பித்தனர்.
இந்த ஆண் காவல் தெய்வங்களின் பட்டியல் படி...

முனீஸ்வரன், பாவாடை ராயன், ஐயனார், சுடலைமாடன், சங்கிலி மாடன், சந்தன மாடன், வெட்டு மாடன், அக்னி மாடன், தளவாய் மாடன், வேட்டு மாடன், கொம்ப மாடன், மாயாண்டி, இசக்கியப்பன், ஒண்டி வீரன், இடும்பன், காத்தவராயன், நொண்டி வீரன், சப்பானிக் கருப்பன்
என ஏகப்பட்ட காவல் தெய்வங்கள் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் க்ஷத்ரியர்களாகவே (போர் வீரர்களாக) இருந்திருக்கிறார்கள். அவர்கள் உடலில் பூநூல் உண்டு. தற்போது பல இடங்களில் பூநூல் இன்றியே அவர்கள் உருவம் வடிக்கின்றார்கள்.

அதேபோல் *பெண்* குல தெய்வங்களை அம்மன் என அழைப்போமே தவிர,
அம்பாள் என அழைப்பதில்லை. அம்பாள் என நாம் சக்தியை மட்டும் தான் அழைப்போம்.

காரணம், அம்மன் என வழங்கப் படும் பெரும்பாலான கோவில்களில் இருக்கும் சிறு தெய்வமானது, காவல் தெய்வங்கள் போல் சமூகத்துக்காக ஏதோ ஒரு விதத்தில் உயிர் விட்டவர்கள் அல்லது சமூகத்தால் வணங்கப்பட்டவர்கள்.
உதாரணமாக ஒரு வரலாறு!

மூன்றாம் ராஜ நாராயண சம்புவரையரின் மகன் வல்லாளன், நாடிழந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டான். அங்கே உணவு கிடைக்காததால், ஊரைக் கொள்ளை அடித்து வாழ்ந்தான். இதனால் ஊர் மக்கள் அவதிப்பட்டு, அங்கிருந்த ஒரு முனிவரிடம் அழுதனர்.
சினத்தில் அந்த முனிவர்,

“நீ கொள்ளை அடிப்பதற்கு தண்டனையாக, உன் மகன் நிலத்தில் வந்து உதித்ததும், அவனால் மரணிப்பாய்”

எனச் சாபமிட்டார். அந்நேரத்தில் அவன் மனைவி கார்குழலிக்கு பிரசவ நேரம். ஊரின் அருகே இருந்த ஒரு மருத்துவச்சியை, மனைவிக்கு ப்ரசவம் பார்க்க அழைத்து வந்தான் வல்லாளன்.
அவள் குழந்தையை வெளியில் எடுத்ததும், வல்லாளன் அக்குழந்தையைக் கொல்ல முற்பட்டான்.

அக்குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்ட பெரியாச்சி, அவர்கள் தான் ஊருக்கு துரோகம் செய்பவர்கள் என்றும், இக்குழந்தை வாழ வேண்டிய குழந்தை என்றும் அறிந்து கொண்டாள்.
சினம் கொண்டவள், வல்லாளனையும் அவனுக்குத் துணை போன கார்குழலியையும் அழித்தாள். அவளது ரௌத்திர சப்தமும் வல்லாளன் மற்றும் அவன் மனைவியின் அலறல் சப்தமும் கேட்டு, ஊர் மக்கள் திரண்டு ஓடி வந்தனர்.

அங்கே பெரியாச்சி ரௌத்திரம் அடங்காது இருந்தது கண்டு, அவளை மஞ்சள் நீரால் குளிர்வித்து,
பாலை அருந்தக் கொடுத்து ஆசுவாசம் செய்தனர். அதன் பின் அம்மருத்துவச்சியை ஊரிடர் அழித்த தாயாகப் போற்றியவர்கள், அவள் இறந்ததும், அவளையே தங்கள் ஊர் காக்க வேண்டிய தெய்வம் ஆக்கினர்.

இதே போல், இசக்கி அம்மன், நல்ல தங்காள், கண்ணகி, மங்கல தேவி, செல்லாண்டியம்மன், மூதேவி அம்மன், முத்தாரம்மன்,
மாரியம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், ராக்காயி, காத்தாயி, பழண்டியம்மன், முண்டக்கக்கண்ணி, திரௌபதி என நிறைய பெண் சிறு தெய்வங்களும் உள்ளன.

பெரியாச்சி எனும் பேச்சி அம்மன்
முந்தைய காலங்களில் எல்லாம், எந்த தெய்வத்துக்கும் அசைவம் வைத்துப் படைக்க மாட்டார்கள். ஒரு நடுகல்லை நட்டு வணங்குவார்கள்.

அதிலே அவர்கள் மனம் குளிர்விக்க தண்ணீர் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து புதுத்துணி உடுத்திவிட்டு, பின்னர் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளால் சமையல் செய்து
அதனையும், தங்கள் தோட்டப் பழங்களையும் வைத்து மட்டும் தான் வணங்கி வந்தனர். இதைப் பல தமிழ் ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

ஆனால் இன்று போல் இல்லை அன்று. கடவுள் எனும் ஒன்றின் பேரில் அனைவருக்கும் பக்தியும் மரியாதையும் இருந்தது. அதனால் இப்பழக்கம் ஆரம்பித்த நாட்களில்,
தாம் வணங்கும் தெய்வத்துக்கு அவர்கள் அசைவ உணவு படைக்கவில்லை என்பது தான் உண்மை.

இதனை *ராபர்ட் ரெட் பீல்ஸ்* மற்றும் *ஹென்றி ஒய்ட்* என்னும் இரு ஆய்வளர்கள் தங்கள் பழங்கால வாழ்க்கை முறைகள் பற்றிய ஆய்வில் எழுதி உள்ளனர். இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்.
ஆனால், காலம் மாறுகையில் தங்களுக்குப் பிடித்ததை வைத்துப் படைத்து, அதை எல்லோருக்கும் கொடுக்கும் வழக்கம் வந்தது. அதில் இருந்து தான் சில சிறு தெய்வங்களுக்கு அசைவம், மது போன்றவை படைக்கப் படுகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கும் விதம் விதமான ஒரு உண்மை வரலாறு உண்டு.
அவை காலப் போக்கில் உண்மைகள் மறைந்து, குல தெய்வம் என்று மட்டுமே நிலைத்து விட்டன. எனவே, இவற்றை நம் முன்னோர் எனப் புரிந்து கொண்டு, உண்மைகள் அறிய தொடர்ந்து செல்வோம்.

இந்த விஷயம் தவறு என யாராவது விவாதித்தால், அவரிடம் ஒரு சந்தேகம் மட்டும் கேட்க வேண்டும்.
நம் முன்னோர்கள்

தேவாரம், திருவாசகம், திவ்யப் ப்ரபந்தம், கந்தன்- ஸஷ்டி, அலங்காரம், அநுபூதி, விநாயக ஸ்துதி, ஸுப்ரபாதம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், காயத்ரி மந்த்ரம், ஆதித்ய ஹ்ருதயம், பாதுகா ஸஹஸ்ரம், லக்ஷ்மி ஸ்தோத்ரம், சிவன் மற்றும் பார்வதி ஸ்லோகங்கள், அக்னி, வருண, வாயு ஸ்தோத்ரம்,
நரஸிம்ம ஸ்லோகம்....

என இறைகள் பற்றி மட்டும் ஏன் இத்தனை வலிமை மிகு ஸ்லோகங்களைப் பாடிச் சென்றனர்? ஏன் இது போன்ற ஸ்லோகங்களை நாயன்மார்களோ, ஆழ்வார்களோ, அல்லது சித்தர்களோ, சிறு தெய்வத்தின் பேரில் எழுதவில்லை? இதை யோசித்துப் பாருங்கள்.
நம் குலதெய்வங்களின் பேரில் நாம் தற்போது பாடும் பாடல்களெல்லாம் இந்த 200-300 ஆண்டுகளுக்குள் வந்தவை தான் என்றும் ஆய்வாளர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர். எனவே, நாம் முதலில் குல தெய்வம் எனப் போற்றும் உருவங்கள் சிறு தெய்வங்கள் என்றும், மூல தெய்வம் என்பதே வேறு என்பதையும் புரிந்து கொள்வோம்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!